Thursday, June 01, 2017

ஆனையை விழுங்கிய ஆடு


   வட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு  முன்  இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். பாமினி சுல்தான்கள் அரசாட்சியில் பல பகுதிகளும் இருந்ததால் கணிசமான இசுலாமிய ஜனத்தொகையும் காணப்பட்டது. அங்கே கோவிந்தபட்டர் என்ற ஞானி எதற்கும் கவலைப்படாதவராய் ஜாதி பேதம் பார்க்காது அழைத்தவர் இல்லங்களுக்கெல்லாம் சென்று அவர்களின் விருந்தோம்பலை ஏற்று தன்மனம் போன போக்கில் திரிந்து வந்தார்.