இம்முறை ஒரு மாறுதலுக்காக ஒரு சிறு கதை. திரு புதுமைப்பித்தனின் சொற்சித்திரம். அதன் பின்னர் இதையொட்டி கபீர் வழியில் நம் எண்ணவோட்டம்.
தெரு விளக்கு
தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு. தனிமையாக ஏகாங்கியாக தனது மங்கிய வெளிச்சத்தை பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.
இளமை மூப்பு சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே தெரு விளக்கிற்கும் இப்போது மூப்புப் பருவம். நிற்கும் கல்-உடம்பு சிறிது சாய்ந்து விட்டது.
கோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவார்கள்.
சாப்பிடுபவர்களும் தத்தம் மனநிலைக்கு ஏற்றபடி சிலவற்றை ருசித்தும் சிலவற்றை ஒதுக்கியும் வயிறை நிரப்பிக் கொள்கிறார்கள்.
ஒருவன் பிரட் தயாரிப்பதில் மன்னன். சிறப்பான பிரட் தயாரித்து வைத்திருக்கிறான். ஆனால் பிரட் பிடிக்காத அன்பர்கள் அதை விட்டு சப்பாத்தியே பரவாயில்லை என்கிறார்கள். ”கை கொடுத்த தெய்வம்” படத்தில் சிவாஜி போல் சப்பாத்தியை கண்டு முகம் சுழிப்பவர்கள் அதே கோதுமை மாவை நீரில் கரைத்து தோசையாக வார்த்துத் தின்னத் தயாராகிறார்கள். இன்னும் சிலர் கோதுமையை உப்புமாவாக்கி சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்!
எப்படியோ கோதுமை உடலுக்கு ஊட்டம் தருவது. எந்த வடிவில் உள்ளே போனால் என்ன? நல்லது தானே செய்யும்.
இந்த முறை உங்களுக்கெல்லாம் கபீரின் கனிமொழியை இசை விருந்தாக படைக்கலாம் என்று ஒரு எண்ணம்.
கபீரின் பாடல் ஒன்று இங்கே பல கலைஞர்களின் கையில் சிக்கிக் கொண்டு பலவிதமான ருசிகளை கொடுக்கிறது. ஒவ்வொருவரும் தமக்கு பிடித்த (அல்லது தெரிந்த) பாணியில் வடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
நான் வெறும் மெனு கார்டை நீட்டும் சாதாரண ஊழியன். எல்லாவற்றையும் ருசித்து எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது கங்கை கரை கோதுமையில் வளர்ந்த ஆன்மீகம். எந்த வகையில் ருசித்தாலும் ஆன்ம பலம் கூடும் !!
முதலில் பாடல் :
भजो रे भैया (मन) राम गोविंद हरी । राम गोविंद हरी भजो रे भैया राम गोविंद हरी ॥ जप तप साधन कछु नहिं लागत, खरचत नहिं गठरी ॥ संतत संपत सुख के कारन, जासे भूल परी ॥ कहत कबीर राम नहीं जा मुख, ता मुख धूल भरी ॥
இந்தி அறியாத அன்பர்களுக்காக ஆங்கில வடிவில்,தமிழில் பொருளுடன் :)
bahajo re bhaiya raam govind hari துதித்திடு அன்பனே, ராமா, கோவிந்தா, ஹரி (என்றே துதித்திடு)
jap thap saadhan nahi kuch laagath, kharachath nahIm gatarI | ஜபம் தவம் சாதனை வேண்டாம், செலவும் இதற்கு கிடையாது
santhath sampath sukh ke kaaran, jaase bhool parI | சந்ததியென்றும் சம்பத்து என்றும் சுகத்தின் காரணமான அவனையே மறந்தனையே
______________________________________
முகமது ரஃபி பாடியது :
இவர் பாடலில் ”பையா” என்பது ”மன்” என்று மாற்றப்பட்டுள்ளது. அது போலவே நடுவில் ஒரு வரி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது
______________________________________________
ஜகஜித் சிங்
________________________________________________________
ராகுல் வெள்ளால்
>
இந்த மகத்தான கலைஞர்களுக்கு வந்தனம். ரஃபி, எம்.எஸ் மற்றும் பெயர் தெரியாத கலைஞர்கள் பாடியவற்றை வலையேற்றம் செய்து வைத்திருக்கும் அன்பர்களுக்கும் மனதார நன்றி
இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் 13/05/2018 அன்று புதிப்பிக்கப்பட்டுள்ளது. சில பழைய இணப்புகள் செயலற்று போன காரணத்தால் இது தேவை பட்டது