Saturday, September 23, 2006

உலகமே ஒரு சந்தை

உலகமே ஒரு சந்தை

தான் நெய்த துணிகளை சந்தையில் விற்பனை செய்தல் கபீருக்கு வாழ்க்கையின் ஓர் நிர்பந்தம். அப்படி செய்யும் பொழுது புத்திசாலியான வியாபாரி என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறார் இந்த வரிகளில்.

कबीरा खडा बजार मॆं मांगॆ सबकी खैर
न काहूं सॆ दोस्ती न काहूं सॆ वैर

கபீரா கடா பாஜார்மே மாங்கே சப் கா கெய்ர்
ந காஹ்உ சே தோஸ்தி ந காஹ்உ சே வைர்


சண்டை குணமுள்ள வியாபாரியிடம் யாரும் ஒதுங்கி செல்லுவர். அதி தோழமையுடன் பழகினாலோ அளவுக்கு அதிகமான சலுகை கோறுவர். இது இன்னொரு வகை இடையூறு. இதை கபீர் ஒரு வியாபாரி என்ற முறையில் பொருள் கொண்டால் மேற்பார்வைக்கு தெரியும் உண்மை.

இதையே அவரது உயர்ந்த ஆன்மீக நிலையை மனதில் வைத்துப் பார்த்தால் ஆழமான இன்னோர் உண்மையும் புலனாகும். இந்த உலகமே ஒரு சந்தைக் கடை. இங்கு வரும் நாம் ஒவ்வொருவரும் பெற விரும்பும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அளவிற்கு அதிகமான பாசமும் அல்லது வெறுப்புணர்ச்சியும் தான் காரணம். இதை ஒதுக்கி வாழத்தெரிந்தாலே எல்லோருக்கும் அமைதிகிட்டும் என்ற உண்மையை உணர்த்துகிறார் கபீர்.
சந்தையில் நின்றான் கபீர் சந்ததம் வாழ்த்தி இவ்வையம்
சந்ததம் நாடிலன் நட்பு, சந்ததம் விலக்குவான் வயிரம்
(வயிரம் : பகை)

No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி