Friday, December 17, 2010

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6

ஆசிரியர் அறிமுகம்

மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே உண்டு. சங்கீதத்தின் ஆழமும் தெரியாது, எதிரே அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மகத்துவமோ பெருமையோ தெரியாது [தெரிந்திருந்திருந்தால் அவன் மேடை ஏறியே இருக்கமாட்டான்].

அவன் பாடி முடித்ததும் பெரியவர் ஒருவர் அவனுக்கு பரிசளித்து வெகுவாகப் பாராட்டி உற்சாகம் அளிக்கிறார். அவரைப் பற்றி பிற்காலத்தில் அறிந்து கொள்ளும் போது வாயைப் பிளக்கும் வண்ணம் இவர் முன்பா அரைகுறையான நான் பாடினேன் என்ற நாணம் தோன்றும். அப்படி பாராட்டி உற்சாகம் தந்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் இன்று முன்வந்து நமக்கு சிறப்பு இடுகை தரவிருக்கிறார்.

கபீரையும் வள்ளுவரையும் ஒப்பிட்டு ’60 களிலேயே மேற்படிப்பு ஆராய்ச்சி மேற்கொள்ள விழைந்தவர். அப்படியானால் இரண்டு மொழிகளிலும் அவருடைய தேர்ச்சி எவ்வளவு இருக்க வேண்டும் !

அர்த்தமுள்ள வலைப்பதிவுகள் என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக நூற்றுக்கணக்கானப் பதிவுகளைப் படித்து அவற்றை தமது வலைப்பூவில் இணைப்புகளுடன் சுட்டிக் காட்டி வாசகர்களை ஒரு தரமான வாசிப்பு அனுபவத்திற்கு உயர்த்த பாடுபட்டவர். அவற்றில் வாரம் ஒரு முறை ஒரு சிறப்பான இடுகையை தேர்ந்தெடுத்து அதற்கு மகுடம் சூட்டி வாழ்த்தியவர். ஒரு முறை கபீரின் கனிமொழிகள் இடுகை ஒன்றுக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது.

வலையுலகின் விதவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எல்லா விதங்களிலும் வாசகர்களைக் கவரும் அவருடைய ஆர்வம் பல இளம் தலைமுறையினரையும் வெட்கமுறச் செய்யும். சங்கீதப்பிரியர், அதற்கென ஒரு தனி வலைப்பூ. மூவி ராகாஸ்,மூவிங் ராகாஸ் என்னும் அந்த வலைப்பூவில் கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி இசை கோப்புகளுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட திரைப்படப் பாடல்களின் இசை நுணுக்கத்தை தொகுத்து தருகிறார். தமிழ் மறை தமிழர்நெறி என்று இன்னுமொரு வலைப்பூ. இதை திருமூலர் முதல் சுப்பிரமணி பாரதிவரை இலக்கியம் மற்றும் நடைமுறை சமூகக் கண்ணோட்டத்துடன் பல விஷயங்களுக்கு கருத்து சொல்லும் களமாக வைத்திருக்கிறார். ஆன்மீகம் என்ற பெயரில் ஆன்மீக விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள மட்டுமே ஒரு வலைப்பூ. கவிநயா போன்ற கவிஞர்களின் கவிதை வெளியான சில மணிநேரங்களிலேயே அதற்கு ராகம் போட்டு பாடி யூட்யூபில் வலையேற்றவும் செய்து விடுவார். அவருடைய உற்சாகம் யாவரையும் தொற்றிக் கொள்ளக்கூடியது. நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்பதையும் “ உலகமே நாற்றம் .ஒரு தினுசான சாக்கடை தான்” போன்ற வர்ணனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட சிறப்புகளுக்கு உரியவரான திரு சுப்புரத்தினம் என்கிற சூரியநாராயண சிவா அவர்களே இந்த சிறப்பு இடுகையின் ஆசிரியர். அவரை வாசகர் சார்பில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

எச்சரிக்கை : கபீரின் ஈரடிகள் மழைபோல் பொழிய போகிறது. நனைந்து மகிழ வேண்டிய அருள் மழை. அதனோடு இன்னிசைக் காற்றும் சேர்ந்து வாசகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கப் போகிறது.

--------------------------------------------------

கபீரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என அன்பர் திரு கபீரன்பன் பணித்தவுடன் ஒப்புதல் அளித்துவிட்டேன்.

இருப்பினும் கபீரைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டிருக்கிறேனா என்ற ஐயப்பாடு என் மனதிலே என்றென்றுமே உள்ளது. சொல்லப்போனால், 1957 முதல் கபீரின் தோஹாக்களை நான் பிரசார சபா தேர்வுகளுக்குக் கற்க துவங்கின காலத்திலிருந்து, ப்ரவீண் முடித்தபின்னும் சுமார் 1000 தோஹாக்களுக்கு மேல் மனப்பாடமாகத் தெரிந்தபின்னும் அதே நிலைதான். காரணம், கபீரின் பரிமாணம் அத்தகையது.

அவரை எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும், ஒரு பழுத்த ஆன்மீக வாதியாக, ஒரு தத்துவ ஞானியாக( தேரா சாயீ துஜ் மேய்ன் ஜோ ப்ஹுபன் மேய்ன் பாஸ்) , சமூக சீர்திருத்த வாதியாக, மூடப்பழக்க வழக்கங்களை அழிக்கும் நோக்குடையவராக ( பாஹன் பூஜென் ஹரி மிலை, தொ மைம் பூஜும் பஹாட்), ராம பக்தராக ( जिसी घटी प्रीती न प्रेम कि, पुनि रसना नहीं राम , ते नर इस संसार में उपजि गए बेकार ) எப்படிப்பார்த்தாலும் அவர் ஒரு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதராக, தெய்வத்துள் வைக்கப்படுபவராக இருக்கிறார்.

உலகத்தே ஆசானைப்போன்றவர் எவருமே இல்லை. அன்னை, தந்தை, உறவினர், நண்பர் யாவருமே இருப்பினும் நல்ல ஒரு குருவினைப்போன்று மிக நெருங்கிய சொந்தம் எவரும் இல்லை. உறவினர் யாவரும் உலக பந்தங்களே. உலகத்திலே ஒருவனை முழுகடிப்பதிலே தான் கண்ணாக இருக்கையிலே குரு ஒருவர் தான் தனது சீடனை இந்த இக லோக இருட்டிலிருந்து வெளிக்கொணர்ந்து அறிவு நிலையாம் ஞான ஒளியைத் தருவதிலே முனைப்புடன் இருப்பார். அப்படிப்பட்ட‌ குரு சாதாரண மனிதனான என்னை ஒரு தேவனாக ஆக்கிவிட்டாரே, அந்த குருவிடம் தினந்தோறும் எத்துணை முறை நான் நன்றி சொல்வேன், என கபீர் சொல்வதைக்கேட்டு இக்கட்டுரையைத் துவங்குவோம்.

பலிஹாரி குரு ஆபணை, த்யொள்ம் ஹாடி கை பார்.
ஜினி மானிஷ் தைம் தேவதா, கரத் ந லாகி பார்
.

கபீர் ஒரு இணையற்ற ராம பக்தர். கபீரின் பக்தி ஸாகரத்தில் முழுகியவர் பிறவிப்பெருங்கடல் நீந்தி இறைவனடி நிச்சயம் சேருவார் என்பதில் ஐயம் உண்டோ ?
கபீர் கண்ட ராமன் என எழுதுவோமா ? இல்லை , கபீர் அனுபவித்த ராமன் என சொல்வோமா?

கபீரின் மனதுக்கிசைந்த ராமன் பற்றி எழுதுவோம்.

ராமனைப் புரிந்துகொள்வதிலே அவனைப் போற்றுவதிலே, துதிப்பதிலே இருக்கும் வேற்றுமைகள், அந்த நாமம் நமக்கு என்ன நல்லது செய்கிறது என்று சொல்லும்பொழுது மறைந்து போகிறது.

ஒரு இடத்துக்குப் போகணும், டிரையினிலே போகலாமா, பஸ்ஸிலே போகலாமா இல்லை, ப்ளேனிலே போகலாமா என‌ யோசித்துக்கொண்டிருந்தபொழுது நான் மனசாலேயே அங்க ஆல்ரெடி போய்விட்டேன் என்று சொல்வதையும் நாம் கண்டு அனுபவிக்கத்தான் வேண்டும்.

ஆக, இந்த கட்டுரையில், இரண்டு நிலைகளிலும் ராம பக்தியை, மாயா ரஹித பிரும்மன் ஆகவும், அதே சமயத்தில் மாயா சஹித பிரும்மன் ஈஸ்வரன் ஆகவும் சந்திப்போம். சிந்திப்போம்.

ராம நாமத்தை சொல்ல, உச்சரிக்க, ராமனின் பக்தியில் மெய் மறக்க, கபீர் கூவியதைப்போல் வேறு யாரும் பாமர மக்களுக்குப் புரியும் வண்ணம் சொன்னார்களா என எனக்குத் தெரியவில்லை. அந்த ராம நாமத்தை ஒரு தடவை சொன்னால்,ஆயிரம் தரம் சொன்னால் மாதிரி.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹாச்ர நாம தச்துல்யம் ஸ்ரீ ராம நாம வராஹனே


நிற்க. ராமனைப் பற்றி கபீர் என்ன சொல்கிறார் என்ற உடனேயே நமது கண்களில், ராமன் ஒரு சீதா ராமனாக, கோதண்டராமனாக, ஜெயராமன், பட்டாபி ராமன்,ரகுராமன், கோசலைராம‌, கல்யாண ராமன், வேங்கட ராமன் , தசரத ராமன், இப்படி பல்வேறு நாமாக்களைக்கொண்ட ராமனாக சித்தரித்துக் கொண்டால், அதற்கு கபீர் பொறுப்பில்லை.

முதலில் நமக்கு தெரிந்த ராமனின் கதையை கேட்போமா ?

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடுவதை முதலில் கேட்போம்.




சகுணவாதியான துளசிதாசரைப்பார்த்தால்,அவரைப்போல் ராம பக்தர் இருப்பரோ என்று வியக்கிறோம்.
துளசிதாஸரின் ராம சரித மானஸில் ”துமக் சலத் ராமசந்த்ர” லதாமங்கேஷ்கர் அவர்கள் குரலில்




நாம் காணும் சர்வ குணஸ்ரேஷ்டனான Sarva guna sampannan, ragu kula nayakan Aana ராம பிரான், பக்த தியாகராஜர் எழுபத்தி இரண்டு மேள கர்த்தா ராகங்களிலும் பாடியிருக்கும் இராம பிரான் சகுண பிரும்மன். அவதார புருஷன்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத’ என்று அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்ட வந்த பரம்பொருள்.அந்த பரம்பொருள் ராமனாக அவதாரம் செய்தபொழுது, அப்பாலகன் ராமனுக்கு குலசேகர் ஆழ்வார் பிரபந்தத்தில் தாலாட்டு பாடி மகிழ்வார். ராமனிடம் அவர் காட்டும் வாத்ஸல்யத்துக்கு ஈடு ஏது!

ராகவனனே தாலேலோ இங்கே கேளுங்கள். பாம்பே ஜெயஸ்ரீ
Get this widget | Track details | eSnips Social DNA

Mannupugazh - பெருமாள் திருமொழி (Divya prabhandam)
Lyrics: Kulasekhara aazhwar ;Singer: Bombay Jayashree (Album: Vatsalyam); Raga : Nilambari


மும்மூர்த்திகளில் ஒருவராம் பக்த தியாகராஜரின் கீர்த்தனைகளில், அந்த யதுகுல, ராகவ ராமன், ராஜா ராமன், கோசலை ராமன் அழகிலே மயங்கி, அவனுடைய குணாதிசியங்களை எல்லாம் சொல்லி சொல்லி, பாடி பாடி மகிழ்ந்து, ராமா, நீயே எனக்கு எல்லாம் எனக் கதறி, ராமா ! என்னை இகலோக பந்தங்களில் இருந்து விடுவித்து மோக்ஷமதை தா என பிரலாபிக்கும், கண்ணீர் வடிக்கும் நிலை ஸர்வகுண ஸம்பன்ன ப்ரதீக உபாசனையின் ப்ரத்யக்ஷ உதாரணம்.

ராமா ! நீயே சர்வ குண ஸம்பன்ன தாரி. நீ வா என்று அழைக்கும் பக்த தியாகராஜர் அவர்களைப்பார்ப்போம்.




[Let all be attentive. Oh Ramachandra,please come. Oh Rama the repository of all virtues,please enter. ]

இதே பாடலை பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் குரலில் கேட்க

ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே
ரகுநாதாய நாதாயா சீதாயா பதயே நமஹா

என்று சொல்கிறோம்.

அதே சமயத்தில் இந்த நிர்குண சம்ப்ரதாய கபீர் ராம பக்தியில் திளைத்தவர் , என்று சொல்லும்போது அந்த நிர்குண நிராகார சத், சித், ஆனந்த ஸ்வரூபியாக உள்ள பரபிரும்மத்தையே ஹரி எனவும் ராமன் எனவும் குறிப்பிடுகிறார் எனக்கொள்ளுதல் வேண்டும்.

என்ன சொன்னாலும், சகுண பிரும்ம உபாசனையானாலும், நிர்குணமான இறை தத்துவமாக இருந்தாலும் சரி, ராம என்று ஒரு முறை சொல்லிவிட்டாலும் போதும் பாபங்கள் எல்லாமே நீங்கிவிடும் என்று இருவருமே சொல்கிறார்கள்.

கபீரைப் பொறுத்தவரை, ராம் என்பது ஒரு இறைவனது பேரொளியில் அடைக்கலமாய், தன்னை மறந்து , "தன்னை " இழந்து,அந்த பிரும்மனில் சான்னித்யம் அடைந்து, தானும் அந்த பிரும்மனும் ஒன்றே எனத் தெளிந்த அத்வைத நிலை. தத்துவம். ஆயினும் இறைவனை அடைய அவர் சென்ற வழி, மார்க்கம், பக்தி மார்க்கம். ராஜ யோகம், ஞான யோகம், கர்ம யோகம் யாவையும் விடுத்து,பக்தி மார்க்கத்தைக் கடைப் பிடித்து ஒழுகியவர் கபீர்.

பக்தி திராவிட உபஜை, லாயே ராமனந்த்.
பர்கத் கியா கபீர் நே , சப்த தீப் நவ காண்ட்

என சொல்லப்படும் உக்தி படி,

கபீர் தனது குருவின் உபதேசம் " ராம் " எனப்பெற்று, அதைப் போற்றி தமது தத்துவத்தை, நாரத பக்தி எனும் பெயர் சூட்டி, அதன் அடிப்படை தத்துவமே எல்லா ஜீவ ராசிகளிடம் அன்பு பூண்டு இருப்பதே இறைவனை அடையும் ஒரே வழி என தமது தோஹாக்கள் வழியே சொல்லியிருக்கிறார்.

இறைவனை ப்ரேம ஸ்வரூபி ஆகவும், அன்பின் வடிவாகவும் கண்டு, அன்பின் வழியேதான் அந்த ராமனை அடைவது எளிதான வழி எனவும் சொல்கிறார். அந்த காலத்திய பக்தி மார்க்கங்களுக்கு அப்பாற்பட்ட வழி நாரத பக்தி எனச் சொல்லப்பட்டது.
(# நாரத பக்தி பற்றிய விவரமான குறிப்பு கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது#)

அவரது ஹரி, அவரது ராம் நிர்குண, நிராகார, அத்விதீய, அத்வைத இறைவன் மாயா ரஹித பிரும்மன் ஆவான். உலக வாழ்க்கையில், லெளகீக ரீதியில் நமக்கெல்லாம் பரிச்சயமான , பிரதீக உபாசனை படி, அந்த பிரும்மதிற்கு ஒரு உருவத்தைக் கொடுத்து, அக்கடவுளை பிரதிஷ்டை செய்து, பூஜை முடிந்தவுடன் அவனை யதா ஸ்தானம் அனுப்பும் பக்தி மார்க்கம் அல்ல அவருடையது. சுருக்கமாக சொல்லப்போனால், அவரது ஹரி, அவரது ராமன், மாயா ரஹித பிரும்மன். ஒரு புரிதலுக்குச் சொல்லபோனால், அது கிட்டத்தட்ட இது போல்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
.

ஆனாலும், கபீருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

பஹன் பூஜை ஹரி மிலை,
தொ மை பூஞ்சும் பஹாட்
என்பவர் கபீர்.

அவர் வழி தனி வழி. ராமா ராமா என உருகினாலும் அவரது ராமன் நிர்குணம், நிராகாரம், ஸர்வ வ்யாபி,ஸர்வ ப்ரேமி.
நம்முடைய பாரம்பரிய வழக்கம் உருவ வழிபாடு.

உருவ வழியே அருவத்திற்குச் செல்ல நமது யோக மார்க்கங்கள் வழி காட்டுகின்றன.


தியானத்தின் வழியாக, இறைவனை அடையச்சொல்வது ராஜ யோகம். ராஜ யோகத்திலே, யமம், நியமம் என்று தொடங்கி ஆசனம், பிராணாயாமம் ,பிரத்யாஹர்ரம், தாரண, த்யானம், சமாதி என எட்டு நிலைகள் புரிந்துகொள்வதற்கே முடியவில்லையே ? இதை சாதனை செய்வது எங்கனம் ?

அது சரி . யோகங்களைப் படிப்போம் என்றால், ஹட யோகம், லய யோகம், மந்திர யோகம், ராஜ யோகம். ஹட யோகத்திலே ஹ என்றால் ஞானம். ட என்றால் ஆனந்தம். ஹட யோகத்தில் குண்டலினி ஷக்தி யை உசிப்பி விடவேண்டுமாம்.

இந்த மஹா குண்டலினி சக்திதான் மஹா பிரளயித்திலும் இருக்கிறதாம். மூலாதார சக்கிரத்தில் ஒரு முக்கோணம் வடிவத்தில் இந்த குண்டலினி ஒரு பாம்பு போல் மூனரை அடிக்கு சுருட்டி படுத்து கொண்டு இருக்கிறதாம். இதை எழ வைக்க வேண்டுமாம்.( யோவ் ! பயமா இருக்கிறதையா !!)

இது போல் ஸ்வாதிஷ்டான சக்ரம், மணி பூரக சக்ரம், அனஹத் சக்ரம், விஷுத்த சக்ரம், ஆங்கயா சக்கிரம், பிரம்மா ரங்கரா சக்கிரம், ( தலை சக்கிரம் போல் சுழல் கிறதே அய்யா !! இந்த காலத்தில் இதுவெல்லாம் புரிந்துகொள்ள முடியுமா ? அதற்கு எனக்கு நேரம் கிடையாதே !! )

இதுவெல்லாம் போதாது என்று எனது நண்பர் வேங்கட ராமன் சாஸ்திரம் படித்தவர் அவ்வப்பொழுது, ஈடா, பிங்களா, சுஷும்னா நாடிகளைப் பற்றி தெளிவாகச் சொல்கிறேன் என்று குழப்புவார். (என்னை விட்டுடுங்க சார் !!)

அப்ப கபீர் சொல்லுவார்:
[ab mohin raam baroso thera, aur kown kaa karown nihor]

ஹரியை நம்பி அவனை நினை, அது போதும். இந்த கலி யுகத்திலே நாம ஜபம் செஞ்சாலே போதும்.

(அப்பாடா ! ஆளை விடுடா !)

இப்படி, யோகா மார்க்கம், ராஜ மார்க்கம், கர்ம மார்க்கம் எனும் மற்ற மார்கங்களை
எல்லாம் விடுத்து, ராமனுஜரின் சீடராம் கபீர் பக்தி மார்க்கத்தின் நுழைவாயிலை, ராமனது ஸ்மரணையின் மகத்துவத்தை, ராம நாம உச்சாடனத்தை, கபீர் எடுத்துரைத்தது பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் இருந்தது.

எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் பக்தி மார்கமே சிறந்தது எனச்சொல்லும் கபீர் பக்தி மார்கத்தில் ராம நாம ஸ்மரணைதனை எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் எளிது என்கிறார்.

कबीर् कहता जात है, सुणता है सब् कोइ
राम् कहे भला होइगा, नहि तर् भला न होइ
||

कबीर् कहै मै कथि गया, कथि गया ब्रम् महेश्
राम् नाव् ततसार् है, सब् काहू उपदेस


எல்லா தத்வங்களின் ஸாரமும் ராம நாமம் தான். இதை
நான் சொல்லவில்லை, பிரும்மாவும் சிவனும் இதே தான் சொல்கிறார். பிரம்மனும் மஹேஸ்வரனும் போற்றும் ராம நாம உச்சாடனைத்தை அதன் மகிமையை கபீர் எடுத்துக்காட்டியதை அடுத்த இடுகையில் காண்போம்.
----------------------------------------
நாரத பக்தி சூத்திரத்தை ஒட்டியக் குறிப்புகளும் கபீரின் பாடல்களில் உண்டு என்பதைப் பற்றிய சுப்புரத்தினம் ஐயா அனுப்பியுள்ள இன்னொரு குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

May I add naradha bhakthi as the contemporaries of Kabir called the same included at least eleven formats that were usual amongst the saguna upasaka krama also.

This would be evident from the ஆஸக்திகள் (aasakthis) detailed below:

1. குண மஹாத்மிய சக்தி [guna mahathmiyamasakthi ]
Govyandha gun gaayiye
thathai bhayee param nirdhan

2. ரூப சக்திrupasakthi
loot chooti khelai vikaraal, ananth kala natvar gopal

3. பூஜா சக்தி poojasakthi
jehi pooja man bhaavai, sow poojanahaar na jaanai.

4. ஸ்மரண சக்தி smaranasakthi.
kahai kabeer jogee aru kangam ai sab jhooti aasa
guru prasaadi rahi chathrig jyun nihachai bhagathi nivaasaa

5. தாஸ்ய சக்தி Dasyasakthi
kahai kabeer sevom bhanvaari.

6. சக்ய சக்திsakyasakthi
( nil )
7. காந்த சக்தி kaanthasakthi.
hari mera priya main raam hi bhahuriya

8. வாத்ஸல்ய சக்தி vatsalyasakthi
hari mera piv , main raam kee bhahuriyaa

9. தன்மய சக்தி thanmayasakthi
virahin piya paavai nagin, jiyaraa thalpai maayi
kai virahin ke meech dhai, kai aapaa dhikalaayi

10. பரவிரஹ சக்தி para virahasakthi
bhahuth thinan ko johathee, bhat thumhaari raam
jiv tharasai thuj milan koon mani naahin vishraam.

11. ஆத்ம நிவேதன சக்தி aathmanivedhanaasakthi
maagho main aisaa aparaadhee, theri bhagathi heth nahin saadhi.

The inclusion of all these sakthis in his poetry does in no way indicate that kabir has astrayed away from his main Nirguna Sampradaya. These scholars say indicate to the extent kabir was influenced or 'taught' by his guru Ramanandh or the scholars of his age.

----------------------------------
வானிலை அறிக்கை : அடுத்த சில நாட்களுக்கு (அருள்) மழை தொடரும் :)))

22 comments:

  1. சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரை அருமை.

    என் மகள் முத்துலெட்சுமியின்(சிறுமுயற்சி)கவிதையை இசைவடிவாக்கி கொடுத்துள்ளார் என்று சொல்லியிருக்கிறாள்.

    நீங்கள் சொன்ன மாதிரி அருள் மழைதான் இந்த பதிவு முழுவதும்.

    அவர் தேர்ந்து எடுத்து கொடுத்த அருமையான பாடல் மழையில் நனைய வைத்து விட்டார்.

    அடுத்த சில நாட்களும் அருள் மழையில் நனைய தயாராகி விட்டோம்.

    சூரி சாருக்கு இறைவன் எல்லா நலங்களையும் அருள்வார்.

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் சிறப்பு விருந்தினர்களை எங்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கு.

    ReplyDelete
  2. திரு சுப்பு ரத்தினம் ஐயாவின் கலக்கலான பதிவைப் பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்! கவிநயா அம்மா பதிவில் தானே பாடி யூட்யூபில் வலையேற்றம் செய்பவர் ஏன் இந்தப் பதிவில் மட்டும் அதை மறந்து விட்டார்?!

    ReplyDelete
  3. //...தானே பாடி யூட்யூபில் வலையேற்றம் செய்பவர் ஏன் இந்தப் பதிவில் மட்டும் அதை மறந்து விட்டார்?! //

    யாருடைய கவிதையாவது மனதை ஈர்த்தால் மட்டுமே அவர் இசையமைப்பார் என்று நினைக்கிறேன். பல சமயங்களில் நல்ல சந்தத்தில் அவர் பின்னூட்டங்கள் இட்டாலும் தன்னை ஒரு கவிஞர் என்று சொல்லிக் கொண்டதாக அறியேன்.அவருடைய பதிலுக்கு காத்திருப்போம்.

    ReplyDelete
  4. ஆகா, அருமை!
    இடுகை சுட்டிக்காட்ட முன்னோடியாகவும் முத்தாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
    கூடவே டிசம்பர் சீசன் கச்சேரி போனஸ்!
    வணக்கங்கள்!

    ReplyDelete
  5. திருமதி
    கோமதி அரசு வருகைக்கு நன்றி.

    வைகுண்ட ஏகாதசி அன்று இப்பதிவினை வெளியிட்டு, வந்தவர் எல்லோர்
    காதுகளுக்கும் ராம நாம விருந்தளித்த திரு கபீரன்பனுக்கு
    மட்டுமே அத்தனை பாராட்டும் சேரும்.

    உங்கள் அணிந்துரை உங்கள் பதிவின் வண்ணக்கோலங்கள் போல
    பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com
    http://movieraghas.blogspot.com
    December season

    ReplyDelete
  6. // கலக்கலான பதிவைப் பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்//

    திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களைக்கண்டேன்.
    1961ல் மதுரையை விட்டுச் சென்றபின்,
    1994 ல் சென்னைக்கு வந்த்பின் தான் இந்த கலக்கல் என்னும்
    சொல்லின் பொருளை முழுமையாக உணர்ந்தேன்.

    //கவிநயா அம்மா பதிவில் தானே பாடி யூட்யூபில் வலையேற்றம் செய்பவர் ஏன் இந்தப் பதிவில் மட்டும் அதை மறந்து விட்டார்?!//

    கபீரன்பன் சொல்லியது ஃபைனல். நோ அப்பீல்.

    நன்றி.

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  7. ஜீவா சொல்லியது:

    // இடுகை சுட்டிக்காட்ட முன்னோடியாகவும் முத்தாய்ப்பாகவும் அமைந்துள்ளது.//

    "உங்களுக்கு நல்ல வேளை. இன்னொரு எதுகை மோனை வேண்டுமென,
    முந்திரிக்கொட்டையாகவும் இருந்தது எனச் சொல்லவில்லை" என்கிறாள்
    என் தர்ம பத்தினி.

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  8. அழகான முன்னுரை சூரி சாரைப் பற்றி!

    //வலையுலகின் விதவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எல்லா விதங்களிலும் வாசகர்களைக் கவரும் அவருடைய ஆர்வம் பல இளம் தலைமுறையினரையும் வெட்கமுறச் செய்யும்.//

    அட...
    நான் பல முறை வெட்கப்பட்டு இருக்கேன், அவரின் வேகம் + விவேகம் + டெக்னாலஜி கண்டு!
    அதை நீங்க எப்படிக் கண்டு புடிச்சீங்க கபீரன்பன் சார்? அப்படியே கண்டு புடிச்சாலும், அதைப் பதிவிலும் போட்டு விட்டீர்களே! :)

    ReplyDelete
  9. சூரி சார், இந்த இடுகையிலும் கலக்கி உள்ளார்! கபீர் மற்ற மார்க்கங்களை விட்டு, பக்தி மார்க்கத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை அவரின் தோஹா மற்றும் படைப்புகளை மட்டுமே வைத்துச் சொன்னது சிறப்பு! சொல்லப் போனால், என்ன தான் பக்தி மார்க்கத்தைக் கபீர் தேர்ந்தெடுத்தாலும், அவரின் படைப்புகளில் ஞானம் என்பது, தானே மிளிரும்! :)

    //இப்படி, யோகா மார்க்கம், ராஜ மார்க்கம், கர்ம மார்க்கம் எனும் மற்ற மார்கங்களை
    எல்லாம் விடுத்து, ராமனுஜரின் சீடராம் கபீர் பக்தி மார்க்கத்தின் நுழைவாயிலை//

    கபீர், இராமானுசரின் சீடரா?

    ReplyDelete
  10. //யாருடைய கவிதையாவது மனதை ஈர்த்தால் மட்டுமே அவர் இசையமைப்பார் என்று நினைக்கிறேன்//

    Hurrah!
    என் பாட்டையும் சூரி சார் பாடி இருக்காரே! :))))

    ReplyDelete
  11. @ கே.ஆர்.எஸ்

    //அட...நான் பல முறை வெட்கப்பட்டு இருக்கேன், ..//

    ஒத்துக்கிறோம். நீங்க இளைஞர்தான்

    //..அதை நீங்க எப்படிக் கண்டு புடிச்சீங்க கபீரன்பன் சார்? //

    நானும் இளைஞன் தானே அதனாலேதான் கண்டுபிடிக்க முடிஞ்சுது !! :))))))

    ReplyDelete
  12. சுப்பு தாத்தா,
    அருமையான பதிவு. கலக்கலா இருக்கு. :-)
    ***
    ராம நாமம் குறித்து ஒரு துணுக்கு...ஒரு சொற்பொழிவில் கேட்டது. கணிதம் சார்ந்தது. [ஆனால் தர்க்கம் சார்ந்தது அல்ல. :-) ]

    http://www.americansanskrit.com/tools/alphabet.php
    மேலே உள்ள சுட்டியில் சமஸ்க்ருத எழுத்துக்களை வெவ்வேறு குழுக்களாக வகை படுத்தி இருப்பார்கள்.
    எழுத்து "ர", அதன் குழுவில் இரண்டாவது இடத்தில் வரும். எழுத்து 'ம', அதன் குழுவில் ஐந்தாவது இடத்தில் வரும்.
    ராம = 2x5
    ராம ராம ராம = 10 x 10 x 10 = சஹஸ்ர நாமம். :-)
    இப்படி தான் தெய்வம் நாம செய்யற சின்ன நல்ல காரியத்தை கூட பத்தா நூறா ஆயிராமா பெருக்கி கொள்கிறதாம்.
    இதையே கண்ணன் கதையில் பார்த்தா, (யுதிஷ்டிரர் செய்யும் ராஜஸுய யாக நிகழ்ச்சி) சிசுபாலன் கண்ணனை பாடும் பொழுது, கண்ணன் ஒன்னொன்னா தான் எண்ணுகிறான்.
    நூறு வசை மொழிகளை தாண்டியும் எண்ணுகிறான். என்னனு கேட்டா "unique" வசை மொழிகளை தான் கணக்கு செய்யறானாம். :-)
    ***
    நீலாம்பரியில் திருக்கண்ணபுரம் பாசுரம் அருமை.
    என்னிடம் திவ்ய பிரபந்தம் - சுமார் நானூறு பாசுரங்கள் - கர்நாடக சங்கீத இசை வடிவில் இருக்கிறது. உங்களுக்கு கேட்க விருப்பமா?

    ReplyDelete
  13. //உங்களுக்கு கேட்க விருப்பமா?//

    ' மா ' வுக்கு பதிலாக‌
    ' மே "

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  14. //மா ' வுக்கு பதிலாக‌
    ' மே " //

    அட்டகாசம்!

    தொடரும் பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  15. கே.ஆர். எஸ். கேட்கிறார்:
    கபீர் ராமானுஜரின் சீடரா !

    கபீரின் தோஹா ஒன்றில் தனது குருவின் பெயரை ராமானந்த் எனச் சொல்லியிருக்கிறார். அவர் த்ராவிட ப்ரதேசத்திலிருந்து வந்ததாகவும் சொல்கிறார்.
    இந்த தோஹாவை நான் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
    இருப்பினும், கபீர் வாழ்ந்த காலத்தையும் இராமானுஜர் வட மானிலங்களுக்கு யாத்திரை சென்று அங்கு வைஷ்ணவ மதத்தை ஸ்தாபனம் செய்த காலத்தையும் ஒப்பிட்டு, கபீர் தனது குரு எனச் சொல்லும் ராமானந்த் ,ராமானுஜராக இருக்கமாட்டாரோ என்ற ஐயப்பாடுகளும் இல்லாமல் இல்லை.
    வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சொல்லப்படும் ஆஸக்திகளைப்ப்ற்றிய துல்லியமான ஞானம் / அறிவு கபீருக்கு இருந்தது என்பதில் மட்டும் ஐயம் இல்லை. மேலும், நான் கட்டுரையில் எடுத்துக்காட்டும், நாரத பக்தியின் அங்கங்களான் ஆஸக்திகள் சில துளசிதாஸின் ராம சரித மானஸிலும் காணப்படுகின்றன.
    (being contd.)
    subbu rathinam

    ReplyDelete
  16. கபீர் பற்றிய நூற்றுக்கணக்கான ஆதார பூர்வமான இலக்கிய புத்தகங்கள் பல.. அவற்றில் டாக்டர் ராம் கிஷோர் சர்மா அவர்களால் எழுதப்பட்டு அலகபாத் விஷ்வவித்யாலயா பிரசுரம் செய்த நூல், மற்றும் புகழ்பெற்ற இலக்கிய வாதி டாக்டர் ஹஸாரி பிரசாத் த்வேதி எழுதி ராஜ் கமல் பிரகாஷன் நூலகத்தாரால் பப்ளிஷ் செய்யப்பட்ட நூல் இரண்டும் அடங்கும்.
    இவைகளிலும் ராமானந்த் என்பவர் த்ரவிட தேசத்திலிருந்து வந்தவரைத் தான் குருவாக கபீர் ஏற்றுக்கொண்டார் எனவும்,
    சொல்லப்படுகிறது.
    இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன். ஆனால், குருவைப்பற்றி நீங்கள் கேட்டதால், கபீர் குருவைப்பற்றிய‌
    எழுதிய தோஹா ஒன்றைத் தருகிறேன்.

    குரு கோவிந்த தோவூம் கடேன், காகே லாகௌ பாய‌
    பலிஹாரி குரு ஆப்னே, கோவீந்த் தியொ பதாய
    ( என் ) குருவும் (என் இறைவன் ) கோவிந்தனும் ஒரே நேரத்தில் என் முன்னே வந்து நின்றிடின்
    எவர் கால்களை நான் முதற்கண் சேவிப்பேன் ?
    ( கபீரே அடுத்த வாக்கியத்தில் பதிலளிக்கிறார்)
    ( எனக்கு வெளிச்சத்தை அளித்த ) குருவே உங்களையே ( நமஸ்கரிப்பேன்) ( ஏன் எனில்) நீர் தானே
    கோவிந்தனை அடைய வழி தந்தது.

    குரு இல்லையேல் கோவிந்தனை நான் அறியேன்.
    ஸ்மார்த்த, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறிய கருத்து வேறுபாடு .
    கோவிந்தனே குருவாக வந்தான் .. . இது ஸ்
    குரு கோவிந்தனுக்கு வழி காட்டினார். இது வை

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  17. (2)
    கபீர் பற்றிய நூற்றுக்கணக்கான ஆதார பூர்வமான இலக்கிய புத்தகங்கள் பல.. அவற்றில் டாக்டர் ராம் கிஷோர் சர்மா அவர்களால் எழுதப்பட்டு அலகபாத் விஷ்வவித்யாலயா பிரசுரம் செய்த நூல், மற்றும் புகழ்பெற்ற இலக்கிய வாதி டாக்டர் ஹஸாரி பிரசாத் த்வேதி எழுதி ராஜ் கமல் பிரகாஷன் நூலகத்தாரால் பப்ளிஷ் செய்யப்பட்ட நூல் இரண்டும் அடங்கும்.
    இவைகளிலும் ராமானந்த் என்பவர் த்ரவிட தேசத்திலிருந்து வந்தவரைத் தான் குருவாக கபீர் ஏற்றுக்கொண்டார் எனவும்,
    சொல்லப்படுகிறது.
    இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன். ஆனால், குருவைப்பற்றி நீங்கள் கேட்டதால், கபீர் குருவைப்பற்றிய‌
    எழுதிய தோஹா ஒன்றைத் தருகிறேன்.

    குரு கோவிந்த தோவூம் கடேன், காகே லாகௌ பாய‌
    பலிஹாரி குரு ஆப்னே, கோவீந்த் தியொ பதாய
    ( என் ) குருவும் (என் இறைவன் ) கோவிந்தனும் ஒரே நேரத்தில் என் முன்னே வந்து நின்றிடின்
    எவர் கால்களை நான் முதற்கண் சேவிப்பேன் ?
    contd..

    ReplyDelete
  18. (3)( கபீரே அடுத்த வாக்கியத்தில் பதிலளிக்கிறார்)
    ( எனக்கு வெளிச்சத்தை அளித்த ) குருவே உங்களையே ( நமஸ்கரிப்பேன்) ( ஏன் எனில்) நீர் தானே
    கோவிந்தனை அடைய வழி தந்தது.

    குரு இல்லையேல் கோவிந்தனை நான் அறியேன்.
    ஸ்மார்த்த, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறிய கருத்து வேறுபாடு .
    கோவிந்தனே குருவாக வந்தான் .. . இது ஸ்
    குரு கோவிந்தனுக்கு வழி காட்டினார். இது வை

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  19. //மா ' வுக்கு பதிலாக‌
    ' மே " //
    Ok. :-)
    Have uploaded a sample pasuram here.
    http://kannansongs.blogspot.com/2010/12/blog-post_19.html
    பிடித்திருந்தால் தனி மின்னஞ்சலில் முகவரியை தெரிவித்தால் CD அனுப்புகிறேன்.

    ReplyDelete
  20. Radha said: //
    Have uploaded a sample pasuram here.
    http://kannansongs.blogspot.com/2010/12/blog-post_19.html //

    அடடா !! அடடா !!
    ஆரபி ராகம் ! அற்புத சாரீரம் !!
    என்ன சுகம் !! என்ன சுகம் !!
    பாற்கடலின் பள்ளிகொண்ட
    பரந்தாமனுக்கு பக்கத்தில் இருக்கிறேனோ !!
    ஒருவேளை
    தேவலோகத்து
    தேவகாந்தாரியோ !!
    அவன் அங்கு அழைப்பதுக்குமுன்
    இவன் இங்கு இருக்கும் இடம்.
    கொஞ்சம் பொறுங்கள். கனவு கலையட்டும்.
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  21. //சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரை அருமை.//

    ஆம் கபீரன்பன் ஜி. நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்ட சிறுவன் போலவே உணர்கிறேன். சுப்பு தாத்தாவிற்கு என் பணிவன்பான வணக்கங்கள்.

    //பல சமயங்களில் நல்ல சந்தத்தில் அவர் பின்னூட்டங்கள் இட்டாலும் தன்னை ஒரு கவிஞர் என்று சொல்லிக் கொண்டதாக அறியேன்.//

    அவர் அம்மன் பாட்டு வலைப்பூவில் அருமையான கவிதைகளை இட்டிருக்கிறார். உதாரணத்துக்கு: http://ammanpaattu.blogspot.com/2010/10/blog-post_13.html

    பக்தியைப் பற்றி படிப்பது எப்போதுமே எனக்கு பரவசம் தரும் விஷயம். இங்கும் அதனை அனுபவித்தேன். மிக்க நன்றி இருவருக்கும்.

    ReplyDelete
  22. எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் பக்தி மார்கமே சிறந்தது //

    எனக்கும் பக்தி மார்க்கத்திலே தான் ஈடுபாடு. தாமதமாய் வந்தாலும் அனைவரின் பின்னூட்டங்கள் மூலம் பல விஷயங்களையும் தெரிந்துகொண்டேன். நன்றி. சூரி சார் தன் வழக்கமான பாணியில் கலக்கிவிட்டார்.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி