Tuesday, February 13, 2007

நிலையா யாக்கை

நாம் வாழ்நாளிலேயே சந்திக்காத ஒருவர் நம் முயற்சிகளுக்கு கண்ணுக்குத் தெரியாமலிருந்து உதவி வந்திருக்கிறார் என்பதை அவருடைய மரணத்திற்கு பிறகு தெரிய வரும் போது "கடன் பட்டார் போல்" மனம் சங்கடப் படுகிறது. திரு உமருத்தம்பியின் பிரிவு வருத்தம் அளிப்பதாய் இருந்தாலும் அவர் ஓரளவு வாழ்ந்து முடித்திருந்தவர். ஆனால் இளைஞரான திரு கல்யாண் என்ற சாகரனின் அகால மறைவு 'அலகிலா விளையாட்டுடையானின்' விளையாட்டாக ஒப்புக் கொள்ள முடியாமல் திகைக்கிறது உள்ளம். அவர் மறைவு நிலையாமை என்பதை மீண்டும் நம் யாவருக்கும் நினைவு படுத்த ஒரு குறுஞ்செய்தியோ? செய்தியை தந்த அவனையே அவர் குடும்பத்தார்க்கு அதைத் தாங்கிக் கொள்ளவும் சக்தியை கொடு என்று பிரார்த்தனை செய்வோம்.

இப்பதிவை, தமிழ் வலைப்பூக்களை அழகாக தொடுத்துக் கொடுத்து வரும் தேன் கூடு திரட்டியை துவக்கி திறம்பட நடத்தித் தந்த திரு கல்யாணராமன் என்கிற சாகரன் அவர்களின் நினைவிற்கு சமர்ப்பிக்கிறேன்.

கபீரின் சில ஈரடிகள்- நிலையாமைப் பற்றி

क्या करियॆ क्या जॊडिये थॊडॆ जीवन काज
छाडि छाडि सब जात है, दॆह गॆह धन राज


க்யா கரியே க்யா ஜோடியே தோடே ஜீவன் காஜ்
சாடி சாடி சப் ஜாத் ஹை தேஹ் கேஹ் தன் ராஜ்

அற்ப வாழ்வு அவனியிலே அலைவதென்ன அடைந்ததென்ன
சொற்ப தினமே போயின யாவும் தனந்திவரம் கிருகம் தேகம்


(தனம் = செல்வம் திவரம் =அரசு ; கிருகம்=வீடு,மனை ; தேகம்= உடல்)


कबीरा गर्व न कीजीयॆ ऊंचा दॆख आवास
काल परौ भुंई लॆटना ऊपर जम्सी घास

கபீரா கர்வ் ந கீஜியே ஊன்சா தேக் ஆவாஸ்
கால் பரொவ் புயீ லேட்னா ஊபர் ஜம்ஸி காஸ்


செருக்கு வீணில் எதற்கு கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளையக் காண்பர் ஆ ! காலன் கிடத்தும் இடங்கண்டு


काह भरॊसा दॆह का, बिनस जात छिन मांहिं
सास-सास सुमिरन करॊ, और यतन कुछ नाहिं

காஹ் பரோசா தேஹ் கா, பின்ஸ் ஜாத் சின் மான்ஹி
ஸாஸ் -ஸாஸ் சுமிரன் கரோ, ஔர் யதன் குச் நாஹி


நிலையா யாக்கை நின்மாத்திரம் மறைந்துபோம் -மூச்சு
மூச்சிலும் செபிநாமம் முயல்வதற் கில்லை வேறெதுவும்


No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி