<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-34896520</id><updated>2012-01-08T15:06:04.833+05:30</updated><category term='திருமூலர்'/><category term='சிவானந்தா'/><category term='கம்பர்'/><category term='சாகரன்'/><category term='பட்டினத்தார்'/><category term='வன்சொல்'/><category term='அப்பர்'/><category term='யோகிராம்'/><category term='விஜயலக்ஷ்மி பண்டிட்'/><category term='மணிதாஸ்'/><category term='நாலடியார்'/><category term='தாயுமானவர்'/><category term='அபிராமி பட்டர்'/><category term='ऊँचे पानी'/><category term='பத்திரகிரியார்'/><category term='நீதிவெண்பா'/><category term='கம்பன்'/><category term='ஔவையார்'/><category term='இன்சொல்'/><category term='Jesus'/><category term='चक्वा'/><category term='கடுவெளிசித்தர்'/><category term='நாமதேவர்'/><category term='கிவாஜ'/><category term='திருமந்திரம்'/><category term='புரந்தரதாஸர்'/><category term='மொழிபெயர்ப்பு'/><category term='tamil translation'/><category term='நாக் மஹாஷய்'/><category term='திருமழிசை ஆழ்வார்'/><category term='சூரத்குமார்'/><category term='கணபதி முனி'/><category term='தலக்காடு'/><category term='சிவபிரகாசசுவாமிகள்'/><category term='ஆண்டாள்'/><category term='குலப்பெருமை'/><category term='ஜலாலுதீன் ரூமி'/><category term='நன்னெறி'/><category term='ஏசு'/><category term='குரு நானக்'/><category term='ஜகதித்சிங்'/><category term='மாணிக்க வாசகர்'/><category term='நாக்மஹாஷய்'/><category term='धीरे धीरे रे मना'/><category term='சாணக்கியன்'/><category term='சிறு பஞ்சமூலம்'/><category term='கபீர் தோஹா'/><category term='கல்கி'/><category term='காரைக்கால் அம்மையார்'/><category term='சாமம்'/><category term='இக்னேஷியஸ் லயோலா'/><category term='பாகவதம்'/><category term='சுவாமி ராமா'/><category term='நம்மாழ்வார்'/><category term='திருஞான சம்பந்தர்'/><category term='பெரிய புராணம்'/><category term='பாரதி'/><category term='चक्वी'/><category term='மீராபாய்'/><category term='சிவானந்தர்'/><category term='அகப்பேய் சித்தர்'/><category term='ராமகிருஷ்ணர்'/><category term='இராமகிருஷ்ணர்'/><category term='திருநாவுக்கரசர்'/><category term='சேக்கிழார்'/><category term='பூதத்தாழ்வார்'/><category term='மென்னூல்'/><category term='அலெக்ஸாண்டர்'/><category term='நாக் மஹாஷயர்'/><category term='ஏக்நாத்'/><category term='சிவபிரகாச சுவாமிகள்'/><category term='நிலையாமை'/><category term='சிறப்புப் பதிவு'/><category term='பாரதியார்'/><category term='அருணகிரி'/><category term='கபீர்தாஸ்'/><category term='பசவேசுவரர்'/><category term='கபீர்தாஸ் பாடல்'/><category term='காளமேகம்'/><category term='பூண்டி சுவாமி'/><category term='அருணகிரிநாதர்'/><category term='திம்மக்கா'/><category term='சமனோக்கு'/><category term='ஜானாபாய்'/><category term='முருகனார்'/><category term='ரவிதாஸ்'/><category term='நாலடியார்.கபீர்தாஸ்'/><category term='கருமி'/><category term='தண்டலையார் சதகம்'/><category term='வள்ளலார்'/><category term='திருக்குறள்'/><category term='புதிரா புனிதமா. சிறப்புப்பதிவு'/><category term='கபீர்'/><category term='பில்வமங்கள்'/><category term='படிக்காசு'/><category term='ஆவுடையக்காள்'/><category term='Kabir Doha'/><category term='திருப்புகழ்'/><category term='துளசிதாஸ்'/><category term='ரமணர்'/><category term='பகவத்கீதை'/><category term='translation'/><category term='தோஹா'/><category term='மாணிக்கவாசகர்'/><category term='Nag mahasaya'/><category term='விவிலியம்'/><category term='कबीर'/><category term='மணிவாசகர்'/><category term='நல்வழி'/><category term='இடைக்காட்டுச் சித்தர்'/><category term='வேமனா'/><category term='குமரகுருபரர்'/><category term='ஏசுநாதர்'/><category term='ஈகை'/><category term='புல்லா ஷா'/><category term='பிரான்ஸிஸ் சேவியர்'/><category term='பீம்ஸேன் ஜோஷி'/><category term='அரவிந்தர்'/><category term='தாயுமானவ்ர்'/><category term='தயானந்த சரஸ்வதி'/><category term='விவேகானந்தர்'/><category term='இராமலிங்க அடிகள்'/><category term='நாழிகை'/><category term='சிவபோகசாரம்'/><category term='மாலிங்கி'/><category term='ஆதிசங்கரர்'/><category term='வள்ளுவர்'/><category term='திருவள்ளுவர்'/><category term='அதிவீரராம பாண்டியர்'/><title type='text'>கபீரின் கனிமொழிகள்</title><subtitle type='html'>"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ"</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>117</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-2518468070717863129</id><published>2011-08-15T13:01:00.013+05:30</published><updated>2011-08-15T13:41:36.124+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இராமலிங்க அடிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வள்ளலார்'/><title type='text'>இச்சிறியேனால் ஆவது என்னே ?</title><content type='html'>&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்&lt;br /&gt;      பணிகின்றேன், பதியே, நின்னைக்&lt;br /&gt;கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்&lt;br /&gt;      குழைகின்றேன், குறித்த ஊணை&lt;br /&gt;ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்&lt;br /&gt;      உறங்குகின்றேன், உறங்காதென்றும்&lt;br /&gt;ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ&lt;br /&gt;      இச்சிறியேனால் ஆவது என்னே !  (&lt;/span&gt; &lt;small&gt;இராமலிங்க அடிகள்)&lt;/small&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆவுடையக்காள் பதிவை நிறைவு செய்யும் வகையில் அவரது சுபமங்களம் ஜெய மங்களம் என்று முடியும் ஒரு பாடலை வைத்து பூர்த்தி செய்திருந்தேன். அப்போதே மனதில் ஒரு குறுகுறுப்பு. இதுவே கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்திற்கும் இறுதியான பதிவு என்று வாசகர்கள் நினைத்துக் கொள்வார்களோ என்று.  அதைத் தொடர்ந்த சில நிகழ்வுகள்  அதை உண்மையாக்கி விடுவது போல் நடந்ததென்னவோ நிஜம். மகான்களின் வாக்கிற்கு என்றுமே அதிசய சக்தி உண்டு :))&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஊர்,மும்பை, புதிய சூழ்நிலை. கடந்த நான்கு மாதங்களாக இணைய வசதி இல்லாமை.  அகலவழிப் பாதையும் ஒற்றை வழியாகிப் போனது. அதாவது ப்ராட் பேண்ட் உள்ள  அலுவலகக் கணிணியில் தனி அஞ்சல்கள் வலைப்பூக்கள் மேய்வதற்கு தடை. தனிக் கணிணியில் அலை பேசி  இணைய இணைப்பு மூலம் ஒரு சில அஞ்சல்களைப் படித்து பதில் போடுவதற்கே இரண்டு மணி நேரமாகும்  நத்தை வேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்னும் ஓரிரு மாதங்களில் நிலைமை சீரடையலாம் என்று கருதுகிறேன்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இணையம் இல்லாவிட்டால் போகட்டும், கபீரின் கைங்கரியம் ஏதாவது செய்யலாமென்று நினைத்த போது முதலில் நினைவுக்கு வந்தது ஏற்கனவே வெளியிடப்பட்ட  கட்டுரைகளை தொகுத்து மென்னூலாக்குவது. அப்படியே, சுதந்திரத் தினத்தினுள் செய்து முடிக்கவேண்டும் என்ற முனைப்போடு கடந்த பத்து நாட்களாக முயன்று செய்து முடித்தாயிற்று. விருந்தினர் இடுகைகளைத் தொகுத்து &lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;அன்பின் சங்கமம்&lt;/span&gt; என்ற பெயரில் மென்னூல் தயாரித்து e-snip வலை தளத்தில் ஒரு வழியாக ஏற்றிவிட்டேன். ஒரு MB கோப்பை வலையேற்ற எடுத்துக் கொண்ட நேரம் 54 நிமிடங்கள், அதுவும் பலமுறை முயற்சித்தப் பின்னரே கைகூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புவோரும் இணையத்திலேயே முன்னோட்டம் காண விழைவோரும் கீழுள்ள சுட்டியினை பயன் படுத்தவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://www.esnips.com/doc/43fa1d94-3ddb-4adf-942d-8d92a420fef1/anbin_sangamam"&gt;கபீரின் நிழலில்....... அன்பின் சங்கமம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களை கலந்து வெளியிட விரும்பினாலும் மேலே சொன்ன காரணங்களால் இயலாமல் போனது.  அழகான கட்டுரைகள், அருமையான நட்பு வட்டம் இவற்றைக் கருத்தில் கொண்டு இதற்கு யாரிடமும் மறுப்பு இருக்காது என்ற உரிமையுடன் செயல்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகைக்கான கபீர் ஈரடி ஒன்றைக் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-WcnsBmAs6eI/TkjMCwR9s8I/AAAAAAAAAZ4/KRIdPTZdJ9U/s1600/oldruins2.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 270px;" src="http://3.bp.blogspot.com/-WcnsBmAs6eI/TkjMCwR9s8I/AAAAAAAAAZ4/KRIdPTZdJ9U/s400/oldruins2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5640982880973599682" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;&lt;big&gt;सातों  शब्द जू बाजते, घरि घरि होते राग  ।&lt;br /&gt;ते मन्दिर खाली पडे, बैठन लागे काग   ॥&lt;/big&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சப்தசுர ராகம் தாளம், அலை அலையாய் கேட்டதொரு காலம்&lt;br /&gt;கேட்பாரில்லா மாடம், அங்கேக்  கூடிக் கரைவன காகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெறி பிடித்தவர்கள் போல் செல்வம் ஈட்டுவதில் உள்ள போட்டியும் அதன் காரணமாய் நடைபெறும்  பெரும் ஊழல்கள் வன்முறைகள் யாவும் எதற்காக ? பெரிய மாளிகைகளைக் கட்டி அங்கே ஆடலையும் பாடலையும் ரசித்து அனுபவிக்கவா?  அதற்குத்தான் பலருக்கு நேரமே இருப்பதில்லையே. அப்படியே அனுபவித்தாலும் கடைசியில் அவர்கள் கதியும் என்னாயிற்று ? வெறும் காகங்கள் அமர்ந்து கரையும் இடிபாடு நிறைந்த கட்டிடங்களாவன்றோ காலப்போக்கில் மாறி விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நிலையற்ற உலக வாழ்வில் சுகத்தை நாடுவதை விட்டு நித்திய சுகம் தரும் இறைவன் கழல்களைப் பற்றிக் கொண்டால் உய்ய வழியுண்டு என்று சொல்லும் வள்ளலாரின் பாடலை இங்கு சேர்த்து நினைவுகூர்வோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே,&lt;br /&gt;             கற்றதெல்லாம் பொய்யே, நீர் கணித்ததெல்லாம் வீணே&lt;br /&gt;உண்டதெலாம் மலமே, உட்கொண்டதெலாம் குறையே&lt;br /&gt;             உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே,&lt;br /&gt;விண்டதனால் என் ? இனி நீர் சமரச சன்மார்க்க&lt;br /&gt;            மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே&lt;br /&gt;எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்,&lt;br /&gt;            இறவாத வரம் பெறலாம், இன்புறலாமே&lt;/span&gt;&lt;br /&gt;                              ---------------------&lt;br /&gt;இன்று இந்திய சுதந்திரதினம் மாத்திரமன்று, மகான் அரவிந்தரின் ஜன்ம தினமும் கூட. நல்ல ஆன்மாக்கள் விரும்பும் சுதந்திரத்தை குறிக்க வந்த தினமாகவும் கொள்ளலாம்.   பாரதியார் இந்திய சுதந்திரத்தை விரும்பி &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆடுவோமே பள்ளு பாடுவோமே&lt;/span&gt; என்றால் இராமலிங்க பெருமானும் ஆன்மாவிற்கான சுதந்திரத்தை துய்த்துப் பாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;            மாளாத ஆக்கை பெற்றேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;           நடுவிருந்து குலாவுகின்றேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பாடுகின்றேன் எந்தை பிரான் பதப்புகழை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;          அன்பினொடும் பாடிப் பாடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;           எண்ணம்  எலாம் நிரம்பினேனே&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அடுத்த இடுகை எப்போது வருமோ தெரியாது !&lt;br /&gt;இச்சிறியேனால் ஆவது என்னே !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-2518468070717863129?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/2518468070717863129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=2518468070717863129' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/2518468070717863129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/2518468070717863129'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2011/08/blog-post.html' title='இச்சிறியேனால் ஆவது என்னே ?'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-WcnsBmAs6eI/TkjMCwR9s8I/AAAAAAAAAZ4/KRIdPTZdJ9U/s72-c/oldruins2.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-3933554799174097327</id><published>2011-03-28T21:37:00.005+05:30</published><updated>2011-03-29T22:17:26.651+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆவுடையக்காள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்'/><title type='text'>கோட்டான் அறியுமோ மார்த்தாண்டன் மகிமை ?</title><content type='html'>(ஆவுடையக்காள் தொடர்ச்சி...4.)&lt;br /&gt;&lt;br /&gt;மனதிற்கு உபதேசம் செய்வது உலக மக்களுக்கு உபதேசம் செய்வதற்கான ஒரு யுக்தி. ஆகையால் பல ஆன்றோர்கள் பாடல்களை மனதிற்கு உபதேசம் செய்வது போல அமைத்துத் தந்திருக்கிறார்கள். அவ்வகையில் தன்யாசி ராகத்தில் ஆவுடையக்காள் இயற்றிய ஒரு பாடலைக் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பல்லவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அவித்தை வசத்தை அடையாதே மனமே&lt;br /&gt;ஆனந்தாப்தியில் அமர்ந்திராய் மனமே&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனுபல்லவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கொஞ்சமாய் ஒரு வித்தை படித்தால்&lt;br /&gt;பஞ்சாஸத் கோடி விஸ்தீர்ண மண்டலத்தில்&lt;br /&gt;மிஞ்சின பேருண்டோ என்பார்&lt;br /&gt;கொஞ்சியே கர்வத்தை அடைந்து கொக்கரிக்கும், மனமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சரணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பக்த ஜனங்களான பேர்கள், மனமே&lt;br /&gt;உத்தம சுலோகனை கீர்த்தனம் செய்தால்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கத்துகிறாளென்று&lt;/span&gt; சொல்லுவார்&lt;br /&gt;ஸர்வகாலமும் காது கேட்கப்படாமல் கரிக்கும் ( அவித்தை)&lt;br /&gt;&lt;br /&gt;ஸாதுக்கள் கதையைக் கேட்க, மனமே&lt;br /&gt;சிரத்தை உள்ளவன் போலே வந்து தலையாட்டி கேட்கும்&lt;br /&gt;வாதுக்காகிலும் இங்கே வருவார்&lt;br /&gt;மகத்தானத் தர்க்கத்தால் வாய் மூட அடிக்கும் (அவித்தை)&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்ஞானமானதோர் விருக்ஷம் மனமே, அதில்&lt;br /&gt;அனுதினமும் காம குரோத லோப மோகங்கள் தளிர்க்கும்&lt;br /&gt;ஞானமாகிற கத்தியாலே அதை வேரோடு வெட்டி&lt;br /&gt;வெங்கடேசுவரரைச் சேராய்             ( அவித்தை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவித்தையின் லட்சணத்தை சொல்வதன் மூலம் அஞ்ஞானிகளின் போக்கையும் படம் பிடிக்கிறார் அக்காள்.  சத்சங்கங்களுக்குள் வந்து தம்முடைய பாண்டித்தியத்தை தர்க்க வாதங்கள் மூலம் காட்டிக் கொள்ள முற்படுவோர் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுடைய புகழ் பாடுகின்ற இடத்தில் சுருதி, லயம், குரல் வளம் போன்ற இசை லட்சணங்களையே பிரதானமாய் வைத்து பாடத் தெரியாதவர்களை ’கத்துகிறாள்’ என்று குறைசொல்வதும் ஒருவகையில் பாண்டித்திய கர்வத்தையே குறிக்கும்.  தங்களை மிஞ்சிய பேர் கிடையாது என்று கொக்கரிக்கும் மனது உடையவர்கள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காள் சொல்வது போல் அனுதினமும் அவர்களுள் அஞ்ஞானம் விதவிதமாக துளிர்விட்டு பெரிய மரம் போல் வேர் விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு ஞானிகளின் உபதேசம் மனதில் ஏற்புடையதாகாது. அவர்களிடம் ஞானிகளின் பெருமைகளைப் பற்றி  எடுத்துக் கூறினாலும் பயன் இருக்காது. உள்ளத்தில் அவ்வளவு இருட்டு. சகமனிதரை எடை போடுவது போலவே அவர்களையும் எடை போடுவார்கள். அவ்விஷயங்களை அவர்களிடம் பேசுவதே தவறு. ஏனெனில் அவர்கள் மகாத்மாக்களைக் குறித்து தவறாகப் பேசினால் அந்த பாவத்திற்கு  அவர்களை இட்டுச் சென்ற குற்றமும் நம்முடையதாகி விடுமன்றோ !&lt;br /&gt;அஞ்ஞானிகளுக்கு உபதேசம் செய்வது அர்த்தமற்றது என்பதை சொல்ல வரும் போது கோட்டான்களின் உதாரணத்தை சொல்கிறார் ஆவுடையக்காள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஜாதிக் குதிரையின் குணத்தை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;வெகு வியாதி  பிடித்த கிழக்கழுதை அறியுமோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;மூடிக் கிடக்கும் குடத்துள்ளே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;வெண்கலத்து பிரதீதி தெரியுமோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கோட்டான் சமூகமெல்லாம் கூடி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;மார்த்தாண்ட ஸ்வரூபத்தின் மகிமையை அறியுமோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கூத்தாடி கையில் குரங்கு போல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;தேட்டாளி அவித்தைக்கு வசப்பட்டு கிடக்கும் &lt;/span&gt;&lt;br /&gt;........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:85%;" &gt;(&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 51, 0);font-size:85%;" &gt;பிரதீதி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:85%;" &gt; , &lt;i&gt;n&lt;/i&gt;.= 1. Clear apprehension or insight; அறிவு. 2. Fame; கீர்த்தி.  3.Delight; மகிழ்ச்சி ;&lt;br /&gt;மார்த்தாண்டன்= சூரியன் : தேட்டாளி = ??)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டான் இரவிலே சுற்றுவது, பகல் வெளிச்சம் அதற்கு ஆகாது. ஏதாவது மரப்பொந்தின் இருட்டிலேப் பகலைக் கழித்து இரவு கவிந்ததும் வெளியே வரும் குணம் உடையது. அதற்கு சூரியனின் பெருமைப் பற்றித் தெரியாது. வேறு பறவைகள் அவன் பெருமையை எடுத்துக் கூறினாலும் அந்த சூரியன் இல்லாமலேயே நாங்கள் வாழவில்லையா என்று விதண்டா வாதத்தில் ஈடுபடக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்முடைய இரவு வாழ்க்கையே ஆதவனின் வருகையால்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையும் அவைகளுக்கு தெரிந்திருக்கப் போவதில்லை. அப்படி இருட்டிலேயே (அஞ்ஞானத்திலே) வாழ்ந்து, மறைந்து போகும் தன்மை உள்ளவர்களோடு தம் சக்தியை விரயமாக்க வேண்டியதில்லை  என்பதை கபீர்தாஸரும் வலியுறுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;big&gt;पशुवा सों पालौ पर्यो, रहु रहु हिया न खीज ।&lt;br /&gt;ऊषर  बीज  न  ऊगसी, बोव  दूना  बीज ॥&lt;/big&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கருணையுடன் மேலோர் உரைப்பினும், செவிமடுக்கும் நீசனும் இல்லை&lt;br /&gt;கரம்பையில் இரட்டிப்பு விதைப்பினும், முளைத்தெழும் விதையும் இல்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;&lt;small&gt;(கரம்பை =பாழ்நிலம்)&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மடங்கு விதையைத் தூவினாலும் பாழ்நிலத்தில் விதை முளைக்காது.&lt;br /&gt;அன்பு (அல்லது இரக்கம்) என்னும் ஈரம் இல்லாத மனதில் நல்ல புத்திமதிகளும் வழிகாட்டும் உரைகளும் பயனற்றவை ஆகின்றன.  ஈரம் இல்லாத மண் இறுகும். அங்கங்கே வெடிப்புகள் தோன்றும். அது போல அன்பற்ற உள்ளங்களும் இறுகி சுயநலம், தற்பெருமை, பேராசை என்பனவாய் வெடித்து பாளம் பாளமாகக் காட்சியளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;”தமஸோர்மா ஜோதிர் கமயா” என்பது பிரார்த்தனை. இருளிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லவும் பெருங்கருணையாளனான கடவுளின் கருணை வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து&lt;br /&gt;   எழுகின்ற ஞாயிறே போன்று&lt;br /&gt;நின்ற நின்தன்மை நினைப்பற நினைந்தேன்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறை சிவனை நினைத்துப் போற்றுவது போல் என்றாவது இறையருள் பொழியும் போது ஈரம் பிடிக்கும். பின் அன்பு சுரக்கும். அது வரை எது சொன்னாலும் அதற்கு பலன் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;மழையறிந்து விதைப்பவன் போல ஆன்றோர்கள் அந்த ஈர மனப்பக்குவம் அடைந்தவர்களுக்கே உபதேசம் செய்ய விரும்புவர். அது இல்லாதவரை உழவன் வறண்ட  நிலத்தை ஒதுக்குவது போல் நம்மை நீசர்களாய் ஒதுக்கி வைப்பர். நாமும் கோட்டான்கள் போல அஞ்ஞான இருளிலே அலைந்து கொண்டிருப்பவராவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;மித்தையை நம்பி விஷய போகம் புசித்து&lt;br /&gt;சத்துருக்கள் சித்தம் தவிடு பொடியாக்குவித்து,&lt;br /&gt;அஞ்ஞானத்தாலே அறிவிழப்பர் மானிடர்கள்&lt;br /&gt;..........&lt;br /&gt;இலக்கமற்ற ஜன்மத்தை எண்ணத் தொலையாது&lt;br /&gt;மறித்துமிங்கு ஓடிவரும் மாயமிது ஏதென்றால்,&lt;br /&gt;(அதை) அறிந்து விசாரிக்கின் ஆத்மாவே நாமென்னும்,&lt;br /&gt;தேகமொடு போகம் ஸ்திரமென்றிருக்கிறவன்&lt;br /&gt;மூடர்களில் மூடன் முழுதும் அஞ்ஞானி அவன்&lt;br /&gt;&lt;br /&gt;ஞானசட்சு தான் விளங்கி நன்றாகவே அறிந்தால்&lt;br /&gt;தோன்றுவது கானல் ஜலம் சிப்பியதில் வெள்ளியே போல்,&lt;br /&gt;மோகம் விட்டுப் பார்க்கிறவன் மோக்ஷ ஸ்வரூபி கண்டாய்&lt;br /&gt;(என்று) தாமரையாள் மார்பன் தனஞ்சயற்கு சொல்லி நின்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே கண்டது கிருஷ்ணன் அருச்சுனனுக்கு சொல்வதாக ஆவுடையக்காள் இயற்றிய ஸ்ரீ பகவத்கீதா ஸாரஸங்கிரஹம் என்ற பாடற் தொகுப்பில் வருவது. தேகத்தை நிலையானது என்று நினைந்து உலக போகங்களுக்காக அல்லாடுபவர்களே பெரும் அஞ்ஞானிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் குரு இல்லாமல் அஞ்ஞானம் விலகாது என்பதையும் அழகிய உவமைகளோடு விளக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;காதம் வழி சப்பாணி கடுகு நடந்தோடுதல் போல&lt;br /&gt;ஊமை பல வார்த்தைகளும் உண்டென்று உரைத்தல் போல&lt;br /&gt;செவிடனுக்கு கான வித்தை தெரியுமென்று கேட்பது போல&lt;br /&gt;&lt;br /&gt;வருமெனக்கு என்று சொல்லி வாயடியாலே அடித்துத்&lt;br /&gt;திரிகிறது மாத்திரமே, திடனாக ஆத்மாவை&lt;br /&gt;அறியப் போகாது கண்டாய் ஆசாரியர் அன்றியிலே,&lt;br /&gt;வந்தாலும் நில்லாது மரணஜன்மம் போகாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிரவண பலத்தாலே சற்றுண்டு புண்ணியங்கள்&lt;br /&gt;(என்று) உலகளந்த மாதவனார் உள்மானம் சொல்லி நின்றார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;&lt;small&gt;&lt;br /&gt;(அறியப் போகாது கண்டாய் ஆசாரியார் அன்றியே = குரு இல்லாமல் அறிய முடியாது) &lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகவத்கீதை சாரம் அன்றி, ஆவுடையக்காள் அவர்கள் ஞானகுறவஞ்சி நாடகம், ஞான வாஸிஷ்டத்தில் சொல்லப்படும் சூடாலை கதை, வேதாந்த கப்பல், ஸ்ரீ வித்யை சோபனம் போன்ற அபூர்வ பாடல்கள் திரட்டுகளை இயற்றியிருக்கிறார். அவரது அனுபோக ரத்னமாலை என்ற பாடல் தமது குருநாதர் பிரிவுக்காக இரங்கல் முறையில் பாடப்பெற்றிருக்கும் அற்புத அத்வைத சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் குருவின் ஆணைப்படி மீண்டும் செங்கோட்டைக்குத் திரும்பி அவர் பலகாலம்  மக்களுக்கு நல்வழிகாட்டியதாக சொல்லப்படுகிறது. இப்போது கிடைத்திருக்கும்  பாடல்களெல்லாம் அப்போது திரட்டப்பட்டவையாக இருக்க வேண்டும். ஒரு ஆடி அமாவசையன்று  குற்றாலமலையேறிச் சென்றவர் திரும்பவே இல்லையென்றும் எங்கு தேடியும் அவரது  தேகம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சங்கரரைப் போலவும்  மணிவாசகரைப் போலவும் விதேக முக்தி அடைந்தார் என்று கருதுவர்  சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பவபயங்கள் போக்கிவைத்து பரமபதம் தந்தவர்க்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பக்தி வைராக்கிய நிலை தந்தவர்க்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நேதி நேதி வாக்கியத்தால்;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நிச்சயங்கள் காட்டி வைத்த நிர்மலர்க்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;[ஆய்குடி வெங்கடராம சாஸ்திரி அவர்களின் முயற்சியால்  முதல் பாடல் திரட்டு 1953-ல் வெளிவந்தது. பாரதியாரை தாய்வழி சித்தப்பாவாக உறவு முறை கொண்ட ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம் பல பாடல்களை செங்கோட்டை பகுதிகளில் பயணம் செய்து திரட்டி அவ்வப்போது ஆன்மீக சஞ்சிகைகளில் கட்டுரை வடிவில் வெளியிட்டு வந்தார்.  அவர்களிடமிருந்து  அக்காளின் பாடல்களை பெற்று ஞானானந்த தபோவனத்தை சேர்ந்த  நித்யானந்த கிரி ஸ்வாமிகள் இப்போது (2002) வெளியிட்டு இருக்கிறார்கள். விலாசம் : ஸ்ரீ ஞானானந்த நிகேதன், தபோவனம் அஞ்சல்,-605756,விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:85%;" &gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-3933554799174097327?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/3933554799174097327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=3933554799174097327' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/3933554799174097327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/3933554799174097327'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2011/03/blog-post_28.html' title='கோட்டான் அறியுமோ மார்த்தாண்டன் மகிமை ?'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-1431560928492131699</id><published>2011-03-12T16:56:00.008+05:30</published><updated>2011-03-13T07:12:06.456+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆவுடையக்காள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்'/><title type='text'>கோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்</title><content type='html'>&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:85%;"&gt;ஆவுடையக்காள் தொடர்ச்சி.......&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவனந்தபுரத்தில் ஒரு அத்வைத கருத்தரங்கத்தில் பங்கேற்று கருத்து சொல்ல முற்பட்டபோது ‘யாரிந்த மொட்டை’ என்று இளப்பமாய் அவரை பேச விடாமல் தடை செய்ய சிலர் முயன்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘யார் மொட்டை? என் உடலா, மனமா பிராணனா அல்லது என் ஜீவனா ? அல்லது என் ஆத்மாவா? நானென்பது என்ன ? நான் எப்படி மொட்டையாக முடியும் ? (&lt;span style="font-style: italic;"&gt; மொட்டை என்றால் பூரணமற்ற தன்மை, அறிவின்மை என்ற பொருளும் உண்டு&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;பூரண ஞானமுள்ள அவரைப் பார்த்து அரைகுறைகள் கேட்ட பொருத்தமற்ற கேள்விக்கு தன் ஞான அனுபவத்தினாலேயே பதில் கூறி அவர்கள் வாயை அடைத்தார். அவருடைய பாடல்களில்தான் எத்தனை வகையான வேதாந்த விளக்கங்கள், அனுபவ விசாரங்கள், ராஜயோக ரகசியங்கள், நடைமுறை உதாரணங்கள்... சொல்லி மாளாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அன்னே-பின்னே : வேதாந்தசார கும்மியிலிருந்து சில கேள்வி பதில்கள்:&lt;br /&gt;&lt;small&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;குருவாகி வந்தவன் ஆர்? சிஷ்யனாகி போனவன் ஆர்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;கூசாமல் எந்தனுக்குத் தெரியச் சொல் அன்னே&lt;/span&gt;&lt;br /&gt;தத் எனும் பதம் குரு, த்வம் எனும் பதம் சிஷ்யன்&lt;br /&gt;சோதித்தால் சப்தம் இரண்டும் சுத்தப் பொய் பின்னே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என்னிடத்திலே உதித்து என்னைப் பயமுறுத்தி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;எனக்குப் பயந்தொளித்தது எங்கடி அன்னே&lt;/span&gt;&lt;br /&gt;தன்னை மறந்தால் உருக்கும், தன்னை அறிந்தால் ஒளிக்கும்&lt;br /&gt;சற்று நீ உற்றுப் பார்த்து சந்தோஷி  பின்னே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஜீவனிருந்தால் அன்றோ தேக இந்திரிய விஷயங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஜெனித்து மரித்து அலையப் போகிறது அன்னே&lt;/span&gt;&lt;br /&gt;பாவனை எனும் ச்ருதி யுக்தி அனுபவம் வந்தவர்க்கு&lt;br /&gt;சொற்பனத்தில் கற்பிதம் போல தோற்றம் காண் பின்னே&lt;/small&gt;&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;தொட்டில் பாட்டு &lt;span style="color: rgb(204, 0, 0);font-size:85%;"&gt;( அனுபவ விசாரம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;small&gt;ஆகமப் புராணங்களை அரைத்துக் குடித்தாலும்&lt;br /&gt;உலகமெலாம் சஞ்சரிக்க யோகம் இருந்தாலும்&lt;br /&gt;ஏகமான அகண்டவெளி ஞானம் அற்றுப் போனால்&lt;br /&gt;ஏழு கோடி மந்திரத்தை ஜெபித்தாலும் பலம் காணேன்&lt;br /&gt;&lt;br /&gt;புத்தியில்லை மனமும் இல்லை அத்வைதம் தானே&lt;br /&gt;முக்தியில்லை பந்தம் இல்லை என்று எனக்குச் சொல்லி&lt;br /&gt;யுக்தி சொன்ன குரு வெங்கடேசுவரர் கிருபையால்&lt;br /&gt;பக்தியுடனே பணிந்து அகண்டமானேன்  சிவோஹம்&lt;/small&gt;.&lt;br /&gt;--------------------------------&lt;br /&gt;மோஹன ராக கீர்த்தனையின் சில சரணங்கள்:&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:85%;"&gt;(நடைமுறை உதாரணங்கள்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;small&gt;இருளை இரும்பு உலக்கையினால் அடித்து ஓட்டினால் போகுமோ&lt;br /&gt;எருதைப் பிடித்து கறந்ததினால் ஒரு பிள்ளைக்கு பால் ஆகுமோ&lt;br /&gt;அவனியில் உண்டான கர்மமெல்லாம் செய்தால் அதனால் அவித்யை போகுமோ&lt;br /&gt;தத்வப் பொருள் ஸ்வானுபூதி இல்லாது சாஸ்திரத்தால் ஸ்வப்பிரகாசமாகுமோ&lt;br /&gt;&lt;br /&gt;கையிலுள்ள நெல்லிக்கனியைக் காண கண்ணாடி பார்ப்பானேன்&lt;br /&gt;மெய் ஆபரணம் கழுத்திலிருக்க வீடெங்கும் தேடுவானேன்&lt;br /&gt;பொய் ஆன இந்தப் பிரபஞ்சத்தை தூர விரட்டியபின்&lt;br /&gt;மெய்யாய் நிறைந்த பரபிரம்மம் தானென்றறிய அலைவானேன்?&lt;/small&gt;&lt;br /&gt;-----------------------------------------&lt;br /&gt;ஆரபி ராக கீர்த்தனை ஒன்றின் சில வரிகள்:&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;(ராஜயோக ரகசியங்கள்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;small&gt;பிரணவ நிலையறிந்து பிராணாயமாம் செய்வாயானால்&lt;br /&gt;பிறக்கவும் இறக்கவும் வேண்டி வருமோடா&lt;br /&gt;................&lt;br /&gt;மனதை ஜயிக்க ஜீவா உன்னாலே ஆகுமோடா&lt;br /&gt;வாசி வசத்தாலே மனதை வசமாக்கடா&lt;br /&gt;................&lt;br /&gt;பூரகம் முப்பத்திரெண்டு கும்பகம் இரட்டியாகக் கொண்டு&lt;br /&gt;ஈரண்டு ரேசகத்தை விட்டு நீ பாரடா- ஏழெட்டு&lt;br /&gt;நாளைக்கெல்லாம் இவ்விதம் செய்வாயானால்&lt;br /&gt;வாசி வசமாகும் நீ யோசனை செய்யாதேடா &lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழு ஞானியான அவர் முன்னே வெறும் சாஸ்திர அறிவுள்ளவர்கள் எம்மாத்திரம்!! அவருடைய பெருமை புரிந்ததுமே பலர் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்றைய தினங்களைப் போலே செய்திகளை அந்நாட்களில் உடனுக்குடன் எல்லோருக்கும் எடுத்துச் செல்ல சாதனங்கள் இருக்கவில்லையே ! ஆவுடையக்காளோ அகங்காரமற்று தேகப் பிரக்ஞையின்றி  உடலை சுமந்து திரிந்தவர். அதனால் அவரைப் புரிந்து போற்றியவர்கள் மிக மிக சொற்பமாகவே இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருடைய பெருமை புரியாவிட்டாலும் போகட்டும், இழிவாக நடத்தாமலாவது இருக்கலாமில்லையா?  ஆனால் நடந்ததென்னவோ அதுதான். அக்காள் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து ஸ்ரீதர அய்யாவாள் ஆசிரமத்தை அடைந்து சிறிது காலம் அவரது வழிகாட்டுதலை வேண்டி நின்றார். அய்யாவாள் மனம் மகிழ்ந்து அவருக்கு ஆசிரமத்திலேயே தங்கி இருக்க ஏற்பாடு செய்தாலும் பிற ஆசிரமவாசிகளோ அவரைக் கண்டால் அலட்சியப் போக்கைக் கடைபிடித்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆசிரமத்தில் மரியாதைத் தரப்படாதது மட்டுமல்ல, அவர் நாயை விடக் கீழாக நடத்தப்பெற்றார். யாவரும் சாப்பிட்டு எஞ்சிய உணவே அவருக்கு வேண்டா வெறுப்பாக அளிக்கப்பட்டது. ஒரே பெண்மணி அதுவும் விதவைக் கோலம் என்பதனால் அவரோடு பேசுவதையே யாவரும் தவிர்த்தனர். இப்படி அவர் சந்திக்க வேண்டியிருந்த எதிர்ப்புகளும் அவமானங்களும் கபீர்தாஸ் அவர்களின் ஒரு ஈரடியை நினைவுபடுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;big&gt;साकट कहा न कहि चलै, सुनहा कहा न खाय  ।&lt;br /&gt;जो कौवा मठ हगि भरै, तो मठ को कहा नशाय ॥&lt;/big&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அவநீதியோர் ஏசாத ஏச்சில்லை, அற்பமது தின்னாத  பண்டமில்லை&lt;br /&gt;காக்கைதன் எச்சத்தால் நிரப்பினும், கோபுரத்திற்கொரு பங்கம் இல்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;small&gt;&lt;br /&gt;(அவநீதி= நம்பிக்கையின்மை, அற்பம் =நாய்)&lt;/small&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணவத்தாலும் அறியாமையாலும் பேசுபவர்கள் அவநீதியோர்.  அவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது. நாத்திகர்களில் இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறருடைய  நம்பிக்கைகளை மதித்து பொறுப்புடன் இனிமையாக பேசுவோர் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  உண்மையை உள்ளபடி அறிய முயற்சிக்காமல் எல்லாம் அறிந்தவர் போல பொறுப்பின்றி  பேச விழையும் அரைகுறை ஆத்திகர்களையே ’அவநீதியோர்’  என்ற சொல் குறிக்க  வந்தது. கண்டதையெல்லாம் வாயில் கடித்து ருசி காண விழையும் நாயைப் போல  அவர்கள் ’தமக்கு புரியாத விஷயங்கள் பற்றியும் அபிப்பிராயம் சொல்ல  முற்படுபவர்கள்’ என்பதாக கபீர் சொல்ல வருவதை புரிந்து கொள்ளலாம்.  அவர்களுடைய பேச்சுக்கள் (அல்லது ஏச்சுக்கள்) காக்கைகள் எல்லாம் கூடி எச்சமிடுவதைப்  போலவாம்.  அதனால் கோபுரம் சாய்ந்து விடுமா அல்லது அதன் பெருமைக்குத்தான்  களங்கம் வருமா?&lt;br /&gt;&lt;br /&gt;சான்றோர்கள் இப்பேற்பட்ட இழிவுரைகளால் மனம் சஞ்சலப்படாமல் தம் வழியே செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவுடையக்காளை நடத்திய விதம் கண்டு சீடர்களுக்கு பாடம் புகட்ட மனம் கொண்டார் அக்காளின் குரு அய்யாவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் தம் சீடர்களை அழைத்து காவிரி ஆற்றின் நடுவில் இருந்த மணல் மேட்டில் சென்று தியானம் செய்யுமாறு பணித்தார். அவர்களுடன் ஆவுடையக்காளும் இருந்தார். தியானத்தில் அமர்ந்திருந்த போது சீடர்களுக்கு ஆற்றின் நீரளவு உயர்ந்து வருவது புரிந்தது. அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு கரைசேர்ந்தனர். ஆனால் அக்காளோ தேக நினைவே இல்லாமல் சமாதியில் இருந்ததால் தன்னைச் சுற்றி நீர் சூழுமளவும் தியானம் கலையாமலே இருந்தார். கண்விழித்து பார்க்கும் போது தான் மட்டுமே சிக்கிக் கொண்டிருப்பது புரிந்தது. கரையில் இருந்த அய்யாவாள் ’அங்கேயே இரு’  என்னும் வகையில் தன் கரத்தை உயர்த்திக் காட்டினார்.  அவரும் குருவின் ஆணைப்படி அந்த இடத்தைவிட்டு அசையாது நின்றார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று நாட்கள் ஒரே இடத்தில் நின்றிருந்தார். என்ன ஆச்சரியம் ! அவருடைய காலடியில் இருந்த மணல் திட்டு மட்டும் வெள்ளத்தில் கரையவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிகழ்ச்சி மூலம் அக்காள் தமது குருபக்தியை மட்டுமல்லாமல் குருவின் பெருமையையும் அற்புதமாக உலகிற்குப் புரிய வைத்தார் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 153, 0); " &gt;(அக்காளைப் பற்றி எழுத ஆரம்பித்த பின்னர் எதை எழுதுவது எதை விடுவது என்ற குழப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அனேகமாக அடுத்த இடுகையில் நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" &gt;ஆவுடையக்காளின் வரலாறு சுவாமி சிவானந்தா அவர்களின் "Lives of Saints" (&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana; "&gt;Published by Divine Life Society, ISBN 81-7052-095-9) என்கிற புத்தகத்தை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-1431560928492131699?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/1431560928492131699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=1431560928492131699' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/1431560928492131699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/1431560928492131699'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2011/03/blog-post.html' title='கோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-6361389208552048437</id><published>2011-02-22T06:26:00.006+05:30</published><updated>2011-02-22T19:08:02.011+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரமணர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆவுடையக்காள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்'/><title type='text'>பளிங்கு மண்டபத்தில் நாய்</title><content type='html'>’ஏமாறுபவன் இருக்கிற வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்’ இது நடைமுறைத் தத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு வரும் அப்பாவி கதாபாத்திரங்கள் முதலில் சந்திப்பதே இந்த ஏமாற்றுகாரர்களைத்தான். ஏதாவது ஒரு காரணத்தால் தம் உடமையெல்லாம் அவர்களிடம் இழந்து துன்பத்தில் சிக்கிக் கொள்வதாக கதை நகரும். ஏமாற்றப்படுவதில்தான் எத்தனை முறைகள் !&lt;br /&gt;&lt;br /&gt;வீதியிலே நாட்டியமாடும் சிலர் தம் ஆட்டத்தாலும் பேச்சாலும் பார்வையாளர்கள் கவனத்தைத் திருப்பி வைக்கும் போது அவர்களுடைய கும்பலை சேர்ந்த ஒருவன் அசந்திருப்பவர்களின் பைகளையும் பிற உடமைகளையும் பின்பக்கத்திலிருந்து சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவான். பின்னர் லபோ திபோ என்று கூட்டத்தினர் ஆளுக்கொரு பக்கம் திருடனைத் தேடிக் கொண்டு ஓடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேடிக்கையைத்தான் மாயா மோகினியும் செய்து வருகிறாள். அவள் மோகினியாம், கபீர் சொல்கிறார். நம்முடைய கவனத்தையெல்லாம் உலகின் பல்வேறு கவர்ச்சிகள் பக்கம் திருப்பி உண்மையில் நம் உள்ளே உறைகின்ற இறைசக்தியை அறிவதற்கான ஆர்வத்தை கவர்ந்து விடுகிறாள். நமது ஆயுளெல்லாம் ஒவ்வொரு பிறவியிலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவளை விட பெரிய சாகசக்காரி யார் இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;big&gt;कबीर माया मोहिनी, भई अंधियारी लोय ।&lt;br /&gt;जो सोये सो मुसि गये, रहे वस्तु को रोय ॥&lt;/big&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;இருளதும் கவ்வுதே கபீரா, மாயா மோகினி் சாலம் பார்&lt;br /&gt;இருளில் உறங்கி இழப்பார், அருநிதி போனதாய் அழுவார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;small&gt;(இருள் =அஞ்ஞானம் ; இருளில் உறங்கி = அஞ்ஞானத்தில் மயங்கி)&lt;/small&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாற்று :&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;மருளாய் பிடிக்குது கபீரா, மாயா மோகினியவள் ஆட்டம்&lt;br /&gt;பெருநிதி போச்சுது தியங்கி, என்னே அவர்தம் திண்டாட்டம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாயையின் கவர்ச்சியில் மனம் வசப்பட்டு  ஆத்மனின் உண்மை நிலையை மறந்து நிற்பதும் ஒரு வித உறக்கமே! எப்போதாவது பெரும் சான்றோர்கள் நமக்கு காலம் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை சொல்லும் போது,அந்த நிஜத்தை நம் செய்கைகளின் பின்ணணியில் பார்த்து எவ்வளவு சத்தியம் அது என்று பு்ரிந்து கொள்ளும் போது மனம் அதை நினைத்து வருத்தப்படுகிறது. ஆத்மாவைத் தொலைக்கமுடியாது. ஏனெனில் நம் ஓட்டத்திற்கே அதுதானே ஆதாரம். அப்போது அந்த பெருநிதி என்ன?  குருஅருளால் கிடைக்கக் கூடிய சச்சிதானந்த அனுபவமாகத் தானே இருக்கமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெருநிதியை அகண்டரஸம் என்று ஆவுடையக்காள் குறிப்பிடுகிறார். அதனோடு மாயையின் சாகச நாட்டியத்தைப் பற்றியும் ஆவுடையக்காள் ஒரு அழகான கீர்த்தனையாகப் பாடியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ராகம் :ஸஹானா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;big&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;small&gt;பல்லவி&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;அதிக சாமர்த்தியம் மாயை உந்தன்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;வெகு வித நாட்டியம்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;small&gt;அனுபல்லவி&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;அகில பிரபஞ்சமாய் ஆனதும் போராமல் அகண்ட ரஸம் தன்னை&lt;/small&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt; மறைத்தாய் தெரிய வொட்டாமல்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;small&gt;சரணம்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர கண்ட விடத்தில்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt; சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;நானா விகல்பித நாய் போல் அலைய வைத்தாய்   (அதிக)&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;சுவரில்லா சித்திரம் போல் உந்தன் ஸ்வரூபம் அஸத்தியம்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;ஜரையில்லை நரையில்லை ஜனன மரணமில்லை&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;கரையில்லை உன்னுடைய காரிய விசித்திரங்கள்   (அதிக)&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;&lt;br /&gt;ஸர்வமும் பிரம்மமாய் தான் தானே ஸர்வமாய்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;ஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே    (அதிக)&lt;/small&gt;&lt;/span&gt;&lt;/big&gt;&lt;br /&gt;(&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;&lt;small&gt;அகண்ட ரஸம் மறைத்தல் = ஆத்மானுபவத்தை அறிய விடாமல் செய்வது)&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு மூப்பு உண்டு, நரையுண்டு ஜனன மரணமுண்டு. ஆனால் அந்த மாயக்காரிக்கு இவையெதுவும் கிடையாது. அவளுடைய விசித்திரமான போக்குக்கு எல்லையும் கிடையாது. அதற்கு அவர் சொல்லும் உதாரணமும் வெகு பொருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடி மண்டபத்தில் புகுந்த நாயைப் போன்றதாம் நம் நிலைமை. தன்னைச் சுற்றிலும் காணப்படும் நாய்களெல்லாம் தன் பிரதிபிம்பம் என்று அறியாது மதி மயங்கி  பல வேறு நாய்கள் என்றெண்ணி சுற்றிச் சுற்றி குலைக்கும் நாயைப் போலவே மாயை நம்மை அலைகழிக்கிறது. பரமாத்மத்தில் ஒன்றுபட்டிருக்கும் நாம் மாயையினால் பிரதி பிம்பங்களாகக் கண்டு நமக்குள் வேற்றுமை பாராட்டுகிறோம். சண்டை போட்டுக் கொள்கிறோம், நிம்மதியை இழக்கிறோம்.என்ன ஒரு அழகான உதாரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மனை அறிந்து கொண்ட பிறகு சர்வமும் பிரம்மமே. காணப்படும் யாவையும் அதன் பிம்பங்களே. அது பிடிபடாமல் போவதால்தான் உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட நாயைப் போலவே அலைகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஒருமுறை ரமணரிடம் சாப்பிடும் போது சுப்புலக்ஷ்மியம்மாள் “ காரமானவற்றைத்தான் பகவான்  எதுவும் போட்டுக் கொள்வதில்லை.கூட்டு உரப்பில்லாமல் இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாமே” என்று மெதுவாகச் சொன்னார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அதைக் கேட்ட பகவான் “அதான் போட்டிருக்கிறாயே! போதுமே! இந்த ஒரு வாயால் சாப்பிட்டால்தான் சாப்பிட்டதாகுமா? இத்தனை வாயால் சாப்பிடுகிறேனே! அது திருப்தியாகாதா? “ என்று சகஜமாகக் கேட்டார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அவர் எப்போதும் இலையில் பரிமாறப்பட்ட  உணவு வகைகளைத் தனித்தனியாக ருசிக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி பிசைந்து உண்பதே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் தனிப்பட்ட வகை பற்றிய ருசி அறியமாட்டார். யாராவது குறிப்பிட்டுக் கேட்ட போது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;“....எனக்கு &lt;b&gt;ஒன்றிலே&lt;/b&gt; தான் ருசி. இவர்களுக்கு &lt;b&gt;பின்னத்தில்தான்&lt;/b&gt; ருசி. என்ன செய்வது? அவரவர்கள் ருசிக்குத் தகுந்த மாதிரி தானே சாப்பாடு அமையும் “ என்று பெரிய தத்துவத்தை மிக எளிய முறையில் அன்பர்களுக்கு உணர்த்தி விட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து பகவான் ரமணர் ஏகாத்ம சொரூபானுபவத்திலேயே திளைத்திருந்தார் என்பது புலனாகிறது. ஆத்மாவை தன்னில் உணர்ந்த பின்னர் தன்னைச் சுற்றி அமர்ந்து உணவு உண்ணும் ஒவ்வொருவரும் அதே ஆத்மாவின் பிம்பங்களே என்ற உண்மை அவருள் மிளிர்ந்ததால் அவர் பளிங்கு மண்டபத்தின் மாயைக்கு அப்பாற்பட்டவராய் ஆகிவிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காள் தம் குரு ஸ்ரீதர வெங்கடேசுவரரை மேற்கண்ட பாடலில் புகழ்வது போலவே, ரமணரும் &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;‘ஸஹஸ்ரத்தில் ஒருத்தர், சாமர்த்திய கர்த்தர்; ஸர்வமும் பிரம்மமாய் தானே ஸர்வமாய்”&lt;/span&gt; திகழ்ந்த ஞானி.  அக்காளைப் போலவே கபீரும் இம்மாதிரி சாமர்த்தியசாலிகள் போற்றப் படவேண்டியவர்கள் என்று இன்னொரு ஈரடியில் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;big&gt;माया तो ठगनी भई, ठगत फिरै सब देस ।&lt;br /&gt;जा ठग ने ठगनी ठगी, ता ठग को आदेस ॥&lt;/big&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம்&lt;br /&gt;ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;big style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);"&gt;हम तो बचिगे साहब दया से शब्द डोर गहि उतरे पार ।&lt;br /&gt;कहत कबीर सुनो भाई साधो इस &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);"&gt;ठगनी से रहो हुसियार ।&lt;/span&gt;&lt;/big&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;”குருவின் உபதேச மந்திரத்தைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பிழைத்துக் கொண்டோம்; கபீர் சொல்கிறான், சாதுக்களே! கவனமாயிருங்கள் அந்த கள்ளியிடம்“&lt;/span&gt; என்று கபீர் இன்னொரு பாடலிலும்  மாயையைப் பற்றி எச்சரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக  ஆவுடையக்காளும் பாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எத்தனையோ கோடி ஜென்மம் எடுத்தேன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; கணக்கில்லாமல்&lt;br /&gt;போதமிழந்து விட்டேன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; கிளியே, புத்தி மயக்கத்தினால&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;போதம் தெளிவேனோடி போக்குவரத்தை விட்டுத் &lt;/span&gt;&lt;big&gt;&lt;br /&gt;&lt;/big&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;தேறித் தெளிவேனோடி கிளியே&lt;/span&gt;&lt;big&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/big&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பரப்பிரம்ம வஸ்துவன்றோ பரமகுரு கிருபையால்&lt;/span&gt;&lt;big&gt;&lt;br /&gt;&lt;/big&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பற்றிப் பிடிப்போமடி கிளியே&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; இப்பவமும் துலையுமடி&lt;/span&gt;&lt;big&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/big&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எட்டாத கொப்பு அடியோ என்னால் முடியுமோடி&lt;/span&gt;&lt;big&gt;&lt;br /&gt;&lt;/big&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;தட்டிப் பறிக்க என்றால் கிளியே&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; ஸாதுக்கள் வேணுமடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஆதி அந்தமற்ற ஆசாரியார் கிருபையினாலே&lt;br /&gt;எட்டிப் பறிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி&lt;br /&gt;&lt;br /&gt;பற்றிப் பறிப்போமடி கிளியே பிரம்ம ரஸத்தை&lt;br /&gt;எல்லோரும் புஜிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;small&gt;( போதம்  = ஞானம்; போக்குவரத்தை விட்டு = பிறப்பு இறப்பு இல்லாமல்; எட்டாத கொப்பு= உயரமான மரக்கிளை; இப்பவம் துலையுமடி = பிறவிப்பிணியை தொலைத்தல் )&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’&lt;/span&gt; என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே !! மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;small style="color: rgb(0, 153, 0);"&gt;(குறிப்பு : நீளம் கருதி ஆவுடையக்காளின் பாடல்களில்- பொருள் சிதையா வண்ணம் -சில பகுதிகளையே சுட்டிக் காட்டி இருக்கிறேன். முழுப்பாடல்கள் கொடுக்கப்படவில்லை. இவைகள் ஞானானந்த நிகேதன், தபோவனம் அவர்களால் பிரசுரிக்கப்பட்ட ‘செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் -பாடல் திரட்டு’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ( www.gnanananda-niketan.org)&lt;/small&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-6361389208552048437?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/6361389208552048437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=6361389208552048437' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/6361389208552048437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/6361389208552048437'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2011/02/blog-post_22.html' title='பளிங்கு மண்டபத்தில் நாய்'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-5434574407723779447</id><published>2011-02-10T19:43:00.003+05:30</published><updated>2011-02-10T19:52:50.532+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆவுடையக்காள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்புகழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அருணகிரிநாதர்'/><title type='text'>சித்தமிசை இல்லை வேறு தெய்வம்</title><content type='html'>செங்கோட்டை சீமையிலே குடும்பப் பெண்கள் மத்தியிலே கலந்து விட்டிருந்த கும்மிப்பாட்டு கோலாட்டப் பாட்டு,  பாடல்கள்  சிலவற்றைப் பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;big&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;small&gt;கோலாட்டப்பாட்டு :&lt;br /&gt;&lt;br /&gt;ஆதியிலே ஒன்றானாய் கோலே அப்புறம் இரண்டானாய் கோலே&lt;br /&gt;வேதமும் அறியாக் கோலே, வேதாந்தக் கோலே&lt;br /&gt;...........&lt;br /&gt;நத்தையாய் புழுவாய் நண்டாய் நரியாய் பரியாய் வண்டாய்&lt;br /&gt;எத்தனை ஜென்மமோ கொண்டாய் என்னத்தைக் கண்டாய்&lt;br /&gt;&lt;br /&gt;காசி ராமேசுவரம் சென்றாய் காகம் போல் முழுகியே நின்றாய்&lt;br /&gt;உன்னாசை போச்சுதோ மூடா என்றால் ஆச்சுதோ நன்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;போற்றியார் அடிபணிந்து பந்துக்களும் வீடும் விட்டு&lt;br /&gt;கூற்றுவன் அழைக்கும் போது கூட வராது&lt;br /&gt;&lt;br /&gt;புருஷன் பெண்டாட்டி பொய்யே புத்திரன் பிதாவும் பொய்யே&lt;br /&gt;பெருமை சிறுமை பொய்யே பிரம்மமே மெய்யே&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாவழிக்கு அதிதூரம் ஆத்ம அனாத்ம விசாரம்&lt;br /&gt;தொகுத்துப் பார்க்க இது நேரம் தோன்றுமே சாரம்&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;கும்மிப்பாட்டு&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;small&gt;கும்மியடி பெண்கள் கும்மியடி&lt;br /&gt;அகோர ஸம்ஸார சாகரத்தில்&lt;br /&gt;ஜென்மக் கடலை கடத்தினவர் பாதம்&lt;br /&gt;சிந்தித்து கும்மியடியுங்கடி தினம்&lt;br /&gt;வந்தித்து கும்மியடியுங்கடி&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/big&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஐந்து தத்வமும் ஒன்றாய் கூடி&lt;br /&gt;ஒரு ஆள்ரூபம் அறிவுமில்லை&lt;br /&gt;ஐந்து பூத விகாரத்தினுள்&lt;br /&gt;ஸ்வபிரகாசத்தை&lt;br /&gt;மேவியே கும்மிடியுங்கடி&lt;br /&gt;மனம் தாவியே கும்மியடியுங்கடி&lt;br /&gt;&lt;br /&gt;பாவ அபாவத்தை விட்டு அகன்று&lt;br /&gt;பரிபூரணப் பால்குடித்து ஆனந்தமாய்&lt;br /&gt;தேவாதிகளுக்கும் தெரியாத துரீயத்தை&lt;br /&gt;தெரிந்து கும்மியடியுங்கடி&lt;br /&gt;மனம் பூரித்து கும்மியடியுங்கடி&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிலே அறிவால் அறிவாய்&lt;br /&gt;அறிந்து அதை அறிவாய்&lt;br /&gt;அறிவு மாத்திரம் ஆக இருந்ததை&lt;br /&gt;அறிந்து கும்மியடியுங்கடி&lt;br /&gt;தன்னை அறிந்து கும்மியடியுங்கடி&lt;/span&gt;&lt;br /&gt;---------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருக்கிறது இந்த அத்வைத ரஸம் ? அது ஆவுடையக்காள் வடித்து வைத்திருக்கும் ஞானரஸம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்ட்ரத்தில் &lt;a target="_blank" href="http://kabeeran.blogspot.com/2010/06/blog-post.html"&gt;ஜனாபாய் பக்தி ரஸத்தை&lt;/a&gt;  நெல் இடிக்கும் போதும், மாவரைக்கும் போதும் களைப்பைக் களைய பெண்களுக்கு மத்தியில் எளிமையானப் பாடல்களாய் சொல்லிக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவுடையக்காளோ ஓய்வு நேர விளையாட்டாய் கும்மிப்பாட்டிலும் கோலாட்டப் பாட்டிலும் ஞானக் குறவஞ்சியாயும் பெண்கள் மூலமாய் வீட்டில் அனைவருக்கும் மிக உயர்ந்த அத்வைத கருத்துகளை எளிய உதாரணங்களால் புரிய வைத்த பெண் ஞானி.  அவரை இன்னொரு ஔவையார் என்றும் குறிப்பிடுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அறியா பருவத்திலே திருமணம் நடந்து கணவனையும் இழந்த அபாக்கியவதி. அன்றைய நடைமுறைப்படி கைம்பெண்ணாக்கப்பட்டு பலத்தக் கட்டுபாடுகளுடன் வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கப்பட்டிருந்த அவலநிலை. அதிகாலை ஊர் விழிக்கும் முன்னே எழுந்து ஆற்றங்கரைக்கரைக்கு சென்று நித்திய கடன்களை கழித்து பொழுது புலரும் முன்னே வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அவளுக்கு அனுமதிக்கப்பட்ட வெளி உலகத் தொடர்பு அவ்வளவு தான். பல பூர்வ ஜென்ம தவங்களால் அவள் மனது இறைவனுடைய அருளுக்காக ஏங்கியிருந்தது. தனக்கு வழிகாட்ட யாராவது குரு ஒருவர் கிடைக்கமாட்டாரா என்று தவித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் வழக்கம் போல் அதிகாலை இருட்டு நேரத்தில் ஆற்றின் படித்துறை அருகே கிடந்த ஒரு மாவிலைக் காம்பை எடுத்து பல் தேய்ப்பதற்காக வாயில் வைத்ததுமே ஒரு வினோதமான உணர்ச்சி தேகம் முழுவதும் வியாபித்தது. தேங்காய்க்குள் கழன்று கொண்ட கொப்பரை போலே தேகம் வேறு  தான் வேறு என்ற எண்ணம் பலமாய் ஆட்கொண்டது. சற்று தூரத்தில் மரத்தடியே தியானத்தில் அமர்ந்திருந்த மகான் ஒருவரை கண்ணுற்று அவரது பாதத்தை அடைந்து சேவித்தார். அவரும் கருணை பொங்க அவளது தலை மேல் கைவைத்து “பிரம்மம் சத்யம்” என்ற சத்ய மொழியை சொல்லி அருள் பொழிந்தார். அக்கணமே ஆவுடையக்காளுக்கு சமாதி நிலை கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதர அய்யாவாள்  என அறியப்படும் அந்த மகான் பயன்படுத்திய மாவிலைக் காம்பின் மகிமையே ஆவுடையக்காளின் ஆன்மீகப் பயணத்தின் துவக்கமானது என்பர். வெங்கடேச குரு என்றும் சாந்த நரசிம்மர் என்றும் தவறாமல் ஒவ்வொரு பாடலிலும் குருவைப் பணிந்து போற்றும் அவருக்கு குரு அருளாலே வாணியின் அருளும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஜனாபாயைப் போலவே அவ்வட்டார பேச்சு வழக்கிலே அத்வைத சித்தாந்தம் குற்றால அருவி போல் பாய்ந்து பெருகியது. ஞானிகளுக்கே உரிய கம்பீரத்துடன் அவர் வெளிப்படுத்திய கருத்துகள் அன்றைய சமுதாயத்தில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆலையந்தோறும் அலைந்து திரிந்தது போரும் போரும்&lt;br /&gt;மனதாலயம் தன்னில் அரனாரிருப்பதைப் பாரும் பாரும்&lt;br /&gt;உன் தெய்வம் என்தெய்வம் என்று உழன்றதும் போரும் போரும்&lt;br /&gt;தன்னுள் தெய்வம் என்றெண்ணி இருப்பதைப் பாரும் பாரும்&lt;br /&gt;ஓதிப் படித்ததோர் மந்திர கர்மங்கங்களும் போரும் போரும்&lt;br /&gt;புத்தி யுக்தி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப் பாரும் பாரும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இன்னொரு பாடலில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே&lt;br /&gt;தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே&lt;br /&gt;தாமிரத்தே தெய்வமென்று ஸாதிப்பார் தரணியிலே&lt;br /&gt;மிருத்யுவே தெய்வமென்று விழுவார் உலகினிலே&lt;br /&gt;அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி&lt;br /&gt;அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்பதாக புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் பலப்பல வழிபாடுமுறைகளின்  தன்மையை வரிசைப் படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை உணர்ந்தவனுக்கு தெய்வங்கள் தேவையில்லை என்பதில் கபீரும் உடன் படுகிறார். அவையெல்லாம் குரு அருள் சித்திக்கும் வரையில்தான் என்பதை அடிக்கடி சொல்வார். அப்படிச் சொல்லும் ஒரு ஈரடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;big&gt;और देव नहीं चित्त बसै, मन गुरु चरण बसाय ।&lt;br /&gt;स्वल्पाहार भोजन करु, तृष्णा दूर पराय  ॥&lt;/big&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சித்தமிசை இல்லை வேறு தெய்வம், சித்தம் நாடுவதோ குருசரணம்&lt;br /&gt;சொற்பமாய் போனதே போசனம், பற்பல இச்சையும் போயின தூரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனமோ குருவின் வசமாகிவிட்டது, சித்தத்தில் வேறு தெய்வங்கள் கிடையாது. உணவின் தேவையோ மிகசொற்பம், உலக விஷயங்களில் ஆர்வமும் குன்றி போனது என்று உரைக்கிறார் கபீர்.  குருவின் திருவடியில் மனம் ஈடுபாடு கொண்டதால் தனக்குக் கிடைத்த அனுபவத்தை சொல்லும் போது ஆவுடையக்காளும் கபீரின் மொழியை உறுதி செய்கிறார். அத்வைத மெய்ஞான ஆண்டி என்கிற பாடலிலிருந்து சில வரிகள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என் சொல்வேன் என் சொல்வேன் இவன் எங்கிருந்து வந்தாண்டி&lt;br /&gt;இன்னம் இன்னம் ஜன்மம் எடுக்கவே என்றிருந்தேண்டி&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு வைரியை அவன் அண்டவிடாமல் அடித்தாண்டி&lt;br /&gt;தாறுமாறக்காரன் அவன் துரீய நிலையைத் தந்தாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;காமக்ரோதாதிகளை காறுவாறு தொடுத்தாண்டி&lt;br /&gt;தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;வெகுவான போகத்தை புசிக்கவே என்றிருந்தேண்டி&lt;br /&gt;பார்வை ஒன்றினாலே போகத்தை மாற்றியே வைத்தாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்த இடமெல்லாம் பரிபூர்ணமாய் தோற்றி வைத்தாண்டி&lt;br /&gt;வார்த்தைகளெதுவும் காணேன் மௌனமதாக்கி விட்டாண்டி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#33cc00;"&gt;[காறுவாறு =காறுபாறு= கவனிப்பாயிருத்தல், மேற்பார்வை செய்தல்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;small&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;b&gt;36 பரதத்துவங்கள் (அகநிலை):&lt;/b&gt; ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.&lt;br /&gt;&lt;b&gt;ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):&lt;/b&gt; மண், தீ, நீர், காற்று, வெளி.&lt;br /&gt;&lt;b&gt;ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):&lt;/b&gt; வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.&lt;/span&gt;&lt;br /&gt;(நன்றி : &lt;a target="_blank" href="http://www.kaumaram.com/thiru_uni/tpun1143.html"&gt;கௌமாரம்.காம்&lt;/a&gt;) ]&lt;/small&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெய்ஞானம் வாய்க்கப் பெற்றவருக்கு அதன் பின்னர் எதிலும் பிடிப்பு இருப்பதில்லையாம். கனவு கலைந்து எழுபவனுக்கு மீண்டும் கனவு பற்றிய கவலை உண்டோ ? திருப்புகழில் அருணகிரியாரும் இந்த உலக இச்சைகளை சூடான பொருட்களை கை உதறுவது போல் உதற விழைவதாக உரைக்கிறார்.  &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;முப்பதும் (+)ஆறாறும் (6x6=36) (+)முப்பதும் வேறான&lt;/span&gt; என்னும் போது 96 தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட மோனநிலை அடைவது எப்போது என்று அவரும் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சுட்டது போல் ஆசை விட்டு உலக ஆசார&lt;br /&gt;     துக்கமிலா ஞான சுகம் மேவிச்&lt;br /&gt;சொற்கரண அதீத நிற்குணம்  ஊடாடு&lt;br /&gt;     சுத்த நிராதார வெளி காண&lt;br /&gt;மொட்டு அலர் வாரீச  சக்ர சட் ஆதார&lt;br /&gt;     முட்டவு மீதேறி  மதி மீதாய்&lt;br /&gt;முப்பதும் ஆறாறு முப்பதும் வேறான&lt;br /&gt;     முத்திரையா மோன  மடைவேனோ &lt;/span&gt;&lt;br /&gt;............&lt;br /&gt;அப்படி ஒரு மோன நிலையை  தனக்குக் கொடுத்த குருவை &lt;span style="color:#3333ff;"&gt;எங்கிருந்து இவன் வந்தாண்டி&lt;/span&gt; என்று ஆச்சரியத்துடன் ஆவுடையக்காள் போற்றுகிறார். பார்வை ஒன்றினாலேயே போகத்திற்கான இச்சைகளை மாற்றி வைக்க வல்லவர் குரு என்பதையும் அவருடைய மெய்ஞான அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கபீர் குறிப்பிடும் உலக ஆசைகள் குறைவதையும் உணவின் மேல் பிடிப்பு இல்லாமல் போவதற்கும் இது தான் காரணம். ஆவுடையக்காளுக்கும் தேகப்பற்று நீங்கி விட்டது. ஆனால் இன்னமும் உயிர் அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்ற ஆச்சரியம். அந்த வினாவை தம் குருவிடமே வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஐயா ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழ வேண்டாமோ ?&lt;br /&gt;தேகமிருந்த உளவு சொல்லும், நீர் தேசிகரே !&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா ! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழுமானால்&lt;br /&gt;அஞ்ஞான ஜனங்களுக்கு யாராலே விமோசனமாம்?&lt;br /&gt;சரீரமிருக்கிறது பலருக்கு உபகாரமன்றோ? என்று&lt;br /&gt;காரணமூர்த்தி யுரைத்தார் கருணையுடன்;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாயிரக்கணக்கான ஜீவன்களுக்கு பல நூறு ஆண்டுகள் வழிகாட்ட வேண்டியவர் அல்லவா அவர் ! சுமார் முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றி பெண்களுக்கும் அத்வைதம் சித்திக்கும் என்பதை வாழ்ந்து காட்டியவர். ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாமரனுக்கும் புரியும் வகையில் வேதாந்த கருத்துகளை பாடி வைத்திருக்கிறார்.  மிக சரளமாக, பல விதமான எடுத்துக்காட்டுகளுடன் நகைச்சுவையாகவும் கருத்துகளை சொல்வதில் அவர் சமர்த்தராக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவற்றை அடுத்த இடுகையில் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பற்றிய மேலும் பல விவரங்களையும் பாரதியாரின் பாடல்களில் ஆவுடையக்காளின் தாக்கம் பற்றியும் &lt;a target="_blank" href="http://nanjilnadan.wordpress.com/2010/08/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95/"&gt; நாஞ்சில் நாடன் அவர்களின் வலைப்பூவில்&lt;/a&gt; படிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-5434574407723779447?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/5434574407723779447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=5434574407723779447' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5434574407723779447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5434574407723779447'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2011/02/blog-post.html' title='சித்தமிசை இல்லை வேறு தெய்வம்'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-2055084648603107518</id><published>2011-01-22T08:13:00.006+05:30</published><updated>2011-01-23T06:41:32.789+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவபோகசாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்'/><title type='text'>அவரவருக்கு உள்ளபடி ஈசனருள்</title><content type='html'>யாரை எங்கே&lt;br /&gt;வைப்பது என்று&lt;br /&gt;யாருக்கும் தெரியலே&lt;br /&gt;அண்டங் காக்கைக்கும்&lt;br /&gt;குயில்களுக்கும்&lt;br /&gt;பேதம் புரியலே!&lt;br /&gt;பேதம் புரியலே !!&lt;br /&gt;&lt;br /&gt;பழைய திரைப்பாடலின் ஆரம்ப வரிகள் இது. ஆள் மாறாட்டத்தால் சிறையில் சிக்கி கதாநாயகன் பாடுவது போல் கதையில் சொல்லப்பட்டாலும் இந்த முரண்பாட்டை வாழ்க்கையிலும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அருமையான திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதில்லை. குடத்திலிட்ட விளக்கு போல அவர்கள் யாராலும் அறியப்படாமல் மறைந்து போகிறார்கள். மிக சாதாரணமானவர்கள் மேடைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். மேலே முன்னேற போட்டிகள் அதிகம். திறமையை விட சாமர்த்தியம் தேவை. அதுவாவது பரவாயில்லை. ஏதோ அதிர்ஷ்டம் இல்லை, அவர்கள் கேட்டுக் கொண்டு வந்தது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம். அதைவிட வருத்தமளிக்கும் காட்சிகளும் அவனுடைய நாடகத்தில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருடைய தகுதிக்கு மதிப்பளிக்காது தகுதி இல்லாதவர்கள் அவர்கள் மேலமர்ந்து ஆட்டிப் படைப்பதும் இன்று சர்வ சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. பலமாதங்கள்- ஏன் வருடங்கள்- கடினமான தேர்வுகள் எழுதி நாட்டு நிர்வாகத்தில் பயிற்சி பெற்று வரும் நேர்மையான உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளூர் எம். எல். ஏக்களின் அல்லது அரசியல் புள்ளிகளின் ஏளனப் பேச்சுகளையும் மிரட்டல்களையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பலருக்கு மன அழுத்தம் அதிகமாகி பல்விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். அம்மாதிரி சமயங்களில் அவர்களுக்கு தாம் மேற்கொண்ட பணியின் மீதே ஒரு வெறுப்பு ஏற்படும். பலர் தம் பொறுப்பைத் துறந்தும் சென்று விடுவதாகக் கேள்விப்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அரசாங்கம்தான் அப்படி, தனியார் நிறுவனங்களில் எப்படி? அங்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. நிறுவனத்தை கட்டி வளர்த்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறும்போது புதுமைகளை புகுத்துவோம் என்ற பெயரில் திறமையான விசுவாசம் மிக்க நிர்வாகிகளெல்லாம் புறக்கணிப்படுகின்றனர். அவர்களது அனுபவத்தை அணுகுமுறையை  ''Old fashioned" என்று கேலி பேசி புதிதாக வெளிநாட்டு பட்டங்களுடன் வந்திறங்கும் இளைஞர்களுக்கு அதுவரை கேட்டிராத சம்பளங்களை கொடுத்து சாதனைகளை படைக்க முற்படுகின்றனர்.  அந்த ’பழமை’வாதிகளின் நிலையும் மேலே குறிப்பிட்ட திரைப்படப் பாடலை நினைவுபடுத்துகிறது&lt;br /&gt;&lt;br /&gt;போகட்டும், கலையுலகம், எழுத்துலகம் போன்றவற்றையாவது இந்த முரண்பாடு விட்டு வைத்திருக்கிறதா ? இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். எல்லாத் துறையிலும் உதாரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்கே குயிலுக்கும் காக்கைக்கும் பேதம் புரியவில்லையா !!&lt;br /&gt;&lt;br /&gt;சிவபோகசாரமோ அப்படி ஒரு கூற்றை ஒப்புக் கொள்வதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இன்ன வினை இன்ன தலத்தில் இன்ன பொழுது இன்னபடி&lt;br /&gt;இன்னதனால் எய்தும் என அறிந்தே – அன்னவினை&lt;br /&gt;அன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்&lt;br /&gt;பின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக சுவாமிகளின் கருத்துபடி எல்லாமே முன் கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. . அப்படியானால் மனிதர்களுடைய ’நேர்மை வெல்லும்’ ’உழைப்பு உயர்வு தரும்’ என்ற கூற்றுகளெல்லாம் பொய்யாக்குவது போல் தெய்வம் ஏன் நடந்து கொள்கிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வமா நடந்து கொள்கிறது, இது நமக்கு நாமே முடிந்து கொண்ட சிக்கல் என்று கபீர்தாஸர் சொல்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;big&gt;अपने उरझै उरुझिया, दीखै सब संसार ।&lt;br /&gt;अपने सुरझै सुरझिया, यह गुरु ज्ञान विचार ॥&lt;/big&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;தானே போட்ட முடிச்சு, தன்னைப் பிணைக்குது பூமியிலே&lt;br /&gt;தானே பிரிக்கவும் முடியும்,குருமொழி ஞானம் பற்றிடினே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாற்று:&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சிக்கலை முடிந்தவ ரவரே,சம்சார சிக்கலில் தவிப்பவரே&lt;br /&gt;சிக்கலை அவிழ்பவ ரவரே,ஐயனுரை கேட்டு உய்பவரே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயன் உரை அல்லது குருமொழி என்பது என்ன என்பதை புரிந்து கொண்டு மனம் அவ்வழியில் நின்றால் வாழ்க்கையின் சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும் என்று கபீர்தாஸரின் தீர்ப்பு.  இதுவும் மிகப் பொதுப்படையாக அல்லவோ இருக்கிறது! சம்சார சிக்கல்கள் யாவற்றிற்கும் நாமே காரணம் என்னும் வகையில் தானே இவரும் சொல்கிறார். குருமொழி என்று எதைக் கொள்வது?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஞானிகளும் ஏற்றுக் கொண்ட ஆன்மீக வழி சொல்வது :&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;‘வெளிப்பக்கமாக ஓடும் சித்தத்தை உள்முகமாகத் திருப்பு. நடப்பதெல்லாம் அவன் சித்தமே’. ’நீ வெறும் சாட்சியாக இரு’  ‘கடவுளை நோக்கி நீ ஓரடி வைத்தால் அவன் உன்னை நோக்கி பத்தடி வருகிறான்&lt;/span&gt;’ என்பன சில.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாம் மேலே காணும் முரண்பாடு பல நல்லவர்களின் மனதை வாட்டுவதாகவே இருக்கிறதே. கடவுளை நம்பினாலும் ஏதும் தீர்வு தெரிவது இல்லையே. இதுதான் சிக்கல். இதை பிரிப்பது எப்படி ? நான் கண்ட இரண்டு அனுபவங்களால் விடை கிடைக்கிறதா பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புதிய இடத்தில் தொழிற்சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒவ்வொரு துறைக்கும் அதற்கான பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் கட்டுமானப் பணி மேற்பார்வை பார்த்தவர் ஒரு பன்முக வித்தகர்.  தேவையென்றால்  எந்திர பராமரிப்பு, கணக்கெழுதுவது, எங்கே எது கிடைக்கும் என்று தெரிந்து தேவைப்பட்டவற்றை உடனுக்குடன் வரவழைப்பது கொடுப்பது என எதைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்பவர். அதிகம் படித்திருக்காவிட்டாலும் ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர் திடீரென்று வேறு வேலை கிடைத்து சென்று விட்டார்.  சற்றே தனது சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால் தன்னுடைய பிற பொறுப்புகளுக்கு பங்கம் இல்லாதவாறு தானே அதனையும் கவனித்துக் கொள்வதாக பலமுறை அவ்வித்தகர் கூறி வந்தார். எனக்கும், இவருக்கு இருநூற்று ஐம்பது ரூபாய்கள் அதிகம் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கணக்கரின் சம்பளத்தில் ரூ 750 மிச்சம் ஆகுமே என்று தோன்றியது. எங்கள் இயக்குனரின் அனுமதி பெற மூன்று முறை முயற்சித்தும் அவர் அதை ஆதரிக்கவில்லை.’செலவு பற்றி கவலை வேண்டாம் வேறு ஒருவரை அமர்த்திக் கொள்ளுங்கள்’ என்றே பதில் வந்தது. இதனால் நம் வித்தகருக்கு பெரும் மனவருத்தம், கோபம் எல்லாம் வந்தது. நிர்வாகம் சரியான முறையில் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் தன் திறமைக்கேற்ற ஊதியம் இல்லை என்றும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.  பல நாட்களுக்குப் பிறகு தனிமையில் இயக்குனரிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டேன். அவர் சொன்னது  &lt;b&gt;"We should not lead a good person in to his area of weakness "&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். வித்தகர் பண விஷயத்தில் சற்று பலவீனமானவர்தாம். அவ்வப்போது நிர்வாகப் பணத்தை பல தனிப்பட்ட விஷயங்களுக்காக நிர்வாகக் காரணம் காட்டி எடுத்து பயன்படுத்துவது, வாய்ப்பு இருந்தால் பேருந்தில் சென்று ஆட்டோவில் சென்றதாக கணக்கெழுதுவது இத்யாதி பரவலாக அறியப்பட்ட விஷயம்தான். ஆனால் என் எண்ணப்படி நல்லக் கண்காணிப்பில் அவரைக் கட்டுக்குள் வைக்க இயலும் என்று நம்பினேன். மாறாக இயக்குனரோ அவர் மேல் இருந்த அன்பினால் அவர் தவறிழைப்பதற்கான வழியில் கூட அவரை ஈடுபடுத்த விரும்பவில்லை. அதன் மூலம் எனக்கும் வித்தகருக்கும் இடையே பின்னால் எழுந்திருக்ககூடிய பலப்  பிரச்சனைகளையும் தடுத்துவிட்டார். அதன் காரணமாக சம்பந்தப்பட்டவர் அதிருப்தி அடைந்திருப்பினும் இயக்குனர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. குழந்தை அழுது அடம் பிடித்தாலும் அதன் அன்னை ஒவ்வாதவற்றை கொடுக்க மறுப்பது குழந்தை மேல் உள்ள அன்பினால்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்கள் கழிந்தன. இப்போது வேறொரு நிறுவனம், வேறொரு தலைமை. நானும் எங்கள் நிதித்துறை செயலரும் சேர்மனோடு பல திட்டங்கள் பற்றி பேசி முடித்த பின், விற்பனைத்துறைப் பற்றிய சில புள்ளி விவரங்களை செயலர் அவரிடம் சமர்ப்பித்தார். பேச்சு வாக்கில் அவர்களின் செயல்முறை பற்றி நிதித்துறையின் அதிருப்தியை தெரிவித்தார். பல கோடிகள் புழங்கும் துறையில் இன்னும் சிறப்பான தணிக்கை முறையின் அவசியம் பற்றியும் கட்டுபாடுகள் அனுசரிக்க வேண்டிய அவசியத்தையும் அவரிடம் பரிந்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புகைபிடித்தபடி யே எவ்வித சலனமும் இன்றி கேட்டுக் கொண்டிருந்த சேர்மன் ஓரிரு நிமிடங்கள் மவுனம் காத்தார். பின்னர் சிகரெட்டின் சாம்பலை ஆஷ்ட்ரேயுள் விரலால் தட்டியபடியே அமைதியாக சொன்னதன் சாராம்சம். “ They have submitted a budget and promised certain results within a time frame..... I don't like to restrain anyone nor police around.... May be they are experimenting with certain issues.... If we frequently question their decisions they may lose interest and later either blame you or me for not delivering the results. Any developmental activity needs certain degree of freedom.... It has some cost, I fully understand"&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சினிடையே அவரது அணுகுமுறையை இன்னொரு சொற்றொடரால் குறிப்பிட்டார். 'Give them a long rope, they will hang themselves"&lt;br /&gt;&lt;br /&gt;அவர் முறைகேடுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டவருக்கு தேவைப்படும் அதிகாரங்களும் முடிவெடுக்கும் உரிமையும் அவர்களிடமே இருக்கவேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். முறைகேடுகளால் ஒருவேளை நஷ்டங்கள் வரினும் அதனால் நிர்வாகத்திற்கோ பிற பணியாளர்களுக்கோ பாதிப்பு இருக்காது என்பதையும் சொல்லாமல் சொல்லினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் அணுகு முறையும் இதுதானோ ?&lt;br /&gt;&lt;br /&gt;இரு நிர்வாகத் தலைமையிடமும் கடவுளின் இருவேறு நிலைபாடுகளை புரிந்து கொள்ள முடிந்தது. முதலாவது தனக்கு &lt;i style="font-weight: bold;"&gt;வேண்டியவர்கள்&lt;/i&gt; வழி தவறுவதை அவன் விரும்புவதில்லை. அதனாலேயே &lt;b&gt;நம் விருப்பங்களுக்கு செவிசாய்க்காமல்&lt;/b&gt; அவன் நமக்கு எது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்குமோ நம்மை அந்த சூழ்நிலையில் வைக்கிறான். பணமும் புகழும் நம் (ஆன்மீக) முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பது அவன் சித்தமானால் அதற்காக ஏங்குவதும் பொருமுவதும் அர்த்தமற்ற செயலாகிவிடும். ’பன்முக வித்தகர்’ போல நாம்தான் சிக்கலை முடிந்து கொள்கிறோம். அதே சமயம் அவனது முடிவை எவ்வளவு விரைவாக நாம் ஏற்றுக் கொள்வோமோ அவ்வளவு விரைவாக மனம் அமைதியடைகிறது. மன அமைதியுடன் நாம் ஆற்றும் கடமைகள் சிறப்பாக முடிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, சிலரை தகுதியற்றவர்கள் நாம் கருதினாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தில் தான் குறுக்கிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்கிறான். அவர்களின் வழிமுறைகளின் நன்மை தீமைகளை அவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் அவன் பாதிக்கப்படப் போவதில்லை. Give a long rope என்பது போல விட்டுப் பிடிக்கிறான். அதிகாரம் வந்ததும் தலைகால் புரியாது ஆட்டம் போடும் அறிவிலிகளை யாவரும் வேடிக்கை பார்ப்பது போல் அவனும் வேடிக்கையை ரசிக்கிறான். அவனுக்குத் தெரியும் கடைசியில் இவர்களும் தன்னிடமே ஏதோ ஒரு பிறவியில் சரணடைய வேண்டியவர்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இப்போது நமக்களிக்கப்பட்ட திறமைகளுக்கு வடிகால் எது? இவை விழலுக்கு நீர் இறைப்பது போலவா? என் திறமைகளால் எனக்கே நன்மை இல்லாவிட்டால் அவை ஏன் எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;சித்த புருஷர்களின் திறமை, அஷ்டமா சித்திகளை தம் வசப்படுத்தி இருப்பது. அதை மாயையின் சக்தி, அவற்றை உலக நன்மைக்கல்லாமல்  தமது தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தலாகாது என்ற கட்டுபாடுடன்  ஞானிகள் வாழ்ந்து காட்டியுள்ளனர். அது போலவே நம் ’திறமை’களையும் முறையான காரணமின்றி நாம் வெளிப்படுத்த வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே இறைவன் நம்மை பயன் படுத்திக் கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;திறமை என்பது ஒருவகையில் நம்முடைய மனதினுடைய ஆற்றல்தான். ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது ” நரேன் எந்தத் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அநதத் துறையின் மிக உன்னதமான உயரத்திற்கு உயர்ந்திருப்பான். அவன் ஆன்மீகத்திற்கு கிடைத்தது நம் அதிர்ஷ்டம்” என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;மன ஆற்றல் பற்றி ரமணரின் கண்ணோட்டத்தை ரமணாசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்வோம்.&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கோசாலைக்கு போகும் வழியில் கெஸ்ட் ரூம் வாசலில் மிக அழகாக மயில் கோலம் ஒன்று போடப்பட்டிருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு அவ்வழியாக பகவான் போகும் போது ஒரு மயில் அந்த கோலத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதனெதிரே பொரி கடலை டப்பாவை வைத்தாலும் அதை சாப்பிடாமல் கோலத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. சலனமற்ற அதன் பார்வையை கண்ட பகவான்” என்னடா! நமக்கு போட்டியா இன்னொருத்தன் வந்து விட்டானா என்று பார்க்கிறாயா?” என்று கேட்டார். இப்படிக் கேட்டவுடனே டொக் டொக்கென்று டப்பாவிலுள்ள கடலையைக் கொத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கோலத்தைப் பார்த்த பகவான் “இவர்களுக்கெல்லாம் ஆத்ம வித்தை மிகச்சுலபம். ஏனென்றால் இவர்களின் புத்தி நுட்பம் அவ்வளவு சூட்சுமமாயிருக்கிறது. ஆனால் அதற்கு போக மாட்டாளே” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;”இன்று இந்த மயில் பிரமித்து நிற்குமளவிற்கு போட்ட கோலத்தை, நாளைக்கு இன்னொரு மயில் அதைப் பார்த்து ஆடுமளவிற்குப் போட வேண்டுமென்ற &lt;b&gt;புத்தி அதிலேயே ஈடுப்படுமேயன்றி உள்முகமாகாது&lt;/b&gt;”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;எவ்வளவு நிஜம். பெரும்பாலும் நமக்குள்ள திறமைகளைப் பற்றி நாமே பெரிதாக நினைத்துக் கொள்வதால் ரமணர் சொன்னது போல் அதிலேயே மேன்மேலும் புத்தி போகும். அது வெளிமுகமான போக்கு.  இதுவே நாம் இவ்வுலகில் பின்னிக் கொள்ளும் சிக்கல். லௌகீக லாபங்களைப் பற்றியது. நம் கணிப்புகள் எவ்வளவு சரியாக இருப்பினும், நம் பார்வையில் நியாயமாக இருப்பினும் இறைவனுக்கு  அதன் எல்லை தெரியும். அது எப்போதும் நம் நலன் கருதியே இருக்கும். பகவான் ரமணர் சொன்னது போல் மனதை உள்முகமாக்கினால் அந்த உண்மை புரியும். இதையும்  ஸ்ரீலஸ்ரீ குரு ஞானசம்பந்த தேசிகர் விளக்குகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அவரவருக்(கு) உள்ளபடி ஈசன் அருளாலே&lt;br /&gt;அவரவரைக்  கொண்டு இயற்று மானால் – அவரவரை&lt;br /&gt;நல்லார் பொல்லார் என்று நாடுவது என் நெஞ்சமே&lt;br /&gt;எல்லாம் சிவன் செயல் என்று எண்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;&lt;small&gt;(நாடுவது என் நெஞ்சமே = நினைப்பதும் ஏன் நெஞ்சமே)&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கென்று உலகத்தில் சாதிக்க வேண்டியது ஒன்று இல்லாத பொழுது யார் நல்லவர், யார் பொல்லாதவர்? அவன்தானே யாவற்றையும் முன்னின்று நடத்துகிறான் என்றிருப்பது உள்முகம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் கடவுளின் திசையில் செலுத்தினால் அதுவே அவன் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு. நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது மறைமுகமாக இறைவன் நம்மை ”என் பக்கம் வா, என் பக்கம் வா” என்று அழைக்கிறான்.&lt;br /&gt;அரவிந்தருக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை &lt;a href="http://kabeeran.blogspot.com/2008/01/blog-post_24.html"&gt;ஏற்கனவே பார்த்திருக்கிறோம்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;span style="font-weight: bold;"&gt;அவன்&lt;/span&gt;  திருவுள்ளத்தை புரிந்து கொள்ளும் நிலை எனக்கு இருக்கவில்லை. "எனக்கு ஏன்  இப்படி நேர வேண்டும்” என்று என் இதயம் ஓலமிட்டது. இந்நாட்டிற்க்காகவும்  இம்மக்களுக்காகவும் நான் மேற்கொண்டிருக்கும் இக்கடமை முடியும் வரை எனக்கு &lt;span style="font-weight: bold;"&gt;உன்&lt;/span&gt;  பாதுகாப்பு உண்டென்று நினைத்தேனே.அப்படியிருக்க இப்பொழுது ஒரு  குற்றசாட்டுடன் எதற்காக அடைக்கப்பட்டு இருக்கிறேன்” என்று என் உள்ளம்  புலம்பியது&lt;/span&gt;&lt;/span&gt;......&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;.....நீ அதிலே தொடர்வது &lt;span style="font-weight: bold;"&gt;என்&lt;/span&gt;  சங்கல்பத்தில் இல்லை. உனக்கு வேறுவிதமான கடமைகள் உள்ளன. அதற்காக உன்னை  தயார் செய்யவே இங்கே வரவழைத்துள்ளேன்' என்று சொல்வதாக உணர்ந்தேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை அரவிந்தர் புரிந்து கொண்டதால் சிக்கலில் இருந்து வெளிவந்தார். ஆனால் நமக்கு அந்த பக்குவம் இல்லாத போது சுய பச்சாதாபம், கோபம், பொறாமை போன்றவற்றால் சிக்கலை மேன்மேலும் சிக்காகிக் கொள்கிறோம். தீர்வு கிடைப்பதில்லை. இதுவே கரண மயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எல்லாம் உனது செயலென்று அறிந்தும் என(து) உளத்தில்&lt;br /&gt;பொல்லாத சங்கற்பம் ஏன் வருமோ புர(ம்) மூன்றெரிக்க&lt;br /&gt;வல்லாய் கமலையின் ஞானப்ரகாச வரத இது&lt;br /&gt;சொல்லாய் கரண மயக்கமன்றோ என் தொழில் அல்லவே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரண மயக்கத்தால் ஏற்படும் பொல்லாத சங்கற்பங்கள் எதுவும் நமக்கான வழியல்ல. இதுவே குருமொழி, செம்மொழி, சிக்கல் களைந்திடும் நல்வழி. கபீர்தாஸ் சொல்வது போல் சிக்கலை பிரிக்க வேண்டுமானால் குருவின் வழி புரிந்து கொள்ள வேண்டும். அது நம் கையிலேதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அறிவிப்பு :&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சிறப்பு இடுககைகளை பல விருந்தினர்கள் நேரமின்மை காரணமாக அனுப்ப இயலாமல் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.  அவைகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அவர்கள் மட்டுமல்லாது  இதர பதிவர்களும் வாசகர்களும் எப்போது வேண்டுமானாலும் கபீரின் கருத்துகளை மையமாக வைத்து கட்டுரைகளை அனுப்பி யாவருடனும் பகிர்ந்து மகிழலாம். This is an open invitation.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;வலைப்பூ ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-2055084648603107518?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/2055084648603107518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=2055084648603107518' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/2055084648603107518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/2055084648603107518'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2011/01/blog-post.html' title='அவரவருக்கு உள்ளபடி ஈசனருள்'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-480550775590956374</id><published>2011-01-08T06:41:00.020+05:30</published><updated>2011-01-08T12:32:07.700+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருவள்ளுவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவேகானந்தர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமூலர்'/><title type='text'>சிறப்பு இடுகை  -விருந்தினர் பதிவு-8</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;முதலில் புத்தாண்டு வாழ்த்து, அதுவும் முக்கிய விருந்தினரிடமிருந்து :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/TSe6ii7dFsI/AAAAAAAAAWc/8QTDb38treI/s1600/2011.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 277px;" src="http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/TSe6ii7dFsI/AAAAAAAAAWc/8QTDb38treI/s400/2011.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559617367666661058" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;(click the figure for larger view)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;small&gt;{என்ன இது? கபீர் வலைப்பூவிலே வந்து தன்னுடைய வலைப்பூவுக்கு ஆள் சேர்க்கிறாரே என்று யாரும் &lt;b&gt;&lt;i&gt;அவரைத்&lt;/i&gt;&lt;/b&gt; தப்பாக நினைக்க வேண்டாம். அது அவருடைய நகைச்சுவை உணர்வை சுட்டிக் காட்ட அவருடைய 2007 வருடத்து பதிவிற்கு நான் கொடுத்த புதுப் பொலிவு..ஹி ஹி அவ்வளவுதான். }&lt;/small&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யானைக்குட்டியை கண்டதுமே விருந்தினர் யாரென்று தெரிந்திருக்க வேண்டுமே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;i&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;b&gt;ஆயிரம் இடுகைகள் &lt;/b&gt;தாண்டிய பதிவர் திலகம், இதிகாசச் செம்மல், &lt;a target="_blank" href="http://aanmiga-payanam.blogspot.com/2009/05/blog-post.html"&gt;தாமிரபரணி கண்டார்&lt;/a&gt;, &lt;a href="http://aanmiga-payanam.blogspot.com/2006/09/30.html"&gt;திருக்கையிலாயம் கொண்டார்&lt;/a&gt;, &lt;a target="_blank" href="http://aanmiga-payanam.blogspot.com/2008/02/blog-post_19.html"&gt;சிதம்பரம் வென்றார்&lt;/a&gt;, &lt;a target="_blank" href="http://aanmiga-payanam.blogspot.com/2011/01/blog-post.html"&gt;அண்ணாமலையை ஆட்கொண்டார்&lt;/a&gt;, &lt;a target="_blank" href="http://sivamgss.blogspot.com/2008/08/87.html"&gt;இராம காதையுடனும்&lt;/a&gt; &lt;a target="_blank" href="http://sivamgss.blogspot.com/2008/12/1.html"&gt;கண்ணன் கதையுடனும்&lt;/a&gt; இணைய உலகின் ஈடில்லாத் தானைத் தலைவி வருகிறார்,.... வருகிறார் .....பராக்.... பராக் &lt;/span&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;என்று கட்டியம் கூறி வரவேற்கப்பட வேண்டியவர் நம் தலைவி. அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வது கை விளக்கால் சூரியனை காட்ட முயல்வது போன்ற நகைப்பிற்கான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சூரியனுக்கு நீராஜனம் காட்டினால் அது ஆசியை வேண்டுவது போலாகி விடுமல்லவா !&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான வாய்ப்பை நல்கிய இன்றைய சிறப்பு விருந்தினரான&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;b&gt;திருமதி கீதா சாம்பசிவம்&lt;/b&gt; &lt;/span&gt;அவர்களை உங்கள் அனைவர் சார்பாகவும் மனமார வரவேற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய பதிவு உலகப் பயணத்தைப்பற்றி தமது &lt;a href="http://sivamgss.blogspot.com/2010/07/blog-post.html"&gt;ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியில்&lt;/a&gt; கூறியிருக்கிறார், படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இடுகைகளை பிரசுரிக்கும் வேகம்  கண்டு எப்போதும் பிரமிக்கிறேன்! தொடர்ந்து எழுதும் பழக்கம் இருக்கும் ஒரு பதிவர் வாரம் ஒரு இடுகை எழுதுவார்  என்று எதிர்பார்க்கலாம். கொஞ்சம் சுறுசுறுப்பானவர் வாரம் இரண்டு  இடுவர்.  வியாபார நோக்கத்தோடு எழுதும் ஒரு சிலர் தினம் ஒன்று கூட எழுதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  எந்த எதிர்பார்ப்பும் இன்றி  வாரத்திற்கு ஒன்பது இடுகைகளை  இடும் தலைவியின் எனர்ஜியை என்ன சொல்வது ? வாரத்திற்கு ஒன்பது இடுகைகள் !!!!!!  நான் சொல்லவில்லை. கூகிள் ரீடர் சொல்கிறது.  இது &lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;எண்ணங்கள்&lt;/span&gt; வலைப்பூவில்மட்டும்.   இன்னமும் மூன்று நான்கு வலைப்பூக்கள் , நான்கோ ஐந்தோ குழுமங்கள்; போதாதற்கு பஸ் (BUZZ) &lt;strike&gt;ட்ரெயின்&lt;/strike&gt; என்று எங்கெங்கே பார்த்தாலும் கீதா மேடம் தான். அவர்கள் எழுதுவதை படிக்கக்கூட நமக்கு நேரம் இல்லாமல் முழிக்கிறோமே இவர் எப்படி இப்படி எழுதித் தள்ளுகிறார்?  அவர் தொடாத துறையே கிடையாது எனலாம். ஏதாவது ஆட்களை நியமித்து தட்டச்சு செய்ய ஆபீஸ் மாதிரி நடத்துறாரா என்ற சந்தேகம் கூட வருவது உண்டு !&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ தரமான வாசிப்பிற்காக சிரிக்கச் சிரிக்கவும், சிந்திக்க வைக்கவும், நம் கலாசாரத்தை மறக்காமல் போற்ற வேண்டியவைகளை அவ்வப்போது நினைவு படுத்தியும் சுறுசுறுப்புடன்  செய்து வரும் இவரது எழுத்து சேவை பதிவுலகில் அபாரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் எத்தனை வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார் என்ற கணக்கு சரியாகத் தெரியாது. எனக்கு கிடைத்த வரையில் இவரது வலைப்பூக்களும் இடுகை எண்ணிக்கைகளும் வருமாறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://sivamgss.blogspot.com/"&gt;எண்ணங்கள்&lt;/a&gt;  (1125 +)  &lt;a target="_blank" href="http://kannanvaruvan.blogspot.com/"&gt;கண்ணனுக்காக&lt;/a&gt; ( 36)  &lt;a target="_blank" href="http://geetha-sambasivam.blogspot.com/"&gt;சாப்பிடலாம் வாங்க&lt;/a&gt; (27) &lt;a target="_blank" href="http://gsambasivam.blogspot.com/"&gt;பேசும் பொற்சித்திரமே&lt;/a&gt; (38)&lt;a target="_blank" href="http://geethasmbsvm6.blogspot.com/"&gt; என் பயணங்களில்&lt;/a&gt; (128 ) &lt;a target="_blank" href="http://aanmiga-payanam.blogspot.com/"&gt;ஆன்மீகப்பயணம்&lt;/a&gt; (302)  &lt;a target="_blank" href="http://httpbakthiblogspotcom.blogspot.com/%20"&gt;(பக்தி) ராம ஆஞ்சனேய பிரபாவங்கள்&lt;/a&gt; .....etc&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டின் புராண இதிகாசங்களையும் அதிகம் அறியப்படாத வரலாறுகளையும் ஆழமாகப் படித்து அவற்றை மெகா சீரியல்கள் போலவே அலுப்பில்லாமல் எழுதிக் குவிக்கிறார் கீதா சாம்பசிவம் அவர்கள். அதற்கு அவரே கொடுத்த விளக்கம் :&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;&lt;i&gt;இந்த ஞானம், யோகம், பிரம்மம் பற்றியும் எழுதாமல் ஏன் புராணக் கதைகள்,  இதிஹாசக் கதைகள்னு தெரிஞ்சதைப் பத்தி எழுதறேனும் சிலர் கேட்கிறாங்க.  நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே   இருக்கிறதில்லை. அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை.   அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது. இப்போது இணையம் மூலமாய்ப்  பலருக்கும் இது சென்றடையும். மேலும் பிரம்மம் பற்றி அறிய வேண்டுமானால்  கொஞ்சமாவது இறை உணர்வு, நம்பிக்கை வேணும். முதலில் அதை வளர்த்துக்கணும்   இல்லையா? நான் இப்போது தான் பக்தி என்னும் படியிலேயே நிற்கின்றேன். அந்தப் படியைக் கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை இந்தப் பிறவியில் அது நடக்குமா, நடக்காதா தெரியலை. எத்தனை பிறவி எடுக்கணுமோ தெரியாது. எத்தனை  பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;ஜீவி ஐயாவைப் போலவே இவரும் ஒரு தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் என்பதை அவருடைய பல பதிவுகள் மூலம் அறியலாம்.  அதை, சிறு வயதில் அவர் படித்து மனதில் நின்று விட்ட  உதாரணத்தின் மூலம் அறியலாம்:&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;....அந்தப் புத்தகம் தான் "&lt;a href="http://sivamgss.blogspot.com/2007/07/blog-post_25.html"&gt;கல்கியின் அமரதாரா&lt;/a&gt;". கல்கி அவர்கள் தன் வாழ்நாளின் கடைசியில் எழுத ஆரம்பித்து முடிக்காமலே போனது&lt;br /&gt;&lt;br /&gt;‘’ மனதின் எண்ண அலைகளின் ஓட்டமும், ஒரே சமயத்தில் இருவருக்கும் சேர்ந்தாற்போல் எண்ணங்கள் பரிமாற்றம் ஆகும் விந்தையும் சிலிர்க்க வைக்கும். கதையைப் படித்த எல்லாருக்கும் இப்படி இருக்குமா? அல்லது இருந்ததா? தெரியாது! என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு அதிசயம், ஆனந்தம், அபூர்வம், அழகு, எல்லையற்றது!. அவ்வளவுதான். இம்மாதிரியான அன்பை நான் அப்போதுதான் முதன்முதலாய் உணர்ந்தேன். ’’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;அந்த அன்பின் அதிசயம் அவரை மிக உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ இன்றையக் கட்டுரைக்கு அவர் இட்டிருக்கும் தலைப்பும் ‘அன்பெனும் அக்ஷயப் பாத்திரம்”.  சென்ற இடுகையில் ஒளியேற்றிய அன்பு இந்த இடுகையில் அட்சயப்பாத்திரமாய் யாவர் மனதையும் நிறைக்க வருகிறது. கீதா சாம்பசிவம் அவர்களை வருக வருக வருக என்று வரவேற்கிறேன். &lt;span style="color: rgb(51, 51, 255);font-size:85%;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி விருந்தினர் படைப்பு .....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;b style="color: rgb(51, 0, 0);"&gt;அன்பெனும் அக்ஷய பாத்திரம்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கபீரன்பரின், &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;"ஈரக்கம்பளம் சுமையதிகம்&lt;/span&gt;" என்னும் பதிவின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.   ஏனெனில் என்னுடைய குணத்தைச் சுட்டுவதாலோ என்னமோ தெரியவில்லை.  அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டிப் பலரும் பெரும் மதிப்பும், மரியாதையும் காட்டுவது பல சமயங்களில் கூச்சத்தையும் எல்லாவற்றையும் விட பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.  பாராட்டுக்களின் சுமை என்னை அந்தக் கழுதை சுமக்கும் ஈரக்கம்பளத்தை நினைவூட்டுகிறது.  அந்தப் பதிவின் குறிப்பிட்ட இந்தப் பத்திகளே என்னைக் கவர்ந்தவை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சொல்லி இருப்பதோ மெளனம், மெளனம், இது தான் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது.  ஆனால் குறைகுடமாய்க் கூத்தாடும் என்னையும் மதித்து, அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டி என்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கியமாய்க் கபீரன்பருக்கும் இதை எவ்விதம் தெளிவாக்குவது??&lt;br /&gt;&lt;br /&gt;நான் இன்னும் ஆரம்பப் பாடத்தையே ஆரம்பிக்கவில்லை. ஞான வழி என்பதை என்னால் இன்னமும் நினைக்க முடியவில்லை.  ஏனெனில் அதற்கு அடிப்படையான பள்ளிப்படிப்பு பக்தியில்.  அதிலேயே இன்னும் தேர்ச்சி அடையவில்லையே?  பக்தி என்றால் என்ன என்பதையே இன்னும் தெரிந்து கொள்ள முயலவில்லை.  சாதாரணமாக எல்லாரும் நினைப்பதைப் போலவே கண், மூக்கு, முகம், காது, கைகள், கால்கள் உள்ள ஒரு தேவதையை என் பக்திக்கு என்ற ஏற்பட்ட ஒரு மூர்த்தியை என் இஷ்ட தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன்.   இன்னும் அதைத் தாண்டி அப்பால் போகவில்லை.  போக இயலவில்லை என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கண்ணுக்குத் தெரியாத நிர்குணப்பரமாத்மாவிடம் அன்பு/பக்தி செலுத்துவது என்பதை இன்னமும் என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும்.  எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் வணங்கும் அந்த மூர்த்தியின் பெருமைகளையும், மஹிமைகளையும் எடுத்துச் சொல்லும் புராணங்களில் இருந்து சின்னச் சின்னத் துளிகளே.  அதுக்கே இவ்வளவு ஆரவாரம், ஆர்ப்பாட்டத்தோடு  இருக்கேன்.   ஆண்டவனிடம் இன்னமும் பரிபூரண சரணாகதி செய்யும் மனப்பக்குவம் வரவில்லை.  பரம்பொருளிடம் அன்பு வைக்கவேண்டும்.  ஆசை வைக்கக் கூடாது.  ஆனால் நானோ ஆசைதான் வைத்திருக்கிறேன்.  அன்பே சிவம் என்று சொல்லிய திருமூலரின் வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்தால் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்&lt;br /&gt;அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்&lt;br /&gt;அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்&lt;br /&gt;அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பொருள் தெளிவு.  யாருக்கும் சொல்லவேண்டியதில்லை.  ஆனால் அத்தகையதொரு அன்பைத் திரும்ப எதையும் பிரதிபலனாய் எதிர்பாராத அன்பைக் கொடுக்கிறேனா?? என்னுள்ளே குடிகொண்டிருக்கு அந்த சிவனைக் கண்டு பிடித்து என் ஜீவனை அதனுடன் இணைத்துக்கொள்ளும் வழியைக் கண்டறியும்  முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேனா? இல்லை என்பதே பதில்.  இன்னமும் உலகத்து ஆசைகளை விட்டொழிக்கவில்லை.  மாயையாகிய அந்த ஆசைகளும், அவற்றில் ஈடுபாடும், பற்றும் அறவே ஒழியவில்லை.  இறைவனிடம் அன்பு செலுத்தச் செலுத்த ஆசைகள் தோன்றுவதையும் முளையிலேயே அறுத்து எறிய வேண்டும் என்கிறார் திருமூலர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்&lt;br /&gt;ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்&lt;br /&gt;ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்&lt;br /&gt;ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஆசைகள் அகலவில்லை. மாயையில் இருந்து விடுதலை பெறவும் இல்லை.  அதற்குண்டான முயற்சிகளும் செய்யவில்லை.  மாயை மனதை விட்டு அகல மறுக்கிறது என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;மாயை மாயை என்பர் அறிவாரில்லை மாயையை&lt;br /&gt;மாயையாவது அதுவே மனம் விட்டு அகல மறுப்பதுவே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்&lt;br /&gt;ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கபீரின் ஈரடிகளிலே நம் கபீரன்பர் மேற்கண்ட வாறு மொழிமாற்றம் செய்துள்ளது என்னைப் பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருத்தமான ஒன்று.  என்னிடம் இன்னமும் ஆசைதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகள் அறுந்து மனம் ஈசனை நாடவேண்டும்.  இங்கே ஈசன் என்று சொல்லி இருப்பது, நாம் வடிவாய் வணங்கும் விக்ரஹங்களில் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே உள்ள அன்பு ஊற்றுச் சுரந்து அதில் தெரியும் ஜோதி மயமான ப்ரபிரும்மத்தை.  அன்பு ஊற்றுப் பெருகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;அன்பானது கொடுக்கும் பொருள்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அக்ஷய பாத்திரத்தில் எவ்வாறு எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கோ அது போல்  கொடுக்கக் கொடுக்க ஊற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் போல் கொடுக்கக் கொடுக்க மீண்டும் மீண்டும் அன்பு சுரக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊற்றுக் கண்ணிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க மீண்டும் மீண்டும் சுரப்பது போல. குழந்தை எத்தனைக் குடித்தாலும் தாய்க்கு மீண்டும் மீண்டும் பால் சுரப்பது போல கொடுக்கக் கொடுக்கக் குறையாத அன்பு ஊற்றுச் சுரக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் கொடுத்துக் கொண்டே இருப்பது.  கொடுக்கக் கொடுக்க நம் மனம் நிறைகிறதே அதில் தான் பரிபூரண ஆனந்தம் தோன்றும். ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விடவும் மனிதனுக்கு மனதும், புத்தியும் பண்பட்டே தான் இருக்கிறது.  ஆனாலும் நாம்  சரிவர அதைப் பயன்படுத்துவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;ஆசையை அன்பு எனத் தவறான புரிதலில் இருக்கிறோம்&lt;/span&gt;&lt;/b&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் மனதும், புத்தியும் உள்ளிழுக்கப்பட்டு, நான் என்ற அஹங்காரம் ஒழிந்து ஈசனிடம் ஒருமைப்பட்ட நிலையில் செலுத்தும்  அன்பையே பக்தி என்றும் சொல்லலாம். அத்தகையதொரு அன்பு எத்தனை பிறவி எடுத்தாலும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆசையை ஒழிக்க வேண்டும்.  இந்த அவா என்னும் ஆசையை ஒழிப்பது குறித்து வள்ளுவப் பெருமானும் ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்&lt;br /&gt;தவா அப்பிறப்பினும் வித்து.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தின் வித்தே இந்த அவா என்னும் ஆசைதான் என்று பரிமேலழகர் உரை கூறுகிறது.  அந்த அவாவை ஒழிக்கவேண்டும்.  இதற்குத் தேவை ஒருமையுடனேயே ஈசன் திருவடி நினைந்து நினைந்து உருக வேண்டும்.  நாமே அதுவாகி ஒன்றோடு ஒன்று கலக்கவேண்டும்.  நாவுக்கரசப் பெருமான் சொன்ன மாதிரி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;தன்னை  மறந்தாள் தன் நாமம் கெட்டாள்&lt;br /&gt;தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னும்படிக்கு மெய்ம்மறந்த நிலையில் ஆன்மா அந்தப் பரம்பொருளோடு ஒன்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;இங்கே அன்பின் தத்துவம் பற்றி, அன்பே கடவுள் என்பதைப் பற்றி என் ஆதர்ச புருஷர்களின் ஒருவரான விவேகாநந்தர் கூறி இருப்பதைப் பார்ப்போமா?? இது 1896-ம் ஆண்டு சுவாமி அவர்கள் மாக்ஸ்முல்லருடன் ஆன தமது தரிசனத்திற்குப் பின்னர் கூறியவை.  தன் சீடர் ஆன &lt;span style="font-weight: bold;"&gt;லெக்கெட் &lt;/span&gt;என்பவருக்குப் பிரேமையின் மாபெருங்கடல் ஆன சுவாமி எழுதியது பின்வருமாறு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சாத்தான் என்று ஒருவன் இருந்தால் அவனைக் கூட நேசிக்கும் நிலைக்கு நான் மெல்லச் சென்று கொண்டிருக்கிறேன்.  தாசிகள் வசிக்கும் ஒரு விடுதியில் அவர்களைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை நினையாமல் உடன் வாழக் கூடியவனாக இருக்கிறேன்.  சுற்றியுள்ள தீமையைத் தீமையாகக் காணாவிட்டால் உலகுக்கு நல்லது செய்யமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.  மாறாக வேலை செய்யும் ஆற்றல் என்னிடம் அபரிமிதமாய்ப் பெருகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரையுமெல்லலவற்றையும் அநுகிரஹிக்கவேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன்.  நான் ஒருவிதப் பரவச நிலையை அடைந்து விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிறந்த தினத்தை வாழ்த்துகிறேன். இங்கு-இந்த மண்ணுலகில்- நாம் எத்தனையோ அன்பையும் தயையும் பெற்றுவிட்டேன்.  பூரணப் பிரேமையாகிய எது என்னைப் படைத்ததோ, அது என்னுடைய நற்செயல்கள், கெட்ட செயல்கள் சகலத்தையும் காத்திருக்கிறது.  நான் யார்?? எப்போதுமே அவன் கையிலுள்ள ஒரு கருவி என்பதைத் தவிர நான் யார்?? அவனுடைய பணிக்காகத் தானே நான் எனது சகலத்தையும்- என் அன்பு மனிதர்களை, என் இன்பத்தை, என் வாழ்வை -நீத்துவிட்டேன்!நான் பிறந்திருக்கிறேன்! அவன் என்னோடு விளையாடுகிற அன்பன்.  நான் அவனுடைய விளையாட்டுத் தோழன்.  இந்தச் சராசரத்தில் அர்த்தமோ அறிவோ எதுவும் கிடையாது.  எந்த அறிவால் அவனைக் கட்ட முடியும்! லீலை செய்கிற அவன் ஒருவனே இத்தனை கண்ணீராகவும் சிரிப்புக்களாகவும் விளையாடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ரொம்ப வேடிக்கையான உலகம்.  இதில் ரொம்ப ரொம்ப வேடிக்கையானவன் அவனே.  ஆதி அந்தமற்ற அன்பனாகிய அவனை விட வேடிக்கையை நீங்கள் காண முடியாது.  ஜன சமுதாயம் எல்லாம் இந்தப் பரந்த மைதானமாகிய உலகத்தில் சகோதரர்களாக, தோழர்களாக விளையாடுவதற்காக விடப்பட்ட கும்மாளிக் குழந்தைகளின் சங்கமே அல்லவா? இதில் யாரைப் புகழ்வது? யாரைப் பழிப்பது? எல்லாமே அவனது லீலை அல்லவா? விளக்கம் வேண்டும் என்கிறார்கள்.  ஆனால் அவனை எப்படி விளக்க இயலும்?? அவனுக்கு புத்தி கிடையாது; அறிவுமுறைகளும் கிடையாது.  நமக்குச் சின்னஞ்சிறிய புத்தியையும் அறிவுமுறைகளையும் தந்து அவன் நம்மை முட்டாள் ஆக்குகிறான்.  ஆனால் இப்போது நான் முட்டாளாக மாட்டேன்.  இனி அவன் என்னைத் தூங்கு மூஞ்சியாகக் காண மாட்டான்.  ஏதோ ஓரிரு விஷயங்கள் கற்றிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுக்கும் படிப்புக்கும் பேச்சுக்கும் அப்பால்-அப்பாலுக்கும் அப்பால்--அன்பு என்ற உணர்ச்சியும், "அன்பன்" என்ற உணர்ச்சியும் இருக்கின்றன.  தோழா, வா! கிண்ணத்தை நிரப்பு; இந்த அன்பால் நாம் போதை கொள்வோம்.'&lt;i&gt;'&lt;/i&gt;&lt;/span&gt;&lt;i&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;small&gt;&lt;br /&gt;[நன்றி : ’அறிவுக்கனலே அருட்புனலே’ ரா. கணபதி, இராமகிருஷ்ணாமடம், சென்னை; பக்கங்கள் 698-700]&lt;/small&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அன்புக் கிண்ணத்தை வழிய வழிய நிரப்பி உட்கொண்டு தெய்வ போதை பெற்ற விவேகாநந்தரே தம்மை ஓரிரு விஷயங்கள் மட்டுமே கற்றிருப்பதாய்ச் சொல்லும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்??&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கடினமான வாழ்க்கையில் சாதாரணமாய் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்பே மறைந்து கொண்டு வருகிறது.  அந்த அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தால் அதிலிருந்து மனம் மெல்ல மெல்ல ஆசைகள் ஒழிந்து எண்ணங்கள் ஒழிந்து உணர்வுகள் மறைந்து அன்பு பெருக ஆரம்பிக்கும்.  அத்தகையதொரு அன்பு என்னிடம் மட்டுமில்லாமல் இந்தப் பரந்த உலகின் மாந்தர் அனைவரிடமும் துளிர்க்கப் பிரார்த்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.  முதலில் நம்  குடும்பம் என்று ஆரம்பிக்கும் இந்த அன்பு நாளாவட்டத்தில் விரிவடைந்து மற்ற உயிர்களையும் தன்னை உயிராகத் தெரிவித்துக்கொண்டு கொண்டாடிக் குதூகலிக்க வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_scbM4BSuz8w/TSe6i47jnFI/AAAAAAAAAWk/qZzBEc3NiRw/s1600/dog-kittens.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_scbM4BSuz8w/TSe6i47jnFI/AAAAAAAAAWk/qZzBEc3NiRw/s400/dog-kittens.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559617373572668498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பின்னர் இதுவே மேலும் விரிந்து குரு பக்தி/அன்பு, ஈசனிடம் பக்தி/அன்பு என்று போய் இன்னும் மேலே இன்னும் மேலே என்று போய்க் கடைசியில் இரண்டும் ஒன்றாய்க் கலந்து தன்னையும் மறந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகையதொரு அன்புப் பிரவாகம் அனைவரிடத்திலும் சுரக்கப் பிரார்த்தித்துக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;u style="color: rgb(153, 0, 0);"&gt;நன்றி நவிலல்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீதா மேடம், இறைவன்  என்றென்றும் எழுதுவதில் உங்களுக்குள்ள ஆர்வத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ளட்டும்.  தங்களுடைய "&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;எண்ணங்கள்&lt;/span&gt;" இன்று போல் என்றும் அட்சயப் பாத்திரமாய் நல்ல விஷயங்களை உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கட்டும். சூரியனின் பல்வேறு நிலைகளில் வானம் பல வேறு வர்ணங்களை அள்ளித் தெளித்து நம் மனங்களை கொள்ளை கொள்வது போல் உங்களது &lt;b&gt;எண்ணங்களு&lt;/b&gt;ம் பல ரசங்களையும் அள்ளித் தெளிக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;Madam, what is the secret of your energy ? :))&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போன்றவர்களுக்கு -&lt;span style="font-style: italic;"&gt;இன்று இல்லை நாளை&lt;/span&gt;-ஏதாவது சந்தேகம் என்றால் ‘கீதா மேடம் கண்டிப்பாக இதை பற்றி எழுதியிருப்பார்கள், பார்ப்போம்’ என்ற எண்ணத்தோடு நீங்கள் பதிந்து வைத்திருக்கும் ”எண்ணங்களை” தேடி வருவோம். உங்கள் சேவை வாசகர்க்கு தேவை ! [&lt;span style="font-size:85%;"&gt; நானும் தொண்டன் தானே :))&lt;/span&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;”இப்போ யாரை எடுத்தாலும் அவங்க சொல்றது &lt;/span&gt;&lt;a style="color: rgb(0, 153, 0);" target="_blank" href="http://sivamgss.blogspot.com/2007/02/200.html"&gt; ரொம்ப பிசி&lt;/a&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; , நேரமே&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; கிடைக்கலைன்னுதான். அதுவும் இப்போ உள்ள  தலைமுறைக்கு எல்லாமே பிசிதான். அவங்களுக்கு தொலைபேசியில் பேசி சொந்தங்களுடனோ, வீட்டுப் பெரியவங்களுடனோ நலம் விசாரிக்கக் கூட முடியாமல் பிசி....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றெல்லாம் 'பிசி' என்பவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை படித்திருக்கிறோம். சொல்லிக் கொள்ளாமலே பிசியாக எப்போதும் இருக்கும் நீங்கள் பல குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே செய்து வரும் எழுத்துலக சேவைக்கு வாசகர்கள் கடமைப் பட்டவர்கள். இதனிடையே கபீர் வலைப்பூவிற்கும் எழுத நேரம் ஒதுக்கி இதனை சிறப்பித்திருக்கிறீர்கள். பணிவான வணக்கங்களுடன்,மிக்க நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-480550775590956374?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/480550775590956374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=480550775590956374' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/480550775590956374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/480550775590956374'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2011/01/8.html' title='சிறப்பு இடுகை  -விருந்தினர் பதிவு-8'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/TSe6ii7dFsI/AAAAAAAAAWc/8QTDb38treI/s72-c/2011.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-5811587044748604217</id><published>2010-12-27T22:49:00.019+05:30</published><updated>2010-12-28T18:49:45.778+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதிசங்கரர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காரைக்கால் அம்மையார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்பர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமூலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூதத்தாழ்வார்'/><title type='text'>சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு -7</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;ஆசிரியர் அறிமுகம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span&gt;&lt;br /&gt;பள்ளி நாட்களிலும் கல்லூரி பருவத்திலும் படிக்கும் ஆர்வம் மிக இருந்தும் கதைகள், நாவல்கள் போன்றவை பல காரணங்களால் என் மனதை ஈர்க்காமலே இருந்தது. எழுதுபவர்களுக்கும் பிரசுரிப்பவர்களுக்கும் பணம் ஈட்ட இது ஒரு வழி என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. &lt;/span&gt; &lt;span&gt;&lt;br /&gt;இந்த எண்ணம் இன்று மாறிவருகிறது. சமூகக் கதைகளில் மனதை பாதித்தவை என்று சொல்லக்கூடிய அளவில் எதுவும்   இல்லாமல் போனதற்கு என் தேர்ச்சி இன்மை காரணமே ஒழிய படைப்புகள் இல்லாமல் போகவில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span&gt;சில அற்புதப் படைப்பாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். நவீன இலக்கியங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்பதெல்லாம் வலையுலகுக்கு வந்த பின்பு &lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;பூவனத்தில்&lt;/span&gt; படித்து அறிந்து கொண்டேன்.  விந்தன் முதல் பாலகுமாரன் வரை பல பெரும் எழுத்தாளர்களின் வாழ்க்கைப் பிண்ணணியை மட்டுமல்லாது அவர்களின் கதைகளையும் கதாபாத்திரங்களையும் சிலாகித்து அவர்களின் பன்முக பரிமாணங்களை சுவைபட கூறப்பட்டுள்ள பாங்கை படித்த பின்னர் தான்  எழுத்துலகைப் பற்றிய என் தவறான கணிப்புகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;அந்த மாற்றத்திற்கு காரணமானவர் திரு ஜீவி அவர்கள்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;  &lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;br /&gt;அவருடைய  எழுத்துலகப் பயணம் 1957 லேயே துவங்கியது என்று ஒருமுறை படித்ததாக நினைவு. அவருடைய வலைப்பூவை பற்றி அவரது சொற்களாலே அறிய வேண்டுமென்றால் “&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; வலைப்பூ 'பூவனம்' ஒரு சிற்றிதழ் போல.  இலக்கியம், ஆன்மிகம், தற்சார்புக் கட்டுரைகள் என்று தேர்ந்தெடுத்த உள்ளடக்கங்கள் கொண்ட ஒரு  பத்திரிகையைப் புரட்டுவது போல இருக்கும்”&lt;/span&gt;.&lt;/span&gt;   &lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எவ்வளவு உண்மை என்பதை அறிய பூவனத்தில் அவர் இடுகைகளிலிருந்து ஒரு சில உதாரணங்கள் மட்டும் இங்கே.&lt;/span&gt;  &lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;/span&gt;&lt;a target="_blank" href="http://jeeveesblog.blogspot.com/2010/07/blog-post.html"&gt;உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி&lt;/a&gt;&lt;span&gt;"  ஐந்திணை ஐம்பதிலிருந்து அன்பிற்காக  தியாகம் செய்யும் பாடல் ஒன்று (மாறன் பொறையனார் பாடல்) கதை வடிவில்  ஆரம்பித்து இலக்கியச் சுவையுடன் முடிகிறது.&lt;/span&gt; &lt;span&gt;பிறர்க்காக வாழும் வாழ்க்கையே சிறப்பு என வலியுறுத்தும் &lt;/span&gt;&lt;a target="_blank" href="http://jeeveesblog.blogspot.com/2008/06/even-if.html"&gt;புறநானூற்றுச் சுவை தரும் இடுகை&lt;/a&gt;  &lt;span&gt;என ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்தமிழ் மட்டுமல்ல இசைத் தமிழும் இவரது பூ வனத்தில் உண்டு. கலைமகள் முதல் முருகன் வரை பாடல்கள் இயற்றி மகிழ்பவர் திரு ஜீவி.  &lt;/span&gt;&lt;a target="_blank" href="http://jeeveesblog.blogspot.com/2008/06/blog-post_08.html"&gt;அழகன் முருகன்&lt;/a&gt;&lt;span&gt;  (மணிரங்கு), &lt;/span&gt;&lt;a target="_blank" href="http://jeeveesblog.blogspot.com/2008/06/blog-post.html"&gt;சிவன்&lt;/a&gt;&lt;span&gt; (கல்யாணி), &lt;/span&gt;&lt;a target="_blank" href="http://jeeveesblog.blogspot.com/2008/05/blog-post_25.html"&gt;உப்பிலியப்பன்&lt;/a&gt;&lt;span&gt;(ராகமாலிகை) என பட்டியல் பெரிது.&lt;/span&gt;  &lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவி அவர்களின் கவிதைகளை படிப்பவர்களுக்கு அவருடைய நுண்மையான கவனிப்பும் அதை யதார்தத்தில் பகிர்ந்து கொள்ளும் திறனும் வியக்க வைக்கும். &lt;/span&gt;&lt;a target="_blank" href="http://jeeveesblog.blogspot.com/2010/03/blog-post_22.html"&gt;கிழிசல் &lt;/a&gt;&lt;span&gt;  என்ற கவிதை உழைக்கும் வர்க்கத்தில் தம் மனப் போராட்டத்தையும் வாழ்க்கைப்  போராட்டத்தையும் எதிர்கொள்ளும் கணவன் மனைவி பற்றிய ஒரு அன்பு மயமான  சொற்சித்திரம்.  &lt;/span&gt;&lt;a target="_blank" href="http://jeeveesblog.blogspot.com/2010/09/blog-post_17.html"&gt;இருப்பது&lt;/a&gt;&lt;span&gt;  என்ற தலைப்பில் ”இருப்பது இல்லாதது” பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள் மிக சுவையானவை மட்டுமல்ல வெகுநேரம் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை.&lt;/span&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;..............&lt;br /&gt;அது இருக்கையிலேயே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அதன் இல்லாமையும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பழக்கப்பட்டுப் போயின்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இருப்பின் மகத்துவமும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இல்லாது போகலாம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்படியாக இல்லாமையின்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;வெறுமையில் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இருப்பின் இழத்தலை&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;வென்று கடக்கலாம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span&gt;......&lt;/span&gt;............ &lt;span&gt;&lt;br /&gt;எல்லாவற்றினும் மேலாக அவருக்கு முக்கியமானது அவரது ஆன்மீகத் தேடல். அது  &lt;/span&gt;&lt;a target="_blank" href="http://jeeveesblog.blogspot.com/2007/12/blog-post.html"&gt;மனஓசையாக&lt;/a&gt;&lt;span&gt;  பூவனத்தின் முதல் இடுகையிலேயே வெளிவந்தது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;span&gt;............&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;மார்பில் கைவைத்து பார்க்கையில்&lt;br /&gt;மனசில் உணரமுடிந்தது துடிப்பை&lt;br /&gt;தன்னில் தானாய் என்னில் அதுவாய்&lt;br /&gt;என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை&lt;br /&gt;பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்&lt;br /&gt;புரிகிறது என்னும் உண்மை புரிந்தது&lt;br /&gt;என்னில் உறங்கும் உள்ளொளியும்&lt;br /&gt;நான் எனும் சுயம் ஒழித்து&lt;br /&gt;தன்னில் கரைந்தால் தான்&lt;br /&gt;தட்டுப்படும் போலிருக்கு.&lt;/span&gt;  &lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தேடல் விரிந்து “&lt;/span&gt;&lt;a target="_blank" href="http://jeeveesblog.blogspot.com/2009/06/3.html"&gt;ஆத்மாவை தேடி “&lt;/a&gt;&lt;span&gt; என்னும் ஒரு கருத்தரங்கப் பகிர்வாக மெய்ஞானம், விஞ்ஞானம் கலந்த கருத்துக் களமாக பல படிமங்களில் இரண்டு பாகமாக எண்பது இடுகைகளுக்கும் மேலாக பெருகி ஒரு அறிவு களஞ்சியமாக திகழ்கிறது. இப்படி ஒரு தொடரை எழுத வேண்டுமென்றால் அவரது வாசிப்பு எவ்வளவு அகலமும் ஆழமும் உடையது என்பதை எண்ணி எண்ணி மனம் வியக்கிறது.&lt;/span&gt;  &lt;span&gt;&lt;br /&gt;கடைசியாக ஜீவி அவர்களின் கதைகளைப் பற்றி ஒரு வார்த்தை. அவைகளிலே தீய எண்ணம் உடைய கதாபாத்திரங்களையே காணமுடியாது. யாவரும் அன்பு மயமானவர்கள்.  &lt;a href="http://jeeveesblog.blogspot.com/2010/08/blog-post_10.html"&gt;பிறருக்காக விட்டுக் கொடுப்பவர்கள். &lt;/a&gt;  சந்தர்ப்ப வசத்தால் ஒரு தர்மசங்கடமான நிலை தலையெடுக்கும் அல்லது சந்தேகம் தோன்றக்கூடிய வாய்ப்பு எழும். பின்னர் கதிரவனைக் கண்ட பனிபோல் அவை எப்படி அன்பினால் கரைந்து போய்விடும் என்ற வகையிலேயே பொதுவாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அன்பு மயமான ஒருவரால் வேறு எப்படி எழுத முடியும்? &lt;/span&gt;&lt;/span&gt;  &lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகை தீபத் திருநாளன்று எழுதப்பட்ட  கபீரின் வலைப்பூவுக்கான இக்கட்டுரைக்கு &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அகல்விளக்கு அற்புதம்&lt;/span&gt;&lt;span&gt;  என்று தலைப்பிட்டு அன்பின் பெருமையை பேசவிருக்கிறார்.&lt;/span&gt;  &lt;span&gt;வாசகர்கள் சார்பாக &lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;திரு ஜி. வெங்கடராமன் &lt;/span&gt;அவர்களை  வணங்கி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஜீவி ஐயா .......&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="im"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong style="color: rgb(204, 0, 0);"&gt;அகல் விளக்கு அற்புதம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஆரம்பத்தில் மகான் கபீர் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.  வடக்கில் வாழ்ந்த  ஓர் ஆன்மீகப் பெரியவர் என்கிற மட்டில் அன்பர் கபீரன்பனின் 'கபீரின் கனிமொழிகள்'  வாசிப்பு தொடர்ந்தது. பிடிப்பு ஏற்பட ஏற்பட இடுகை போட கொஞ்சமே காலம்  தாமதமானாலும் நாளாவட்டத்தில் இன்னும் ஏன் அடுத்த பதிவு போடக்காணோம் என்று  ஏக்கம் ஏற்பட்டது. அந்த ஏக்கத்திற்குக் காரணம் இருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்தண்டை அந்தண்டை பராக்கு பார்க்காமல் ஒரு தவம் போல பதட்டப்படாமல், நிதானமாய்  மகான் கபீரின் பன்முக தரிசனத்தை அவர் கொடுத்த பொழுது இந்தப் பதிவுக்கு வருவது,  வந்து வாசிப்பது, வாசிக்க ஏங்குவது இதெல்லாம் வழக்கமான பழக்கமாயிற்று.  இந்த  ஈர்ப்புக்கு முக்கிய காரணம், மகான் கபீர் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டிய பேற்றை  அவர் அணுஅணுவாக விவரித்த பாங்கு.  தாயுமானவர், பட்டினத்தார், வள்ளலார்,  ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று நமக்கும் பழக்கப்பட்டுப்போன தென்னகத்து  தவச்சீலர்களின் பாடல் வரிகளை எடுத்தாண்டு மகான் கபீரின் வாய்மொழிகளாம் வாய்மை  மொழிகளை நமக்குத் தெரிவித்தமையால் கபீர்தாசரைப் புரிந்து நம்மைப் புரிந்து  கொள்வதில் எந்த தடுமாற்றமோ தயக்கமோ இல்லாது போயிற்று.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;b&gt;சொல்லப்போனால், நம்மை நாமே புரிந்து கொள்வதற்காகத்தான் எல்லாமே.&lt;/b&gt; தவழும்  பருவத்திலிருந்து தள்ளாடும் பருவம் வரை இந்த புரிபடல் நடந்து கொண்டே  இருக்கிறது.  இப்படி இந்த நேரத்தில் இன்ன நடப்பது என்பது கூட இறைவனின் வரமாகிப்  போகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;அன்பு, பிரேமை, பக்தி என்று பக்குவமடைதலின் வரிசை நீண்டு  முக்திக்கு வாசல் திறக்கும் பேற்றை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது &lt;div class="im"&gt;&lt;br /&gt;&lt;div&gt;கபீர்தாசருக்கும் இந்த &lt;b&gt;அன்பு தான் &lt;/b&gt;அவரது வாழ்வின் ஆதாரசுருதியாக இருந்திருக்கிறது.  இறைவனிடத்து வைக்கும் தீவிர அன்பு பக்தியாகப் பரிமளிக்கும்   என்பது அவரது வழிகாட்டல்.  அதனாலேயே, 'தன்னலமற்ற அன்பு பேரின்ப நெறிக்கு   முன்பதிவுச் சீட்டு' என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளிடத்து வைக்கும் அன்பு இறைவனிடத்து இட்டுச் செல்லும்  &lt;b&gt;என்றும்,&lt;/b&gt; இல்லாதோர் இறைவனிடம் வைக்கும் அன்பு அந்த இறைவனையே  அவர் வீட்டு வாசலுக்கு &lt;b&gt;இட்டு வரும்&lt;/b&gt; என்றும் எடுத்துச் சொன்னவர் அவர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;div class="im"&gt;உண்மை பக்தர் இரவிதாஸருக்காக கங்கை அவர் தொழில் செய்த தொட்டியிலேயே   எழுந்தருளினாள் என்பது திகைக்கச் செய்யும் செய்தி, இல்லையா?...  எப்படிப்பட்ட  இரவிதாஸர்?.. 'இராமஜெபம் இருக்கையில் வேறொன்றும் வேண்டேன் பராபரமே' என்று  கைகுவித்து இறைவனை தன் இதய சிம்மாசனத்தில் இருத்திக் கொண்ட  இரவிதாஸர்!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;அன்பு பக்தியாக குணமாற்றம் கொண்டு மூலமான  இறைவனோடு இணையும் இரசவாதம் அற்புதமானது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கபீரின் மொழியில் அவர் அன்பன்  குறிப்பிட்டபடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;div class="im"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;सबै रसायन हम  किया प्रेम रसायन् न कोय ।&lt;br /&gt;रंचक तन में  संचरै, सब तन कंचन होय  ॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அவிழ்தம் பலப்பலக்  கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன்  மயமானது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;b&gt;தி&lt;/b&gt;னமும் பூஜை செய்தது சிவபெருமானின் சிலையாக இருந்தது,  சிவகோசரியாருக்கு.  கண்ணப்ப நாயனாருக்கோ, தான் கொண்டிருந்த மாசு மருவற்ற  பக்தியே சிவபெருமானாக இருந்தார்.  இந்த அன்பின் பிரதியான பக்தியே  காளத்திநாதரின் கண்களில் இடம் வலம் என்று மாறி மாறி குருதி வழிந்த பொழுது தன்  கண்களை ஒவ்வொன்றாக நோண்டி எடுத்து பெருமானின் முகத்தில் அப்பி வைக்க வைத்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆதி சங்கரரின் சிவானந்த லஹரீயின் அறுபத்து மூன்றாவது சுலோகம் கண்ணப்ப  நாயனாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;div class="im"&gt;&lt;br /&gt;मार्गवर्तितपादुका पशुपते रङ्गस्य  कूर्चायते&lt;br /&gt;गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते  ।&lt;br /&gt;किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते&lt;br /&gt;भक्ति: किं न करोत्यहो वनचरो  भक्तावतंसायते ॥&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="im"&gt; &lt;div&gt;மார்க்காவர்த்தித-பா&lt;b&gt;து&lt;/b&gt;கா பசுபதே-ரங்கஸ்ய  கூர்ச்சாயதே&lt;br /&gt;&lt;b&gt;க&lt;/b&gt;ண்&lt;span style="font-weight: bold;"&gt;டூ&lt;/span&gt;ஷாம்&lt;span style="font-weight: bold;"&gt;பு&lt;/span&gt;-நிஷேசனம் புர-ரிபோர்-&lt;span style="font-weight: bold;"&gt;தி&lt;/span&gt;வ்யா&lt;b&gt;பி&lt;/b&gt;-ஷேகாயதே|&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;கிஞ்சி&lt;b&gt;த்&lt;/b&gt; &lt;b&gt;ப&lt;/b&gt;க்ஷித-மாம்ஸசேஷ-க&lt;b&gt;ப&lt;/b&gt;லம்  நவ்யோபஹாராயதே,&lt;b&gt;&lt;br /&gt;ப&lt;/b&gt;க்தி: கிந் ந கரோத்யஹோ வநசரோ &lt;b&gt;ப&lt;/b&gt;க்தாவதம்ஸாயதே  ||&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;'காட்டு வழியெல்லாம் நடந்து நடந்து தேய்ந்த  கண்ணப்பரின் &lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;செருப்பு பெருமானின் மூர்த்திக்கு &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அபிஷேகத்திற்கு முன் &lt;/span&gt;&lt;/div&gt;      &lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சிரசில் வைக்கப்படும் கூர்ச்சம் போலாகிறது.  அவர்  வாயிலிருந்து கொப்பளித்த &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நீரில் நனைந்தது  தெய்வத்தன்மை பொருந்திய அபிஷேகம் போலாயிற்று.  &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கொஞ்சமே கடித்து பார்த்த மாமிசத்தின் பாக்கிக் கவளம் புத்தம் புதிதான நைவேத்தியம்  போலாகிறது. அஹோ!  காட்டில் வசிக்கும் வேடர் பக்த  சீலராகிறார்! ஆழ்ந்த பக்தி எதைத்தான் செய்யாது?'  என்று  பிரமிக்கிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_scbM4BSuz8w/TRjQZPR5uSI/AAAAAAAAAWU/A2wLTTh2lNE/s1600/thinnan.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 190px; height: 238px;" src="http://4.bp.blogspot.com/_scbM4BSuz8w/TRjQZPR5uSI/AAAAAAAAAWU/A2wLTTh2lNE/s400/thinnan.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5555419272378431778" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;திருநாவுக்கரசு சுவாமிகளோ தமது தேவாரத்து திருக்குறுக்கை வீரட்டத்  திருப்பதிகத்தில், &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப்  பாரம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;தோற்பெருஞ்ச் செருப்புத் தொட்டுத் தூயவாய்க்  கலச மாட்டித்&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத்  தன்கண்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ  ரட்டனாரே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;என்று கண்ணப்ப நாயனாரின் சரிதம் சொல்ல, &lt;div class="im"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஆர்வல்லார் காண அரனவனை  அன்பென்னும்&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;போர்வை யதனாலே போர்த்தமைத்துச் --  சீர்வல்ல&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி  னுள்ளடைத்து&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;மாயத்தால் வைத்தோம் மறைத்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்று காரைக்கால் அம்மையாரும் அன்பென்னும் போர்வையினால் பிறவா யாக்கைப்  பெரியோனைப் போர்த்தி தன் நெஞ்சத்தில் மாயத்தால் மறைத்து  வைக்க,&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;-- என்று திருமந்திரம் முடித்து வைக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;b&gt;மு&lt;/b&gt;தல் மூன்று ஆழ்வார்கள் கதை நமக்குத் தெரியும்.  மூவரும் தாயின் கர்ப்பத்தினின்று பூவுலகில் பிறவி எடுத்தவர்கள் அல்லர்.  தமிழகத்தின் வெவ்வேறு  திருத்தலங்களில் அடுத்த நாள் அதற்கடுத்த நாள் என்று அவதரித்தவர்கள்.   மூவருக்கும் ஐப்பசி மாசம்.  ஜென்ம நட்சத்திரங்கள் தாம் அடுத்தடுத்தது.  பொய்கை  ஆழ்வார்  காஞ்சிபுரத்தில் திருவோண நட்சத்திரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லையில்  அவிட்ட  நட்சத்திரத்திலும், பேயாழ்வார் திருமயிலையில் சதய நட்சத்திரத்திலும்  அவதரித்தனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; தென்பெண்ணை ஆற்றங்கரையில் நடுநாட்டில் உள்ள திருத்தலம் திருக்கோவலூர்.  தீராத  விளையாட்டுப் பிள்ளை இங்கு திருவிக்கிரமனாய் காட்சி தருகிறார்.  கண்ணனை,  கார்மேக வண்ணனைத் தரிசிக்கும் ஆவலில் மூவரும் வெவ்வேறு தலங்களிலிருந்து  திருக்கோவலூர் வருகின்றனர்.  இந்த மூவருக்கும் திருக்கோவலூரில் ஒரு சந்திப்பு  ஏற்படுத்தி அவர்களிடம் நெருக்கமாய் நெருங்க வேண்டுமென்பது பெருமானின் ஏற்பாடு.   &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மூவரும் இரவு தங்கலுக்கு ஒதுங்கிய இடம் ஒன்றாகிறது.  அடியார் ஒருவர் இல்லத்து  இடைக்கழி.  அந்த சின்னஞ்சிறிய இடத்தில் ஒருவர் படுக்கலாம்;  இருவர் அமரலாம்;   மூவர் நிற்கலாம்.  இவர்கள் மூவராகையால் நின்று கொண்டே இரவைக் கழிக்கலாம் என்று   தீர்மானிக்கையில், கண்ணுக்குப் புலப்படாத இன்னொருவரும் அவர்களுடன் சேர்ந்து  கொண்டு  இன்னும் நெருக்குகின்ற உணர்வு.  நாலாவதாய் சேர்ந்து கொண்டவர் யார் என்று  இருட்டை விரட்டிப் பார்த்து அறிய ஒவ்வொருவராக ஞான விளக்கேற்றி உணர  முற்படுகின்றனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பொய்கை ஆழ்வாரை அடுத்து பூதத்தாழ்வார் ஏற்றிய அகல் அன்பு ஒளியேந்தி பளீரென்று  பளீரிட்டுப் பிரகாசிக்கின்றது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இன்புருகு சிந்தை இடுதிரியா -- நன்புருகி&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஞானச்சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஞானத் தமிழ் புரிந்த நான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;பூதத்தாழ்வார் ஏற்றிய அகல், அன்பு அகல்.  அன்பை அகலாக்கி, ஆர்வத்தை  நெய்யாய் அதில் வார்த்து, இனிய மனத்தை திரியாய் அதில் இட்டு நாராயணனுக்கு ஞானச்சுடர்  ஏற்றுகிறார் அவர்.  ஆர்வ நெய்யில், இன்ப மனத்திரி அன்பு அகலில் ஒளிவிட்டு   ஜொலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கபீரும் தன் ஆழ்ந்த அன்பை விளக்க ஒரு விளக்கு ஏற்றி அதன்  ஒளியில் தன் தலைவன் முகம் காண ஏங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="im"&gt;इस तन का दीवा करू, बाती मेल्यु जीव ।&lt;br /&gt;लोही सींची तेल  ज्यों, कब मुख देखू पीव ॥&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;உடலே அகலாய் உயிர் மூச்சும் அதிலிட்டத்  திரியாய்  &lt;/span&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;உதிர நெய்யில் ஒளிர்கையில் பதிமுகம் காண்பதெப்போ?  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;span style="color: rgb(252, 0, 8);font-family:'Monotype Corsiva';font-size:13pt;"  &gt;&lt;/span&gt;&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/small&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;அன்பிற்கினியவன்  தன்னை விட்டுப் பிரிந்த நேரத்து அவன் வருகையை எதிர் நோக்கி கையில் அகலுடன் காத்திருக்கிறாளாம் இளம் பெண் ஒருத்தி.  அவன் திரும்புகையில்  இருட்டில் அகல் வெளிச்சம் அவன் முக தரிசனம் கிடைக்க உதவும் என்பது அவளது  எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="im"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;கபீருக்குக் கிடைத்த அகல் அவரது உடலேயாம்.  உடல்  அகலில் உயிர் மூச்சைத்  திரியாக்கி உதிர நெய்யில் நனைக்கிறார் கபீர்.  அகல் சுடர்விடும் அந்த ஆத்ம  ஜோதியில் இறைவனைக் காண அவன் தரிசனம் கிடைப்பதெப்போ எனக் காத்திருக்கிறாராம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காலங்கள் வேறுபடலாம்; தருணங்கள் வெவ்வேறாய் இருக்கலாம்;  தேச எல்லைகள் கூட  கிழக்கு மேற்கு என்று எங்கெங்கோ மாறி மாறுபடலாம். இறைவனிடத்து பேரன்பு  கொண்ட அருளாளர் சிந்தையெல்லாம் சந்தித்துப் போய்த் தங்குமிடம் ஒன்றே.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;அன்பே உருவாய்க் கொண்ட அன்பூரே  அது!&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="im"&gt;&lt;br /&gt;&lt;div&gt;நமது இலக்கியங்களும் சரி, வழிபடுத்தப்பட்ட வாழ்க்கை முறைகளும் சரி, இறைவனுடன்  ஒன்றி வாழ வழியேற்படுத்தி இருக்கின்றன.  இன்னொன்று.  இறைவனிடம் மனம் ஒன்ற  ஒன்றத்தான் 'தான்' என்னும் அகம்பாவம் அழிந்து உண்மையான 'தானைத்' தானே கண்டு   கொள்ளும் பாக்கியம் கிட்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தன்னைத் தானே உண்மையாக அறிதல் என்பது வாழ்க்கையில் வெற்றிகளை ஈட்டக் கிடைத்த  வரப்பிரசாதம்.  அந்த சித்தி கைவரப்பெற்றவர், தொட்ட காரியம் எல்லாம் துலங்கும்.   இறை பக்தியும் கூட இருந்து இரும்புக் கோட்டையென அவரைக் காக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய  எழுத மனம் அவாவுகிறது. அதை வேறோர் சமயம் செய்வதே சரி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;'நான்கு வருடம்;  நூறு இடுகை.  அதுவும் மகான் கபீரின் கனிமொழிகளைப் பற்றியே'   என்று கபீரன்பர் செய்து வருவது சாதாரண விஷயம் இல்லை.  மேற்பட்டப் படிப்பு  ஆராய்ச்சிகளுக்குக் கூட இவ்வளவு&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; சிரத்தையுடன் மெனக்கிடுவதில்லை.  இறைவன் அருள் இருப்பதாலேயே  இதெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது என்பது உள்ளம் உணர்ந்த  உணர்த்தல்.&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="im"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமது கடுமையான உழைப்பு கொண்டு ஒரு சத்சங்கத்தை கபீரன்பன் நிறுவியிருக்கிறார்   என்கிற நினைப்பே மோலோங்குகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;மகான் கபீரிடத்து கொண்ட பிரேமை 'கபீரன்ப'ரானது. அன்பு அவ்வளவு சக்தி  வாய்ந்தது. அதனால் தான் அவரது இயற்பெயரை விடுத்து 'கபீரன்ப!' என்று அவரை அழைப்பதே   நெருக்கமாகப் படுகிறது!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;----------------------------------------------&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:85%;" &gt;நன்றி நவிலல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;நாவில் உணவின் சுவை நிற்பது சில  கணங்களே. செவிவழி நுகரும் இசையின் மயக்கம் நினைவில் சில மணிநேரம்  நீடிக்கக்கூடும். ஆனால் நல்ல எழுத்துகளின் வாசிப்பின் சுவை மனதில் வாழ்நாள்  முழுவதும் உடன் நிற்பது என்பது இப்பொழுது புரிகிறது.   &lt;/span&gt;  &lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த  வாசிப்பின் சுவையை பகிர்ந்து கொள்ளவும் ஒரு திறமை வேண்டும்.  ஜீராவில்  ஊறும் குலோப்ஜாமூன் அத்தனை இனிப்பையும் தன்னுள் இழுத்துக் கொள்வது போல்   பெரும் எழுத்தாளர்களின் வாசிப்பிலேயே ஊறிப்போன திரு ஜீவி அவர்களும் அப்படி ஒரு சுவை பட எழுதும்  எழுத்தாளராக பரிமளிப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.&lt;/span&gt;    &lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இந்த அன்பன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். ஜீவி மற்றும் சூரி ஐயா போன்ற பெரியவர்களின் ஆசிகளே இறைவனின் ஆசீர்வாதமாக செயல்படுகிறது என்றால் மிகையில்லை&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;நமக்காக நேரம் ஒதுக்கி  கருத்து செறிவுள்ள ஒரு கட்டுரையை சுவையாகப் படைத்து இந்த வலைப்பூவை கௌரவித்ததற்கு திரு ஜீவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவருடைய எழுத்துலக சேவை பல காலம் நம் யாவருக்கும் வழிகாட்டட்டும் என்று வேண்டிக் கொண்டு  அவருக்கு நன்றி சொல்கிறேன். &lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;திரு ஜீவி அவர்களுக்கும் வாசக அன்பர்களுக்கும் வரும் ஆங்கில புத்தாண்டு 2011 ஒளிமயமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன். நன்றி&lt;/span&gt;.&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-5811587044748604217?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/5811587044748604217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=5811587044748604217' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5811587044748604217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5811587044748604217'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2010/12/7.html' title='சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு -7'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_scbM4BSuz8w/TRjQZPR5uSI/AAAAAAAAAWU/A2wLTTh2lNE/s72-c/thinnan.JPG' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-5385469056161486831</id><published>2010-12-19T20:27:00.011+05:30</published><updated>2010-12-26T20:01:23.521+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்'/><title type='text'>சிறப்பு இடுகை-6 : தொடர்ச்சி (2)</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;கபீரின் இராமன் (பாகம் -2)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஆசிரியர்: திரு. சுப்புரத்தினம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இறைவனை அடைய பல வழிகள் சொல்லப்படுகின்றன: ஹட யோகம், தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்வது, மந்திரங்களை உச்சரிப்பது, பூஜைகள், எல்லா விதமான  கர்மாக்களுமே சிக்கலே. ராம நாம உச்சாடனத்தை ஆகவே எல்லா வழிகளிலிருந்தும்  சிறந்ததாக, எளிதாகப் புரிந்து கொண்டு செய்தால், மற்ற வழிகளில் உள்ள ஆடம்பரங்கள் இல்லை எனவும் தெளிந்து செயல்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கபீர் தனது மனதிடம் இறைஞ்சுகிறார்.  :&lt;br /&gt;, ஏ மனமே !! எப்படி உடைபட்ட ரத்தினங்கள் ஒன்றாகத் திரள்கின்று ரத்தின மாலை ஆகிறதோ, அது போல இந்த உலகின் மாயையிலே சிதைந்து போன நீ, அந்த  பரபிரும்மன் ராமனின் அம்ருத குணங்களைக்கேட்டு, அவற்றையே பாடி மகிழ்வாய்,&lt;br /&gt;&lt;br /&gt;ராமனையே ஸ்மரித்து ராமனிடமே நிலைத்து ராமனாகவே ஆவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;कबीर् राम् रिझाड् लै, सुखि अम्र्रुत् गुण् गाइ&lt;br /&gt;फूटा नग ज्यूम् जोडि मन्, सनधि मिलाइ&lt;br /&gt;&lt;br /&gt;இது ஜீவாத்மா தனது மாயையைக் களைந்து தனது உண்மை சொரூபத்தினை உணர்வது.  பரமாத்மாவுடன்  ராமா, ராமா என உன் உதடுகளால் ராம மந்திரத்தை உச்சாடனம் செய். மனதிலே ராமனை இருத்து. ராமன் ஒரு சமுத்திரம்.அகண்ட சாகரம். கடக்க இயலாத கடல். அங்கே, அக்கடலிலே ஆனந்த அலைகள் எப்பொழுதுமே எழும்பி எழும்பி  உத்சாகத்துடன் பாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வலைகள் முன்னே அன்னிய தேவதைகள், கடவுளர் சின்னஞ்சிறிய‌ குளங்கள் போலவோ இருப்பர் !! கடலின் சக்திக்குமுன்னே குளங்கள் எம்மாத்திரம் ? ஆகவே ராம நாமம் ஒன்றினால் மட்டுமே உண்மையான இன்பம் பெற இயலும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமா நீ சமானமெவரு ? பிரியா சகோதரிகள் குரலில் தியாகராஜரது பாடல்&lt;br /&gt;ராகம்: கரஹரப்ரியா&lt;br /&gt;&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/c56a9381-288a-4ce0-89fe-954458032ed0&amp;amp;theName=priyasisters_raama_nee_samaanamevaru&amp;amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf" width="328" height="94"&gt;&lt;/embed&gt;                   &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table style="font-family: Verdana,Arial,Helvetica,sans-serif; padding-left: 2px; color: rgb(255, 255, 255); text-decoration: none; font-size: 10px; font-weight: bold;" cellpadding="2"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;amp;objectid=c56a9381-288a-4ce0-89fe-954458032ed0"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/doc/c56a9381-288a-4ce0-89fe-954458032ed0/priyasisters_raama_nee_samaanamevaru/?widget=flash_player_esnips_blue"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color: rgb(255, 102, 0); text-decoration: none;" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;amp;cid=player_dna&amp;amp;url=/socialdna"&gt;   eSnips Social DNA    &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;(Rama,you glorified Raghu dynasty. Who can be equal to you?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;Your beloved wife Sita is slender like the fragrant majoram(maruvam) She is &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;devoted to you like a pet parrot.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;You are fortunate to have brothers whose talk is gentle and sweet like &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;honey drops.You are the most precious jewel of your lineage. Your speech &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;is refined,gentle and sweet.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;कबीर् राम् ध्याइ लै, जिभ्या साऔ करि मन्त्&lt;br /&gt;हरि सागर् जिनि बीसरै, छीलर् देखि अनन्त्&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ராஜ்ஜியம் உனக்கு கிடைத்துவிடின், உனது இகலோக கவலைகள் எதுவுமே இருக்காது. உண்மையான இன்பம்,உண்மையான சாம்ராஜ்யம் எது என உன் மனசுக்குப் புரிந்துவிடும் என்று சொன்னவர் கபீர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராம பக்தி சாம்ராஜ்ய என்று தியாகராஜர் பாடியது நினைவில் வருகிறது.‌&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;[&lt;span style="font-size:85%;"&gt;ராம பக்தி சாம்ராஜ்யம்  &lt;a target="_blank" href="http://www.youtube.com/watch?v=x3Z54RLFhwg"&gt;நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணா&lt;/a&gt; பாடுகிறார். சுத்த பங்காள ராகம்]&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/ba7c6e2c-5f28-4284-85ce-25a26a24bf84&amp;amp;theName=rama_bhakti_neyveli&amp;amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf" width="328" height="94"&gt;&lt;/embed&gt;         &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table style="font-family: Verdana,Arial,Helvetica,sans-serif; padding-left: 2px; color: rgb(255, 255, 255); text-decoration: none; font-size: 10px; font-weight: bold;" cellpadding="2"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;amp;objectid=ba7c6e2c-5f28-4284-85ce-25a26a24bf84"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/doc/ba7c6e2c-5f28-4284-85ce-25a26a24bf84/rama_bhakti_neyveli/?widget=flash_player_esnips_blue"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color: rgb(255, 102, 0); text-decoration: none;" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;amp;cid=player_dna&amp;amp;url=/socialdna"&gt;   eSnips Social DNA    &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எல்லாத்தொல்லைகளிலிருந்தும் விடுபட ராம ஜெபம் ஒன்றே வழி.&lt;br /&gt;Hare Rama Hare Rama Rama Rama Hare Hare&lt;br /&gt;Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare&lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடையே, இந்நாட்களில், ஆன்மீக உபன்யாசம் செய்யும் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் சொல்வதைக் கேட்போமா ?&lt;br /&gt;&lt;div class="youtube-video"&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/1_KTDFl6U30?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/1_KTDFl6U30?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;                   &lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இன்றைய தேதியிலே, ராம ராம் என்று உச்சாடனம் செய். அது போதும்.ராம பஜன் ஒன்று மட்டுமே உண்மையான பஜன் என்பார் கபீர். இதை விடுத்து மற்ற மார்க்கங்கள் தேவையில்லாத  கஷடங்களையே தருகின்றன.இறைவனின் உண்மையான பக்தனுக்கு அவனது பெயரின் நினைவு ஒன்று தான் இருக்கிறது,உலகத்தைப் பற்றியநினைவு இல்லை. ராமா ராமா என அழைத்தே, அவன்&lt;br /&gt;நினைவிலே இருந்து ராம பக்தர்கள் ராம   மயமாகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி யார்முன்னே பக்தன் தலை வணங்குவான் ?&lt;br /&gt;&lt;br /&gt;பக்தனும் இறைவனும் ஒன்று படும் வேளையிலே, " நான் " என்பது இல்லை. " நான்" இருந்த‌ இடமெலாம் " நீயே" . அது நீதான்.. ( தத் த்வமஸி) காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:85%;" &gt;ஸ்ரீ ராமசந்திர கிருபாளு பஜ்மன என்கிற பிரசித்தமான பாடல் அனுராதா பதுவாள் அவர்கள் குரலில் [Sri Ramachandra kripalu bhaj man...anuradha patwal&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="youtube-video"&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/oAlGqDM7T1M?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;br /&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;br /&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/oAlGqDM7T1M?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;                     &lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ततम् तिलक लोक मै, राम् नाव् निज सार्&lt;br /&gt;जन  कबीर मस्तक दिया, सोभा अधिक अपार‌&lt;br /&gt;&lt;br /&gt;ராம நாமம் ஒன்றே வேத உபனிஷத்துகளின் ஸாரம் . இந்த நாமமே மூவுலகங்களின் தத்வ மயமான திலகமாகும்.  கபீர் சொல்வார்: இந்த ராம நாம திலகத்தை எனது நெற்றியிலே இட்டுக்கொண்டு, எல்லா தேஜஸும் ஒளியும் என்னிடம் பிரகாசிக்க கண்டேன்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலுகே பங்காரமாயின - உன்னிகிருஷ்ணன் அவர்கள் குரலில்&lt;br /&gt;&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/a9f8511b-da66-4c1b-83a4-33d786503447&amp;amp;theName=paluke_unni&amp;amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;objectid=a9f8511b-da66-4c1b-83a4-33d786503447"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/a9f8511b-da66-4c1b-83a4-33d786503447/paluke_unni/?widget=flash_player_esnips_blue"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;cid=player_dna&amp;url=/socialdna"&gt;   eSnips Social DNA    &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமனுக்குத் தந்த உள்ளம் வேறு ஒருவரையும் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;कबीर सुमिरण सार है, और सकल जम्जाल&lt;br /&gt;आदि अति सब सोधिया दूजा देखौ काल‌&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;च्य्न्ता तौ हरि नौ की, और् न चिन्ता दास‌&lt;br /&gt;जे कुछ् चिम्तवै राम् बिन, सोइ काल कौ पास‌&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உண்மையான பக்தனுக்கு ஏதேனும் சிந்தனை இருப்பதென்றால், அது ராமனைக் குறித்த சிந்தனையே. மற்ற எதிலுமே அவன் மனம் லயிப்பதில்லை. தன்னைப்பற்றியோ, தனது குடும்பத்தைப்பற்றியோ அவனுக்கு கவலை இல்லை. அவன் ஒரே  எண்ணத்தில் இருக்கிறான். ராம நாமத்தின் உள் இருக்கும் தத்வத்தை, மர்மத்தைப் புரிந்து, அந்த விராட் ஸ்வரூபத்தை புரிந்து கொள்வதில்லே கண்ணும் கருத்துமாய் இருக்கிறான். ராமன் இல்லை என்று ஒரு எண்ணம் இருந்தால் அதுவே மிருத்யுவின் ஜாலம் அது தன்னை கர்மங்களின் வலையில் தள்ளிவிடும், அவ்வலையிலே சிக்கி எல்லா உலகங்களையும் சுற்றி சுற்றி , அவ்வப்பொழுது பிறந்து இறந்து தொடர் வினையை அனுபவிக்கிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எல்லா சிந்தனைகளையும் அலசி ஆராய்ந்து முடிவாக, ராம நாமம் எனும் ரத்தினத்தை அடைந்திருக்கிறேன், என்பார் கபீர்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;पन्च सनगी पिव पिव करै, छुठा जु सुमिरै मन‌&lt;br /&gt;आइ सूति कबीर् की, पाया राम रतन &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;payoji maine..Ram rathan payo. by Latha Mangeshkar&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;rama natakathilE oru nikalchi.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="youtube-video"&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/sUqA69N_0MM?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;br /&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;br /&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/sUqA69N_0MM?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;                                   &lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அந்த ராமனைக் கண்ணாரக் கண்டேன்  &lt;a target="_blank" href="http://mio.to/IbsM"&gt;மதுரை மணி ஐயர் குரலில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;मेरा मन सुमिरै राम कूम, मेरा मन रामहि आहि&lt;br /&gt;अब मन रामहि है रह्या , सीस नवावौ काहि&lt;br /&gt;&lt;br /&gt;எனது மனம் ராமா, ராமா என ராமனையே ஜபித்துக்கொண்டிருக்கும்பொழுது ராமனே எனது மனமாகி விட்டது. மனம்  ராமன் வசம் ஆனபிறகு, நான் வேறு யாரை தலை வணங்குவேன் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜகஜித் சிங்க் என்ன பாடுகிறார் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஹரி அல்லால் வேறு யார் துணை ( ஹரி பின் கோன் சஹாய் ) என்னும் பொருளில் துவங்கும் கபீரின் பாடலை ஜகஜித் சிங் குரலில் இங்கே :&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Mxy2cx4fgzM?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Mxy2cx4fgzM?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;तू तू करता तू भया, मुझ मै रही न हूम्&lt;br /&gt;वारी फेरी बलि गयि, जित् देखो तिह तू&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா ! ராமா ராமா என உன்னையே நான் ஸ்மரிப்பதால், நான், எனது என்று ஒன்றுமே இல்லை. நான் என்பது எதுவோ,  எனது என்பது எதுவோ அவையெல்லாம் உன் நாம ஸங்கீர்த்தனத்தில் நிவேதனம் செய்யப்பட்டு என்னால் தியாகிக்கப்பட்டு விட்டன, இப்பொழுது நான் எங்கு பார்த்தாலும், ராமா ! நீயே அங்கு இருக்கிறாய் !!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்பதாகவும் மற்றும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;कबीर् निर्भै राम जपि, जब लगि दीवै बाति&lt;br /&gt;तेल घटया बाती बुझी, तब सोवेगा दिन राति&lt;br /&gt;&lt;br /&gt;ராம நாமத்தை உனது உடலில் உயிர் உள்ளவரை ஜபித்துக்கொண்டே இரு.&lt;br /&gt;அது உன்னுடைய எல்லா பயங்களையும்  போக்க வல்லது. எண்ணை இருக்கும் வரை தீபம் சுடர் விட்டு பிரகாசிப்பது போல , உன் உடலில் உயிர் உள்ளவரை நீ  நிர்பயமாக, ஒளி விடுவாய். உன் உடல் மரிக்கும்பொழுது நீ கவலையிலாது நிரந்தரமாக அமைதியாகத் தூங்குவாய்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் ராமநாமத்தின் மகிமையைப் போற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை சொல்கிறோமே ? இன்னும் ஜனங்கள் என்னைப் புரிந்துகொண்டு, ராம ஜபத்தினைத் துவங்க வில்லையே என்ற   கவலை கபீருக்கு. கதறுகிறார். கூக்குரல் இடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;लूटि सकै तो लूटियो, राम नाम है लूटि&lt;br /&gt;पीछी ही पछिताहुगी, यहु तन जेहै छूटि&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஒ ஜனங்களே !!  வாருங்கள்.ராம நாமம் எனும் அகண்ட கஜானா எல்லோரும் வந்து பகிர்ந்து கொள்கிறார்கள். அது காலியாகிவிடப்போகிறது. நீ உனது மன உறுதியும் சக்தியும் ஒருங்கே இணைத்து, சீக்கிரமே எத்தனை முடியுமோ அத்தனை அந்த கஜானாவிலிருந்து ராம நாமத்தை எடுத்துக் கொள். ஸ்மரணை செய்யத் துவங்கு. இறப்பு என்று வந்து காலன் உனது உயிரை தச த்வாரங்களிலிருந்து  எடுத்துச் சென்றபின்னே உன்னால் ராம நாமம் ஸ்மரணை இயலாது.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் திருமொழி என்ன சொல்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே&lt;br /&gt;ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்&lt;br /&gt;எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்&lt;br /&gt;அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;कबीर आपण राम कहि, औरो राम् कहाइ&lt;br /&gt;जिहि मुखि राम न उचरे, तिहि मुख् फेरि कहाइ&lt;br /&gt;&lt;br /&gt;நீ மட்டும் ராம நாமத்தைச் சொல்வதில் திருப்தி அடையாமல், மற்றோரையும் ராம நாம ஜபத்தில்  ஈடுபடுத்து. உன்னால், ராம நாமத்தை ஜபிக்க இயலாது போனாலும், மற்றவர் ஜபிக்க நீ காது கொடுத்துக் கேட்கலாம். ராம ஜபத்தில் ஈடுபடலாம் என்று கபீர் சொல்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமா ! உன் பெயரைச் சொன்னாலே என் உள்ளம் மகிழ்கிறது. உடல் புல்லரிக்கிறது. நீ உருவமுடன் என்முன் ஒரு கோதண்ட ராமனாக வந்தாலும் சரி, உருவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பர பிரும்மமாக இருந்தாலும் சரி, எனக்கு அருள் புரிவாய். என் பிறவிக்கடலை நீந்தி அக்கரை சேர துணை நிற்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;जैसे माया मन् रमै, यू जे राम रमाइ&lt;br /&gt;तौ तारा मन्डल् छान्डि करि, जहान् के सो तहान् जाइ.&lt;br /&gt;&lt;br /&gt;ராம பக்தனே !! உலகத்தே இருக்கும் யாவையும் ஜீவன் உட்பட, மாயையில் முழுகி  உள்ளதோ, அது போல, நீ ராமநாமத்திலே சங்கமமாகி விடு. நக்ஷத்திர  மண்டலங்களுக்கப்பாலே கேசவன் இருக்கும் இடத்தை நீ அடைவாய். ஊர்த்வகமனம்  செய்து  நக்ஷத்திர மண்டலத்துக்கும் மேலே உள்ள ஸூன்ய சக்ரத்தை அடைந்து  பரமாத்மாவுடன் ஐக்கியமாய். தன் பிறவிப்பயன்  அடைவாய். அழியாப் புகழ்  அடைவாய்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ராம நாமத்திலே சர்வமும் அடக்கம் என்று கபீர் சொன்னதை அழகாக படம் பிடித்து நமது மனங்களில் ஒட்ட வைத்து விட்டார் சுப்புரத்தினம் சார். கபீரின் (ஈரடி) அருள் மழை  இன்னிசை தென்றலுடன் மிகவும் சோபித்தது. மிகவும் சுகமான ஒரு வாசிப்பு.  அவருக்கு அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி. அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எல்லா நலன்களையும் தந்து இறைவன் அவரை நமக்கு தொடர்ந்து வழிகாட்ட வழி செய்யட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கர்நாடகமெங்கும் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமனை விட சிறந்த ராம பக்தன் உண்டோ ? வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கிய ’கபீரின் இராமன்’ பற்றிய இடுகை ஹனுமத் ஜெயந்தி அன்று நிறைவடைவது இன்னமும் விசேஷம் அன்றோ!&lt;br /&gt;&lt;br /&gt;சத்சங்கத்திலே கூட்டுப் பிரார்த்தனைக்கு விசேஷ இடம் உண்டு. வாருங்கள் நாமும் சேர்ந்து கொள்வோம் இந்த ராம நாம ஜெபத்தில்.&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/HNNlpcKGJWo?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/HNNlpcKGJWo?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்.&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-5385469056161486831?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/5385469056161486831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=5385469056161486831' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5385469056161486831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5385469056161486831'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2010/12/6-2.html' title='சிறப்பு இடுகை-6 : தொடர்ச்சி (2)'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-3320321971002000669</id><published>2010-12-17T16:32:00.009+05:30</published><updated>2010-12-18T21:22:47.425+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துளசிதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kabir Doha'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்'/><title type='text'>சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6</title><content type='html'>&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆசிரியர் அறிமுகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே உண்டு. சங்கீதத்தின் ஆழமும் தெரியாது,  எதிரே அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மகத்துவமோ பெருமையோ தெரியாது [&lt;i&gt;தெரிந்திருந்திருந்தால் அவன் மேடை ஏறியே இருக்கமாட்டான்&lt;/i&gt;].&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பாடி முடித்ததும் பெரியவர் ஒருவர் அவனுக்கு  பரிசளித்து வெகுவாகப் பாராட்டி உற்சாகம் அளிக்கிறார். அவரைப் பற்றி பிற்காலத்தில் அறிந்து கொள்ளும் போது வாயைப் பிளக்கும் வண்ணம் இவர் முன்பா அரைகுறையான நான் பாடினேன் என்ற நாணம் தோன்றும். அப்படி பாராட்டி உற்சாகம் தந்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் இன்று முன்வந்து நமக்கு சிறப்பு இடுகை தரவிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கபீரையும் வள்ளுவரையும் ஒப்பிட்டு ’60 களிலேயே மேற்படிப்பு ஆராய்ச்சி மேற்கொள்ள விழைந்தவர். அப்படியானால் இரண்டு மொழிகளிலும் அவருடைய தேர்ச்சி எவ்வளவு இருக்க வேண்டும் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://arthamullavalaipathivugal.blogspot.com/"&gt;அர்த்தமுள்ள வலைப்பதிவுகள்&lt;/a&gt; என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கி கிட்டத்தட்ட  ஒரு வருடத்திற்கும் மேலாக நூற்றுக்கணக்கானப் பதிவுகளைப் படித்து அவற்றை தமது வலைப்பூவில் இணைப்புகளுடன் சுட்டிக் காட்டி வாசகர்களை ஒரு தரமான வாசிப்பு அனுபவத்திற்கு உயர்த்த பாடுபட்டவர்.  அவற்றில் வாரம் ஒரு முறை ஒரு சிறப்பான இடுகையை தேர்ந்தெடுத்து அதற்கு மகுடம் சூட்டி வாழ்த்தியவர். ஒரு முறை &lt;a target="_blank" href="http://arthamullavalaipathivugal.blogspot.com/2008/02/and-this-week-golden-crown-goes-to.html"&gt;கபீரின் கனிமொழிகள் இடுகை ஒன்றுக்கும் &lt;/a&gt;  அந்த பாக்கியம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகின் விதவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி  எல்லா விதங்களிலும் வாசகர்களைக் கவரும் அவருடைய ஆர்வம் பல இளம் தலைமுறையினரையும் வெட்கமுறச் செய்யும். சங்கீதப்பிரியர், அதற்கென ஒரு தனி வலைப்பூ. &lt;a target="_blank" href="http://movieraghas.blogspot.com/"&gt;மூவி ராகாஸ்,மூவிங் ராகாஸ்&lt;/a&gt; என்னும் அந்த வலைப்பூவில் கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி இசை கோப்புகளுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட திரைப்படப் பாடல்களின் இசை நுணுக்கத்தை தொகுத்து தருகிறார். &lt;a target="_blank" href="http://vazhvuneri.blogspot.com/"&gt;தமிழ் மறை தமிழர்நெறி&lt;/a&gt; என்று இன்னுமொரு வலைப்பூ. இதை திருமூலர் முதல் சுப்பிரமணி பாரதிவரை இலக்கியம் மற்றும் நடைமுறை சமூகக் கண்ணோட்டத்துடன் பல விஷயங்களுக்கு கருத்து சொல்லும் களமாக வைத்திருக்கிறார். &lt;a target="_blank" href="http://pureaanmeekam.blogspsot.com/"&gt;ஆன்மீகம்&lt;/a&gt; என்ற பெயரில் ஆன்மீக விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள மட்டுமே ஒரு வலைப்பூ. கவிநயா போன்ற கவிஞர்களின் கவிதை வெளியான சில மணிநேரங்களிலேயே அதற்கு ராகம் போட்டு பாடி யூட்யூபில் வலையேற்றவும் செய்து விடுவார். அவருடைய  உற்சாகம் யாவரையும் தொற்றிக் கொள்ளக்கூடியது. நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்பதையும் “ &lt;a target="_blank" href="http://vazhvuneri.blogspot.com/2010/12/blog-post.html"&gt;உலகமே நாற்றம் .ஒரு தினுசான சாக்கடை தான்&lt;/a&gt;” போன்ற வர்ணனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட சிறப்புகளுக்கு உரியவரான &lt;b&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;திரு சுப்புரத்தினம் என்கிற சூரியநாராயண சிவா&lt;/span&gt;&lt;/b&gt; அவர்களே இந்த சிறப்பு இடுகையின் ஆசிரியர். அவரை வாசகர் சார்பில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;எச்சரிக்கை :&lt;/span&gt; கபீரின் ஈரடிகள் மழைபோல் பொழிய போகிறது. நனைந்து மகிழ வேண்டிய அருள் மழை. அதனோடு இன்னிசைக் காற்றும் சேர்ந்து வாசகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கபீரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என அன்பர் திரு கபீரன்பன் பணித்தவுடன் ஒப்புதல் அளித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் கபீரைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டிருக்கிறேனா என்ற ஐயப்பாடு என் மனதிலே என்றென்றுமே உள்ளது. சொல்லப்போனால், 1957 முதல் கபீரின் தோஹாக்களை நான் பிரசார சபா தேர்வுகளுக்குக் கற்க துவங்கின காலத்திலிருந்து, ப்ரவீண் முடித்தபின்னும் சுமார் 1000 தோஹாக்களுக்கு மேல் மனப்பாடமாகத் தெரிந்தபின்னும் அதே நிலைதான். காரணம், கபீரின் பரிமாணம் அத்தகையது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும், ஒரு பழுத்த ஆன்மீக வாதியாக, ஒரு தத்துவ ஞானியாக( தேரா சாயீ துஜ் மேய்ன் ஜோ ப்ஹுபன் மேய்ன் பாஸ்) , சமூக சீர்திருத்த வாதியாக, மூடப்பழக்க வழக்கங்களை அழிக்கும் நோக்குடையவராக ( &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பாஹன் பூஜென் ஹரி மிலை, தொ மைம் பூஜும் பஹாட்&lt;/span&gt;), ராம பக்தராக (&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; जिसी घटी प्रीती न प्रेम कि, पुनि रसना नहीं राम , ते नर इस संसार में उपजि गए बेकार&lt;/span&gt; )  எப்படிப்பார்த்தாலும் அவர் ஒரு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதராக, தெய்வத்துள் வைக்கப்படுபவராக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தே ஆசானைப்போன்றவர் எவருமே இல்லை. அன்னை, தந்தை, உறவினர், நண்பர் யாவருமே இருப்பினும் நல்ல ஒரு குருவினைப்போன்று மிக நெருங்கிய சொந்தம் எவரும் இல்லை. உறவினர் யாவரும் உலக பந்தங்களே. உலகத்திலே ஒருவனை முழுகடிப்பதிலே தான் கண்ணாக இருக்கையிலே குரு ஒருவர் தான் தனது சீடனை இந்த இக லோக இருட்டிலிருந்து வெளிக்கொணர்ந்து அறிவு நிலையாம் ஞான ஒளியைத் தருவதிலே முனைப்புடன் இருப்பார். அப்படிப்பட்ட‌ குரு சாதாரண மனிதனான என்னை ஒரு தேவனாக ஆக்கிவிட்டாரே, அந்த குருவிடம் தினந்தோறும் எத்துணை முறை நான் நன்றி சொல்வேன், என கபீர் சொல்வதைக்கேட்டு இக்கட்டுரையைத் துவங்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பலிஹாரி குரு ஆபணை, த்யொள்ம் ஹாடி கை பார்.&lt;br /&gt;ஜினி மானிஷ் தைம் தேவதா, கரத் ந லாகி பார்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;கபீர் ஒரு இணையற்ற ராம பக்தர். கபீரின் பக்தி ஸாகரத்தில் முழுகியவர் பிறவிப்பெருங்கடல் நீந்தி இறைவனடி நிச்சயம் சேருவார் என்பதில் ஐயம் உண்டோ ?&lt;br /&gt;கபீர் கண்ட ராமன் என எழுதுவோமா ? இல்லை , கபீர் அனுபவித்த ராமன் என சொல்வோமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கபீரின் மனதுக்கிசைந்த  ராமன் பற்றி எழுதுவோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமனைப் புரிந்துகொள்வதிலே அவனைப் போற்றுவதிலே, துதிப்பதிலே இருக்கும்  வேற்றுமைகள், அந்த நாமம் நமக்கு என்ன நல்லது செய்கிறது என்று  சொல்லும்பொழுது மறைந்து போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இடத்துக்குப் போகணும், டிரையினிலே போகலாமா, பஸ்ஸிலே போகலாமா இல்லை, ப்ளேனிலே போகலாமா என‌ யோசித்துக்கொண்டிருந்தபொழுது நான் மனசாலேயே அங்க ஆல்ரெடி போய்விட்டேன் என்று சொல்வதையும் நாம் கண்டு அனுபவிக்கத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இந்த கட்டுரையில், இரண்டு நிலைகளிலும் ராம பக்தியை, மாயா ரஹித பிரும்மன்  ஆகவும், அதே சமயத்தில் மாயா சஹித பிரும்மன் ஈஸ்வரன் ஆகவும் சந்திப்போம்.  சிந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராம நாமத்தை சொல்ல, உச்சரிக்க, ராமனின் பக்தியில் மெய் மறக்க, கபீர் கூவியதைப்போல் வேறு யாரும் பாமர மக்களுக்குப் புரியும் வண்ணம் சொன்னார்களா என எனக்குத் தெரியவில்லை. அந்த ராம நாமத்தை ஒரு தடவை சொன்னால்,ஆயிரம்  தரம் சொன்னால் மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே&lt;br /&gt;சஹாச்ர நாம தச்துல்யம் ஸ்ரீ ராம நாம வராஹனே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க. ராமனைப் பற்றி கபீர் என்ன சொல்கிறார் என்ற உடனேயே நமது கண்களில், ராமன் ஒரு சீதா ராமனாக, கோதண்டராமனாக, ஜெயராமன், பட்டாபி ராமன்,ரகுராமன், கோசலைராம‌, கல்யாண ராமன், வேங்கட ராமன் , தசரத ராமன், இப்படி பல்வேறு நாமாக்களைக்கொண்ட ராமனாக சித்தரித்துக் கொண்டால், அதற்கு கபீர் பொறுப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நமக்கு தெரிந்த  ராமனின் கதையை  கேட்போமா ?&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடுவதை முதலில் கேட்போம்.&lt;br /&gt;&lt;div class="youtube-video"&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/FM4_ZKFV8hQ?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;br /&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;br /&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/FM4_ZKFV8hQ?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;                             &lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சகுணவாதியான துளசிதாசரைப்பார்த்தால்,அவரைப்போல் ராம பக்தர் இருப்பரோ என்று வியக்கிறோம்.&lt;br /&gt;துளசிதாஸரின் ராம சரித மானஸில் ”துமக் சலத் ராமசந்த்ர” &lt;a target="_blank" href="http://www.youtube.com/watch?v=KQ_L9B2F140"&gt;லதாமங்கேஷ்கர் அவர்கள் குரலில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="youtube-video"&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/KQ_L9B2F140?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;br /&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;br /&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/KQ_L9B2F140?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;                             &lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நாம் காணும் சர்வ   குணஸ்ரேஷ்டனான Sarva guna sampannan, ragu kula nayakan Aana ராம பிரான்,  பக்த தியாகராஜர் எழுபத்தி இரண்டு மேள கர்த்தா ராகங்களிலும் பாடியிருக்கும் இராம பிரான் சகுண பிரும்மன். அவதார புருஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;’&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத’&lt;/span&gt; என்று அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்ட வந்த பரம்பொருள்.அந்த பரம்பொருள் ராமனாக அவதாரம் செய்தபொழுது, அப்பாலகன் ராமனுக்கு குலசேகர் ஆழ்வார் பிரபந்தத்தில்  தாலாட்டு பாடி மகிழ்வார். ராமனிடம் அவர் காட்டும் வாத்ஸல்யத்துக்கு ஈடு ஏது!&lt;br /&gt;&lt;br /&gt;ராகவனனே தாலேலோ இங்கே கேளுங்கள். &lt;a target="_blank" href="http://www.youtube.com/watch?v=UgJeI5wj-Xw"&gt;பாம்பே ஜெயஸ்ரீ&lt;/a&gt;&lt;br /&gt;&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/2445a347-269b-4d08-a64e-b5207bd36ebd&amp;amp;theName=thaalelo_jayashree&amp;amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf" width="328" height="94"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table style="font-family: Verdana,Arial,Helvetica,sans-serif; padding-left: 2px; color: rgb(255, 255, 255); text-decoration: none; font-size: 10px; font-weight: bold;" cellpadding="2"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;amp;objectid=2445a347-269b-4d08-a64e-b5207bd36ebd"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/doc/2445a347-269b-4d08-a64e-b5207bd36ebd/thaalelo_jayashree/?widget=flash_player_esnips_blue"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color: rgb(255, 102, 0); text-decoration: none;" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;amp;cid=player_dna&amp;amp;url=/socialdna"&gt;   eSnips Social DNA    &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;small&gt;Mannupugazh - பெருமாள் திருமொழி (Divya prabhandam)&lt;br /&gt;Lyrics: Kulasekhara aazhwar ;Singer: Bombay Jayashree (Album: Vatsalyam); Raga : Nilambari&lt;/small&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மும்மூர்த்திகளில் ஒருவராம் பக்த தியாகராஜரின் கீர்த்தனைகளில், அந்த யதுகுல, ராகவ ராமன், ராஜா ராமன், கோசலை ராமன் அழகிலே மயங்கி, அவனுடைய குணாதிசியங்களை எல்லாம் சொல்லி சொல்லி, பாடி பாடி மகிழ்ந்து, ராமா, நீயே எனக்கு எல்லாம் எனக் கதறி, ராமா ! என்னை இகலோக பந்தங்களில் இருந்து விடுவித்து மோக்ஷமதை தா என பிரலாபிக்கும், கண்ணீர் வடிக்கும் நிலை ஸர்வகுண ஸம்பன்ன ப்ரதீக உபாசனையின் ப்ரத்யக்ஷ உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமா ! நீயே சர்வ குண ஸம்பன்ன தாரி. நீ வா என்று அழைக்கும் பக்த தியாகராஜர் அவர்களைப்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;div class="youtube-video"&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ewuDPmisl3U?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;br /&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;br /&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ewuDPmisl3U?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;                         &lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;[Let all be attentive. Oh Ramachandra,please come. Oh Rama the repository of all virtues,please enter. ] &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே பாடலை&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;&lt;a target="_blank" href="http://www.youtube.com/watch?v=QN916bEvRng"&gt; பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் குரலில் கேட்க &lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே&lt;br /&gt;ரகுநாதாய நாதாயா சீதாயா பதயே நமஹா&lt;/span&gt;&lt;br /&gt;என்று சொல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயத்தில் இந்த நிர்குண சம்ப்ரதாய கபீர் ராம பக்தியில் திளைத்தவர் , என்று சொல்லும்போது அந்த நிர்குண நிராகார சத், சித், ஆனந்த ஸ்வரூபியாக உள்ள பரபிரும்மத்தையே ஹரி எனவும் ராமன் எனவும் குறிப்பிடுகிறார் எனக்கொள்ளுதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;என்ன சொன்னாலும், சகுண பிரும்ம உபாசனையானாலும், நிர்குணமான இறை தத்துவமாக இருந்தாலும் சரி, ராம என்று ஒரு முறை சொல்லிவிட்டாலும் போதும் பாபங்கள் எல்லாமே நீங்கிவிடும் என்று இருவருமே சொல்கிறார்கள்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கபீரைப் பொறுத்தவரை, ராம் என்பது ஒரு இறைவனது பேரொளியில் அடைக்கலமாய்,  தன்னை  மறந்து , "தன்னை " இழந்து,அந்த பிரும்மனில் சான்னித்யம் அடைந்து,   தானும் அந்த பிரும்மனும் ஒன்றே எனத் தெளிந்த அத்வைத நிலை. தத்துவம்.  ஆயினும் இறைவனை அடைய அவர் சென்ற வழி, மார்க்கம், பக்தி மார்க்கம்.  ராஜ  யோகம், ஞான யோகம், கர்ம யோகம் யாவையும் விடுத்து,பக்தி மார்க்கத்தைக் கடைப் பிடித்து ஒழுகியவர் கபீர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பக்தி திராவிட உபஜை, லாயே ராமனந்த்.&lt;br /&gt;பர்கத் கியா கபீர் நே , சப்த தீப் நவ காண்ட்&lt;/span&gt;&lt;br /&gt;என சொல்லப்படும் உக்தி படி,&lt;br /&gt;&lt;br /&gt;கபீர் தனது குருவின் உபதேசம் " ராம் " எனப்பெற்று, அதைப் போற்றி தமது தத்துவத்தை, நாரத பக்தி எனும் பெயர் சூட்டி, அதன் அடிப்படை தத்துவமே எல்லா ஜீவ ராசிகளிடம் அன்பு பூண்டு இருப்பதே இறைவனை அடையும் ஒரே வழி என தமது தோஹாக்கள் வழியே சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை ப்ரேம ஸ்வரூபி ஆகவும், அன்பின்  வடிவாகவும் கண்டு, அன்பின் வழியேதான் அந்த ராமனை அடைவது எளிதான வழி எனவும்  சொல்கிறார். அந்த காலத்திய பக்தி மார்க்கங்களுக்கு அப்பாற்பட்ட வழி நாரத  பக்தி எனச் சொல்லப்பட்டது.&lt;br /&gt;(&lt;span style="font-size:85%;"&gt;# நாரத பக்தி பற்றிய விவரமான குறிப்பு கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது&lt;/span&gt;#)&lt;br /&gt;&lt;br /&gt;அவரது ஹரி, அவரது ராம் நிர்குண, நிராகார, அத்விதீய, அத்வைத இறைவன் மாயா ரஹித பிரும்மன் ஆவான். உலக வாழ்க்கையில்,  லெளகீக ரீதியில் நமக்கெல்லாம் பரிச்சயமான , பிரதீக உபாசனை படி,  அந்த  பிரும்மதிற்கு ஒரு உருவத்தைக் கொடுத்து, அக்கடவுளை பிரதிஷ்டை செய்து, பூஜை  முடிந்தவுடன் அவனை யதா ஸ்தானம் அனுப்பும் பக்தி மார்க்கம் அல்ல அவருடையது.  சுருக்கமாக சொல்லப்போனால், அவரது ஹரி, அவரது ராமன்,  மாயா ரஹித பிரும்மன்.  ஒரு புரிதலுக்குச் சொல்லபோனால், அது கிட்டத்தட்ட இது போல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;உருவாய் அருவாய் உளதாய் இலதாய்&lt;br /&gt;மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்&lt;br /&gt;கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்&lt;br /&gt;குருவாய் வருவாய் அருள்வாய் குகனே&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், கபீருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பஹன் பூஜை ஹரி மிலை,&lt;br /&gt;தொ மை பூஞ்சும் பஹாட்&lt;/span&gt; என்பவர் கபீர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வழி தனி வழி. ராமா ராமா என உருகினாலும் அவரது ராமன் நிர்குணம், நிராகாரம், ஸர்வ வ்யாபி,ஸர்வ ப்ரேமி.&lt;br /&gt;நம்முடைய பாரம்பரிய வழக்கம் உருவ வழிபாடு.&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;உருவ வழியே அருவத்திற்குச் செல்ல நமது யோக மார்க்கங்கள் வழி காட்டுகின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தியானத்தின் வழியாக, இறைவனை அடையச்சொல்வது ராஜ யோகம். ராஜ யோகத்திலே, யமம், நியமம் என்று தொடங்கி ஆசனம், பிராணாயாமம் ,பிரத்யாஹர்ரம், தாரண, த்யானம், சமாதி என  எட்டு நிலைகள் புரிந்துகொள்வதற்கே  முடியவில்லையே ? இதை சாதனை செய்வது எங்கனம் ?&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி . யோகங்களைப் படிப்போம் என்றால், ஹட யோகம், லய யோகம், மந்திர யோகம், ராஜ யோகம். ஹட யோகத்திலே ஹ என்றால் ஞானம்.  ட என்றால் ஆனந்தம். ஹட யோகத்தில் குண்டலினி ஷக்தி யை உசிப்பி விடவேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மஹா குண்டலினி சக்திதான் மஹா பிரளயித்திலும் இருக்கிறதாம். மூலாதார சக்கிரத்தில் ஒரு முக்கோணம் வடிவத்தில் இந்த குண்டலினி ஒரு பாம்பு போல் மூனரை அடிக்கு சுருட்டி படுத்து கொண்டு இருக்கிறதாம். இதை எழ வைக்க வேண்டுமாம்.( யோவ் ! பயமா இருக்கிறதையா !!)&lt;br /&gt;&lt;br /&gt;இது போல் ஸ்வாதிஷ்டான சக்ரம், மணி பூரக சக்ரம், அனஹத் சக்ரம், விஷுத்த சக்ரம், ஆங்கயா சக்கிரம், பிரம்மா ரங்கரா சக்கிரம், ( தலை சக்கிரம் போல் சுழல் கிறதே அய்யா !!  இந்த காலத்தில்  இதுவெல்லாம் புரிந்துகொள்ள முடியுமா ?  அதற்கு எனக்கு நேரம் கிடையாதே !! )&lt;br /&gt;&lt;br /&gt;இதுவெல்லாம் போதாது என்று எனது நண்பர் வேங்கட ராமன் சாஸ்திரம் படித்தவர் அவ்வப்பொழுது,  ஈடா, பிங்களா, சுஷும்னா நாடிகளைப் பற்றி தெளிவாகச் சொல்கிறேன் என்று குழப்புவார். (என்னை விட்டுடுங்க சார் !!)&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப  கபீர் சொல்லுவார்:&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;[ab mohin raam baroso thera, aur kown kaa karown nihor&lt;/span&gt;]&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;ஹரியை நம்பி அவனை நினை, அது போதும். இந்த கலி யுகத்திலே நாம ஜபம் செஞ்சாலே போதும்.&lt;/span&gt;&lt;br /&gt;(அப்பாடா !  ஆளை விடுடா !)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, யோகா மார்க்கம், ராஜ மார்க்கம், கர்ம மார்க்கம் எனும் மற்ற மார்கங்களை&lt;br /&gt;எல்லாம் விடுத்து, ராமனுஜரின் சீடராம் கபீர் பக்தி மார்க்கத்தின்  நுழைவாயிலை, ராமனது ஸ்மரணையின் மகத்துவத்தை, ராம நாம உச்சாடனத்தை,  கபீர் எடுத்துரைத்தது பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் பக்தி மார்கமே சிறந்தது எனச்சொல்லும் கபீர் பக்தி மார்கத்தில் ராம நாம ஸ்மரணைதனை எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் எளிது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;कबीर् कहता जात है, सुणता है सब् कोइ&lt;br /&gt;राम् कहे भला होइगा, नहि तर् भला न होइ&lt;/span&gt; ||&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;कबीर् कहै मै कथि गया, कथि गया ब्रम् महेश्&lt;br /&gt;राम् नाव् ततसार् है, सब् काहू उपदेस&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா தத்வங்களின் ஸாரமும் ராம நாமம் தான். இதை&lt;br /&gt;நான் சொல்லவில்லை, பிரும்மாவும் சிவனும் இதே தான் சொல்கிறார். பிரம்மனும் மஹேஸ்வரனும் போற்றும் ராம நாம உச்சாடனைத்தை அதன் மகிமையை கபீர் எடுத்துக்காட்டியதை &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அடுத்த இடுகையில் காண்போம்&lt;/span&gt;.&lt;br /&gt;----------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;நாரத பக்தி சூத்திரத்தை ஒட்டியக் குறிப்புகளும் கபீரின் பாடல்களில் உண்டு என்பதைப் பற்றிய சுப்புரத்தினம் ஐயா அனுப்பியுள்ள  இன்னொரு குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;May I add &lt;b&gt;naradha bhakthi&lt;/b&gt; as the contemporaries of Kabir called the same  included at least eleven formats that were usual amongst the &lt;b&gt;saguna upasaka  krama &lt;/b&gt;also.&lt;br /&gt;&lt;br /&gt;This would be evident from the ஆஸக்திகள் (aasakthis) detailed  below:&lt;br /&gt;&lt;br /&gt;1. குண மஹாத்மிய சக்தி [guna mahathmiyamasakthi ]&lt;br /&gt;  &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;Govyandha gun gaayiye&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;     thathai bhayee param nirdhan&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. ரூப சக்திrupasakthi&lt;br /&gt;  &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;loot chooti khelai  vikaraal, ananth kala natvar gopal&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. பூஜா சக்தி poojasakthi&lt;br /&gt;  &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;jehi pooja man  bhaavai, sow poojanahaar na jaanai.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. ஸ்மரண சக்தி smaranasakthi.&lt;br /&gt;  &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;kahai kabeer  jogee aru kangam ai sab jhooti aasa&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;    guru prasaadi rahi chathrig jyun  nihachai bhagathi nivaasaa&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. தாஸ்ய சக்தி Dasyasakthi&lt;br /&gt;  &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; kahai kabeer sevom  bhanvaari&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;6. சக்ய சக்திsakyasakthi&lt;br /&gt;  ( nil )&lt;br /&gt;7. காந்த சக்தி kaanthasakthi.&lt;br /&gt; &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; hari  mera priya main raam hi bhahuriya&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. வாத்ஸல்ய சக்தி vatsalyasakthi&lt;br /&gt;  &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;hari mera piv ,  main raam kee bhahuriyaa&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9.  தன்மய சக்தி thanmayasakthi&lt;br /&gt;   &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;virahin piya  paavai nagin, jiyaraa thalpai maayi&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;     kai virahin ke meech dhai, kai aapaa  dhikalaayi&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. பரவிரஹ சக்தி  para virahasakthi&lt;br /&gt;   &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;bhahuth thinan ko johathee, bhat  thumhaari raam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;     jiv tharasai thuj milan koon mani naahin vishraam.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11. ஆத்ம நிவேதன சக்தி   aathmanivedhanaasakthi&lt;br /&gt;   &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;maagho main aisaa aparaadhee, theri bhagathi heth  nahin saadhi. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The inclusion of all these sakthis in his poetry does  in no way indicate that kabir has astrayed away from his main Nirguna Sampradaya.  These scholars say indicate to the extent kabir was influenced  or 'taught' by his guru Ramanandh or the scholars of his age.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------&lt;br /&gt;வானிலை அறிக்கை : அடுத்த சில நாட்களுக்கு (அருள்) மழை தொடரும் :)))&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-3320321971002000669?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/3320321971002000669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=3320321971002000669' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/3320321971002000669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/3320321971002000669'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2010/12/6.html' title='சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-3798593763511188943</id><published>2010-12-06T13:26:00.016+05:30</published><updated>2010-12-11T08:47:49.166+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இராமலிங்க அடிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறப்புப் பதிவு'/><title type='text'>சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5</title><content type='html'>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;small&gt;&lt;small&gt;ஆசிரியர் அறிமுகம்&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;br /&gt;கபீரின்  கனிமொழிகள் வலைப்பக்கத்தின் முதல் வாசகர் இவர். அதாவது ஒரு தொடர் வாசகராக  தன்னை பின்னூட்டங்கள் மூலம் காட்டிக்கொள்ள முன் வந்த முதல் வலைப்பதிவர்.  அது மட்டுமல்லாமல் தமது வலைப்பூவில் விரும்பிப் படிக்கும் வலைப்பூக்கள்  பட்டியலில் இணைத்தும் அவ்வப்போது தமது இடுகைகளில் மேற்கோள் கொடுத்தும்  பலருக்கு இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தியவர். ஆன்மீகத்திலும் இசையிலும்  அளவு கடந்த ஆர்வம் உள்ளவர்.  &lt;a target="_blank" href="http://jeevagv.blogspot.com/2006/12/2.html"&gt;ரமணரின் ஆத்மபோதத்தையும்&lt;/a&gt;  &lt;a target="_blank" href="http://arull.wordpress.com/2010/07/21/gitachapter15"&gt;கீதையின் சாரத்தையும்&lt;/a&gt;  மிகவும் சிரத்தையாக விளக்கியவர். அருமையான  தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக  இசைப்பாடல்களை  எழுத்துருவுடன்  இவருடைய வலைப்பக்கங்களில் கேட்டு  ரசிக்கலாம்.  &lt;a target="_blank" href="http://jeevagv.blogspot.com/2008/12/blog-post_9620.html"&gt;மார்கழி இசை உற்சவத்தை&lt;/a&gt; தம் பதிவுகளிலே இணைப்பு கொடுத்து இசையைக் கொண்டாடுபவர். ஆரம்ப காலங்களில் அவரே ”டாப் டென்” திரைப்படப் பாடல்களையும் &lt;a target="_blank" href="http://jeevagv.blogspot.com/2006/01/2005.html"&gt;சில வருடங்கள்&lt;/a&gt; தொகுத்து வந்தார்.  தமிழ் ஆர்வம் மிகுந்து வெண்பா எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய வாசகம் &lt;b&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; “&lt;strike&gt;என்&lt;/strike&gt; வாசகம்”.&lt;/span&gt;&lt;/b&gt; இதைத் தவிர &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;b&gt;அருள்&lt;/b&gt;&lt;/span&gt; என்னும் வலைப்பூவிலும், &lt;b&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இசை இன்பம்&lt;/span&gt;&lt;/b&gt; என்ற வலைப்பக்கத்திலும் தன் எழுத்துப் பணியை நடத்திவருகிறார்.&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/small&gt;&lt;br /&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஜீவா வெங்கடராமனை&lt;/span&gt;&lt;/b&gt; அறியாத சீனியர் பதிவர்கள் இருக்க முடியாது&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/small&gt;. &lt;small&gt;&lt;small&gt;&lt;small&gt;அவர்  ஊட்டம் ஊட்டி வளர்த்த வலைப்பூவில் அவரே பங்கேற்க வந்திருப்பது மட்டில்லா  மகிழ்ச்சி தருகிறது. கபீரை பற்றி அவர் எழுதுவது இது முதல்முறை அல்ல.  ஏற்கனவே கபீருடையக் கவிதைகள் பற்றி மூன்று நான்கு இடுகைகள்  &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;‘&lt;strike&gt;என்&lt;/strike&gt; வாசகத்திலும்&lt;/span&gt;’ (&lt;i&gt; &lt;a target="_blank" href="http://jeevagv.blogspot.com/2006/12/blog-post_25.html"&gt;மன ஊஞ்சல்,&lt;/a&gt;  &lt;a target="_blank" href="http://jeevagv.blogspot.com/2008/10/blog-post_11.html"&gt;இவ்வுலகம்&lt;/a&gt;&lt;/i&gt; ), &lt;/small&gt;&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;small&gt;’&lt;a target="_blank" href="http://arull.wordpress.com/2007/01/30/%e0%ae%95%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/"&gt;அருள்&lt;/a&gt;’ &lt;/small&gt;&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;small&gt;&lt;small&gt;&lt;small&gt;  வலைப்பூவிலும் வெளியாகியுள்ளன. எனவே அவருக்கு கபீரும் புதியவர் அல்லர்.  இம்முறை கபீர்தாஸாரின் மூன்று பாடல்களை எடுத்துக் கொண்டு நமக்காக அழகாக  தொகுத்து வழங்கி இருக்கிறார்.&lt;br /&gt;அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகவே இருக்கும். சுருங்கக் கூறின் இந்த வலைப்பூ அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இனி ஜீவா ...&lt;/span&gt;&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;-----------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;க&lt;/span&gt;பீரின் கனிவான கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.&lt;br /&gt;எளிமையானவை. இரசிக்கத் தக்கவை. அவற்றுக்கு விரிவுரையோ, விளக்கங்களோ தேவையில்லை. இடராமல் ஓடி வரும் தெளிந்த சிற்றோடை.&lt;br /&gt;பொதிந்த கருத்துக்களை அள்ளித் தரும் வற்றா அருள் ஓடை.&lt;br /&gt;"இது தான் என் மதம்! இப்படித்தான் இருக்க வேண்டும்!" போன்ற தடைக்கற்களை  தாண்டிய நீரோடை.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கவிதைகளில் இருந்து எனக்குப் பிடித்த வரிகளின் தமிழாக்கம்.&lt;br /&gt;---------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;. "பழந்துணி வெளுத்த குரு"&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சீடன் என்பவன் பழந்துணி போல,&lt;br /&gt;குரு அத்துணியினை வெளுப்பவர்.&lt;br /&gt;தியானம் என்னும் கல்லில் அடித்து அவர்&lt;br /&gt;துவைக்கையில் துலங்குது என் சொரூபம்;&lt;br /&gt;அஞ்ஞான அப்பழுக்குகள் அகன்றன முழுவதும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;&lt;br /&gt;பதிலுக்குப் பெற்றேன் ஞானம்.&lt;br /&gt;மேலும், அன்பும், மகிழ்ச்சியும்,&lt;br /&gt;கருணையும், பக்தியும், நம்பிக்கையும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;தனது குருவை மனிதனாய்ப் பார்ப்பவன் குருடன்;&lt;br /&gt;தன் வாழ்நாள் முழுதும் அவன் மகிழ்ச்சி அடையான்;&lt;br /&gt;இறந்தபின்னும் அவன் இருளிலேயே இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;கபீரா, குருடராய் இருக்கும் சீடர்களால்&lt;br /&gt;குருவினை இறைவனாய்க் காண இயலுவதில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்கு கோபம் ஏற்பட்டால்&lt;br /&gt;அதைத்தணிக்க குருவால் இயலும்.&lt;br /&gt;அக்குருவிற்கே கோபம் ஏற்பட்டால்&lt;br /&gt;யாரால் என்ன செய்ய இயலும்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;கு&lt;/span&gt;ருவின் பெருமையும், குருவருளின் இன்றியமையாமையும் இக்கவிதையில் தெளிவாகிறது.&lt;br /&gt;குரு-சீடன், என்றவுடன் நமக்கு இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாமல் இருக்க இயலுமா! மேற்சொன்ன கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். அந்த அளவிற்குப் பொருத்தம். அவர்களது வரலாற்று வரிகளை &lt;a href="http://jeevagv.blogspot.com/2008/08/3.html"&gt;முன்னம்&lt;/a&gt; படித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;b&gt;2. "மலர்வது காய்க்கத்தான்"&lt;/b&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;என்னுள் ஒளிரும் நிலவை என் குருட்டுக் கண்கள் அறியா.&lt;br /&gt;அந்நிலவும் பகலவனும் கூட என்னுள்ளேயே இருந்தும்.&lt;br /&gt;என்னுள் ஒலிக்கும் ஓங்காரத்தை என் செவிட்டுச் செவிகளும் கேளா.&lt;br /&gt;&lt;br /&gt;"நான், எனது" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்?&lt;br /&gt;எப்போது "நான், எனது" என்னும் ஓசைகள் ஒடுங்குகிறதோ&lt;br /&gt;அப்போது இறைவனின் வேலைகளும் ஓய்ந்துவிடும்.&lt;br /&gt;ஏனெனில் இறைவனின் வேலையே நமக்கு&lt;br /&gt;ஞானம் பெற்றுத் தருவதுதான்.&lt;br /&gt;ஞானம் வந்தபின் நம்மிடம் அவனுக்கு வேலையுமில்லை.&lt;br /&gt;மலர் மலர்வது காய்க்கத்தான்.&lt;br /&gt;காய்த்த பின் மலர் சருகாவதுபோல்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;[ &lt;em&gt;இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு &lt;/em&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.poetry-chaikhana.com/K/Kabir/6moonshinesi.htm"&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;em&gt; பார்க்கவும்&lt;/em&gt;.&lt;/span&gt; ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;இ&lt;/span&gt;க்கவிதையை முடித்த விதம் உங்களையும் ஏதோ செய்தால் அதற்கு கபீர் தான் பொறுப்பாவார்!&lt;br /&gt;"நான் ஏன் நாத்திகன்?" என்பதற்கு எத்தனை எத்தனையோ காரணங்களைச் சொல்லிடலாம்.&lt;br /&gt;ஆனால் ஆத்திகனாவதற்கு, இயற்கையைத் தவிரை வேறெதைச் சொல்வது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மலர்வது காய்க்கத்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மனம் மலர்வது,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அவனைக் காணத்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பெனும் நாரெடுத்து அதில் மனமெனும் மலர் கொண்டு தொடுத்த மாலையும் மணம் வீசும்.&lt;br /&gt;சுடர்கொடி கோதை சூடிக்கொடுத்த மாலை போலே.&lt;br /&gt;இயற்கை என்பார் சிலர்.&lt;br /&gt;இறைவனின் வேலை என்பார் சிலர்.&lt;br /&gt;இரண்டும் வேறில்லை என்பார் இன்னும் சிலர்! :-)&lt;br /&gt;------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;3. "எப்படிச் சொல்வேன்?"&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எப்படி அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவேன்?&lt;br /&gt;இறைவன் - இப்படி, அப்படியென எப்படிச் சொல்வேன்?&lt;br /&gt;அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,&lt;br /&gt;இப்பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவு.&lt;br /&gt;அவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுலகத்திற்கும் வெளியுலகத்திற்கும் இடையே&lt;br /&gt;வேறுபாடுகளில்லாமல் 'ஒன்றென'ச் செய்பவன் அவன்.&lt;br /&gt;அவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.&lt;br /&gt;அவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.&lt;br /&gt;என்ன பார்க்கிறீர்கள்?&lt;br /&gt;அவனை முழுதாக உரைக்க வார்த்தைகளும் இல்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;[இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு&lt;/span&gt;&lt;/em&gt; &lt;a href="http://www.poemhunter.com/poem/poem-4-o-how-may-i-ever-express-that-secret-word/"&gt;இங்கே&lt;/a&gt; &lt;em&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பார்க்கவும்.&lt;/span&gt;&lt;/em&gt; ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;உ&lt;/span&gt;ள்ளதெல்லாமிலும் உறைபவன், உள்ளையும் புறத்தையும் ஒன்றெனச் செய்பவன்.&lt;br /&gt;ஒன்றென உறைபவன். ஒன்றென்றில் வேறில்லை. ஓம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் யாரென வெளிப்படுத்தும் அழகான கவிதை.&lt;br /&gt;மேலோட்டமாக படித்துப் பார்த்தால் - ஈதென்ன, இதில் இயலாமை தானே இருக்கிறது எனலாம்.&lt;br /&gt;இறைவன் வெளிப்படுத்தக்கூடாத இரகசியமோ, வெளிப்படுத்த இயலாத இரகசியமோ இல்லை.&lt;br /&gt;ஆனால் அகத்தைச் சுற்றி புறம் எ&lt;strong style="font-weight: normal;"&gt;ழு&lt;/strong&gt;ப்பிய சுவர்களால் மறைக்கப்பட்ட இரகசியம்.&lt;br /&gt;அச்சுவர் இருக்கும் வரை அகத்தால் அனுபவிக்கப்படுவது இரகசியமாக பெரும்பாலும் இருப்பதால் மட்டுமே அது இரகசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அன்பால் மட்டுமே அச்சுவரினை  இடித்து இறைவனை இவனேயென இன்புற்றிட இயலும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கபீரைப் போன்ற மகான்கள், ஞானியர், பக்தியில் கரை கண்டவர் எனப்பலர், அவர்கள் கண்ட ஆனந்தத்தை இதுபோன்ற கவிதைகளிலும், பாடல்களிலும், கதைகளிலும், உபதேசங்களிலும் உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார்கள்.  உதாரணத்திற்கு  பள்ளிப் பருவத்தில் படித்த &lt;a href="http://jeevagv.blogspot.com/2007/11/blog-post_10.html"&gt;வள்ளலாரின் பாடல்&lt;/a&gt; அப்படியே கபீரின் கருத்துகளை பிரதிபலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எங்கும் மனிதர் உனைத்தேடி&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;br /&gt;     இரவும் பகலும் அலைகின்றார்.&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;br /&gt;எங்கும் உளது உன் உருவம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;br /&gt;     எனினும் குருடர் காண்பாரோ?&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;br /&gt;எங்கும் எழுவது உன் குரலே&lt;/span&gt;&lt;br /&gt;    &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எனினும் செவிடர் கேட்பாரோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எங்கும் என்றும் எவ்வுயிரும்&lt;/span&gt;&lt;br /&gt;     &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;எல்லாம் ஆன இறையவனே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்டோர் போன பாதையை மறந்து போகலாமா?&lt;br /&gt;அவர்கள் கண்ட ஆனந்தம் என்றென்றும் நிலை பெற்றிருப்பது.&lt;br /&gt;தில்லைக்கூத்தன் எப்போதும் அம்பலம் என்னும் ஆனந்த வெளியில் தாண்டவம் ஆடுவதை ஒத்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;" xmlns="http://www.w3.org/1999/xhtml"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்&lt;br /&gt;நிலவு உலாவிய நீர்மலி வேணியன்&lt;br /&gt;அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்&lt;br /&gt;மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-&lt;span style="font-size:85%;"&gt;பெரியபுராணம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;பல அலுவல்களுக்கிடையேயும்  நேரம் ஒதுக்கி  ஒரு சிறப்பான பதிவை வழங்கிய ஜீவா வெங்கடராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://jeevagv.blogspot.com/2008/12/blog-post.html"&gt;கண்ணன் காட்டும் கரும யோகம்&lt;/a&gt; என்கிற இடுகை ஒன்றில் அவர் இறுதியாக சொல்லியிருக்கும் வரிகள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt;பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt; பிரசாதம் என்றே பலனை நினைத்தால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt; வருமோ இடரும்? கருமம் புரிகையில்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt; நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(153, 0, 0);"&gt; தானடை சிக்கெனத் தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு அருமையான பிரசாதமாக கபீரின் மூன்று பாடல்களை அளித்து இடுகையின் பலனை  அற்புதமாக பூர்த்தி செய்திருக்கிறார். இப்படியே அவருடைய எழுத்துப் பணி  மேன்மேலும் நல்லமுறையில் தொடரட்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துவோம்.&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-3798593763511188943?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/3798593763511188943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=3798593763511188943' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/3798593763511188943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/3798593763511188943'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2010/12/5.html' title='சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-5247752518231606254</id><published>2010-11-25T22:10:00.007+05:30</published><updated>2010-11-26T06:31:36.517+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிவாஜ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூரத்குமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யோகிராம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்'/><title type='text'>சிறப்பு இடுகை -விருந்தினர் படைப்பு -4</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;ஆசிரியர் அறிமுகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;இந்த இடுகைக்காக அறிமுகம் செய்யப்படும்  ஆசிரியரின் ஆன்மீக ஈடுபாட்டை அவருடன் தொலைபேசி மூலம்  உரையாடித் தெரிந்து கொண்டிருக்கிறேனேத் தவிர எழுத்து மூலம் அல்ல. தன்னை ஒரு  வாசகனாக அறிமுகப் படுத்திக் கொள்ளவே அவர் விழைவார், எழுத்தாளராக அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;பலவேறு வகையான ஆன்மீகப் பயிற்சிகளில் ஆர்வமுடன் அவர் ஈடுபடுகிறார்.  தியான முறைகள், கீதைப் பயிற்சி, சத்சங்கங்கள்  என அவருடைய ஈடுபாடு  தொடர்கிறது. குறிப்பாக நாமசெபத்தின் மகிமையில் அவருக்குள்ள ஈடுபாட்டை  இந்த  வலைப்பூவின் பின்னூட்டங்கள் வழியாகவே அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் பெயருடன் ஸ்ரீ யோகிராம் சூரத்குமாரை  இணைத்துக் கொண்டுள்ள திரு பாலசந்தர் அவர்களே இந்த இடுகைக்கான  குறிப்புகளையும் கட்டுரையையும் கொடுத்து உதவியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;YRSK BALU  என்றால்தான் பல பதிவர்களுக்கும் புரியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு தம்  குரு மீதுள்ள பக்தியை இக்கட்டுரையைப் படித்தாலே புரிந்து  விடும். ஆம்,  இந்தக் கட்டுரை யோகிராம் சூரத்குமாரை மையமாகவே வைத்து  பின்னப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைக்கான அழைப்பைத்  தயங்காமல் முன் வந்து ஏற்று  சமீபகாலம் வரையில்  நம்மிடையே வாழ்ந்த ஒரு மகானைப் பற்றி அறிய தந்தமைக்கு  அவருக்கு வாசகர்கள்  சார்பாக நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இனி பாலசந்திரன் அவர்களது கட்டுரை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அய்யன் விரும்பும் பிச்சைக்காரன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;திருவண்ணாமலையில் தேரடி மண்டபத்திலோ புன்னை மரத்தடியிலோ தனது அய்யனின் விருப்பப்படி யோகிராம் சூரத்குமார் காலம் கழித்த வருடங்கள் அவை. பெரும் தமிழ் அறிஞர்களான கி.வா.ஜகன்னாதன், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பெரியசாமி தூரன் போன்றவர்கள் அடிக்கடி அவரை சந்தித்து சத்சங்கம் நடத்திய காலம். ஞானானந்த கிரி அவர்களின் தபோவனத்திலிருந்து சிவராமகிருஷ்ண ஐயர் என்பவரும்  அவ்வப்போது பங்கு பெறுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகத்தின் சிகரங்களான தபோவன ஞானானந்த கிரி சுவாமிகளிடமும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மஹாசுவாமிகளுடனும் தனிப்பட்ட முறையில் யோகிராம் ஆழமான தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் இருவரிடமும் பெரும் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில அன்பர்கள் மயிலாடுதுறை அருகிலுள்ள வனகிரி என்ற ஊருக்கு மஹாப் பெரியவரின் சொற்பொழிவைக் கேட்பதற்காக புறப்பட்ட பொழுது யோகிராமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். மண்டபத்தில் பெரியவர் தரிசனம் நன்கு கிடைக்கும் வகையில் ஒரு தூண் அருகே அமர்ந்திருந்தார். அன்றைய சொற்பொழிவில் பெரியவர் அந்தர்முகம் (உள்முகம்) கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கொண்டிருந்தார். இடையே யோகிராம் பக்கம் கையைக் காட்டி “ஒரு நல்ல உதாரணம், இதோ இங்கேயே ஒரு அந்தர் முகி” என்று குறிப்பிட்டார். உடனே கூட்டம் யோகிராம் சூரத்குமாரை சூழ்ந்து கொள்ளத் தொடங்கியது. அதை பெரியவரே அன்புடன் தடுத்து யோகியருக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகிராம் சூரத்குமார் ஒரு சரித்திரப் பட்டதாரி. ஆங்கிலம் நன்கு அறிந்த ’பிச்சைக்காரர்’. அவர் வடநாட்டவர் என்றறிந்த சில ஹிந்தி எதிர்ப்பு விஷமிகள் அவருக்கு விடாமல் தொந்தரவு கொடுத்தனர். பைத்தியம் என்று அடித்து துன்புறுத்தினர். அவரது ஆடைகளை கிழித்து வேடிக்கை பார்த்தனர். பதிமூன்றுமுறை அவர் தங்கியிருந்த வீட்டுப்பூட்டு உடைக்கப்பட்டது. அவரை கொலை செய்யவும் முயற்சி நடந்தது. இவை எதுவுமே அவரை பாதிக்கவில்லை. யாரிடமும் கோபம் பாராட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் ஞானிகள் தமக்கு சமமாக அவரை மதித்துப் போற்றினர். மறுபக்கம் அஞ்ஞானிகள் அவருக்கு தீங்கிழைக்க அஞ்சவில்லை. &lt;a href="http://kabeeran.blogspot.com/2007/01/blog-post.html"&gt;கபீர்தாஸரின் ஈரடி ஒன்று&lt;/a&gt; அவருடைய நிலமையை பொருத்தமாக எடுத்துக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஞானியை ஞானி காணில் பெரும்ஞான ரசக்கொண் டாட்டம்&lt;br /&gt;ஞானியோடு அஞ்ஞானியோ பாழும் சிரநோவுத் திண்டாட்டம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரத்குமார் அவர்களுக்கு துன்பம் இழைக்கப்பட்ட காலத்தில் இருபெரும் தவசிகளும் தத்தம் வழியில் யோகியாருக்கு பக்கபலமாக இருந்ததாக அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி ராம்சூரத்குமார் சில வேளைகளில் திருக்கோவிலூர் தபோவனத்திற்கு விஜயம் செய்வதுண்டு. ஸ்ரீ ஞானானந்தகிரியும் யோகியாரும் அவ்வப்போது செய்த பல புதிரான நிகழ்வுகளை- ஞானரசக் கொண்டாட்டத்தை- அவர்களுடைய பழங்கால அடியார்கள் சந்தோஷமாக நினைவு கூர்வதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாங்கூர் ஸ்ரீ நாமானந்த கிரி சுவாமிஜி சொல்லிய ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை கூடியிருந்த பக்தர்களிடம் ”கபீரை தரிசிக்க விருப்பமா ?”என்று ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் கேட்டாராம்&lt;br /&gt;&lt;br /&gt;யாவரும் ஸ்ரீ ஞானனந்தகிரியையே ஆவலுடன் என்ன சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்த்த வேளையில் யோகி ராம்சூரத்குமாரை சுட்டிக்காட்டி “ &lt;b&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இவர்தாம் அப்போது கபீர் இப்போது யோகி ராம்சூரத்குமார்”&lt;/span&gt;&lt;/b&gt; என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானானந்த கிரி சுவாமிகள் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கபீரைப் போலவே ராம்சூரத்குமாரும் கங்கை கரையில் பிறந்து வளர்ந்தவர். கபீரைப் போலவே இளமையிலேயே ஆன்மதாகத்தில் பல குருக்களிடம் ஞானத்தைத் தேடியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கபீருக்கு ராமானந்தர் குரு, யோகியரின் குருவோ ராமதாஸர். அவர் பெற்ற உபதேச மந்திரமும் ராம நாமம் இவருக்கு கிடைத்த மந்திரமும் ராமநாமம்.&lt;br /&gt;&lt;br /&gt;கபீரைப் போலவே எந்த மதத்தினரும் தம்மவர் என்று யோகியர் மேல் உரிமை கொண்டாட இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;காவி உடை இல்லை நெற்றியில் மத சின்னங்கள் எதுவும் இல்லை. அழுக்கு உடையுடன்  திரிந்த அருள் வேந்தன் அவர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_scbM4BSuz8w/TO6R4Myn8sI/AAAAAAAAAVw/3iQmv3cw_BU/s1600/yrsk.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 260px;" src="http://4.bp.blogspot.com/_scbM4BSuz8w/TO6R4Myn8sI/AAAAAAAAAVw/3iQmv3cw_BU/s400/yrsk.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543528586031919810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; color: rgb(51, 51, 255);"&gt;தலையிலோர் பாகை உள்ளான்,&lt;br /&gt;தாடி உளான், கையிலோர்&lt;br /&gt;அலைவுறுமோர் விசிறிஉளான்&lt;br /&gt;அங்கையிலோர் ஓடெடுப்பான்&lt;br /&gt;நிலையுள்ள இன்பத்தை&lt;br /&gt;நித்தம் அனுபவிக்கும்&lt;br /&gt;கலையாளன் ராம்சுரத்&lt;br /&gt;குமாரனை நீர்காண்மினரோ&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);font-size:85%;" &gt; (கி.வா.ஜகன்னாதன்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பேட்ரிக் என்ற பெயருடைய கராத்தே மாஸ்டர் யோகியரை சந்தித்தபோது  அவருக்கு பேட்ரிக் என்ற பெயரில் வெளி நாட்டில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய விவரமெல்லாம் தெரிவித்தார்.  சந்திப்புக்குப் பின்னர் யோகியரின் அருள் நோக்கில் ஏசு பிரானையே கண்டதாகப் பேட்ரிக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கள்,கிருத்துவர்கள்,முகமதியர்கள் போன்ற எல்லா மதத்தினரும் வந்து  அவரிடம் அருளாசி பெற்றுச் சென்றனர். இதிலிருந்து கபீரைப் போலவே கடவுள் மதங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பதை உணர்த்த வாழ்ந்து காட்டியவர் என்பதும் புலனாகிறது.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;( T பொன்.காமராஜன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பக்தர் ஒருவர், பலருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் வெதும்பி இப்பேற்பட்ட துன்பங்கள் எதற்காக என்று தனிமையில் பகவானிடம் வினவினார். அவரை ஆழ்ந்து நோக்கிய பகவான் வாசலில் மிதியடியாகப் போடப்பட்டிருந்த சாக்குப் பையை சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;”போ! அதில் உள்ளதைப் படித்துப்பார்”&lt;br /&gt;தன் கேள்விக்கும் அவருடைய செய்கைக்கும்  தொடர்பு புரியாது மிதியடி அருகே சென்று அதைப் படித்தார். படித்ததும் அவர் முகம் புரிந்துகொண்டது போல் நகை முகம் ஆனது. ”ஓ இது தானா! ஒருவர் படும் கஷ்டத்தால் மன அழுக்குகள் களையப்பட்டு தூய்மையானவர்களாகி மனதிடம் பெறுகிறார்கள்”   என்று  ஏற்றுக் கொண்டார்&lt;br /&gt;&lt;br /&gt;அதில் இருந்த வாசகம்&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;“ கல்,குருணை நீக்கிய நெ.1 திடம் அரிசி &lt;/span&gt;“&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகத்தில் பல படிகள் இருக்குமே என்ற எண்ணத்தில் ஒரு மேற்கத்தியர், அவதாரம், முனிவர் மற்றும் சாது இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்னவென்று  யோகியரிடம் கேட்டார்.  பகவான் தனக்கே உரிய எளிமையுடனும் அதே நேரம் முடிவுடனும் “ இந்தப் பிச்சைக்காரனுக்கு அதெல்லாம் தெரியாது. ஒன்று மட்டும் தெரியும், தன் உடலையே தான் என்று நினைத்திருக்கும் வரையில் அவன் இதில் எதுவாகவும் முடியாது. இந்த உடல் தானில்லை என்று உணர்ந்ததும் அவற்றில் வித்தியாசம் கிடையாது”&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து அவர் தேக உணர்வை முற்றிலும் கடந்து விட்டிருந்த  ஒரு முழு யோகி என்பதை அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிருத்துவமிஷினரிகளை சேர்ந்த சிலர் பகவானிடம் “ கிருத்துவர்களாகிய நாங்கள்  மனிதகுலத்திற்கு சேவை செய்கிறோம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்களை நிறுவி உதவுகிறோம். ஆனால் உங்களைப் போன்றோர் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறீர்களே (ஏன்) ? என்று வினவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பகவான் சொன்னது, ”சூரியன் மருத்துவமனைகளைக் கட்டுகிறானா ? பள்ளிகளை நடத்துகிறானா? அனாதை இல்லங்களை&lt;br /&gt;நிர்மாணிக்கிறானா? ஆனால் சூரியன் இருப்பதனால்தானே இவையெல்லாம் நடைபறுகிறது? யோகி என்பவன் சூரியனைப் போன்றவன்”.&lt;br /&gt;&lt;br /&gt;யார் மூலம் எவ்வகையான காரியங்கள் முடிக்கப்படவேண்டும் என்றுணர்ந்து அவர்களுக்கு அந்த ஆற்றலை அளிக்க வல்லவர்கள் யோகிகள். யோகி சூரத்குமார் “&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;என் அய்யன் விரும்புவதால்”&lt;/span&gt; என்று அடிக்கடி சொன்னதன் மூலம் இறைவனின் கருவியாக தன்னை வைத்துக் கொண்டு செயலாற்றினார் என்பது புரிகிறது. ஞானானந்த கிரி சுவாமிகள் கபீர் என்று குறிப்பிட்டதற்கு ஏற்ப கபீரின் வரிகளை வாழ்ந்து காட்டியவர் யோகிராம் சூரத்குமார் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;தான்செய்து நடப்பன இல்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ&lt;br /&gt;தான்செய்து நடப்பது போலக் காண்பீர், செய்விப்ப வனவன் யாரோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு யோகிக்கு ”அய்யனின் ஆணை”யை புரிந்து கொள்ளும் சக்தி இருக்கலாம். ஆனால் சாமானியர்கள் நிலையென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு விடையாக பகவான் யோகி ராம்சூரத்குமார் ஒரு அருமையான கதை சொல்லுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரக் கரையோரத்தில் இரு தித்திபப் பறவைகள் இருந்தன. முட்டையிட்டு இரை தேடச் சென்ற போது கடல் அலைகள் முட்டைகளை இழுத்துச் சென்று விட்டன. திரும்பி வந்த தித்திபப் பட்சிகளுக்கு ஒரே வருத்தம். கடலின் மீது ஒரே கோபம். கடலைப் பார்த்து முட்டைகளைத் திருப்பித் தா என்று கேட்டால் கடல் அலட்சியப்படுத்தி விட்டது. ”இந்தக் கடலை வற்றச் செய்து முட்டைகளை திரும்பப் பெறுவோம்” என்று தீர்மானித்த பறவைகள் தம் அலகுகளினால் நீரை கரையில் வாரி இறைத்தன. பல மணி நேரங்கள் முயற்சி நீடித்தது. அந்தப்பக்கம் வந்தப் பெரியவர் ” இது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவைகளின் குறிக்கோளைக் கேட்டவர் “இது நடக்கக் கூடிய காரியமா ?”என கேலி செய்தார். பறவைகளோ சற்றும் மனம் தளராமல் “உங்களுக்கு அதில் என்ன சந்தேகம்? கடல் நீரைக் கட்டாயம் வற்றச் செய்து முட்டைகளை மீட்போம்” என உறுதியுடன் கூறின. அவைகளின் உறுதியையும் விடாமுயற்சியையும் கண்டு அந்தப் பெரியவர் தன் தெய்வீகக் கரங்களை கடலில் விட்டு முட்டைகளை மீட்டுத் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பகவான் இந்தக் கதையை மிகுந்த நெகிழ்வும் அன்பும் மிளிரக் கூறி “விடா முயற்சியும் தளரா மன உறுதியும் கொண்டு செய்யும் முயற்சிகள் இறையருளை ஈர்க்கும் சக்திஉடையவை என்று கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடாமுயற்சிக்குத் தேவை வைராக்கியம். அதனுடன் இலக்கை அடையவேண்டும் என்ற தணியாத தாகம், தீராப் பசி அல்லது வெறி அவசியம் இருக்க வேண்டும். நமது லட்சியத்தில் நேர்மை இருந்தால் அது இறையன்பை நம்பால் கொண்டுவர முடியும். இது இருந்தால் நம் சாதனை எளிதாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நினைவுறுத்தும் கபீரின் ஈரடி &lt;a target="_blank" href="http://kabeeran.blogspot.com/2007/09/blog-post_09.html"&gt;( பாரதி எதிரொலிக்கும் கபீர் )&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;கூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து&lt;/span&gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயப்படுதல்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;small&gt;கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே  மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை  அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம்  ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை  என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.&lt;/small&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தளரா மனம் உள்ளவர்களின் முயற்சிக்கு இறைவன் கரங்களும் விரைந்து உதவிக்கு வரும் என்று நமக்கெல்லாம் நம்பிக்கை தரும் வகையில்  தித்திப பறவைகளின் கதை மூலம் அவன் அருளை புரிய வைக்கிறார் இருபதாம் நூற்றாண்டு கபீரான ஸ்ரீ யோகிராம் சூரத்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் ஒன்றாம் தேதி யோகிராம் சூரத்குமார் அவர்களின் ஜன்ம ஜெயந்தி. அவருடைய அருள் வாசகர்கள் அனைவருக்கும் பூரணமாய் கிட்டட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஓம் ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்.&lt;/span&gt;&lt;br /&gt;கலிமலம் தீர்க்குமே, சதா செபிப்பீர் ராம நாமமே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;திண்மையும் பாவமும் சிதைந்துத் தேயுமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சென்மமு மரணமு மின்றித் தீருமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இம்மையே ராமா வென்றிரண் டெழுத்தினால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;small&gt;(கம்பராமாயணம்)&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் கபீரைப் பற்றி பல அரிய தகவல்களை மிகுந்த விருப்பத்துடன் வாசகர்கள் அனைவர்களுடனும் பகிர்ந்து கொண்ட திரு YRSK Balu அவர்களுக்கு மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு குருஅருள் நிறைந்து விளங்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;/small&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-5247752518231606254?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/5247752518231606254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=5247752518231606254' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5247752518231606254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5247752518231606254'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2010/11/4.html' title='சிறப்பு இடுகை -விருந்தினர் படைப்பு -4'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_scbM4BSuz8w/TO6R4Myn8sI/AAAAAAAAAVw/3iQmv3cw_BU/s72-c/yrsk.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-7360498107454623781</id><published>2010-11-14T19:09:00.013+05:30</published><updated>2010-11-15T09:19:53.893+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜலாலுதீன் ரூமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறப்புப் பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாயுமானவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணிக்கவாசகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்'/><title type='text'>சிறப்பு இடுகை- விருந்தினர் படைப்பு -3</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆசிரியர் அறிமுகம்&lt;/span&gt; :&lt;/span&gt;&lt;/span&gt;&lt;i&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், விவரிக்கிறோம், தெரிந்து கொள்ள முயல்கிறோம்!&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;ஆனால்  கோடிக்கணக்கான வார்த்தைகள், நூற்றுக் கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம், அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக்  கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி "எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது?"&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;என்பதுதான்!வெளியே தேடுவதை விட,தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி"&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;என்கிறார் ஸ்ரீ அரவிந்தஅன்னை!&lt;/span&gt;&lt;/i&gt;&lt;i&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; &lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே காணும் உபதேசத்தின் முதல் பகுதியை சென்ற பதிவில் கவிநயா அவர்கள் தமது இடுகையில் கூறிய பயனற்ற ஏட்டுக்கல்வி என்கிற மையக்கருத்தில் கண்டோம். மேற்கண்ட ஸ்ரீ அன்னையின் வாசகங்களையே தமது வலைப்பூவின் மையக்கருத்தாக வைத்திருக்கும் இந்த ஆசிரியரின் வலைப்பூவின் பெயரே சற்று வினோதமாக இருந்தது, &lt;a target="_blank" href="http://consenttobenothing.blogspot.com/"&gt;Consent to be.... nothing&lt;/a&gt;. (&lt;span style="font-size:85%;"&gt;நான் புரிந்து கொண்டது “willing to be a zero” -தானொரு பூஜ்யம்&lt;/span&gt;). இது மட்டுமல்லாமல் &lt;a target="_blank" href="http://suvasikkapporenga.blogspot.com/"&gt;(சு)வாசிக்கப் போறேங்க&lt;/a&gt; என்கிற வலைப்பக்கத்தில் படித்ததில் பிடித்தது என்னும் வகையில் தம் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது வலைப்பூவை ஒரு காலிப் பாத்திரமாக சித்தரித்துக் கொள்ளும் இவர் அப்பாத்திரத்தினின்று படைக்கும் அமுது பல்சுவையானது. ஆரம்பத்தில் அரவிந்தருக்கும் ஸ்ரீ அன்னைக்கும் மட்டுமேயான  ஒருவலைப்பூ என நான் நினைத்திருந்த போது அது  &lt;a target="_blank" href="http://consenttobenothing.blogspot.com/2010/10/blog-post_28.html"&gt;ஆன்மீகம்&lt;/a&gt;, &lt;a target="_blank" href="http://consenttobenothing.blogspot.com/2010/09/current-news-in-brief-and-comments.html"&gt;அரசியல்&lt;/a&gt;, &lt;a target="_blank" href="http://suvasikkapporenga.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D"&gt;மனித வளம்,&lt;/a&gt; &lt;a target="_blank" href="http://consenttobenothing.blogspot.com/2010/09/teachers-day-another-meaningless-ritual.html"&gt;கல்வி&lt;/a&gt;, &lt;a href="http://suvasikkapporenga.blogspot.com/2010/08/failure-is-okay.html"&gt;சுய முன்னேற்றம்&lt;/a&gt;, &lt;a target="_blank" href="http://consenttobenothing.blogspot.com/2010/09/bait-for-fish-and-pope-benedict.html"&gt;விளம்பரத்துறை&lt;/a&gt; என பல பரிமாணங்களில் மலர்ந்த போது ஆசிரியருடைய உற்சாகத்தைக் கண்டு வியக்கிறேன். அவருடைய வெளிப்படையான விமரிசனங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் என்னை அவரது வலைப்பூக்களின் தொடர் வாசகனாக வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நேரம் நீங்களே ஊகித்து இருப்பீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வேறு யாருமல்ல, பெருமளவு பதிவர்களுக்கு நன்கு அறிமுகமான &lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி&lt;/span&gt; அவர்களே இந்த சிறப்பு இடுகையை அளிக்க முன்வந்துள்ள விருந்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நம்அழைப்பை ஏற்று கபீரைக் குறித்து எழுதுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கபீரைப் பற்றிய இந்த இடுகையிலும் ஸ்ரீ அன்னைக் குறிப்பிடும் “கணநேர அனுபவ”த்தின் அருமையையும் கபீரின் பெருநோக்கையும் சுட்டிக்காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி திரு கிருஷ்ணமூர்த்தி பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;தெரியாதவனையும் தேடி வந்த கபீரின் கனிமொழிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் இருக்கின்றானா - மனிதன் கேட்கிறான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அவன் இருந்தால் உலகத்திலே எங்கே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;வாழ்கிறான்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நான் ஆத்திகனானேன் -அவன் வசப்படவில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நான் நாத்திகனானேன் அவன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பயப்படவில்லை! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட  நாட்களுக்கு முன்னால் ’அவன் பித்தனா’ என்ற படத்தில் டி.எம்   சௌந்தரராஜன்-சுசீலா இருவரும் இணைந்து பாடிய ஒரு அருமையான பாடல், இப்போது   ஒரு கேள்வியாக எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்வியை   எனக்குள் எழுப்பியது எனக்கு கபீரன்பன் அவர்கள் அனுப்பிய ஒரு மின்னஞ்சல்!&lt;br /&gt;&lt;br /&gt;கபீரின்  கனிமொழிகள் வலைப்பக்கத்தில் நூறு இடுகைகளை நிறைவடைந்ததை ஒட்டி சில  சிறப்புப் பதிவுகளை அதன் வாசக-பதிவர்களைக் கொண்டு வெளியிடும் தன்  உத்தேசத்தைத் தெரிவித்து அதற்கு என்னிடமிருந்தும் ஒரு கட்டுரை  வேண்டியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1965 களில் உணர்ச்சிகளைக் கிளறி விட்டு ஹிந்தி  எதிர்ப்பு என்று நடந்த கண்மூடித் தனமான போராட்டத்தில் ஈடுபாடுகொண்டு,  ஹிந்தியைப் படிப்பதைத் தவிர்த்தவன் நான். இன்றைக்கும்  எனக்கிருக்கும் ஒரே  வருத்தம், இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த மகான்களைப் பற்றி, குறிப்பாக  மீராபாய், கபீர் தாசர், துளசிதாசர், சைதன்ய மஹாப்ரபு போன்ற வட இந்தியாவில்  பிறந்த வாழ்ந்த மகான்களைப் பற்றிய நேரடியான பரிச்சயம், இந்த மொழி  வெறுப்பினால் கைகூடாமல் போய்விட்டதே என்பது தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்,  பொருளாதாரம், மேலாண்மை, நிர்வாகம் என்று எதை எதையோ தொட்டு எழுதத்  தெரிந்த,  எல்லாம் தெரிந்த  ஏகாம்பரமாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிற  என்னைப்  போய், ஒரு மகானைப் பற்றி எழுது, அவரைப் பற்றி உனக்குத்  தெரிந்ததைப் பகிர்ந்துகொள் என்று கேட்டால், எதுவும் தெரியாத நான்  என்னவென்று எழுதுவேன்? எப்படி எழுதுவேன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு   கவிஞனின் வார்த்தைகளில் வெளிப்படுகிற உணர்ச்சிகள் எதுவாக இருந்தாலும்  சரி,  அதை மொழி பெயர்ப்பில் அப்படியே கொண்டு வருவது என்பது மிகவும்  சிரமம்.  அதுவே ஒரு உன்னதமான மெய்ஞானத்தைப் போதிப்பதாக   இருந்தால்.........!&lt;br /&gt;&lt;br /&gt;முஹமது ஜலாலுதீன்  ரூமியின் சூஃபி  கவிதைகளை, நெருடல் எதுவுமில்லாமல்   &lt;a href="http://suvasikkapporenga.blogspot.com/2010/10/blog-post_30.html"&gt;மொழிபெயர்த்திருந்த எனக்கு ஒரு பாடல்&lt;/a&gt; நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;big&gt;&lt;big&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நீ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/big&gt;&lt;/big&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size:small;"&gt;உயிராய்ப்  பூமியில் தோன்றிய தருணமே&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;br /&gt;ஏறிவருவாய் என!&lt;br /&gt;&lt;i&gt;மண்ணிலிருந்து தாவரமானாய்!&lt;br /&gt;தாவர நிலையே மிருகமும் ஆனது.&lt;br /&gt;அதன்பின் மனிதனுமானாய்.&lt;br /&gt;அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்&lt;br /&gt;கூடவே வந்தது உனக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் பிறந்த உடலைப்பார்!&lt;br /&gt;எப்படி முழுமையாய் ஆனதென்று!&lt;br /&gt;மரணம் குறித்தேன்  பயம் கொள்ள வேண்டும்?&lt;br /&gt;மரணம்  உன்னைக் குறுக்கியதா?&lt;br /&gt;உடல்நிலை கடந்தே போகும் போது&lt;br /&gt;தேவதை  ஆவாய் ஐயமில்லை!&lt;br /&gt;தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;அங்கேயே தேங்கிவிடாதே தேவர்களுக்கும் மூப்புண்டு&lt;br /&gt;தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்&lt;br /&gt;பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்&lt;br /&gt;சிறுதுளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!&lt;br /&gt;சிறுதுளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!&lt;br /&gt;பெருங்கடல் கூட, சிறுதுளியாய் ஆனதைப்பார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-size:85%;" &gt;&lt;span&gt;(ஜலாலுதீன் முகமது ரூமி !) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனேகமாக  எல்லா விஷயங்களையுமே தேடிப் படிப்பதால், ஒரு வாசகனாக, பல விஷயங்களையும்    அனுபவித்து, அதில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளைப் பதிந்து கொண்ட    வகையில் எழுதியவை இவை. மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்பதற்காக    செய்ததில்லை இது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை இணையத்தில், தேடிப் படித்துக்   கொண்டிருக்கும் தருணங்களில்  ஆங்கிலத்தில் கிடைத்தவை. அவைகளை ஆர்வத்தோடு   கவனித்து வருகிறேன்.  ரூமியின்  கவிதை எவ்வளவு தூரம் சிவபுராணத்தின்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்&lt;br /&gt;பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்&lt;br /&gt;கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்&lt;br /&gt;வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்&lt;br /&gt;செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்&lt;br /&gt;எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt;  என்கிற வரிகளோடு  ஒத்துப் போகிறது என்பதை  பார்க்கும் போது ஒன்று  புரிகிறது.  தேசங்கள், மொழிகள், காலங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும்,  மெய்ஞானிகள்   அத்தனை பேருக்கும் ஒரே ஆன்மீகத் தேடல் தான், ஒரே ஆன்மீக  உண்மைதான்   வெளிப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து அதிசயித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அப்படிப்பட்ட  தேடல்  நமக்குள்ளும் நிகழவேண்டும் என்பதற்காகவே இந்தமாதிரி ஒப்புமை,   சிந்தனைகளை  இறைவன் நமக்களிக்கிறான் என்பதையும்  புரிந்து கொண்டு, அந்தக்   கண நேரத்து  வெளிச்சக் கீற்றையும் அனுபவித்திருக்கிறேன். ஒரு சராசரி,    ஆசாபாசங்களுக்குட்பட்ட மனிதனாக, இருப்பதில் இருந்து உயரவேண்டும் என்ற    வேட்கையை இந்தமாதிரிக் கணநேர வெளிச்சக் கீற்றுக்கள் தான் தீர்மானிக்கின்றன   இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கபீரின் ஈரடி கொண்ட  பாடல்களை, தோஹே என்று சொல்கிறார்கள், தமிழில் மிக எளிமையாக மொழிபெயர்த்து  வருகிற  இந்த வலைத் தளத்தில் தான்,  ஹிந்தி மொழியை அறியாத நான், கபீர்தாசர்  என்ற  மகாத்மாவின் பாடல்களை ஜீவனுடன் தமிழிலேயே பரிச்சயம் செய்துகொள்ள   ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கருவூரார் சன்னதியில் என்றைக்கோ பார்த்த வாசகங்கள்,  "குரு அருளே திருவருள்!" என்பதாக நினைவுக்கு வர, மணிவாசகப் பெருமானது   வார்த்தைகள் "அவனருளாலே அவன் தாள் வணங்கும்"  நுட்பத்தைச் சொல்லாமல்   சொல்லின. குருவருளாகக் கிடைத்தாலொழிய இறை அனுபவத்தைப் பேசுவதோ,  வார்த்தைகளில் சொல்ல முனைவதோ கைகூடாது என்பதும் நன்றாகவே உறைத்த அந்தத்  தருணம்....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நன்றறியேன்  தீதறியேன் நான்என்று  நின்றவன்ஆர்&lt;br /&gt;என்றறியேன்  நான்ஏழை என்னே  பராபரமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று  தாயுமானவர் பராபரக் கண்ணியில் கசிந்துருகியதை நினைத்துக் கொண்டு,  என்னுடைய  ஏலாமையைக் கபீரன்பனிடம் இன்னொரு மின்னஞ்சலில் தெரிவித்தபோது,   கபீரின் பாடல் ஒன்றை அவரே தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜலாலுதீன்  ரூமியின் பாடலுக்கும் மணிவாசகப் பெருமானுக்கும் நாம் காணும் ஒற்றுமையின்  ஒளிக்கீற்று  கபீரின் இந்தப் பாடலில் பட்டப் பகலென ஒளி விடுகிறது. வெறும்  கண்மூடித்தனமான பழக்க வழக்கங்கள் இறைக்காட்சியை கொடுக்க முடியாது என்பதை  இருமதத்தினருக்கும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடவுள்  ஹிந்துவமல்ல முஸ்லீமும் அல்ல. அவன் வசிப்பது தெற்கிலோ மேற்கிலோ அல்ல.   இடைவிடாத சிந்தனையின் மூலம் தன்னுள்ளே உணரப்படும் ஒரு அரிய பேருணர்வே  என்பதை இந்தப் பாடல் மூலம் கபீர் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;अलहु एकु मसीति बसतु है अवरु मुलखु किसु केरा ॥&lt;/span&gt;&lt;br /&gt;If the Lord Allah lives only in the mosque, then to whom does the rest of the world belong?&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:85%;" &gt;மசூதியில் மட்டுமே அல்லா வாழ்ந்தால் இவ்வுலகம் யாருக்குச் சொந்தம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;हिन्दू मूरित नाम निवासी दुह मिह ततु न हेरा ॥१॥&lt;/span&gt;&lt;br /&gt;According to the Hindus, the Lord's Name abides in the idol, but there is no truth in either of these claims.&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:85%;" &gt;மூர்த்தத்தில் இருப்பவன் இறைவன்  எனும் ஹிந்துவும் சரியல்ல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;अलह राम जीवउ तेरे नाई ॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;O Allah, O Raam, I live by Your Name.&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:85%;" &gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அல்லா! ராமா!! உம் பெயரில் வாழ்பவன் நான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;तू किर िमहरामित साई ॥१॥ &lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:85%;" &gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;Please show mercy to me, O Master.&lt;/span&gt;&lt;/span&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:85%;" &gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கருணை பொழிவாய் ஓ தலைவனே !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;दखन देसि हरी का बासा पिछिम अलह मुकामा ॥&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;The God of the Hindus lives in the southern lands, and the God of &lt;span style="color: rgb(102, 102, 102);"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="font-size:85%;"&gt;the Muslims lives in the  west.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:85%;" &gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;தெற்கில் வசிப்பதோ ஹிந்துவின் கடவுள், இசுலாமியர்தம் கடவுளோ மேற்கே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;कहतु कबीरु सुनहु नर दिल् मिह खोजि &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span  lang="JA" style="font-family:ArialUnicodeMS;"&gt;&lt;span  lang="JA" style="font-family:ArialUnicodeMS;"&gt;&lt;span  lang="JA" style="font-family:ArialUnicodeMS;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;दिलै दिल खोजहु एही ठउर मुकामा ॥२॥&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;So search in your heart - look  deep in to your heart of hearts: this is the home and the place where God lives. &lt;span style="color: rgb(0, 0, 255);font-size:85%;" &gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இதயத்தில் தேடு, உள்ளே ஆழ்ந்து தேடின் அதுவே இறைவன் வாழும் இல்லம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:100%;" &gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span  lang="JA" style="font-family:ArialUnicodeMS;"&gt;&lt;span  lang="JA" style="font-family:ArialUnicodeMS;"&gt;&lt;span  lang="JA" style="font-family:ArialUnicodeMS;"&gt;बर्हमन िगआस करिह  चउबीसा काजी मह रमजाना ॥&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;The Brahmins observe twenty-four fasts &lt;span style="color: rgb(51, 51, 51);font-size:85%;" &gt;during the year, and the Muslims fast during the&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);font-size:85%;" &gt;&lt;span style="font-family:Arial;"&gt; &lt;/span&gt;month of Ramadaan.&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);font-size:85%;" &gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அந்தணர் நோன்பு இருபத்திநாலு மணியாம், இசுலாமியருக்கோ அது ரமதான் மாதம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:ArialUnicodeMS;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;गिआरह मास पास कै  &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-family:ArialUnicodeMS;"  lang="JA"&gt;&lt;span  lang="JA" style="font-family:ArialUnicodeMS;"&gt;&lt;span style=";font-family:ArialUnicodeMS;font-size:85%;"  lang="JA" &gt;राखे एकै मािह िनधाना ॥३&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;|&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;The Muslims set aside eleven months, &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);font-size:85%;" &gt;and claim that the treasure is only in the one&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;month.&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 255);font-size:85%;" &gt;||3||&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);font-size:85%;" &gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பதினோரு மாதம் விட்டு எஞ்சிய ஒரு மாதமே இறைபுகழாம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style=";font-family:Arial;font-size:85%;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;कहा उडीसे मजनु कीआ &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span  lang="JA" style="font-family:ArialUnicodeMS;"&gt;&lt;span  lang="JA" style="font-family:ArialUnicodeMS;"&gt;&lt;span style=";font-family:ArialUnicodeMS;font-size:85%;"  lang="JA" &gt;िकआ मसीति सिरु नांएं ॥&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;What is the use of bathing at Orissa? &lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Why do the Muslims bow their heads in the&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="font-size:85%;"&gt; mosque?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:85%;" &gt;ஒரிஸ்ஸாவில் தீர்த்த நீராடல் எதற்கு ? மசூதியில் தலை வணங்குவதும் எதற்கு&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);font-size:85%;" &gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:100%;" &gt;दिल मिह कपटु िनवाज  गुजारै किआ हज काबै जांएं ॥४॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;If someone has deception in his heart, what good is it for him to utter&lt;br /&gt;prayers? And what good is it for him to go on pilgrimage to Mecca? ||4||&lt;/span&gt;&lt;br /&gt;கபடம் மண்டிய மனதில், பிரார்த்தனையின் பயனும் என்ன?  ஹஜ் பயணமும் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:100%;" &gt;एते अउरत मरदा साजे ए सभ रूप तुम्हारे ॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;You fashioned all these men and women, Lord. All these are Your Forms.&lt;/span&gt;&lt;br /&gt;தேவனே, உன் விருப்பில் வந்தனர் ஆடவரும் பெண்டிரும்; யாவரும் உன் வடிவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="font-size:100%;"&gt;कबीरु पूंगरा राम अलह का सभ गुर पीर हमारे&lt;/span&gt; ॥५॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;Kabeer is the child of God, Allah, Raam. All the Gurus and prophets are mine. ||5||&lt;/span&gt;&lt;br /&gt;இறைவனின் குழந்தை கபீரன், அல்லா, ராம், குரு யாவரும் என்னவரே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:100%;" &gt;नरवै परहु एक की सरना ॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;Says Kabeer, listen, O men and women: seek the Sanctuary of the One.&lt;/span&gt;&lt;br /&gt;கபீர் உரைப்பேன், தஞ்சம் அடைவீர் , மாந்தரே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;केवल नामु जपहु रे पर्ानी तब ही निहचै तरना ॥६॥२॥&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;Chant the Naam, the Name of the Lord, O mortals, and you shall surely be carried across.&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);font-size:85%;" &gt;&lt;br /&gt;செபித்திடுவீர்  அவன் நாமம், அக்கரை சேர்வதும் நிச்சயமே.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட இதே கருத்து அமைந்த இன்னொரு கபீரின் பாடலை, திரு ஜீவா வெங்கட்ராமன் தனது அருள் என்ற வலைப்பதிவில் மூன்றே முக்கால் ஆண்டுகளுக்கு  முன்னாலேயே  &lt;a href="http://arull.wordpress.com/2007/01/30/%e0%ae%95%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/"&gt;தமிழில் மொழி பெயர்த்து&lt;/a&gt;ப் போட்டிருப்பதையும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்னை எங்கே தேடுகிறாய்” என்று இறைவன் கேட்பது போல் அமைந்த அந்த பாடலின் ஒலி-ஒளி வடிவம் யூட்யூப் தளத்திலிருந்து இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="youtube-video"&gt;&lt;object width="400" height="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/VrguJTi40iY?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/VrguJTi40iY?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="400" height="320"&gt;&lt;/embed&gt;                   &lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;[ஸ்ரீ அன்னை சொன்ன&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;i&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; ”..வெளியே தேடுவதை விட,தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி"&lt;/span&gt;&lt;/i&gt;  என்ற கருத்தையே  இந்தப் பாடலில் கபீரும் வலியுறுத்தியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது - கபீரன்பன் ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கபீர்  தாசர் தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, தன்னுடைய  மறைவுக்குப் பின்னால்  கூட ஒரு குறுகிய மத அடையாளம் தன்மேல் சுமத்துவதை  விரும்பியதில்லை என்பதுமே  ஒரு சுவாரசியமான கதையாகச் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இருக்கும்போதும் ஹிந்து முஸ்லிம்&lt;br /&gt;சர்ச்சை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறந்தபோதும் கபீரைத் தொடர்ந்து வந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அவரவர் மத வழக்கப்படிதான்&lt;br /&gt;அடக்கமோ எரிப்பதோ என்று&lt;br /&gt;இருதரப்பும் கோபத்துடன் குரலெழுப்பிக்&lt;br /&gt;கொண்டிருந்த தருணம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கபீர் எழுந்தார்! இருதரப்புக்கும் சொன்னார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;"என் சடலத்தைத் தூக்குங்கள்!"&lt;br /&gt;சீடரும் அவ்வாறே தூக்கினர்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சடலம் இருந்த இடம்&lt;br /&gt;முழுக்க மலர்கள்! மணம் வீசும்  மலர்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இருகூறாய்ப் பிரித்துக் கொண்டு இருதரப்பும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இருவிதமாய் கபீரை&lt;br /&gt;அடக்கம் செய்தனர் என்றே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;செவிவழிச் செய்தியைக் கதையொன்று சொல்லும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;மேன்மக்கள் அமைதியை,&lt;br /&gt;சமத்துவத்தைச் சுமந்து வந்தபோதிலும்&lt;br /&gt;கீழ்மையில் இழிந்த மாந்தர்&lt;br /&gt;அவரை வைத்து&lt;br /&gt;அடித்துக் கொள்வதற்கான&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;காரணத்தைத் தான் தேடி நிற்பார்!&lt;br /&gt;பூரணமாய் நின்ற பொருள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கண்ணெதிரே தோன்றிடினும்&lt;br /&gt;கிஞ்சித்தும் அதைக் காணார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஹிந்துவென்றும் முசல்மான் என்றும்&lt;br /&gt;கபீர் தன்னைச் சொன்னதில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஹிந்துதானென்று ஒருதரப்பு, இல்லை இல்லை&lt;br /&gt;சூஃ பி தான் என்றொரு தரப்பும்&lt;br /&gt;மாறி மாறி வம்புதான் செய்திருக்கக்&lt;br /&gt;கபீரின் கனிமொழியைக் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கண்டுணரக் காலம் கனிந்து வரவேணும்!&lt;br /&gt;மொழிகடந்த மெய்ஞானம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(51, 51, 255);"&gt;கபீரின் கனிமொழிகள் &lt;/b&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;தளத்தில்&lt;br /&gt;தமிழில் பெருகிவர&lt;br /&gt;உள்வாங்கும் திறம் வேண்டும்!&lt;br /&gt;குருவருள் குறையின்றி இப்பணியை நடத்தட்டும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;கபீரின் கனிமொழியைத்&lt;br /&gt;தமிழில் தந்ததற்கு நன்றியுடன் வணங்குகிறோம்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;வாரம் மூன்று நான்கு இடுகைகளை பலவிதமான தலைப்புகளில் இடும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது கட்டுரையுடன் அனுப்பி வைத்த குறிப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;“....இப்படி ஒரு சாக்கை வைத்தாவது, கபீரின் மொழிகளைத் தொடர்ந்து சிந்திக்கிற வாய்ப்பு  எனக்கும் கிடைத்திருக்கிறதே என்பதில் மிகவும் சந்தோஷம்”&lt;br /&gt;&lt;/span&gt;என்று எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷம் அவரது மட்டுமல்ல, வாசகர்கள் அனைவரதும் ஆகும் என்று கூறி நமக்காக நேரம் ஒதுக்கியதற்கு அவருக்கு நன்றி. அவரது ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த எழுத்துக்கள் அதிக அளவில் வாசகர்களை அடையட்டும் என்று வாழ்த்தி நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-7360498107454623781?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/7360498107454623781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=7360498107454623781' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/7360498107454623781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/7360498107454623781'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2010/11/3.html' title='சிறப்பு இடுகை- விருந்தினர் படைப்பு -3'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-7556764655250622052</id><published>2010-11-02T11:11:00.014+05:30</published><updated>2010-11-02T19:32:55.553+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வள்ளுவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இராமகிருஷ்ணர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்'/><title type='text'>சிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2</title><content type='html'>&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;ஆசிரியர் அறிமுகம் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும்,  நம் வாசகர்களுக்கு, இப்பதிவின் ஆசிரியர் யாரென்று புரிந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதாயினி. அதனால் கவி அவர் பெயரில் உண்டு. அபிநயமும் வெகுவாகப் பிடித்திருப்பதால் அதையும் 'நய'மாகத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கவிநயா &lt;/span&gt;என்ற பெயரில் அழகிய கவிதைகளையும், சிறுகதைகளையும், எண்ண ஓட்டங்களையும் தனது &lt;a style="font-weight: bold;" href="http://kavinaya.blogspot.com/"&gt;நினைவின் விளிம்பில்&lt;/a&gt; என்கிற வலைப்பூவில் பகிர்ந்து வரும் இவரது வாசகர் வட்டம் பெரியது.   ஒரு &lt;a href="http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_30.html"&gt;காற்றுக்குமிழ்&lt;/a&gt; பற்றிய அவருடைய வரிகள் அவருடைய கவி உள்ளத்தைப் படம் பிடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் குழந்தைகளுக்கானக் கவிதைகள் கூட எழுத வல்லவர்தான் என்பதை அவருடைய &lt;a href="http://kavinaya.blogspot.com/2009/02/blog-post_22.html"&gt;ஆனைப்பாரு&lt;/a&gt;           &lt;a href="http://kavinaya.blogspot.com/2009/06/blog-post.html"&gt;பட்டாம்பூச்சி &lt;/a&gt;போன்ற கவிதைகளைப் படித்தாலேத் தெரியும்.  இரண்டு பாடல்களிலிருந்தும் சில மாதிரி ’நம்பிக்கைத் தரும்’ வரிகள் இங்கே :&lt;br /&gt;.....&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;ஆனை யோட பலத்தைப் பாரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;தும்பிக் கையில் இருக்கு பாரு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;நீயும் கொஞ்சம் உள்ளே பாரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;நம்பிக் கையில் தெரியும் பாரு!!&lt;/span&gt;&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;சிறகை விரித்து ஒருநாள் பறந்தது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;நாளை உலகை இன்றே தரலாம்!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை மனம் உடையவர்களால்தான் குழந்தைகளுக்காகப் பாடமுடியும் என்று எப்போதோ படித்த நினைவு. "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கவிநயா அவர்கள் நம் அழைப்பை ஏற்று கட்டுரை ஒன்றை வழங்கி இருப்பது பெருமகிழ்வு  தருகிறது. அவருக்கு வணக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;இனி கவிநயா அவர்களின் எழுத்து வண்ணம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);font-size:130%;" &gt;கற்றதனால் ஆய பயன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு சாது இருந்தாராம். பல வருடங்களாகச் சாதனை செய்ததில், அவருக்கு ஒரு அற்புதமான சித்தி கிடைத்ததாம். அதாவது, அவரால் தண்ணீரின் மேல் அநாயாசமாக நடக்க முடியுமாம். அதைப் பற்றி அவருக்கு ஏகப் பெருமையாம்.&lt;br /&gt;ஒரு நாள் இவர் கங்கைக் கரையில் காத்துக் கொண்டிருந்த இன்னொரு சாதுவைப் பார்த்தாராம். “என்ன இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.&lt;br /&gt;அவரும், “கரையைக் கடக்க வேண்டும். படகுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நம் சாது, “ப்பூ… இவ்வளவுதானா? நானாக இருந்தால் நடந்தே கடந்திருப்பேனே” என்றாராம், மகாப் பெருமையுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா!” என்று ஆச்சர்யப்பட்ட அந்த இன்னொரு சாது, “இந்த சித்தியைப் பெற உங்களுக்கு எத்தனை காலம் ஆயிற்று?” என்று கேட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;“சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயிற்று” என்று பதிலிறுத்தாராம் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;“இதனால் என்ன பயன் ஏற்பட்டது? உங்களால் இறைவனை அறிய முடிந்ததா? &lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;காலணா மிச்சம் பண்ணுவதற்காக, பாதி வாழ்நாளை வீணடித்து விட்டீர்களே.”&lt;/span&gt; என்று சொல்லி விட்டுப் போனாராம் மற்றவர்.&lt;p&gt;&lt;/p&gt;எல்லோருக்கும் தெரிந்த கதைதான். விவரங்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கக் கூடும், இருந்தாலும் கதை சொல்ல வரும் கருத்தை மட்டுமே மனதில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;இறைவனை அறிவதே பிறவியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைய உதவாத எதுவும் பயனற்றதே.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து மகான்களுமே வலியுறுத்தும் கருத்து, இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீராமகிருஷ்ணரும் அடிக்கடி இதைப் பற்றி பேசியிருக்கிறார். நாம் இந்த உலகத்திற்கு எதற்காக வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரு மாந்தோப்பிற்கு மாம்பழம் சாப்பிடவெனப் போகிறோம். அங்கே போனதும் வந்த வேலையைக் கவனிக்காமல், அந்தத் தோப்பில் எத்தனை மரம், மரத்தில் எத்தனை கிளை, கிளையில் எத்தனை இலை, மரத்தில் எத்தனை பழம், இப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தோப்பின் சிறப்பு தெரியும்; ஆனால் அதனால் மாம்பழத்தின் ருசி எப்படித் தெரியும் என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் போலத்தான் நாமும் பல விஷயங்களையும், இறைவனைப் பற்றியுமே கூட, அனுபவித்து அறிய முயலாமல், கற்று அறிவதில் மட்டுமே திருப்தி அடைந்து விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெய்யையே பார்த்திராத ஒருவருக்கு நெய்யின் ருசி எப்படி இருக்கும் என்று எப்படி விளக்க முடியும்? அதைப் பற்றி புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள முடியுமா? ஆனால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்து விட்டால் உடனே தெரிந்து விடுகிறது... இதுவும் குருதேவர் சொல்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் போலத்தான் இறைவனும். அவன் படித்து அறியக் கூடியவன் அல்ல; உணர்ந்து அடைய வேண்டியவன் – இதுவும் அவனை அனுபவித்து அறிந்தவர்கள் கூறுவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதங்களையும் உபநிடதங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் இன்ன பிறவையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆனால் அவை எதற்காக ஏற்படுத்தப் பட்டனவோ, அதனை அடைய அந்த அறிவு பயன்படா விட்டால், அத்தனையும் கற்பதன் பயன்தான் என்ன?&lt;br /&gt;வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தானே சொல்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நற்றாள் தொழாஅர் எனின்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக வேலையாக நம்மை வெளியூர் அனுப்புகிறார்கள். வந்த வேலையை விட்டுவிட்டு ஜாலியாக ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் (நம்மூர் அரசாங்க உத்தியோகத்தைச் சொல்லவில்லை!). ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பிறவி எடுத்ததன் காரணத்தை கவனிக்கா விட்டால் இந்த வேலையை விட்டு எங்கேயும் தப்பிச் செல்ல முடியாது! வந்த வேலையைக் கவனிக்கும் வரை திரும்பத் திரும்ப பிறந்து கொண்டே இருக்க வேண்டிதான் வரும்! ஜீரா ரொம்ப ருசி என்பதற்காக அதை மட்டும் சாப்பிட்டு விட்டு குலோப் ஜாமூனை சாப்பிடா விட்டால் எப்படி?!&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி, குலோப் ஜாமூனை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியவில்லையே என்கிறீர்களா? அதற்கும் ஸ்ரீராமகிருஷ்ணர், கபீர், போன்ற அனைத்து மகான்களும் ஒரு சுலபமான வழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அதுவே நாமஜபம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலியுகத்திற்கு மிகவும் உகந்தது நாமஜபமே என்று ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றி கபீர் சொன்ன ஈரடிகள், &lt;a href="http://kabeeran.blogspot.com/2009/09/blog-post_26.html"&gt;கபீரன்பரின் தமிழாக்கத்தில்&lt;/a&gt;, இதோ:&lt;p&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே&lt;/span&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;        &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;அதனால், ஊரைச் சுற்றிக் கொண்டிருக்காமல், வந்த வேலையைக் கவனிப்போம்.&lt;/span&gt;&lt;/p&gt;    &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; font-style: italic; color: rgb(51, 102, 102);"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;கவிநயான்னு பேர் வச்சுக்கிட்டு கவிதை சொல்லலைன்னா எப்படி, அப்படின்னு விருந்துக்கு அழைச்சவர் சொன்னதால…&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; font-style: italic; color: rgb(51, 102, 102);"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;இப்போ சொன்னதெல்லாம் சேர்த்து வச்சு…&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: left;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 102, 102);"&gt;இதோ ஒரு கவுஜ&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 102, 102);"&gt;: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(51, 51, 255); text-align: left;"&gt;உலகெலாம் சுற்றி வந்து&lt;br /&gt;உன்னிப்பாய்க் கற்பார் பலநூல்;&lt;br /&gt;மொழியெலாம் கற்று வந்து&lt;br /&gt;மழையெனப் பொழிவார் அறிவை;&lt;br /&gt;கலையெலாம் கற்று வந்து&lt;br /&gt;உலகெலாம் பரப்புவார் புகழை.&lt;br /&gt;&lt;br /&gt;சாதனை பலசெய் தாலும்&lt;br /&gt;பழவினை அழிவ தில்லை;&lt;br /&gt;எத்தனை கற்றறிந் தாலும்&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;i&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 112, 192);font-family:'Arial Unicode MS','sans-serif';" &gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;இறைவனேட் டறிவினி லில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுக்குள் உறையும் அவனை&lt;br /&gt;உணர்வினில் அறிய வேண்டின்&lt;br /&gt;கள்ளெனச் சுவைக்கும் நாமம்&lt;br /&gt;உள்ளத்தில் ஊறிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொருள் அப்பொரு ளெல்லாம்&lt;br /&gt;பொய்மையின் வடிவே ஆகும்;&lt;br /&gt;மெய்ப்பொருள் அறிவது ஒன்றே&lt;br /&gt;மனிதர்க்கு மெய்யறி வாகும்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;(கபீர் இரண்டு அடிகளில் சொன்னதைச் சொல்ல, நமக்கு இத்தனை அடி வேண்டியிருக்கு!)&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;கபீரன்பர் அவர்கள் அளித்த வாய்ப்பிற்கு நன்றிகளுடன்…&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;அன்புடன், &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;கவிநயா&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;----------------------------------------&lt;br /&gt;மாம்பழத்தில் ஆரம்பித்து நெய், குலாப்ஜாமூன், ஜீரா வரை தித்திப்புச் சுவைகளை அள்ளித் தெளித்து விட்ட   கவிநயா  அவர்கள் கடைசியில் மனிதனுக்கு வேண்டிய &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;'கள்' &lt;/span&gt;ளையும் விட்டுவைக்கவில்லை :)))&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: left;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt; இடுகை முழுவதும் தித்திக்கக் காரணம் இல்லாமல் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: center;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;இந்த வாரம் தீபாவளி !&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: center;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;அவருக்கும் வாசகர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://informationmadness.com/cms/images/stories/festivals/diwali-festival.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 300px;" src="http://informationmadness.com/cms/images/stories/festivals/diwali-festival.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அன்னை அருளில் திளைக்கும் கவிநயா அவர்களின் எழுத்து  மேன்மேலும் அருட்சுவையை கவிதையாகவும் கட்டுரையாகவும் பரப்பட்டும் என்று வேண்டி வாழ்த்துவோம்.&lt;br /&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;span style=";font-family:&amp;quot;;" &gt;&lt;p style="color: rgb(51, 51, 255);" class="MsoNormal"&gt;&lt;b style=""&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:12pt;"  &gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;b style=""&gt;  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-7556764655250622052?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/7556764655250622052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=7556764655250622052' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/7556764655250622052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/7556764655250622052'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2010/11/2.html' title='சிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-5285187028317549846</id><published>2010-10-25T11:43:00.009+05:30</published><updated>2010-10-25T13:12:44.087+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்பன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறப்புப் பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏசுநாதர்'/><title type='text'>கே.ஆர்.எஸ் விடையளிக்கிறார்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;சிறப்பு இடுகை -1 ( &lt;a href="http://kabeeran.blogspot.com/2010/10/1.html"&gt;இங்கே சுட்டவும்&lt;/a&gt; ) -தொடர்ச்சி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புதிரா புனிதமா : கபீர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வணக்கம் மக்களே!&lt;br /&gt;புதிரா புனிதமாவில் வடநாட்டு அடியவர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை!&lt;br /&gt;நம்ம ஊருன்னா மக்கள் ஈசியாச் சொல்லீருவாங்க!&lt;br /&gt;இருந்தாலும், வட-தென் பேதமின்றி, அடியவர் என்ற ஒரே நோக்கோடு, தேடிப் பார்த்து விடைகளை முயன்ற அத்தனை நண்பர்களுக்கும் தேடல் கூட வாழ்த்துக்கள்! விடைகளை ஒவ்வொன்னாப் பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1. கபீரைப் போலவே இந்த நாயன்மார்! இவரும் ஒரு நெசவாளர்? யார் இவர்? = நேச நாயனார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த சிவனடியாரான இவர், அடியார்களுக்கு ஆடை தைத்துக் கொடுப்பதையே பணியாகக் கொண்டிருந்தார்! அன்னதானம் எல்லாரும் பண்ணறது தான்! ஆனால் ஆடைதானம் என்று மானங் காக்கும் தொண்டினை அன்றே செய்த நல்ல உள்ளம்!&lt;br /&gt;&lt;br /&gt;Other Choices-இல் அமர்நீதி நாயனார், உங்களைக் குழப்பவென்றே கொடுத்தது! :)&lt;br /&gt;அதான் எப்பமே பண்ணுவியே-ங்கிறீங்களா? ஹா ஹா ஹா! குழம்பிக் கிடைக்கும் தெளிவு தான் ரொம்ப நாள் நிக்கும்! Water "fills" only in empty glass :)&lt;br /&gt;அமர்நீதி நாயனார் ஈசனுக்குக் கோவணம் காத்துக் கொடுத்தவர்! ஆனால் நெசவாளர் அல்ல!&lt;br /&gt;தண்டியடிகள் பார்வையற்றர் - இருந்தும் குளம் கட்டுவித்து, தண்ணீர்த் தாகம் தீர்த்தவர்!&lt;br /&gt;திருநீலகண்டர் குயவர்! மனைவியிடம் அல்லாது இன்னொரு இடத்தில் லேசு மாசாக நடந்ததற்கு, மனைவியின் சத்தியத்தால் மனைவியிடமே நெருங்காது, காலமெல்லாம் ஒழுக்கம் காத்து நின்றவர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2. கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன! சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில்! இதைத் தொகுத்தது யார்? = குரு அர்ஜூன் தேவ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குரு நானக் முதல் சீக்கிய குரு! கபீரின் சமகாலத்தவர் என்றும் சொல்வார்கள்!&lt;br /&gt;குரு கோவிந்த் சிங் கடைசி குரு!&lt;br /&gt;குரு அர்ஜீன் தேவ் தான் ஐந்தாம் குரு! நடுவாக உதித்தவர்! இவரே தனக்கு முன்பிருந்த குருக்களின் வாய்மொழிகளை எல்லாம் திரட்டி, குரு கிரந்த சாகிப் என்று எழுதுவித்தவர்!&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் இதர குருக்களின் வாசகமும் இதில் ஒவ்வொன்றாகச் சேர்ந்தது! 10 சீக்கிய குருக்கள் அல்லாது 15 மகான்கள் (பகத்) சொன்னதும், இதில் இடம் பெற்றுள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒன்று தான் கபீரின் பீஜக்!&lt;br /&gt;இராமானுச வழிவந்த இராமனந்தரின் வாசகமும் குரு கிரந்த் சாகிப்பில் உண்டு!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3. கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்? = இராமானந்த தீர்த்தர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரே கபீரின் மானசீக குரு!&lt;br /&gt;கபீர் வளர்ப்பால் முஸ்லீம் என்பதால், சுற்றி இருந்த சில அக்ரஹார சீடர்கள் விலக்க, அவமானப்பட்ட கபீர், அழுது கொண்டே கங்கைப் படித்துறையில் படுத்துறங்கி விட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;விவரம் அறியாத இராமானந்தர், யாரோ இரண்டு வீர புருஷர்கள் (இராம-இலக்குவன்) தன் மடத்தை விட்டுப் போவதாக விடிகாலைக் கனவு கண்டு,&lt;br /&gt;ஐயோ, பாகவத அபச்சாரம் (அடியார் பழித்தல்) நடந்து விட்டது போலிருக்கே என்று பதறி,&lt;br /&gt;&lt;br /&gt;இதர வகுப்பாரை விசாரிக்க, உண்மை அறிந்து, எதற்கு கபீரை விரட்டினீர்கள் என்று மற்றவர்களைக் கடிந்து கொண்டார்!&lt;br /&gt;உடனே கங்கைக் கரையில் குளிக்கப் போகும் போது, படியில் கால் வைக்க, அது கபீரின் மேல் பட்டு விட..."சீதாராம்" என்று இராமானந்தர் அலற, கபீர் எழுந்து வணங்க, அதுவே தாரக மந்திர உபதேசம் ஆயிற்று! கபீர் சீடர் ஆனார்!&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;div class="im"&gt;&lt;br /&gt;ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்&lt;br /&gt;என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்&lt;br /&gt;&lt;/div&gt;என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;" என்று துவங்கும் ஒரு பெரும் தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் ? = கம்பர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப ராமாயணம் - கடைசிக் காண்டமான யுத்த காண்டத்தின் முதல் பாட்டு!&lt;div class="im"&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;ஒன்றே என்னின், ஒன்றே ஆம்; பல என்று உரைக்கின், பலவே ஆம்; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;அன்றே என்னின், அன்றே ஆம்; ஆம் என்று உரைக்கின், ஆமே ஆம்; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;இன்றே என்னின், இன்றே ஆம்; உளது என்று உரைக்கின், உளதே ஆம்; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பம்மா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சான்சே இல்ல-ல்ல? கம்பன் கவியே கவி! என்னமா நச்-ன்னு சொல்றாரு! உளதென்று உரைக்கின் உளதேயாம்! அப்படியே நம்மாழ்வார் பாசுரம் போலவே இல்ல? = உளன் எனில் உளன்!&lt;br /&gt;பின்னாளில் கண்ணதாசன் இதைத் தான் எழுதினாரு! = உண்டென்றால் அது உண்டு!&lt;div class="im"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;5. கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;கபீர் + தாசர் = Great (Allah) + Servant = சிறப்பானவரின் அடிமை!&lt;br /&gt;அல்லாஹ் என்னும் இறைவனின் திருப்பெயர்களுள், 37ஆம் திருநாமமாக, திருக்குர்ஆனில் வருவது கபீர் என்ற நாமம்!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;6.கபீரின் சொந்த ஊர் எது? = காசி (வாரணாசி)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காசியில் வாழ்ந்த நெசவாளத் தம்பதிகள் (இணையர்கள்) நீரு-நீமா என்பவர்களின் பிள்ளையே கபீர்!&lt;br /&gt;பிறப்பால் இந்து, முதல் மூன்று வருணத்துக்குள் பிறந்தவர் என்றெல்லாம் சில சாதி அபிமானிகள் பின்னாளில் எழுதிச் சேர்க்கப் பார்த்தனர்!&lt;br /&gt;கபீர் பிரபலமாகி விட்டார் அல்லவா! வள்ளுவரை மதத்துக்குள் அடைப்பது போலத் தான், கபீரை அடைக்கப் பார்த்தார்கள் போலும்! ஆனால் கபீர் இரு மதங்களின் மூட வழக்கங்களையும் போலியான சாஸ்திர-சம்பிரதாயங்களையும் சேர்த்தே தான் எதிர்த்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;7. கபீரின் சமாதி எங்கு உள்ளது? = மகர், கோரக்பூர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பண்டிதர்களால் காசியை விட்டுத் துரத்திய பின், கபீரின் இடம் இதுவானது!&lt;br /&gt;பலரும் மகர் பாவப்பட்ட ஊர் என்று பேச, இறக்கும் தருவாயில் காசியில் இறந்தால், எவ்வளவு பாவியானாலும் ஸ்டெரெயிட் மோட்சம் என்று குறுக்கு வழிக் கால்குலேஷன்களைச் சொல்ல...&lt;br /&gt;அதை மறுக்க நினைத்த கபீர், கோரக்பூர் அருகிலுள்ள இந்த மகரிலேயே சமாதியானார்! இன்றும் சமாதிக் கோயில் உள்ளது!&lt;div class="im"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை! இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது!&lt;br /&gt;வெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக் கொடுத்தனர்? = சிக்கந்தர் லோதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல வெற்றிகள் கண்டு, இறுதியில் குவாலியர் மகாராஜா மான் சிங்கிடம் தோற்றுப் போன சிக்கந்தர் லோடியே இவர்! சமயப் பொறையாளர் அல்லர்! இன்று தில்லியில் உள்ள Lodi Gardens இவரின் சமாதியே!&lt;br /&gt;&lt;br /&gt;கபீர், போலியான சாஸ்திர-சம்பிரதாய வழக்கங்களை நையாண்டி செய்து பாடுவதால், பொத்துக் கொண்டு வந்து விட்டது பல பேருக்கு!&lt;br /&gt;கோள் சொல்லுதல் பாவம் என்பது தான் சாஸ்திரம்! ஆனால் கபீர் மேலுள்ள வெறுப்புக்காக, சாஸ்திரத்தை மீறத் துணிந்தனர்கள், அதே சாத்திரம் பேசுவோர்! அது தான் வேடிக்கை! :)&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சுன்னத் போன்ற சில சடங்குகளைப் பற்றியும் கபீர் பாடியதால், இவர்களும் சேர்ந்து போட்டுக் கொடுக்க, சிக்கந்தர் லோடியோ கபீர் பார்ப்பதற்கு முஸ்லீம் பெரியவர் போல இருந்ததால் விட்டு விட்டான்! ஈஸ்வர-அல்லா தேரே நாம் என்று சொன்ன துறவியின் உயிரை எடுத்த அவன், கபீரை மட்டும் கொல்லாது, ஊரை விட்டு மட்டும் அகன்று விடுமாறு சொல்லி விட்டான்! கபீரும் காசியை விட்டு, கோரக்பூர் சென்று தங்கலானார்!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;9. கபீர், உணவு முறைகளில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொன்னாரா? அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா? = இல்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கபீர் சைவ உணவு-அசைவ உணவு என்று எதையும் குறித்தோ, விலக்கியோ சொல்லவில்லை! ஜீவ காருண்யம் என்னும் உயிர்கள் பால் கருணை என்பது மட்டுமே பாடியுள்ளார்! அதையே சீக்கியர்களும் புலால் மறுத்தலாகத் தங்கள் நூலில் கொண்டுள்ளார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;10. இறைவனுடைய அடியவர்க்கு தோல்வியே நன்று என்பது கபீரின் கருத்து. இதே போல் இன்னொரு மகானும் சொல்லியுள்ளார். "What shall it profit a man if he gains the whole world and loses his own soul?" - சொன்னது யார் ? = இயேசு பிரான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு ரொட்டித் துண்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்த மாயச் செயலினாலும்,&lt;br /&gt;பின்பு பெத்செடாவில் பார்வையற்றவனைப் பார்க்க வைத்த பின்பும், சீடர்களிடம் தன் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே பேசும் போது, இயேசு பிரான் இவ்வாறு சொல்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;இது புனித பைபிள் வாசகம்!&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul? Or what shall a man give in exchange for his soul? - Mark 8:36, Matthew 16:26&lt;/span&gt;&lt;br /&gt;உலக ஆசையின் களிப்புக்காக பலதை விலை கொடுக்கலாம்! ஆனால் ஆன்மாவையே விலை கொடுத்து விட்டால்? அது லாபமா? நட்டமா?&lt;br /&gt;- இது இயேசுபிரான் காட்டும் நமோ (எனதில்லை) என்னும் ஆன்ம சிந்தனை! அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்! அடைய நின்றனரே!&lt;br /&gt;&lt;br /&gt;உஷ்ஷ்ஷ்...அப்பாடா...பதில் சொல்லியாச்சி பத்துக்கும்! என் பரிசு எங்கே?&lt;br /&gt;---------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பதில் சொல்லப்படாத ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டுமே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;இப்போது பரிசுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி : ரவிஷங்கர் அவர்களை  “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு  அது என்ன ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கே.ஆர்.எஸ் எவ்வளவுதான் தன்னை&lt;/span&gt; " &lt;span style="font-style: italic; color: rgb(255, 0, 0);"&gt;மத்தபடி சீனியர் எல்லாம் ஏமி லேது!, மீ ஒன்லி ஒன் அப்பாவிச் சிறுவன்! :) &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சொல்லிக்கொண்டாலும்  அவரால் தன்பெயரினுள்ளேயே கபீரை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தை மறுக்க முடியாதே !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;Kannabiran Ravishankar&lt;/span&gt; ஐ கொஞ்சம் மாற்றிப் போடுங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;Kabirannan Ravishankar&lt;/span&gt;  வருகிறதா இல்லையா !!!    :))))&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;-------------------------------------------&lt;br /&gt;வாசகர்களை கவரும் வகையில் ஒரு நல்ல இடுகையை தந்து இந்த வலைப்பூவை சிறப்பித்த கே.ஆர்.எஸ் வாழி வாழி.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் எழுத்துப்பணி எப்போதும் போல் சிறப்பாகத் தொடரட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.  கபீர் வலைப்பூ வாசகர்கள் சார்பாக மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரப்போவது யாரு ??????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:85%;color:gray;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;---- என்றும் அன்புடன் கபீரன்பன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34896520-5285187028317549846?l=kabeeran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kabeeran.blogspot.com/feeds/5285187028317549846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=34896520&amp;postID=5285187028317549846' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5285187028317549846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34896520/posts/default/5285187028317549846'/><link rel='alternate' type='text/html' href='http://kabeeran.blogspot.com/2010/10/blog-post_25.html' title='கே.ஆர்.எஸ் விடையளிக்கிறார்'/><author><name>கபீரன்பன்</name><uri>http://www.blogger.com/profile/17344353418769002439</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_scbM4BSuz8w/SUb90a9fpII/AAAAAAAAAIc/BbuurTGPWzc/S220/KABIRDAS.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34896520.post-315336881772894161</id><published>2010-10-22T07:55:00.017+05:30</published><updated>2010-10-22T14:49:53.744+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர்தாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிரா புனிதமா. சிறப்புப்பதிவு'/><title type='text'>சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை- 1</title><content type='html'>&lt;div&gt;&lt;b&gt;ஆசிரியர் அறிமுகம் :&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இந்த இடுகையின் விருந்து ஆசிரியர் பலரும் மிக நன்கு அறிந்த ஒரு வலைப்பதிவாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை நான் &lt;span class="Apple-style-span"&gt;கபீரண்ணன்&lt;/span&gt; என்று அழைப்பது உண்டு.  :))&lt;br /&gt;அவருடைய வலைப்பூ கபீரின் கனிமொழிகள் வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர் என்பது மட்டுமல்ல, எழுதும் திறத்திலும் அவர் என்னை விட கைத்தேர்ந்தவர். எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி தீர்த்து விடுவார். &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தற்போது பழந் தமிழிலக்கியங்களில் திருமால் பற்றிக் காணப்படும்  குறிப்புகளைத் தகுந்த ஆதாரங்களுடன் தனித்தனியாக பதிந்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளினால் நம் இதிகாசகங்கள் எவ்வளவு தொன்மையானது என்பதும் இந்நாட்டு  மக்களின் மனதில் எப்படி இரண்டறக் கலந்து உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. மிக நல்ல திறனாய்வு.&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பான பேச்சு வழக்கைப் பயன்படுத்தி அதில் நகைச்சுவை இழையோடும் வகையில் கருத்துகளை வழங்கும் திறமைதான் அவருக்கு மிகப்பெரும் வாசகர் வட்டத்தைத் தேடித் தந்திருக்கிறது என்றால் மிகையாகாது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;தமிழ்மணம் நடத்திய சிறந்த ஆன்மீக இடுகைக்கான போட்டியில் பெரும்பாலோர் வாக்குகளைப் பெற்று பரிசைத் தட்டிச் செல்பவர் என்பதே அதற்கு சான்று&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய வலைப்பூவின் பெயர் &lt;b&gt;&lt;a target="_blank" href="http://madhavipanthal.blogspot.com/"&gt;மாதவிப்பந்தல்&lt;/a&gt;&lt;/b&gt;. (The cat is out of the bag !!!)இதைத் தவிர இவர் பங்கேற்கும் பிற வலைப்பூக்கள் &lt;a target="_blank" href="http://muruganarul.blogspot.com/"&gt;முருகனருள்&lt;/a&gt;, &lt;a target="_blank" href="http://aacharyahruthayam.blogspot.com/"&gt;ஆச்சார்ய ஹ்ருதயம்&lt;/a&gt;, &lt;a target="_blank" href="http://ammanpaattu.blogspot.com/"&gt;அம்மன்பாட்டு&lt;/a&gt;. இவை நானறிந்தவை, அறியாதவை எவ்வளவோ ! :)&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;ஆம், அன்பர்களே, வெகுவான வாசகர்களின் அபிமானம்  பெற்ற&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;கே.ஆர்.எஸ் என்னும் Kannabiran Ravishankar&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இந்த  சிறப்பு இடுகை வழங்குகிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;என்னுடைய வேண்டுகோளை ஏற்று உடனடியாக ஒரு இடுகையை தயாரித்து  சிறப்பு ஆசிரியராக ஒரு பதிவு வழங்க கே.ஆர்.எஸ். முன்வந்திருப்பது கபீர் வலைப்பூவின் அதிருஷ்டம் .  2007 ஆம் வருடத்திலிருந்தே இவர் நடத்திவரும் புதிரா -புனிதமா கேள்வி பதில் பாணியில் இம்முறை கபீரை எடுத்துக் கொண்டிருக்கிறார்.  வாசகர்களுக்கு இது ஒரு வரவேற்கத் தக்க மாறுதலாக இருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அவருக்கு மனமார்ந்த நன்றி. இது வெறும் கேள்வி பதில் அல்ல, அவர் ஆசிரியர் மட்டும் அல்ல. இது ஒரு சின்ன போட்டி அதற்கு அவர் நடுவரும் கூட.  போட்டி மற்றும் பரிசு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இனி கே.ஆர். எஸ் பேசுவார்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;கபீர் என்பவர்...&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞரா? ஆன்மீகவாதியா?&lt;br /&gt;தத்துவச் செம்மலா? குடும்பத் தலைவரா?&lt;br /&gt;இந்துவா? மூஸ்லீமா? சீக்கியரா?&lt;br /&gt;சாஸ்திர விற்பன்னரா?&lt;br /&gt;சுஃபியா? யோகியா? சித்தரா?&lt;br /&gt;இப்படியெல்லாம் அடக்கத் தான் முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;கபீரின் தத்துவங்களைக் கபீரன்பன் தொடர்ந்து இந்த வலைப்பூவில் சொல்லத் தான் போகிறார்!&lt;br /&gt;கபீரின் தோஹா என்னும் ஈரடி இந்திக் குறள் தொடர்ந்து இந்தப் பதிவில் பரிமளிக்கத் தான் போகிறது!&lt;br /&gt;ஆனால் கபீர் யார்? என்று அறிந்து வைத்துக் கொள்வதும் ஒரு சுகம்! கபீர் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம்!&lt;br /&gt;ஏனென்றால் கபீர் மகான் என்பதை விட மனிதர், நம்மைப் போல! அவரால் முடிந்தால், நம்மாலும் முடியாதா என்ன? வாருங்கள் எட்டித் தான் பார்ப்போம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;big&gt;&lt;b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;b&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;Lives of great men all  remind us &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;b&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;We  can make our lives sublime&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-style: normal; font-weight: normal;"&gt;&lt;b&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;And, departing, leave behind  us &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-style: normal; font-weight: normal;"&gt;&lt;b&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);"&gt;Footprints  on the sands of time.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/big&gt;&lt;big&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/big&gt;&lt;div align="center"&gt;&lt;big&gt;&lt;span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/big&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;முதன் முதலாக மாதவிப் பந்தல் அல்லாத ஒரு வெளிப்பூவில்! நான் மிக விரும்பும் வலைப்பூவில்! இதோ!&lt;div align="center"&gt;&lt;big&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;புதிரா? புனிதமா?? = கபீர்!&lt;/span&gt;&lt;/big&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;style type="text/css"&gt;ol{margin:0;padding:0}p{margin:0}.c3{vertical-align:top;width:21.75pt;background-color:#ccffff;border-style:solid;border-color:#000000;border-width:1.0pt;padding:5.0pt 5.0pt 5.0pt 5.0pt}.c5{vertical-align:top;width:282.75pt;background-color:#99ff99;border-style:solid;border-color:#000000;border-width:1.0pt;padding:5.0pt 5.0pt 5.0pt 5.0pt}.c8{vertical-align:top;width:21.75pt;background-color:#cccccc;border-style:solid;border-color:#000000;border-width:1.0pt;padding:5.0pt 5.0pt 5.0pt 5.0pt}.c7{vertical-align:top;width:282.75pt;background-color:#ccffff;border-style:solid;border-color:#000000;border-width:1.0pt;padding:5.0pt 5.0pt 5.0pt 5.0pt}.c6{vertical-align:top;width:156.75pt;border-style:solid;border-color:#000000;border-width:1.0pt;padding:5.0pt 5.0pt 5.0pt 5.0pt}.c16{vertical-align:top;width:282.75pt;border-style:solid;border-color:#000000;border-width:1.0pt;padding:5.0pt 5.0pt 5.0pt 5.0pt}.c10{vertical-align:top;width:21.75pt;border-style:solid;border-color:#000000;border-width:1.0pt;padding:5.0pt 5.0pt 5.0pt 5.0pt}.c0{line-height:1.15;text-indent:0pt;direction:ltr}.c1{color:#3333ff;font-size:11pt;font-family:Arial}.c2{color:#000000;font-size:11pt;font-family:Arial}.c17{background-color:#ccccff}.c11{background-color:#ffffff}.c14{background-color:#ffcc99}.c18{background-color:#ffcccc}.c4{font-weight:bold}.c12{text-align:center}.c15{background-color:#ffff33}.c21{background-color:#cccccc}.c19{background-color:#99ff99}.c9{border-collapse:collapse}.c20{background-color:#ffccff}.c13{background-color:#ffffcc}&lt;/style&gt;&lt;/b&gt;&lt;p class="c0 c12"&gt;&lt;span class="c2"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0 c12"&gt;&lt;span class="c2"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;table class="c9" style="text-align: left;" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="c8"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;1&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c16 c21"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கபீரைப் போலவே  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="c2 c4"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இவரும் ஒரு &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;நெசவாளி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="c2 c4"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; ?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; யார் இவர்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c6"&gt;&lt;p class="c0" style="text-align: left;" align="center"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அ) திருநீலகண்டர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; ஆ) நேச நாயனார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இ) அமர்நீதி நாயனார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈ) தண்டி அடிகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="c10 c18"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;2&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c16 c18"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="c2 c4"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில்! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இதைத் தொகுத்தது யார்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c6"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; அ) குரு ராம் தேவ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஆ) குரு கோவிந்த் சிங்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இ) குரு நானக்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈ) குரு அர்ஜூன் தேவ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="c10 c13"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;3&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c16 c13"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2 c4"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கபீரின் குருவாகக் கருதப்படுபவர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;, இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c6"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; அ) துளசி தாசர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஆ) ஜெய தேவர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இ) இராமனந்த தீர்த்தர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈ) துக்கா ராம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="c3"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;4&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c7"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="c2"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;i style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்&lt;br /&gt;என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்&lt;/span&gt;&lt;/i&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;என்று  மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி &lt;/span&gt;&lt;i&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே  ஆம்;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;என்று துவங்கும் ஒரு தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி  அமைந்திருக்கிறது. எழுதியது யார் ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2 c4"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c6"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அ) சேக்கிழார்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஆ) நம்மாழ்வார்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இ) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;பாரதியார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈ) கம்பர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="c10 c20"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;5&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c16 c20"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="c2 c4"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c6"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அ) சிறப்பானவரின் பக்தர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஆ)கடவுளின் அடிமை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இ) சிறப்பானவரின் அடிமை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈ) கடவுளின் காதலர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="c10 c15"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;6&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c16 c15"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2 c4"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கபீரின் சொந்த ஊர் எது?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c6"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அ) காசி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஆ) கயா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இ) கோரக்பூர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈ) கோலாப்பூர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="c10 c19"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;7&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c5"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2 c4"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கபீரின் சமாதி எங்கு உள்ளது?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2 c4"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இவ்வளவு பெரிய மகானின் உடல் மீது இந்து முஸ்லீம் பிரச்சனை எழ, துணியை விலக்கிய போது, ரோஜாக்கள் மட்டுமே இருந்தன என்பது வழக்கு! ஒரு பகுதி ரோஜாக்களை எரித்தார்கள்! இன்னொரு பகுதி ரோஜாக்களைப் புதைத்தார்கள்! இன்றும் சமாதியில், அடக்கமான இடம்/சாம்பலான இடம் என்று இரண்டுமே உள்ளது!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c6"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அ) மகர், கோரக்பூர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 14px; color: rgb(51, 51, 255);font-family:Arial;font-size:small;"  &gt;ஆ) காசி (வாரணாசி)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இ) பத்ராச்சலம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈ) பண்டரிபுரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 14px;font-size:small;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="c1"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="c10 c17"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;8&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c16 c17"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை! இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது! வெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக கொடுத்தனர்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td class="c6"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அ) காசி மகாராஜா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 14px; color: rgb(51, 51, 255);font-family:Arial;font-size:small;"  &gt;ஆ) குவாலியர் மகாராஜா மான்சிங்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இ) சிக்கந்தர் லோதி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c1"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈ) அவுரங்கசீப்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="c10 c14"&gt;&lt;p class="c0"&gt;&lt;span class="c2"&gt;&lt;span class="Apple-style
