Showing posts with label இராமகிருஷ்ணர். Show all posts
Showing posts with label இராமகிருஷ்ணர். Show all posts
Sunday, February 19, 2012
யானும் தானாய் ஒழிந்தானே
எந்த ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றாலும் ஒருவருடைய ஜாதகத்தில் குரு பலம் கூடி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த குரு, நவக்கிரங்களில் ஒன்றான வியாழ பகவானின் சஞ்சரிப்பு பலன் என்று சொல்லப்படுகிறது. என் போன்று, குருவை அறியாதவர்களுக்கு அந்த குருபலமே போதும் என்று சும்மா இருந்தே வாழ்க்கையை கழிப்பது வாடிக்கையாய் விடுகிறது.
ஒரு சிலருக்கோ வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே குரு அருள் துளிர் விடத் தொடங்குகிறது. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் அகோரமணி தேவி. இளம் வயதிலேயே கணவனை இழந்திருந்த அவளுக்கு ஒரு வைஷ்ணவ குரு மூலமாக கோபால மந்திர உபதேசம் கிடைத்து. பால கோபாலனே அவளுக்கு பிடித்த தெய்வம். குழந்தைப் பேறு வாய்க்க இயலாத அவளுக்கு குட்டி கிருஷ்ணன் லீலைகளைக் கேட்பதே ஆனந்தப் பொழுது போக்கு. அதனால் கோபாலனின் மந்திரமே அவள் வாழ்க்கைக்கு பிடிப்பாயிற்று. அவளுடைய அண்ணன் நீல்மாதவ் பட்டாச்சாரியா பணியாற்றிய ராதாமாதவ் கோவிலுக்கு தினமும் வந்து சிறு சிறு கைங்கரியங்கள் செய்வது அங்கேயே அமர்ந்து வெகு நேரம் செபம் செய்வது என வழக்கப்படுத்திக் கொண்டாள்.
ராதா மாதவ் கோவிலை நிர்வகித்த கோவிந்த தத்தரின் மனைவிக்கு அகோரமணியின் எளிமை, மனத்தூய்மை மிகவும் பிடித்துப் போனது. அதனால் அவளை கோவிலினுள்ளே இருந்த ஒரு சிறிய அறையில் வசிக்குமாறு அழைப்பு விடுத்தாள். அடுத்த முப்பது வருடங்களுக்கு அதுவே அவளது வாசஸ்தலமாகியது. இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசம் சத்சங்கத்திற்கு தடையாகவில்லை. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து தியானம் செபம் செய்வது அகோரமணி தேவிக்கு வெகு இயல்பாக கைகூடியது. சில நாட்கள் இரவு வெகு நேரம் வரையிலும் கோபாலனின் நாமசெபத்தில் தன்னை மறந்து ஈடுபட்டதுண்டு.
குருபலம் உடையவர்களுக்கு நாட்கள் அப்படியே போய்விடுமா என்ன!
கமார்ஹட்டியில் வசித்த இந்த பெண்மணிகளுக்கு தட்சிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரைப் பற்றி யாரோ சொல்லவே அவரை சந்திக்கும் ஆர்வம் பற்றிக் கொண்டது. இவர்களைக் கண்ட மாத்திரத்திலேயே அன்புடன் அவர்களை வரவேற்றார் குருதேவர். அவரே சில பாடல்களைப் பாடி அவர்களது மனதை கொள்ளை கொண்டார். அவர்களை அடிக்கடி வந்து போகும்படி அன்பாய் அழைப்பும் விடுத்தார். காந்தம் இரும்பை ஈர்க்கத் தொடங்கியது.
சில நாட்களுக்குள் அவரை சந்திக்கும் ஆர்வம் அதிகமாகவே கடையில் சிறிது தின்பண்டம் வாங்கிக் கொண்டு குருதேவரை அடைந்து நமஸ்கரித்தாள். தயக்கத்துடன் தின்பண்டங்களை அவர் முன் வைப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே உரிமையுடன் அதை பறித்துக் கொண்டு ராமகிருஷ்ணர் சுவைக்கத் தொடங்கினார். அதை பாராட்டியதுடன் அடுத்த முறை வரும்போது தேங்காய் பர்பி நீயே செய்து கொண்டு வா என்று அன்புடன் கட்டளையிட்டார். தேங்காய் பர்பிக்கு பிறகு லட்டுக்கு ஆசைப்படுவது அதற்கப்புறம் வேறொரு தின்பண்டம் என்றவாறு ஒவ்வொரு முறையும் அவளிடம் வெறும் தின்பதை பற்றியே பேச்சு சுற்றி சுற்றி வந்தது. ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. அகோரமணிக்கு ஏமாற்றம் ஏற்படத் துவங்கியது. தனக்கு ஆன்மீக சாதனையில் வழிகாட்டுவார் என்றால் இந்த மனிதர் எப்போதும் தின்பதைப் பற்றியே பேசுகிறாரே..இனிமேல் இவரை சந்திப்பதில் அர்த்தமில்லை என்று நினைக்கத் தொடங்கினாள்.
ஒருநாள் அதிகாலையில் தன் தியானத்தை முடித்து கண் திறந்தபோது அவளுக்கு பெரும் ஆச்சரியம். சற்று தூரத்தில் குருதேவர் வலது முஷ்டியை இறுகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். கனவா நிஜமா என்று ஊர்ஜிதம் செய்ய அவரைத் தொட முயற்சித்தபோது மாயமாய் மறைந்து போனார். அவர் இருந்த இடத்தில் இப்போது பாலகிருஷ்ணன் அதே வலது முஷ்டியை இறுகப் பிடித்தவாறு அவளை நோக்கி ஓடி வந்தான். தின்பதற்கு வெண்ணெய் கொடு என்றான். விடியலுக்கு காத்திருக்கும் இருட்டில் அந்த ஏழை வெண்ணெய்க்கு எங்கு போவாள். அவனோ விடுவதாயில்லை.அடுக்கப்பட்டிருந்த சட்டிகளை துழாவிக் கிடைத்த பிட்டு மாவை தேங்காயும் சர்க்கரையும் சேர்த்து உருண்டை பிடித்து கொடுத்தாள். அதுவே போதும் என்பது போல் தின்று விட்டு விளையாடத் தொடங்கி விட்டான். அகோரமணி செபம் செய்ய அமர்ந்தால் அவளுடைய செபமாலையை பறித்துக் கொண்டு ஓடுவது, அவளை அமர விடாமல் தன்னுடன் விளையாட அழைப்பது, கூச்சலிட்டுக்கொண்டு அறைக்குள்ளே சுற்றி சுற்றி வருவது என்பதாக அகோரமணியின் இஷ்ட தெய்வம் அவள் முன்னே ஓடியாடத் தொடங்கினான். அவளுக்கு தரையில் கால் பாவவில்லை. விடிந்ததும் கோபாலனைத் தூக்கிக் கொண்டு குருதேவரை காண ஓடினாள்.
அவரைக் கண்டதுமே மடியில் இருந்த கோபாலன் அவருள் மறைந்து போனான். ராமகிருஷ்ணரோ பாவசமாதியில் கோபாலனைப் போலவே தவழ்ந்து வந்து அவளது மடியில் படுத்துக் கொண்டார். தன்னை விட பதினான்கு வயது இளையவரான குருதேவரை வாத்ஸல்ய பாவத்துடன் அணைத்துக் கொண்டார் அகோரமணிதேவி. உடல் நினைவிருந்தால் தானே வயது, ஆண், பெண் என்ற வித்தியாசமெல்லாம். அந்த நேரத்தில் அது பெரும் உணர்வுக்குள்ளே தோய்ந்து போன இரு பெரும் ஆத்மாக்களின் சங்கமம். உடல் என்னும் கருவி உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் விடாது. அவளது கண்களிலிருந்து ஆறாய் நீர் பெருகி குருதேவரை நனைத்தது. குழந்தையற்ற தனக்கு தாய்மை பாசத்தை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை எண்ணி எண்ணி அவள் மனம் உருகியது. சிறிது நேரம் கழித்து குருதேவர் எழுந்து கட்டிலின் மீது அமர்ந்து கொண்டார். அவளது தலையை அன்புடன் நீவி கொஞ்சம் கொஞ்சமாக நினைவுலகுக்கு கொண்டு வந்தார். அன்றிலிருந்து அவளுடன் குட்டி கோபாலன் விளையாடுவது, நீர் கொண்டு வர அல்லது சுள்ளி பொறுக்கப் போகும்போது கூடவே வருவது, அவளுடைய கையையே தலையணையாகக் கொண்டு உறங்குவது என்பதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. தனக்கென குழந்தை ஒன்று இருந்திருந்திருந்தால் என்னென்ன இன்பம் கிட்டியிருக்குமோ அத்தனையும் குருதேவரின் அருளால் அவளுக்கு கிட்டியது. சில மாதங்களுக்குப் பிறகு ராமகிருஷ்ணர் அவளுக்குக் கொடுத்த அந்த காட்சியை சிறிது சிறிதாக குறைத்து விட்டார். மானுட உடல் ஒரு அளவுக்கு மேல் இத்தகைய நிலையில் நிலைக்க இயலாது என்பதை புரிய வைத்தார். அவளுக்கு தியானம் செபம் போன்றவை எதுவும் தேவையில்லை விட்டு விடலாம் என்று அறிவுறுத்தினார். பழக்கதோஷத்தால் விட முடியாவிட்டால் குருதேவருக்காக செய் என்ற வழிமுறையையும் சொல்லிக் கொடுத்தார்.
ஒவ்வொருமுறையும் குருதேவரை சந்திக்கப் போகும்போது ஏன் அவர் தின்பண்டத்தைப் பற்றியே பேசினார் என்பது அகோரமணிக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது. அவளைக் கண்டதும் அவர் பாலகோபாலனின் மனநிலையை அல்லவோ அவர் அடைந்து விடுகிறார். குழந்தையின் புத்தி தின்பதும் விளையாடுவதும் தானே. அது பல வருடங்களாக அவள் செய்த நாமசெபத்தின் முதிர்ந்த நிலை. குருவே அவள் முன் குழந்தையாக மாறிப்போனார். இதற்கு இடம் காலம் என்பனவெல்லாம் தடையல்ல.
இந்த மன நிலையை கபீர் அழகாக சித்தரிக்கிறார்.
कहैं कबीर गुरु प्रेम बस, क्या नियरै क्या दूर ।
जाका चित्त जासों बसै, सो तेहि सदा हज़ूर ॥
பத்தி போதும் குருவுக்கு, கபீரா, அருகென்ன தூரமென்ன ?
சித்தம் அவனுள் தோய்ந்தால், உடனே அருகில் இருப்பான்
மாற்று
குருவுக்கு அருகோ தூரமோ கபீரா, பக்தி செய்தால் போதும்
உணர்வும் அவனுள் கரைந்தால், முன்னே நிற்பான் எப்போதும்
குருவும் இறைவனும் வேறு வேறு அல்ல. அவனே இவன், இவனே அவன். ஆகையால் அவனையே நினைத்திருப்பவர்களுக்கு அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இறையருள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் அவர்கள் வெளியே இல்லை. பக்தரின் உள்ளத்தின் உள்ளிருந்தே அல்லவோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையே “யானும் தானாய் ஒழிந்தானே” என்று நம்மாழ்வார் போற்றுகிறார்.
உணர்வில் உம்பர் ஒருவனை
அவன தருளால் உறல்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்.
அதுவும் அவனது இன்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்மற்
றுலப்பி லனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற வூர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே.
இந்த உடம்பு , உணர்வு, உயிர் மற்று உலகில் உள்ள எல்லா கவர்ச்சிகளும் பழுதுடையவையே என்ற உணர்வை என்னுள் தூண்டி அவனின்றி நானில்லை என்று ஆத்மாவில் நிலைப்பெறச் செய்து எனக்கும் அவனுக்கும் வித்தியாசமில்லாமல் செய்த இந்த அருள்கூட அவனது இன்னருளால் அன்றோ நடைபெறுகிறது என்று வியந்து பாடுகிறார் நம்மாழ்வார். ’உணர்வின் உள்ளே இருத்துதலைத்தான் தலையாயக் கடமையாக கபீரும் சொல்கிறார்.
ஜடாதரி வழங்கிய ராம்லாலா விக்ரகத்தில் தன் உணர்வை பதித்து குழந்தை ராமனை நேரில் தரிசித்து விளையாடி மகிழ்ந்த ராமகிருஷ்ணருக்கு அகோரமணியின் ஆன்ம சாதனை உள்ளம் கவர்ந்ததாயிற்று. அவளை எப்போதும் கோபாலேர்-மா [கோபாலனின் தாய்] என்றே குறிப்பிடுவார்.
நாத்திகம் பேசிய நரேந்தரிடம் அவளைக் கண்டு பேசுமாறு பணித்தார். கிராம மக்களுக்கே உள்ள எளிமையுடன் எழுத்தறிவில்லாத அகோரமணி குருதேவரின் அருளைக் கூறக்கூற நரேனுக்கு கண்ணில் நீர் பெருகியது. அவள் சொல்வது யாவும் சத்தியம் என்று அவர் உள்ளம் சொல்லியது. இறைவன் அன்பருக்கு எப்போதும் எளியவனே என்ற உண்மை புரிந்தது. அவளுடைய கடைசி காலம் வரை விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா அவளுக்கு பணிவிடை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[ஆதாரம் : Saints & Mystics, Sri Ramakrishna Math, Mylapore Chennai -ISBN 81-7823-319-3 ]
-----------------------
பல வருடங்களுக்கு முன் இரண்டு முறை கொல்கத்தா சென்றும் தட்சிணேஸ்வரத்திற்கு செல்ல முடியவில்லையே என்ற மனக்குறை இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக ஒரு கருத்தரங்கில் பங்கு கொள்ள அழைப்பு வந்தபோது தட்சிணேஸ்வரம் சென்று அந்த மகான் புழங்கிய புண்ணிய பூமியை வணங்கி வந்தேன். அவர் வாழ்ந்த அறைக்குள் பலரும் மௌனமாக தியானத்தில் இருந்தனர். நானும் சில நிமிடங்கள் அமர்ந்து அங்கிருந்த அமைதியை உள்வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். நம்மாழ்வார் சொல்வது போல அதுவும் அவனது இன்னருளே. உழைப்புக்கு ஏற்ற பலன்தானே கிடைக்கும்.
எனக்குள்ள குரு பலம் இதுதான் போலும். :))
இன்று ராமகிருஷ்ண ஜெயந்தி. அரவிந்தாசிரம ஸ்ரீ அன்னையின் ஜெயந்தியும் கூடவே வருகிறது. யாவருக்கும் குரு அருள் பெருகட்டும் என வேண்டிக்கொள்கிறேன். சில தட்சிணேஸ்வரத்து படங்கள் உங்களுக்காக.
நம்முடைய வாழ்க்கையும் இந்த பறவைகளைப் போலவே அறியாமையில் கழிந்து போகுமோ !
ஒரு சிலருக்கோ வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே குரு அருள் துளிர் விடத் தொடங்குகிறது. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் அகோரமணி தேவி. இளம் வயதிலேயே கணவனை இழந்திருந்த அவளுக்கு ஒரு வைஷ்ணவ குரு மூலமாக கோபால மந்திர உபதேசம் கிடைத்து. பால கோபாலனே அவளுக்கு பிடித்த தெய்வம். குழந்தைப் பேறு வாய்க்க இயலாத அவளுக்கு குட்டி கிருஷ்ணன் லீலைகளைக் கேட்பதே ஆனந்தப் பொழுது போக்கு. அதனால் கோபாலனின் மந்திரமே அவள் வாழ்க்கைக்கு பிடிப்பாயிற்று. அவளுடைய அண்ணன் நீல்மாதவ் பட்டாச்சாரியா பணியாற்றிய ராதாமாதவ் கோவிலுக்கு தினமும் வந்து சிறு சிறு கைங்கரியங்கள் செய்வது அங்கேயே அமர்ந்து வெகு நேரம் செபம் செய்வது என வழக்கப்படுத்திக் கொண்டாள்.
ராதா மாதவ் கோவிலை நிர்வகித்த கோவிந்த தத்தரின் மனைவிக்கு அகோரமணியின் எளிமை, மனத்தூய்மை மிகவும் பிடித்துப் போனது. அதனால் அவளை கோவிலினுள்ளே இருந்த ஒரு சிறிய அறையில் வசிக்குமாறு அழைப்பு விடுத்தாள். அடுத்த முப்பது வருடங்களுக்கு அதுவே அவளது வாசஸ்தலமாகியது. இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசம் சத்சங்கத்திற்கு தடையாகவில்லை. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து தியானம் செபம் செய்வது அகோரமணி தேவிக்கு வெகு இயல்பாக கைகூடியது. சில நாட்கள் இரவு வெகு நேரம் வரையிலும் கோபாலனின் நாமசெபத்தில் தன்னை மறந்து ஈடுபட்டதுண்டு.
குருபலம் உடையவர்களுக்கு நாட்கள் அப்படியே போய்விடுமா என்ன!
கமார்ஹட்டியில் வசித்த இந்த பெண்மணிகளுக்கு தட்சிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரைப் பற்றி யாரோ சொல்லவே அவரை சந்திக்கும் ஆர்வம் பற்றிக் கொண்டது. இவர்களைக் கண்ட மாத்திரத்திலேயே அன்புடன் அவர்களை வரவேற்றார் குருதேவர். அவரே சில பாடல்களைப் பாடி அவர்களது மனதை கொள்ளை கொண்டார். அவர்களை அடிக்கடி வந்து போகும்படி அன்பாய் அழைப்பும் விடுத்தார். காந்தம் இரும்பை ஈர்க்கத் தொடங்கியது.
சில நாட்களுக்குள் அவரை சந்திக்கும் ஆர்வம் அதிகமாகவே கடையில் சிறிது தின்பண்டம் வாங்கிக் கொண்டு குருதேவரை அடைந்து நமஸ்கரித்தாள். தயக்கத்துடன் தின்பண்டங்களை அவர் முன் வைப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே உரிமையுடன் அதை பறித்துக் கொண்டு ராமகிருஷ்ணர் சுவைக்கத் தொடங்கினார். அதை பாராட்டியதுடன் அடுத்த முறை வரும்போது தேங்காய் பர்பி நீயே செய்து கொண்டு வா என்று அன்புடன் கட்டளையிட்டார். தேங்காய் பர்பிக்கு பிறகு லட்டுக்கு ஆசைப்படுவது அதற்கப்புறம் வேறொரு தின்பண்டம் என்றவாறு ஒவ்வொரு முறையும் அவளிடம் வெறும் தின்பதை பற்றியே பேச்சு சுற்றி சுற்றி வந்தது. ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. அகோரமணிக்கு ஏமாற்றம் ஏற்படத் துவங்கியது. தனக்கு ஆன்மீக சாதனையில் வழிகாட்டுவார் என்றால் இந்த மனிதர் எப்போதும் தின்பதைப் பற்றியே பேசுகிறாரே..இனிமேல் இவரை சந்திப்பதில் அர்த்தமில்லை என்று நினைக்கத் தொடங்கினாள்.
ஒருநாள் அதிகாலையில் தன் தியானத்தை முடித்து கண் திறந்தபோது அவளுக்கு பெரும் ஆச்சரியம். சற்று தூரத்தில் குருதேவர் வலது முஷ்டியை இறுகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். கனவா நிஜமா என்று ஊர்ஜிதம் செய்ய அவரைத் தொட முயற்சித்தபோது மாயமாய் மறைந்து போனார். அவர் இருந்த இடத்தில் இப்போது பாலகிருஷ்ணன் அதே வலது முஷ்டியை இறுகப் பிடித்தவாறு அவளை நோக்கி ஓடி வந்தான். தின்பதற்கு வெண்ணெய் கொடு என்றான். விடியலுக்கு காத்திருக்கும் இருட்டில் அந்த ஏழை வெண்ணெய்க்கு எங்கு போவாள். அவனோ விடுவதாயில்லை.அடுக்கப்பட்டிருந்த சட்டிகளை துழாவிக் கிடைத்த பிட்டு மாவை தேங்காயும் சர்க்கரையும் சேர்த்து உருண்டை பிடித்து கொடுத்தாள். அதுவே போதும் என்பது போல் தின்று விட்டு விளையாடத் தொடங்கி விட்டான். அகோரமணி செபம் செய்ய அமர்ந்தால் அவளுடைய செபமாலையை பறித்துக் கொண்டு ஓடுவது, அவளை அமர விடாமல் தன்னுடன் விளையாட அழைப்பது, கூச்சலிட்டுக்கொண்டு அறைக்குள்ளே சுற்றி சுற்றி வருவது என்பதாக அகோரமணியின் இஷ்ட தெய்வம் அவள் முன்னே ஓடியாடத் தொடங்கினான். அவளுக்கு தரையில் கால் பாவவில்லை. விடிந்ததும் கோபாலனைத் தூக்கிக் கொண்டு குருதேவரை காண ஓடினாள்.
அவரைக் கண்டதுமே மடியில் இருந்த கோபாலன் அவருள் மறைந்து போனான். ராமகிருஷ்ணரோ பாவசமாதியில் கோபாலனைப் போலவே தவழ்ந்து வந்து அவளது மடியில் படுத்துக் கொண்டார். தன்னை விட பதினான்கு வயது இளையவரான குருதேவரை வாத்ஸல்ய பாவத்துடன் அணைத்துக் கொண்டார் அகோரமணிதேவி. உடல் நினைவிருந்தால் தானே வயது, ஆண், பெண் என்ற வித்தியாசமெல்லாம். அந்த நேரத்தில் அது பெரும் உணர்வுக்குள்ளே தோய்ந்து போன இரு பெரும் ஆத்மாக்களின் சங்கமம். உடல் என்னும் கருவி உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் விடாது. அவளது கண்களிலிருந்து ஆறாய் நீர் பெருகி குருதேவரை நனைத்தது. குழந்தையற்ற தனக்கு தாய்மை பாசத்தை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை எண்ணி எண்ணி அவள் மனம் உருகியது. சிறிது நேரம் கழித்து குருதேவர் எழுந்து கட்டிலின் மீது அமர்ந்து கொண்டார். அவளது தலையை அன்புடன் நீவி கொஞ்சம் கொஞ்சமாக நினைவுலகுக்கு கொண்டு வந்தார். அன்றிலிருந்து அவளுடன் குட்டி கோபாலன் விளையாடுவது, நீர் கொண்டு வர அல்லது சுள்ளி பொறுக்கப் போகும்போது கூடவே வருவது, அவளுடைய கையையே தலையணையாகக் கொண்டு உறங்குவது என்பதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. தனக்கென குழந்தை ஒன்று இருந்திருந்திருந்தால் என்னென்ன இன்பம் கிட்டியிருக்குமோ அத்தனையும் குருதேவரின் அருளால் அவளுக்கு கிட்டியது. சில மாதங்களுக்குப் பிறகு ராமகிருஷ்ணர் அவளுக்குக் கொடுத்த அந்த காட்சியை சிறிது சிறிதாக குறைத்து விட்டார். மானுட உடல் ஒரு அளவுக்கு மேல் இத்தகைய நிலையில் நிலைக்க இயலாது என்பதை புரிய வைத்தார். அவளுக்கு தியானம் செபம் போன்றவை எதுவும் தேவையில்லை விட்டு விடலாம் என்று அறிவுறுத்தினார். பழக்கதோஷத்தால் விட முடியாவிட்டால் குருதேவருக்காக செய் என்ற வழிமுறையையும் சொல்லிக் கொடுத்தார்.
ஒவ்வொருமுறையும் குருதேவரை சந்திக்கப் போகும்போது ஏன் அவர் தின்பண்டத்தைப் பற்றியே பேசினார் என்பது அகோரமணிக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது. அவளைக் கண்டதும் அவர் பாலகோபாலனின் மனநிலையை அல்லவோ அவர் அடைந்து விடுகிறார். குழந்தையின் புத்தி தின்பதும் விளையாடுவதும் தானே. அது பல வருடங்களாக அவள் செய்த நாமசெபத்தின் முதிர்ந்த நிலை. குருவே அவள் முன் குழந்தையாக மாறிப்போனார். இதற்கு இடம் காலம் என்பனவெல்லாம் தடையல்ல.
இந்த மன நிலையை கபீர் அழகாக சித்தரிக்கிறார்.
कहैं कबीर गुरु प्रेम बस, क्या नियरै क्या दूर ।
जाका चित्त जासों बसै, सो तेहि सदा हज़ूर ॥
பத்தி போதும் குருவுக்கு, கபீரா, அருகென்ன தூரமென்ன ?
சித்தம் அவனுள் தோய்ந்தால், உடனே அருகில் இருப்பான்
மாற்று
குருவுக்கு அருகோ தூரமோ கபீரா, பக்தி செய்தால் போதும்
உணர்வும் அவனுள் கரைந்தால், முன்னே நிற்பான் எப்போதும்
குருவும் இறைவனும் வேறு வேறு அல்ல. அவனே இவன், இவனே அவன். ஆகையால் அவனையே நினைத்திருப்பவர்களுக்கு அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இறையருள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் அவர்கள் வெளியே இல்லை. பக்தரின் உள்ளத்தின் உள்ளிருந்தே அல்லவோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையே “யானும் தானாய் ஒழிந்தானே” என்று நம்மாழ்வார் போற்றுகிறார்.
உணர்வில் உம்பர் ஒருவனை
அவன தருளால் உறல்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்.
அதுவும் அவனது இன்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்மற்
றுலப்பி லனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற வூர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே.
இந்த உடம்பு , உணர்வு, உயிர் மற்று உலகில் உள்ள எல்லா கவர்ச்சிகளும் பழுதுடையவையே என்ற உணர்வை என்னுள் தூண்டி அவனின்றி நானில்லை என்று ஆத்மாவில் நிலைப்பெறச் செய்து எனக்கும் அவனுக்கும் வித்தியாசமில்லாமல் செய்த இந்த அருள்கூட அவனது இன்னருளால் அன்றோ நடைபெறுகிறது என்று வியந்து பாடுகிறார் நம்மாழ்வார். ’உணர்வின் உள்ளே இருத்துதலைத்தான் தலையாயக் கடமையாக கபீரும் சொல்கிறார்.
ஜடாதரி வழங்கிய ராம்லாலா விக்ரகத்தில் தன் உணர்வை பதித்து குழந்தை ராமனை நேரில் தரிசித்து விளையாடி மகிழ்ந்த ராமகிருஷ்ணருக்கு அகோரமணியின் ஆன்ம சாதனை உள்ளம் கவர்ந்ததாயிற்று. அவளை எப்போதும் கோபாலேர்-மா [கோபாலனின் தாய்] என்றே குறிப்பிடுவார்.
நாத்திகம் பேசிய நரேந்தரிடம் அவளைக் கண்டு பேசுமாறு பணித்தார். கிராம மக்களுக்கே உள்ள எளிமையுடன் எழுத்தறிவில்லாத அகோரமணி குருதேவரின் அருளைக் கூறக்கூற நரேனுக்கு கண்ணில் நீர் பெருகியது. அவள் சொல்வது யாவும் சத்தியம் என்று அவர் உள்ளம் சொல்லியது. இறைவன் அன்பருக்கு எப்போதும் எளியவனே என்ற உண்மை புரிந்தது. அவளுடைய கடைசி காலம் வரை விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா அவளுக்கு பணிவிடை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[ஆதாரம் : Saints & Mystics, Sri Ramakrishna Math, Mylapore Chennai -ISBN 81-7823-319-3 ]
-----------------------
பல வருடங்களுக்கு முன் இரண்டு முறை கொல்கத்தா சென்றும் தட்சிணேஸ்வரத்திற்கு செல்ல முடியவில்லையே என்ற மனக்குறை இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக ஒரு கருத்தரங்கில் பங்கு கொள்ள அழைப்பு வந்தபோது தட்சிணேஸ்வரம் சென்று அந்த மகான் புழங்கிய புண்ணிய பூமியை வணங்கி வந்தேன். அவர் வாழ்ந்த அறைக்குள் பலரும் மௌனமாக தியானத்தில் இருந்தனர். நானும் சில நிமிடங்கள் அமர்ந்து அங்கிருந்த அமைதியை உள்வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். நம்மாழ்வார் சொல்வது போல அதுவும் அவனது இன்னருளே. உழைப்புக்கு ஏற்ற பலன்தானே கிடைக்கும்.
எனக்குள்ள குரு பலம் இதுதான் போலும். :))
இன்று ராமகிருஷ்ண ஜெயந்தி. அரவிந்தாசிரம ஸ்ரீ அன்னையின் ஜெயந்தியும் கூடவே வருகிறது. யாவருக்கும் குரு அருள் பெருகட்டும் என வேண்டிக்கொள்கிறேன். சில தட்சிணேஸ்வரத்து படங்கள் உங்களுக்காக.
நம்முடைய வாழ்க்கையும் இந்த பறவைகளைப் போலவே அறியாமையில் கழிந்து போகுமோ !
Tuesday, November 02, 2010
சிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2
ஆசிரியர் அறிமுகம் :
கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் வாசகர்களுக்கு, இப்பதிவின் ஆசிரியர் யாரென்று புரிந்து விடும்.
கவிதாயினி. அதனால் கவி அவர் பெயரில் உண்டு. அபிநயமும் வெகுவாகப் பிடித்திருப்பதால் அதையும் 'நய'மாகத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு விட்டார்.
கவிநயா என்ற பெயரில் அழகிய கவிதைகளையும், சிறுகதைகளையும், எண்ண ஓட்டங்களையும் தனது நினைவின் விளிம்பில் என்கிற வலைப்பூவில் பகிர்ந்து வரும் இவரது வாசகர் வட்டம் பெரியது. ஒரு காற்றுக்குமிழ் பற்றிய அவருடைய வரிகள் அவருடைய கவி உள்ளத்தைப் படம் பிடிக்கிறது.
அதே சமயம் குழந்தைகளுக்கானக் கவிதைகள் கூட எழுத வல்லவர்தான் என்பதை அவருடைய ஆனைப்பாரு பட்டாம்பூச்சி போன்ற கவிதைகளைப் படித்தாலேத் தெரியும். இரண்டு பாடல்களிலிருந்தும் சில மாதிரி ’நம்பிக்கைத் தரும்’ வரிகள் இங்கே :
.....
ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!
--------------
கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
நாளை உலகை இன்றே தரலாம்!!
குழந்தை மனம் உடையவர்களால்தான் குழந்தைகளுக்காகப் பாடமுடியும் என்று எப்போதோ படித்த நினைவு. "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"
இங்கே கவிநயா அவர்கள் நம் அழைப்பை ஏற்று கட்டுரை ஒன்றை வழங்கி இருப்பது பெருமகிழ்வு தருகிறது. அவருக்கு வணக்கங்கள்.
ஒரு சாது இருந்தாராம். பல வருடங்களாகச் சாதனை செய்ததில், அவருக்கு ஒரு அற்புதமான சித்தி கிடைத்ததாம். அதாவது, அவரால் தண்ணீரின் மேல் அநாயாசமாக நடக்க முடியுமாம். அதைப் பற்றி அவருக்கு ஏகப் பெருமையாம்.
ஒரு நாள் இவர் கங்கைக் கரையில் காத்துக் கொண்டிருந்த இன்னொரு சாதுவைப் பார்த்தாராம். “என்ன இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.
அவரும், “கரையைக் கடக்க வேண்டும். படகுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாராம்.
உடனே நம் சாது, “ப்பூ… இவ்வளவுதானா? நானாக இருந்தால் நடந்தே கடந்திருப்பேனே” என்றாராம், மகாப் பெருமையுடன்.
“அப்படியா!” என்று ஆச்சர்யப்பட்ட அந்த இன்னொரு சாது, “இந்த சித்தியைப் பெற உங்களுக்கு எத்தனை காலம் ஆயிற்று?” என்று கேட்டாராம்.
“சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயிற்று” என்று பதிலிறுத்தாராம் அவர்.
“இதனால் என்ன பயன் ஏற்பட்டது? உங்களால் இறைவனை அறிய முடிந்ததா? காலணா மிச்சம் பண்ணுவதற்காக, பாதி வாழ்நாளை வீணடித்து விட்டீர்களே.” என்று சொல்லி விட்டுப் போனாராம் மற்றவர்.எல்லோருக்கும் தெரிந்த கதைதான். விவரங்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கக் கூடும், இருந்தாலும் கதை சொல்ல வரும் கருத்தை மட்டுமே மனதில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இறைவனை அறிவதே பிறவியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைய உதவாத எதுவும் பயனற்றதே.
அனைத்து மகான்களுமே வலியுறுத்தும் கருத்து, இது.
ஸ்ரீராமகிருஷ்ணரும் அடிக்கடி இதைப் பற்றி பேசியிருக்கிறார். நாம் இந்த உலகத்திற்கு எதற்காக வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரு மாந்தோப்பிற்கு மாம்பழம் சாப்பிடவெனப் போகிறோம். அங்கே போனதும் வந்த வேலையைக் கவனிக்காமல், அந்தத் தோப்பில் எத்தனை மரம், மரத்தில் எத்தனை கிளை, கிளையில் எத்தனை இலை, மரத்தில் எத்தனை பழம், இப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தோப்பின் சிறப்பு தெரியும்; ஆனால் அதனால் மாம்பழத்தின் ருசி எப்படித் தெரியும் என்பார்.
அதைப் போலத்தான் நாமும் பல விஷயங்களையும், இறைவனைப் பற்றியுமே கூட, அனுபவித்து அறிய முயலாமல், கற்று அறிவதில் மட்டுமே திருப்தி அடைந்து விடுகிறோம்.
நெய்யையே பார்த்திராத ஒருவருக்கு நெய்யின் ருசி எப்படி இருக்கும் என்று எப்படி விளக்க முடியும்? அதைப் பற்றி புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள முடியுமா? ஆனால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்து விட்டால் உடனே தெரிந்து விடுகிறது... இதுவும் குருதேவர் சொல்வதுதான்.
அதைப் போலத்தான் இறைவனும். அவன் படித்து அறியக் கூடியவன் அல்ல; உணர்ந்து அடைய வேண்டியவன் – இதுவும் அவனை அனுபவித்து அறிந்தவர்கள் கூறுவதுதான்.
வேதங்களையும் உபநிடதங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் இன்ன பிறவையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆனால் அவை எதற்காக ஏற்படுத்தப் பட்டனவோ, அதனை அடைய அந்த அறிவு பயன்படா விட்டால், அத்தனையும் கற்பதன் பயன்தான் என்ன?
வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தானே சொல்கிறார்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
அலுவலக வேலையாக நம்மை வெளியூர் அனுப்புகிறார்கள். வந்த வேலையை விட்டுவிட்டு ஜாலியாக ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் (நம்மூர் அரசாங்க உத்தியோகத்தைச் சொல்லவில்லை!). ஆனால்
நாம் பிறவி எடுத்ததன் காரணத்தை கவனிக்கா விட்டால் இந்த வேலையை விட்டு எங்கேயும் தப்பிச் செல்ல முடியாது! வந்த வேலையைக் கவனிக்கும் வரை திரும்பத் திரும்ப பிறந்து கொண்டே இருக்க வேண்டிதான் வரும்! ஜீரா ரொம்ப ருசி என்பதற்காக அதை மட்டும் சாப்பிட்டு விட்டு குலோப் ஜாமூனை சாப்பிடா விட்டால் எப்படி?!
அது சரி, குலோப் ஜாமூனை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியவில்லையே என்கிறீர்களா? அதற்கும் ஸ்ரீராமகிருஷ்ணர், கபீர், போன்ற அனைத்து மகான்களும் ஒரு சுலபமான வழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அதுவே நாமஜபம்.
கலியுகத்திற்கு மிகவும் உகந்தது நாமஜபமே என்று ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார்.
இதைப் பற்றி கபீர் சொன்ன ஈரடிகள், கபீரன்பரின் தமிழாக்கத்தில், இதோ:
(கபீர் இரண்டு அடிகளில் சொன்னதைச் சொல்ல, நமக்கு இத்தனை அடி வேண்டியிருக்கு!)
அன்னை அருளில் திளைக்கும் கவிநயா அவர்களின் எழுத்து மேன்மேலும் அருட்சுவையை கவிதையாகவும் கட்டுரையாகவும் பரப்பட்டும் என்று வேண்டி வாழ்த்துவோம்.
கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் வாசகர்களுக்கு, இப்பதிவின் ஆசிரியர் யாரென்று புரிந்து விடும்.
கவிதாயினி. அதனால் கவி அவர் பெயரில் உண்டு. அபிநயமும் வெகுவாகப் பிடித்திருப்பதால் அதையும் 'நய'மாகத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு விட்டார்.
கவிநயா என்ற பெயரில் அழகிய கவிதைகளையும், சிறுகதைகளையும், எண்ண ஓட்டங்களையும் தனது நினைவின் விளிம்பில் என்கிற வலைப்பூவில் பகிர்ந்து வரும் இவரது வாசகர் வட்டம் பெரியது. ஒரு காற்றுக்குமிழ் பற்றிய அவருடைய வரிகள் அவருடைய கவி உள்ளத்தைப் படம் பிடிக்கிறது.
அதே சமயம் குழந்தைகளுக்கானக் கவிதைகள் கூட எழுத வல்லவர்தான் என்பதை அவருடைய ஆனைப்பாரு பட்டாம்பூச்சி போன்ற கவிதைகளைப் படித்தாலேத் தெரியும். இரண்டு பாடல்களிலிருந்தும் சில மாதிரி ’நம்பிக்கைத் தரும்’ வரிகள் இங்கே :
.....
ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!
--------------
கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
நாளை உலகை இன்றே தரலாம்!!
குழந்தை மனம் உடையவர்களால்தான் குழந்தைகளுக்காகப் பாடமுடியும் என்று எப்போதோ படித்த நினைவு. "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"
இங்கே கவிநயா அவர்கள் நம் அழைப்பை ஏற்று கட்டுரை ஒன்றை வழங்கி இருப்பது பெருமகிழ்வு தருகிறது. அவருக்கு வணக்கங்கள்.
இனி கவிநயா அவர்களின் எழுத்து வண்ணம்
கற்றதனால் ஆய பயன்
ஒரு சாது இருந்தாராம். பல வருடங்களாகச் சாதனை செய்ததில், அவருக்கு ஒரு அற்புதமான சித்தி கிடைத்ததாம். அதாவது, அவரால் தண்ணீரின் மேல் அநாயாசமாக நடக்க முடியுமாம். அதைப் பற்றி அவருக்கு ஏகப் பெருமையாம்.
ஒரு நாள் இவர் கங்கைக் கரையில் காத்துக் கொண்டிருந்த இன்னொரு சாதுவைப் பார்த்தாராம். “என்ன இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.
அவரும், “கரையைக் கடக்க வேண்டும். படகுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாராம்.
உடனே நம் சாது, “ப்பூ… இவ்வளவுதானா? நானாக இருந்தால் நடந்தே கடந்திருப்பேனே” என்றாராம், மகாப் பெருமையுடன்.
“அப்படியா!” என்று ஆச்சர்யப்பட்ட அந்த இன்னொரு சாது, “இந்த சித்தியைப் பெற உங்களுக்கு எத்தனை காலம் ஆயிற்று?” என்று கேட்டாராம்.
“சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயிற்று” என்று பதிலிறுத்தாராம் அவர்.
“இதனால் என்ன பயன் ஏற்பட்டது? உங்களால் இறைவனை அறிய முடிந்ததா? காலணா மிச்சம் பண்ணுவதற்காக, பாதி வாழ்நாளை வீணடித்து விட்டீர்களே.” என்று சொல்லி விட்டுப் போனாராம் மற்றவர்.எல்லோருக்கும் தெரிந்த கதைதான். விவரங்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கக் கூடும், இருந்தாலும் கதை சொல்ல வரும் கருத்தை மட்டுமே மனதில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இறைவனை அறிவதே பிறவியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைய உதவாத எதுவும் பயனற்றதே.
அனைத்து மகான்களுமே வலியுறுத்தும் கருத்து, இது.
ஸ்ரீராமகிருஷ்ணரும் அடிக்கடி இதைப் பற்றி பேசியிருக்கிறார். நாம் இந்த உலகத்திற்கு எதற்காக வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரு மாந்தோப்பிற்கு மாம்பழம் சாப்பிடவெனப் போகிறோம். அங்கே போனதும் வந்த வேலையைக் கவனிக்காமல், அந்தத் தோப்பில் எத்தனை மரம், மரத்தில் எத்தனை கிளை, கிளையில் எத்தனை இலை, மரத்தில் எத்தனை பழம், இப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தோப்பின் சிறப்பு தெரியும்; ஆனால் அதனால் மாம்பழத்தின் ருசி எப்படித் தெரியும் என்பார்.
அதைப் போலத்தான் நாமும் பல விஷயங்களையும், இறைவனைப் பற்றியுமே கூட, அனுபவித்து அறிய முயலாமல், கற்று அறிவதில் மட்டுமே திருப்தி அடைந்து விடுகிறோம்.
நெய்யையே பார்த்திராத ஒருவருக்கு நெய்யின் ருசி எப்படி இருக்கும் என்று எப்படி விளக்க முடியும்? அதைப் பற்றி புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள முடியுமா? ஆனால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்து விட்டால் உடனே தெரிந்து விடுகிறது... இதுவும் குருதேவர் சொல்வதுதான்.
அதைப் போலத்தான் இறைவனும். அவன் படித்து அறியக் கூடியவன் அல்ல; உணர்ந்து அடைய வேண்டியவன் – இதுவும் அவனை அனுபவித்து அறிந்தவர்கள் கூறுவதுதான்.
வேதங்களையும் உபநிடதங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் இன்ன பிறவையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆனால் அவை எதற்காக ஏற்படுத்தப் பட்டனவோ, அதனை அடைய அந்த அறிவு பயன்படா விட்டால், அத்தனையும் கற்பதன் பயன்தான் என்ன?
வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தானே சொல்கிறார்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
அலுவலக வேலையாக நம்மை வெளியூர் அனுப்புகிறார்கள். வந்த வேலையை விட்டுவிட்டு ஜாலியாக ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் (நம்மூர் அரசாங்க உத்தியோகத்தைச் சொல்லவில்லை!). ஆனால்
நாம் பிறவி எடுத்ததன் காரணத்தை கவனிக்கா விட்டால் இந்த வேலையை விட்டு எங்கேயும் தப்பிச் செல்ல முடியாது! வந்த வேலையைக் கவனிக்கும் வரை திரும்பத் திரும்ப பிறந்து கொண்டே இருக்க வேண்டிதான் வரும்! ஜீரா ரொம்ப ருசி என்பதற்காக அதை மட்டும் சாப்பிட்டு விட்டு குலோப் ஜாமூனை சாப்பிடா விட்டால் எப்படி?!
அது சரி, குலோப் ஜாமூனை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியவில்லையே என்கிறீர்களா? அதற்கும் ஸ்ரீராமகிருஷ்ணர், கபீர், போன்ற அனைத்து மகான்களும் ஒரு சுலபமான வழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அதுவே நாமஜபம்.
கலியுகத்திற்கு மிகவும் உகந்தது நாமஜபமே என்று ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார்.
இதைப் பற்றி கபீர் சொன்ன ஈரடிகள், கபீரன்பரின் தமிழாக்கத்தில், இதோ:
செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே
அதனால், ஊரைச் சுற்றிக் கொண்டிருக்காமல், வந்த வேலையைக் கவனிப்போம்.
கவிநயான்னு பேர் வச்சுக்கிட்டு கவிதை சொல்லலைன்னா எப்படி, அப்படின்னு விருந்துக்கு அழைச்சவர் சொன்னதால…
இப்போ சொன்னதெல்லாம் சேர்த்து வச்சு…
இதோ ஒரு கவுஜ:
உலகெலாம் சுற்றி வந்து
உன்னிப்பாய்க் கற்பார் பலநூல்;
மொழியெலாம் கற்று வந்து
மழையெனப் பொழிவார் அறிவை;
கலையெலாம் கற்று வந்து
உலகெலாம் பரப்புவார் புகழை.
சாதனை பலசெய் தாலும்
பழவினை அழிவ தில்லை;
எத்தனை கற்றறிந் தாலும்
இறைவனேட் டறிவினி லில்லை.
உள்ளுக்குள் உறையும் அவனை
உணர்வினில் அறிய வேண்டின்
கள்ளெனச் சுவைக்கும் நாமம்
உள்ளத்தில் ஊறிட வேண்டும்.
இப்பொருள் அப்பொரு ளெல்லாம்
பொய்மையின் வடிவே ஆகும்;
மெய்ப்பொருள் அறிவது ஒன்றே
மனிதர்க்கு மெய்யறி வாகும்!
உன்னிப்பாய்க் கற்பார் பலநூல்;
மொழியெலாம் கற்று வந்து
மழையெனப் பொழிவார் அறிவை;
கலையெலாம் கற்று வந்து
உலகெலாம் பரப்புவார் புகழை.
சாதனை பலசெய் தாலும்
பழவினை அழிவ தில்லை;
எத்தனை கற்றறிந் தாலும்
இறைவனேட் டறிவினி லில்லை.
உள்ளுக்குள் உறையும் அவனை
உணர்வினில் அறிய வேண்டின்
கள்ளெனச் சுவைக்கும் நாமம்
உள்ளத்தில் ஊறிட வேண்டும்.
இப்பொருள் அப்பொரு ளெல்லாம்
பொய்மையின் வடிவே ஆகும்;
மெய்ப்பொருள் அறிவது ஒன்றே
மனிதர்க்கு மெய்யறி வாகும்!
(கபீர் இரண்டு அடிகளில் சொன்னதைச் சொல்ல, நமக்கு இத்தனை அடி வேண்டியிருக்கு!)
கபீரன்பர் அவர்கள் அளித்த வாய்ப்பிற்கு நன்றிகளுடன்…
அன்புடன்,
கவிநயா
----------------------------------------
மாம்பழத்தில் ஆரம்பித்து நெய், குலாப்ஜாமூன், ஜீரா வரை தித்திப்புச் சுவைகளை அள்ளித் தெளித்து விட்ட கவிநயா அவர்கள் கடைசியில் மனிதனுக்கு வேண்டிய 'கள்' ளையும் விட்டுவைக்கவில்லை :)))
இடுகை முழுவதும் தித்திக்கக் காரணம் இல்லாமல் இருக்க முடியாது.
இந்த வாரம் தீபாவளி !
அவருக்கும் வாசகர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்னை அருளில் திளைக்கும் கவிநயா அவர்களின் எழுத்து மேன்மேலும் அருட்சுவையை கவிதையாகவும் கட்டுரையாகவும் பரப்பட்டும் என்று வேண்டி வாழ்த்துவோம்.
Sunday, April 13, 2008
பெருங்காய டப்பா-பெருகிவரும் வாசனை
மதுர்பாபு என்று அன்புடன் அழைக்கப்பட்ட மதுராநாதர் இராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவர். கிருஹஸ்தர்.அவரிடம் இராமகிருஷ்ணருக்கு அளவற்ற அன்பு இருந்தது. இருந்த போதிலும் நரேந்தரையும் மற்ற பிரம்மச்சாரி சிஷ்யர்களையும் மதுர்பாபு போன்ற கிருஹஸ்தர்களுடன் அளவுக்கு அதிகமாக உறவு பாராட்ட வேண்டாம் என்று அவர் எச்சரித்து வைத்திருந்தார்.
இதைக் கேள்விப்பட்ட மதுராநாதருக்கு பெரும் வருத்தம் உண்டாயிற்று. தன் மதிப்பிற்குரிய குருவிடமே அதற்கான காரணத்தை கேட்டார். “இதோ பார்! உனது
இல்லத்தில் பெருங்காய டப்பா வைத்திருக்கிறாயல்லவா. அதில் உள்ள பெருங்காயத்தை காலி செய்துவிட்டாலும் வெகு நாட்களுக்கு அதன் வாசனை போகாது. அதில் பின்னர் வேறு எந்த பொருளை வைத்தாலும் அதற்கும் அதன் வாசனை ஒட்டிக்கொண்டு விடும். உன் மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது எனினும் உனக்குள் இருக்கும் உலகத் தொடர்பான வாசனைகள் உன்னையறியாமல் பேச்சிலும் செயலிலும் வெளிப்படும் வாய்ப்புண்டு. அதன் தாக்கம் பிறரிடமும் ஏற்படக்கூடும். ஆகையால் ஆன்மீகத்தில் நீ பின்பற்ற வேண்டிய வழிமுறைகளே வேறானவை. நரேன் போன்றவர்களின் முறையே வேறானவை என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்” என்று விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மதுராநாதரும் சமாதானம் அடைந்தார்.
மருத்துவத்துறையில் ரணச்சிகிச்சை செய்யும் அறையிலோ, உணவு பதனப்படுத்தும் தொழிலிலோ வெளிக் காற்றிலிருந்து மாசு உட்புகாவண்ணம் அறைக்குள்ளே சற்றே உயர் அழுத்த சுத்திகரிகப்பட்ட காற்றை (sterile air) செலுத்தி அதிக அழுத்தத்தில் (positive pressure) வைத்திருப்பர். இதனால் சுத்திகரிக்கப்பட்ட காற்று வெளியே தப்பிச் செல்லுமே அன்றி மாசடைந்த காற்று உட்புக முடியாது. மேற்கொண்டிருக்கும் செயலுக்கு ஏற்ப 'பல மட்ட தரக்கட்டுப்பாடுகள்' சுத்திகரிக்கப் பட்ட காற்றுக்கும் உண்டு. அந்த தரத்தை நிறுவுவதற்கு பல லட்சங்களை நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் செலவழிக்கின்றன.
தன்னுடைய சிஷ்யர்கள் விஷயத்தில் ராமகிருஷ்ணர் மேற்கொண்டதும் அத்தகைய ஒரு தரக் கட்டுபாட்டு செயல் தான் என்பதை புரிந்து கொண்டால் அதில் தவறேதும் காணமுடியாது.
நம் 'பெரும் காயத்துள்' நாமே ஏற்படுத்திக்கொண்டுள்ள வாசனைகளின்(வினைப்பதிவுகள்) பலத்தைப் பற்றி எவ்வளவு எளிமையான விளக்கம்! அது ஜென்ம ஜென்மங்களாகத் தொடர்வது. ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களையும் பழக்கங்களையும் களையச் செய்ய வேண்டிய செயல்கள் தான் ஆன்மீக சாதனையின் பெரும் அங்கம்.
அதனாலேயே பூஜை புனஸ்காரங்களை எந்த மகான்களும் நிராகரிக்கவில்லை.மனம் முழுமையாக அதில் ஈடுபட்டு இருக்கும் அளவும் பலவித விரும்பத்தகாத விஷயங்களிலிருந்து விலகியிருக்க வாய்ப்பு கூடுகிறது. இதை ஒருவகையில் மேலே கண்ட positive pressure எனலாம்.
ஆனால் விரதங்கள் பூஜைகளினாலேயே ஒருவன் மனம் சுத்தி அடைவதில்லை. அகங்காரம் என்னும் மாயை உடலளவிலாலான குற்றங்களைத் தாண்டி மன அளவில் ஆன்மீக உயர்வை தடுக்கும் பல தவறுகளை செய்து கொண்டே இருக்கிறது. மனம் விவேகத்தின் பலமிழந்து புத்தியை மறைத்து அஞ்ஞான இருளில் உழல்கிறது.
மனோ-வாக்-காயம் இவைகளிடையே ஒற்றுமை இல்லாது செய்யப்படும் நம் பூஜைகள் அர்த்தமற்றவை ஆகின்றன.
கையொன்று செய்ய விழிஒன்று
நாடக் கருத்து ஒன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாஒன்று
பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவி ஒன்று
கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்
வாய் வினை தீர்த்தவனே (திரு ஏகம்ப மாலை)
என்பதாக பட்டினத்தார் வெகுவான ஜனங்கள் செய்யும் பூஜையின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.
இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் கபீர் விளக்குகிறார்.
न्हाये धोये क्या हुआ, जो मन का मैल न जाय ।
मीन सदा जल में रहै,धोये बास न जाय ॥
ந்ஹாயே தோயே க்யா ஹுவா, ஜோ மன் கா மைல் ந ஜாய் |
மீன் ஸதா ஜல் மே ரஹை, தோயே பாஸ் ந ஜாய் ||
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்கலையே இவர்தம் உள் அழுக்கும்
தீராது நீரதனில் திளைத்தென்ன நீங்கலையே மீனதனின் துர்கந்தம்
(மடி உடுப்பு= ஆசார உடுப்பு)
மாற்று:
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்காவே இவர்தம் உள்ளழுக்கும்
நீரதனில் முக்காலும் திளைத்தென்ன, நீங்காதே மீனதனின் துர்கந்தம்
மீனுக்கு தன் துர்கந்தத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அது எப்போதும் போல் நீரில் தீராது நீந்திக் கொண்டே இருக்கிறது. மீனிடமிருந்து வரும் வாடையை துர்கந்தம் என்று வகைப்படுத்தியிருப்பவர்கள் மனிதர்கள்தான். அது போல் சாதாரணமான வாழ்க்கை நடத்தி வரும் நம்மைப் போன்றவர்கள் ஜன்மாந்திர வாசனைகளால் வெளிப்படுத்தும் உலகியல் ஆசாபாசங்கள் ஞானிகளை பொறுத்தவரை துர்கந்தமாகவே இருக்கிறது. ஆகவே தான் நமக்கு அவை பெரிதாக தோன்றாவிடினும் இராமகிருஷ்ணர் போன்ற ஞானிகள் தம்மை அண்டி வருபவரை மிக சுலபமாக தரம் பிரித்து விடுகிறார்கள்.
நம்முடைய வெளி வேஷங்களால் அவர்களை மெச்ச வைக்க முடியாது.
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே (தி.ம.1655)
என்கிறது திருமந்திரம். மனதளவில் ஆழ்ந்த பக்தியில்லாமல் உலகோர் மெச்சுவதற்காக ஆடம்பரமான பூஜைகளை செய்வதும்,விருந்துகள் படைப்பதும் உண்மையான பக்தியின் லட்சணமல்ல. அளவுக்கு மிஞ்சும் போது பக்தியை தூண்டுவதற்கு பதிலாக வெறுப்பையே தூண்டும். உட்பொருள் அறியாது செய்யப்படும் எல்லா செயல்களுக்கும் இது பொருந்தும்.
'ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்' எனப்படும் நிலை எண்ணத்தூய்மை இல்லாமல் முடியாது. மனதை சுத்திகரிப்பது என்பது மிகக் கடினமான பயிற்சி.
துணி வெளுக்க மண்ணுண்டு
தோல் வெளுக்க சாம்பலுண்டு
மனம் வெளுக்க என்ன உண்டு
எங்கள் முத்து மாரி எங்கள் முத்துமாரி
என்று பாரதி பாடுவதும் அதே காரணத்தினால் தான்.
மனம் வெளுப்பதற்கு கபீரும் பிறஞானிகளும் சொல்லும் ஒரே வழி நாமஸ்மரணை ஒன்றுதான்.
“மூச்சு மூச்சிலும் செபி நாமம், முயல்வதற்கில்லை வேறெதுவும்” என்று அவர் சொல்லியதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
மீண்டும் அந்த கருத்தை, நீரை விட்டு வெளியே வந்துவிட்ட மீனின் துடிப்பிற்கு ஒப்பிட்டு அது போல் நாமசெபம் முடியாமல் போனால் மனம் நிலைகொள்ளாது தவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
सुमरण से मन लाइए, जैसे पानी बिन मीन ।
प्राण तजे बिन बिछडे ,सन्त कबीर कह दीन ॥
சுமரன் ஸே மன் லாயியே, ஜைஸே பானீ பின் மீன் |
ப்ராண் தஜே பின் பிச்டே, ஸ்ன்த் கபீர் கஹ் தீன் ||
செபிமின் மந்திரம் மனமுய்ய, நீர் விட்டு அகலிய மீன் போலே
தவித்து உயிர் விடும் நீரின்றி, தெளிமின் தீனன் கபீர் போலே
(உய்ய = உயிர்வாழ்தல்,தப்பிப் பிழைத்தல்; தீனன்= ஏழை)
மாற்று:
மந்திரம் வேண்டும் மனமுய்ய, மீனுய்ய வேண்டும் நீரும்
நீரின்றி நிலைக்குமோ உயிரும், உரைப்பனே ஏழை கபீரும்.
மனம் செய்யும் அவலங்களிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் நாமஸ்மரணைதான் கைகொள்ள வேண்டிய சுலபமான வழி. அதுவே மன மாசுகளை தூரவிரட்டும் positive pressure.
வாசகர்களுக்கும் சகபதிவாளர்கள் அனைவருக்கும் சர்வதாரி வருட புத்தாண்டு வாழ்த்துகள்
இதைக் கேள்விப்பட்ட மதுராநாதருக்கு பெரும் வருத்தம் உண்டாயிற்று. தன் மதிப்பிற்குரிய குருவிடமே அதற்கான காரணத்தை கேட்டார். “இதோ பார்! உனது
இல்லத்தில் பெருங்காய டப்பா வைத்திருக்கிறாயல்லவா. அதில் உள்ள பெருங்காயத்தை காலி செய்துவிட்டாலும் வெகு நாட்களுக்கு அதன் வாசனை போகாது. அதில் பின்னர் வேறு எந்த பொருளை வைத்தாலும் அதற்கும் அதன் வாசனை ஒட்டிக்கொண்டு விடும். உன் மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது எனினும் உனக்குள் இருக்கும் உலகத் தொடர்பான வாசனைகள் உன்னையறியாமல் பேச்சிலும் செயலிலும் வெளிப்படும் வாய்ப்புண்டு. அதன் தாக்கம் பிறரிடமும் ஏற்படக்கூடும். ஆகையால் ஆன்மீகத்தில் நீ பின்பற்ற வேண்டிய வழிமுறைகளே வேறானவை. நரேன் போன்றவர்களின் முறையே வேறானவை என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்” என்று விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மதுராநாதரும் சமாதானம் அடைந்தார்.
மருத்துவத்துறையில் ரணச்சிகிச்சை செய்யும் அறையிலோ, உணவு பதனப்படுத்தும் தொழிலிலோ வெளிக் காற்றிலிருந்து மாசு உட்புகாவண்ணம் அறைக்குள்ளே சற்றே உயர் அழுத்த சுத்திகரிகப்பட்ட காற்றை (sterile air) செலுத்தி அதிக அழுத்தத்தில் (positive pressure) வைத்திருப்பர். இதனால் சுத்திகரிக்கப்பட்ட காற்று வெளியே தப்பிச் செல்லுமே அன்றி மாசடைந்த காற்று உட்புக முடியாது. மேற்கொண்டிருக்கும் செயலுக்கு ஏற்ப 'பல மட்ட தரக்கட்டுப்பாடுகள்' சுத்திகரிக்கப் பட்ட காற்றுக்கும் உண்டு. அந்த தரத்தை நிறுவுவதற்கு பல லட்சங்களை நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் செலவழிக்கின்றன.
தன்னுடைய சிஷ்யர்கள் விஷயத்தில் ராமகிருஷ்ணர் மேற்கொண்டதும் அத்தகைய ஒரு தரக் கட்டுபாட்டு செயல் தான் என்பதை புரிந்து கொண்டால் அதில் தவறேதும் காணமுடியாது.
நம் 'பெரும் காயத்துள்' நாமே ஏற்படுத்திக்கொண்டுள்ள வாசனைகளின்(வினைப்பதிவுகள்) பலத்தைப் பற்றி எவ்வளவு எளிமையான விளக்கம்! அது ஜென்ம ஜென்மங்களாகத் தொடர்வது. ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களையும் பழக்கங்களையும் களையச் செய்ய வேண்டிய செயல்கள் தான் ஆன்மீக சாதனையின் பெரும் அங்கம்.
அதனாலேயே பூஜை புனஸ்காரங்களை எந்த மகான்களும் நிராகரிக்கவில்லை.மனம் முழுமையாக அதில் ஈடுபட்டு இருக்கும் அளவும் பலவித விரும்பத்தகாத விஷயங்களிலிருந்து விலகியிருக்க வாய்ப்பு கூடுகிறது. இதை ஒருவகையில் மேலே கண்ட positive pressure எனலாம்.
ஆனால் விரதங்கள் பூஜைகளினாலேயே ஒருவன் மனம் சுத்தி அடைவதில்லை. அகங்காரம் என்னும் மாயை உடலளவிலாலான குற்றங்களைத் தாண்டி மன அளவில் ஆன்மீக உயர்வை தடுக்கும் பல தவறுகளை செய்து கொண்டே இருக்கிறது. மனம் விவேகத்தின் பலமிழந்து புத்தியை மறைத்து அஞ்ஞான இருளில் உழல்கிறது.
மனோ-வாக்-காயம் இவைகளிடையே ஒற்றுமை இல்லாது செய்யப்படும் நம் பூஜைகள் அர்த்தமற்றவை ஆகின்றன.
கையொன்று செய்ய விழிஒன்று
நாடக் கருத்து ஒன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாஒன்று
பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவி ஒன்று
கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்
வாய் வினை தீர்த்தவனே (திரு ஏகம்ப மாலை)
என்பதாக பட்டினத்தார் வெகுவான ஜனங்கள் செய்யும் பூஜையின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.
இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் கபீர் விளக்குகிறார்.
न्हाये धोये क्या हुआ, जो मन का मैल न जाय ।
मीन सदा जल में रहै,धोये बास न जाय ॥
ந்ஹாயே தோயே க்யா ஹுவா, ஜோ மன் கா மைல் ந ஜாய் |
மீன் ஸதா ஜல் மே ரஹை, தோயே பாஸ் ந ஜாய் ||
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்கலையே இவர்தம் உள் அழுக்கும்
தீராது நீரதனில் திளைத்தென்ன நீங்கலையே மீனதனின் துர்கந்தம்
(மடி உடுப்பு= ஆசார உடுப்பு)
மாற்று:
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்காவே இவர்தம் உள்ளழுக்கும்
நீரதனில் முக்காலும் திளைத்தென்ன, நீங்காதே மீனதனின் துர்கந்தம்
மீனுக்கு தன் துர்கந்தத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அது எப்போதும் போல் நீரில் தீராது நீந்திக் கொண்டே இருக்கிறது. மீனிடமிருந்து வரும் வாடையை துர்கந்தம் என்று வகைப்படுத்தியிருப்பவர்கள் மனிதர்கள்தான். அது போல் சாதாரணமான வாழ்க்கை நடத்தி வரும் நம்மைப் போன்றவர்கள் ஜன்மாந்திர வாசனைகளால் வெளிப்படுத்தும் உலகியல் ஆசாபாசங்கள் ஞானிகளை பொறுத்தவரை துர்கந்தமாகவே இருக்கிறது. ஆகவே தான் நமக்கு அவை பெரிதாக தோன்றாவிடினும் இராமகிருஷ்ணர் போன்ற ஞானிகள் தம்மை அண்டி வருபவரை மிக சுலபமாக தரம் பிரித்து விடுகிறார்கள்.
நம்முடைய வெளி வேஷங்களால் அவர்களை மெச்ச வைக்க முடியாது.
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே (தி.ம.1655)
என்கிறது திருமந்திரம். மனதளவில் ஆழ்ந்த பக்தியில்லாமல் உலகோர் மெச்சுவதற்காக ஆடம்பரமான பூஜைகளை செய்வதும்,விருந்துகள் படைப்பதும் உண்மையான பக்தியின் லட்சணமல்ல. அளவுக்கு மிஞ்சும் போது பக்தியை தூண்டுவதற்கு பதிலாக வெறுப்பையே தூண்டும். உட்பொருள் அறியாது செய்யப்படும் எல்லா செயல்களுக்கும் இது பொருந்தும்.
'ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்' எனப்படும் நிலை எண்ணத்தூய்மை இல்லாமல் முடியாது. மனதை சுத்திகரிப்பது என்பது மிகக் கடினமான பயிற்சி.
துணி வெளுக்க மண்ணுண்டு
தோல் வெளுக்க சாம்பலுண்டு
மனம் வெளுக்க என்ன உண்டு
எங்கள் முத்து மாரி எங்கள் முத்துமாரி
என்று பாரதி பாடுவதும் அதே காரணத்தினால் தான்.
மனம் வெளுப்பதற்கு கபீரும் பிறஞானிகளும் சொல்லும் ஒரே வழி நாமஸ்மரணை ஒன்றுதான்.
“மூச்சு மூச்சிலும் செபி நாமம், முயல்வதற்கில்லை வேறெதுவும்” என்று அவர் சொல்லியதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
மீண்டும் அந்த கருத்தை, நீரை விட்டு வெளியே வந்துவிட்ட மீனின் துடிப்பிற்கு ஒப்பிட்டு அது போல் நாமசெபம் முடியாமல் போனால் மனம் நிலைகொள்ளாது தவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
सुमरण से मन लाइए, जैसे पानी बिन मीन ।
प्राण तजे बिन बिछडे ,सन्त कबीर कह दीन ॥
சுமரன் ஸே மன் லாயியே, ஜைஸே பானீ பின் மீன் |
ப்ராண் தஜே பின் பிச்டே, ஸ்ன்த் கபீர் கஹ் தீன் ||
செபிமின் மந்திரம் மனமுய்ய, நீர் விட்டு அகலிய மீன் போலே
தவித்து உயிர் விடும் நீரின்றி, தெளிமின் தீனன் கபீர் போலே
(உய்ய = உயிர்வாழ்தல்,தப்பிப் பிழைத்தல்; தீனன்= ஏழை)
மாற்று:
மந்திரம் வேண்டும் மனமுய்ய, மீனுய்ய வேண்டும் நீரும்
நீரின்றி நிலைக்குமோ உயிரும், உரைப்பனே ஏழை கபீரும்.
மனம் செய்யும் அவலங்களிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் நாமஸ்மரணைதான் கைகொள்ள வேண்டிய சுலபமான வழி. அதுவே மன மாசுகளை தூரவிரட்டும் positive pressure.
வாசகர்களுக்கும் சகபதிவாளர்கள் அனைவருக்கும் சர்வதாரி வருட புத்தாண்டு வாழ்த்துகள்
Subscribe to:
Posts (Atom)