பழைய திரைப்பட ப் பாடல் ஒன்று :
சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
இப்படி ஆயிரம் ஆயிரம் குணங்கள் எழுவது ஏன் ?
எப்படி ஆயிரமாயிரம் வர்ணங்கள் மூன்று அடிப்படை வர்ணங்களான (Primary colours) சிவப்பு மஞ்சள் நீலம் என்பனவற்றின் பலவித கலவைகளாக உருவெடுத்தனவோ அப்படியே தாமசம், ரஜசம் சத்துவம் என்ற மூன்று அடிப்படை குணங்களின் கலவைகளாக மனிதர்களின் ஆயிரம் குணங்களை கொள்ளலாம்.
Showing posts with label திருமந்திரம். Show all posts
Showing posts with label திருமந்திரம். Show all posts
Tuesday, December 26, 2017
Sunday, July 17, 2016
விளக்கில் விளங்கும் விளக்கவர்
மந்திரங்களில் சிறந்தது காயத்ரி. ஆண் பெண் வேற்றுமையின்றி எல்லோராலும் எக்காலத்தும் சொல்லப்படலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் அவர்கள் பண்பட்டவர்களாகவும் புத்தி கூர்மையுடனும் திகழ்வார்கள் என்றெல்லாம் போற்றாத ஆன்மீகக் குருக்களோ, சமயத் தலைவர்களோ கிடையாது எனலாம். அதன் அர்த்தம் புரிந்து கொண்டு மனம் ஒன்றி சொல்லும் போது அதன் பலன் பலமடங்கு பெருகிடும் என்றும் சொல்கின்றனர். புரிந்து கொள்ள அர்த்தம் என்று பார்த்தால்
“ஓம். யார் நம்
அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக”
என்பதாக வெகு எளிதாகவே இருக்கிறது.
ஆனால் பிரச்சனை
என்னவென்றால் ‘மனம் ஒன்றி’ நம்மால் சொல்ல முடியாமல் போவது தான். இதனால்தான் ஒருவேளை
அதன் மகிமை புலப்படாமல் போகிறதோ என்னவோ என்று தோன்றுகிறது.
பெரிய மஹான்களும், சத்தியம்
அறிந்த பெரியோர்களால் போற்றப்படும் ஒன்றின் பெருமை நமக்கு புரிபடாமல் போகும்போது குறை
நம்மிடம் தானே !
பல வருடங்களாக
மனதை நெருடிக் கொண்டிருக்கும் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியாமல் மனதை எப்படி
ஒன்ற வைப்பது?
இப்படி இருக்கும்
போது LIGHT MEDITATION பற்றிக் கேள்விப்பட்டு அதை கை கொள்ளலாம் என்று விவாதிப்போது ‘காலங்காலமா
சொல்ற காயத்ரிய விட்டுட்டு லைட் மெடிடேஷனாம்.
அதுக்கு மந்திரம் வேண்டாமாம். காயத்ரியில வர்ற ஒவ்வொரு சப்தத்துக்கும் ஒரு வைப்ரேஷன்
இருக்கு. நம்முடைய உடம்புல இருக்கிற அத்தனை நாடிகளையும் அது சுத்தப்படுத்துகிறது. அதை
விட்டுவிடுவதா?” என்று ஒரு குட்டு.
நம் தேடல்களுக்கு
ஒரு விடை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் காலம் உருண்டு கொண்டுதான் இருக்கிறது. ஆராய்ச்சி
புத்தியுள்ளவனுக்கு ஆன்மீகம் கிட்டாது என்ற சொல் வழக்கு சரிதான் போலும். எனக்கு ஆன்மீகம்
கைகூடவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் தேடி அலைவதினாலோ என்னவோ.
இந்நிலையில் ஞானதேவரின்
ஞானேஸ்வரியின் ஆங்கில மொழி பெயர்ப்பை வாசிக்க நேர்ந்த்து. ஞானேஸ்வரி என்பது பகவத் கீதைக்கு
மராட்டிய மொழியில் அவர் எழுதியுள்ள விளக்கம்.
அது எளிய பாடல்களாக பாமரர்களுக்கும் புரியும் வகையில் அன்றைய மொழி வழக்கில்
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. பகவத்கீதையின் ஒரு சுலோகத்திற்கு பல சுலோகங்களில்
விளக்கம் இருக்கும். அதில் பல எளிய உதாரணங்கள் இருக்கும்.
அவருடைய சகோதரர்கள் சகோதரியின் வாழ்க்கை சரிதம் மிக அற்புதமான பக்தி இலக்கியம் ஆகும்.
பகவத் கீதை அத்தியாயம்
18-ல் “பிரஹ்ம பூத:…” என்று ஆரம்பிக்கும் 54 ஆவது சுலோகத்தின் விளக்கமாக 39 செய்யுட்களில்
விளக்கம் (1091-1129) தந்திருக்கிறார். அதில் 1116 வது செய்யுளின் பொருள்* என் தேடலுக்கு விடை கொடுப்பது
போல் தோன்றியது.
“ it is the
light by which there is experience of the existence or non existence of the
world, just as our pure being on which experiencing of dream state or the
waking state takes place.”
[*Shri Dnyaneshwari by Diwakar Ghaisas : Published by Keshav Bhikaji Dhawale, Mumbai]
இதைத் தான் உள்ளே ஒளிரும் ஆத்மா என்று குறிப்பிடுகின்றனரோ !
அதற்கு உலகில் நடக்கும் எந்த விவகாரத்திலும் சம்பந்தம்
கிடையாது. அதே சமயத்தில் அது இல்லாமல் போனால் விவகாரமே கிடையாது.
ஞானதேவர் இதை ஒரு
விளக்கின் வெளிச்சத்துடன் தொடர்பு படுத்துகிறார். விளக்கின் ஒளி கொண்டு கூத்து நடக்கலாம்.
அல்லது திருடர்கள் தங்கள் பங்கை பிரித்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது
விளக்கின் ஒளி. அவர்கள் நடவடிக்களால் அது பாதிக்கப்படுவதில்லை. அது இருக்கும் வரை பலவித
நடப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது போய்விட்டால் யாவும் முற்றிலும் நின்று
போய்விடும்.
இப்பொழுது காயத்ரி
மந்திரத்தில் போற்றப்படும் அந்த சுடருக்கானத் தியானத்தின் பொருள் பிடிபட்டது போல் இருக்கிறது.
எந்த சுடரால் மூவுலங்களும் இயங்குகின்றனவோ அதே சுடரால் இந்த உடலின் இயக்கமும் நடக்கிறது.
அது எதனாலும் பாதிக்கப்படாத தன்மை உடையது. அந்த தன்மையை அடைவது தான் இந்த செபம் செய்வதின்
நோக்கம்.
.
எவனொருவன் தன்னைச்
சுற்றி நடக்கும் செயல்களால் நிலைகுலையாது சாட்சி பாவத்துடன் தடுமாற்றமில்லாமல் கடமைகளை
செய்ய முடிகிறதோ அவனே சிறந்த சாதகன். அதை சாதிக்கக்
கூடிய வழி காயத்ரி மந்திரத்தின் இந்த ”விளக்கின் சாட்சி” தாத்பர்யத்தில் மனம் ஒன்றினால்
சுலபமாகி விடும்.
தத்தளிப்பவன் கையிற்கு
பிடித்துக் கொள்ள கட்டை கிடைத்தது போலாயிற்று. இப்போது தினசரி
எண்ணங்கள் எது வேண்டுமானலும் செபத்தின் போது வரட்டுமே. அதை வெளிச்சத்தில் வேடிக்கை பார் என்று மனதிற்கு சொல்ல
முடிகிறது. ஏனெனில் அவ்வெளிச்சம் இல்லையென்றால் நாமே இல்லையே! அந்த எண்ணங்கள் நம்மை அடித்துக் கொண்டு போகாமல், நாம் அமர்ந்திருப்பதே செபத்திற்காக
என்று அதை இழுத்து வர முடிகிறது. இதைத் தொடர்து பயிற்சி செய்தால் செய்வோரின் முயற்சியின்
ஆழம் பொருத்து முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. .
இப்போது பகவத்கீதையின்
மூல சுலோகத்திற்குப் போவோம். (18-54)
“When he
becomes one with brahman, he is very peaceful in his consciousness: he does not
feel sorry about anything nor desires to get anything; he has equanimity towards
all Beings and thus he attains the supreme devotion for me”.
அதே தான் இது.
மிக அழகாக எளிமையாகச் சொல்லிவிட்டாரே ஞானதேவர் என்று தோன்றியது. அந்த சுடரை தியானம் செய்யச் செய்ய
வெளியிலே இருக்கும் இறைவன் உள்ளே சுத்த சித்துருவமாய் எம்பெருமானாய் ஒளிர்விடத் தொடங்குகிறான். அப்போது அவனுக்கு தேவைகள் இல்லை.
வள்ளலார் சொல்வது போல் எவ்வுயிரும் தம் உயிராய் எண்ணும் பக்குவம் வந்துவிடுகிறது. அதனால்
தான் அவரும் அந்த பரஞ்சோதியை அருட் பெருஞ்சோதியாய் போற்றியிருக்கிறார்.
இதே உண்மை ஸ்ரீ
ராமகிருஷ்ணரின் கதைகளினாலோ ஆதிசங்கர் மற்றும் எண்ணற்ற ஆசார்யர்களின் விவரணைகளாலோ ஏன்
பிடிபடாமல் போயிற்று? ஏனென்றால் கேள்விகள் இல்லாமல் விடைகள் மனதில் ஒட்டுவதில்லை. அவை
மறந்து போகக் கூடிய வெறும் விஷயங்களாகத் தான் இருக்கும்.
பசித்தவனுக்குத்தான்
உணவு ருசிக்கும். பசி எடுக்கையில் உணவு படைக்க அன்னையோ மனைவியோ வருவது போல ஞானப் பசியைத்
தீர்க்கவும் ஒரு குரு அவசியம். அந்த குருவின்
அவசியத்தை கபீர் கூறுகிறார்:
पीछे लागा जाई था, लोक वेद के साथी ।
आगैं थैं सतगुरु मिल्या, दीपक
दिया साथि ॥
பின்பற்றிச் சென்றேன் உலகோரை, வேதங்கள் சொல்லும் வழியிலே
என்பற்றித் தந்தார் குருவும், பயனுண்டு விளக்குக்கு வழியிலே
கபீர் சொல்வது ஞானவிளக்கு. குரு கொடுக்கும் ஞான விளக்கு
கைக்கு வந்த பின்னே எந்த பாதையில் சென்றாலும் வழி தவறாது குறி போய் சேரலாம். அந்த ஞான விளக்கு இல்லாமல் ஆன்மீகப் பயணம்
முடியாது.
வேறொருவர் சொல்கிறார் என்பதாலோ அல்லது வேதங்கள் அல்லது
கிரந்தம் இப்படி சொல்லியிருக்கிறதே என்றோ பிடிவாதம் பிடிக்கும் மனதுக்கு வழியில்
முன்னேற்றம் இருப்பதில்லை. ஏதேதோ அல்ப காரணங்களால் தடைபட்டு போகிறது. அந்த தடைகளை
களைந்து நமக்கு வழி காட்டுபவர் குரு. இதை திருமூலர் வரிகளிலும் காணலாம்.
விளக்கினை யேற்றி
வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே ( திருமந்திரம்1818)
ஞானம் என்னும் விளக்கை ஏற்றினால் அருவமான இறைவனைப் (வெளியைப்)
பற்றி அறியலாம். அப்படிப்பட்ட ஞானம் வந்த பின் பல பிறவிகளாக தொடர்ந்து வருகின்ற
கர்மவினையால் வரும் வேதனைகள் மறையும். அதற்குத் தேவை அதே ஞானம் உடைய ஒரு
வழிகாட்டி. அவர்கள் அந்த ஞானத்தைப் படைத்திருப்பதனாலேயே சுயம் பிரகாசிகள் –விளக்கில்
விளங்கும் விளக்கு அவர் தாமே !!
காயத்ரி மந்திரத்தை செபிப்பதால் நாடி சுத்தி ஏற்படும்
என்பதை விளக்கினின் முன்னே வேதனை மாறும் என்று திருமூலரும் உறுதி செய்கின்றாரோ !
இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது குரு ரவிசங்கர்
சொன்ன விளக்கம் ஒன்று whatsapp-ல் வந்தது. நிர்குண ஜோதி தியானத்தின் ஆராய்ச்சிகளின்
நடுவே சகுண உபாசனையும் அதே உண்மைக்கு இட்டுச்
செல்கிறது என்று புரிந்தது.
பாண்டு என்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும். ரங்கா என்பது
அரங்கம் அல்லது மேடை. எனவே பாண்டுரங்கா என்பது பஞ்சபூதங்களினால் அமைக்கப்பட்ட
இவ்வுலக மேடை. அடல் அல்லது விட்டல் என்றால் அசையாதிருப்பது, எல்லாவற்றையும்
ஆட்டிவைப்பவன். இயக்குனர் ஆனால் அவன் அதில் இல்லை. அவனே விட்டலன்.
எனவே பாண்டுரங்க விட்டலன் என்னும் போதும் அதே பரம்பொருள் சகுணமாக்
சுட்டிக்காட்டப்படுகிறது
ஜுலை 19 அன்று குரு பூர்ணிமையில், இந்நாட்டின் பெரும் குருமார்களின் தாள்
வணங்கி அவர்கள் அருள் என்றும் இவ்வுலகிற்கு வழி காட்டுவதாக என்று வேண்டிக் கொள்கிறேன்.
பின் குறிப்பு : சுப்பு தாத்தா ஏற்கனவே மேற்கண்ட கபீர்
ஈரடியை, ஜீவி ஐயாவின் அகல் விளக்கு அற்புதம் என்ற பதிவில் பின்னூட்டமாக
குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு நன்றிகள்.
எண்ணிக்கையில்
9 என்பது Divine Number என்று போற்றப்படுகிறது. இந்த பதிவின் போது எடுத்துக்காட்டானஅனைத்து குறிப்புகளின் இலக்கங்களின் கூட்டு 9 –ல் முடிவு பெற்றுள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
முதலில் கீதை 18 ஆம் அத்தியாயம். அடுத்து 54 வது சுலோகம். ஞானேஸ்வரியில் 1116 ஆவது
சுலோகம் கடைசியில் திருமூலரின் செய்யுள் 1818
எங்கிருந்தோ அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள் என்பது மட்டும்
புரிகிறது J
Friday, August 07, 2009
அரியவனோ எளியவனோ இறைவன் ?
அந்த காவியுடை சாது காட்டிலே அமர்ந்து கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார். தினமும் காலையும் மாலையும் நிலை கொள்ளாமல் தவிப்பதும் ஏதோ ஒரு வகைத் தேடலிலும் ஈடுபட்டிருந்ததை கவனித்த வேடன் ஒருவனுக்கு அவர் மேல் இரக்கம் பிறந்தது.
அவரை நெருங்கி “ஐயா தாங்கள் தேடுவது என்னவென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றான்.
அவருக்கோ சிரிப்பு வந்தது. மந்திர சித்தியைப் பற்றி அந்த வேடனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?
”உன்னால் முடியாதப்பா” என்று சுருக்கமாக பதில் உரைத்தார்.
முடியாது என்று அவர் சொன்னதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
“எனக்கு இந்த காட்டில் தெரியாத மரமோ செடியோ பிராணியோ கிடையாது. நீங்கள் தேடும் பொருளை அடையாளம் சொல்லுங்கள். மருந்துக்கான பூவா, இலையா அல்லது ஏதேனும் அரிய பொருளா சொல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறேன்.” என்று விடாமல் சொன்னான். அவன் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.
”நான் தேடுவது ஒரு விசித்திரமான மிருகம். அதற்கு சிங்கத்தின் தலை, மனிதனின் உடல், கூரிய நகங்கள். அடர்ந்த பிடரி. முடிந்தால் தேடிப் பிடித்து வா” என்று அனுப்பினார்.
“அட இப்படி ஒரு மிருகத்தை நான் கண்டதே இல்லையே ! அப்படி ஒன்று இருந்தால் அது இல்லாமல் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விசித்திரமான அந்த மிருகத்தைத் தேட ஆரம்பித்தான். அன்றைய பொழுதும் சாய்ந்தது. அடுத்த நாள் விடியும் பொழுது அந்த மிருகம் இன்று கிடைக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற முடிவோடு தேட ஆரம்பித்தான். நீரும் உணவும் இன்றி தேடி அலுத்து நிராசையின் விளிம்பில் இருந்தவனுக்கு திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.
அந்த திசையில் சென்றதுமே அந்த விசித்திர மிருகம் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. ”ஓ நீதானா அது” என்றபடியே சந்தோஷத்துடன் அருகேயிருந்த கொடிகளை அறுத்து அதைக் கட்டி தர தர வென்று இழுத்து வந்து முனிவர் முன் நிறுத்தினான். அந்த விசித்திர மிருகம் ஒரு நாயைப் போல இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது.
“ சாமி இதோ நீங்க தேடுற பிராணி” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.
சாதுவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்பது வேடனுக்கு புரியவில்லை. “இதோ ..இதோ” என்று மீண்டும் மீண்டும் அது நிற்கும் இடத்தைக் காட்டினான்.
அவன் தன்னம்பிக்கையோடு காட்டும் போது குழம்பிய மனதினராய் அவ்வேடனை பரிதாபமாகப் பார்த்தார். தன் கண்களை நம்புவதா அல்லது அந்த வேடனை நம்புவதா என்று புரியாமல் திகைத்தார். அப்போது சிங்கத்தின் கர்ச்சனை மட்டும் மிக அருகிலிருந்து கேட்டது. அந்த தபஸ்விக்கு உண்மை பளிச்செனப் புரிந்தது.
“பிரபோ இந்த எளியவனுக்கு காட்சி தரும் தாங்கள் என்னை கை விட்டுவிட்டீரே !” என்று கதறினார்.
“அப்பனே காலம் கனியும் போது உன்னிலும் என்னைக் காண்பாய்” என்று அசரீரியாய் பதில் வந்தது.
(மீதிக் கதையைப் பின்னர் பார்ப்போம்)
நமக்கு ஒரு குழப்பம். அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?
இவன் யார் பிடியில் அகப்படுவான் யார் பிடியில் சிக்கமாட்டான் என்பதைத் தீர்மானிக்க யாராலும் இயலாது. எனவே அவனுடைய நிலைப்பாடு இந்நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் அறுதியிட்டு கூற முடிவதில்லை.
அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது.
भारी कहौं तो बहु डरौं, हलका कहूं तौ झूठ ।
मैं का जाणौं राम कूं, नैनूं कबहूँ न दीठ ॥
அரியவன் என்னலும் தயக்கம்,எளியவன் என்பதும் பொய்யே
அறியேன் யானும் இராமனை, விழிகள் கண்டது மில்லையே
(’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே தவிர இறைவனைக் குறித்த பயம் அல்ல. தமிழாக்கத்திற்கு தயக்கம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது )
அலகிலா விளையாட்டு உடையான் அவனடி சரணாவதைத் தவிர இறைவன் போக்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.
சாதுவிற்கு அவன் எளியவன் அல்லன். ஆனால் வேடனின் பார்வையில் அவன் அரியனும் அல்லன்.
ஆகையால்தான் ” அவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இராமனை நான் பார்த்ததும் இல்லை”என்று அவன் மகிமையை உணர்த்த இயலாதவராய் அடக்கத்தோடு உரைக்கிறார் கபீர்.
யாருக்கு எது நன்மை செய்யும் அதை எப்போது தரவேண்டும் என்னும் இறைவன் சித்தத்தை யாராலும் அறிய முடியாது என்பதை திருமூலரும் கூறுகிறார்.
அகன்றார் வழிமுதல் ஆதி பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்
சிவன்தாள் பலப்பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே
( அகன்றார் = முனிவர்கள்; நயன்தான் வரும் வழி= நன்மைகள் வருகின்ற விதம்)
இப்போது ’காலம் கனியும் போது உன்னில் என்னை காண்பாய்’ என்று சொன்னக் கதைக்கு வருவோம்.
எங்கோ மோனத்தில் ஆழ்ந்திருந்த பத்மபாதரின் மனக்கண் முன்னே காபாலிகன் சங்கரரை பலி கொடுப்பதற்கு நெருங்கி வரும் காட்சி விரிந்தது. அவர் உபாசித்த நரசிம்ம மந்திரம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. தன் குருவை காப்பாற்ற வேண்டி பெரும் கர்ஜனையுடன் ஆகாயத்திலே எழும்பி புயல் போல் காபாலிகனின் குகையுள் புகுந்தார்.
முன்னொரு நாளில் இரண்ய கசிபுவை எப்படி கையால் தூக்கி அவன் குடலை நரசிம்மம் உருவியதோ அதே கதியை காபாலிகனுக்குக் கொடுத்தார்.
மற்றவர்கள் ஓடிவந்து சமாதியிலிருந்த சங்கரரை எழுப்பினர். இரத்தத்தில் தோய்ந்த சீடனின் உக்கிர வடிவில் நரசிம்மனை கண்ட சங்கரர் உடனே பிரஹ்லாதனைப் போல உக்கிரத்தை தணிக்க நரசிம்மத் தோத்திரம் இயற்றினார்.
சங்கரரை சிவனின் அவதாரமாகவே சொல்வதுண்டு.
சிவனிடமிருந்து வரம் பெறுவதற்காகவே காபாலிகன் சங்கரரை அணுகி அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே பலியிடுவதற்கு முற்பட்டான். அவருடைய சங்கல்பமில்லாமல் பத்மபாதருக்கு அந்த உத்வேகம் வந்திருக்காது. எல்லாம் அறிந்த சங்கரர் அவனுக்கு அப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏன் ?
அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்.
Strange are the ways of God !
அவரை நெருங்கி “ஐயா தாங்கள் தேடுவது என்னவென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றான்.
அவருக்கோ சிரிப்பு வந்தது. மந்திர சித்தியைப் பற்றி அந்த வேடனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?
”உன்னால் முடியாதப்பா” என்று சுருக்கமாக பதில் உரைத்தார்.
முடியாது என்று அவர் சொன்னதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
“எனக்கு இந்த காட்டில் தெரியாத மரமோ செடியோ பிராணியோ கிடையாது. நீங்கள் தேடும் பொருளை அடையாளம் சொல்லுங்கள். மருந்துக்கான பூவா, இலையா அல்லது ஏதேனும் அரிய பொருளா சொல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறேன்.” என்று விடாமல் சொன்னான். அவன் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.
”நான் தேடுவது ஒரு விசித்திரமான மிருகம். அதற்கு சிங்கத்தின் தலை, மனிதனின் உடல், கூரிய நகங்கள். அடர்ந்த பிடரி. முடிந்தால் தேடிப் பிடித்து வா” என்று அனுப்பினார்.
“அட இப்படி ஒரு மிருகத்தை நான் கண்டதே இல்லையே ! அப்படி ஒன்று இருந்தால் அது இல்லாமல் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விசித்திரமான அந்த மிருகத்தைத் தேட ஆரம்பித்தான். அன்றைய பொழுதும் சாய்ந்தது. அடுத்த நாள் விடியும் பொழுது அந்த மிருகம் இன்று கிடைக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற முடிவோடு தேட ஆரம்பித்தான். நீரும் உணவும் இன்றி தேடி அலுத்து நிராசையின் விளிம்பில் இருந்தவனுக்கு திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.
அந்த திசையில் சென்றதுமே அந்த விசித்திர மிருகம் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. ”ஓ நீதானா அது” என்றபடியே சந்தோஷத்துடன் அருகேயிருந்த கொடிகளை அறுத்து அதைக் கட்டி தர தர வென்று இழுத்து வந்து முனிவர் முன் நிறுத்தினான். அந்த விசித்திர மிருகம் ஒரு நாயைப் போல இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது.
“ சாமி இதோ நீங்க தேடுற பிராணி” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.
சாதுவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்பது வேடனுக்கு புரியவில்லை. “இதோ ..இதோ” என்று மீண்டும் மீண்டும் அது நிற்கும் இடத்தைக் காட்டினான்.
அவன் தன்னம்பிக்கையோடு காட்டும் போது குழம்பிய மனதினராய் அவ்வேடனை பரிதாபமாகப் பார்த்தார். தன் கண்களை நம்புவதா அல்லது அந்த வேடனை நம்புவதா என்று புரியாமல் திகைத்தார். அப்போது சிங்கத்தின் கர்ச்சனை மட்டும் மிக அருகிலிருந்து கேட்டது. அந்த தபஸ்விக்கு உண்மை பளிச்செனப் புரிந்தது.
“பிரபோ இந்த எளியவனுக்கு காட்சி தரும் தாங்கள் என்னை கை விட்டுவிட்டீரே !” என்று கதறினார்.
“அப்பனே காலம் கனியும் போது உன்னிலும் என்னைக் காண்பாய்” என்று அசரீரியாய் பதில் வந்தது.
(மீதிக் கதையைப் பின்னர் பார்ப்போம்)
நமக்கு ஒரு குழப்பம். அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?
இவன் யார் பிடியில் அகப்படுவான் யார் பிடியில் சிக்கமாட்டான் என்பதைத் தீர்மானிக்க யாராலும் இயலாது. எனவே அவனுடைய நிலைப்பாடு இந்நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் அறுதியிட்டு கூற முடிவதில்லை.
அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது.
भारी कहौं तो बहु डरौं, हलका कहूं तौ झूठ ।
मैं का जाणौं राम कूं, नैनूं कबहूँ न दीठ ॥
அரியவன் என்னலும் தயக்கம்,எளியவன் என்பதும் பொய்யே
அறியேன் யானும் இராமனை, விழிகள் கண்டது மில்லையே
(’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே தவிர இறைவனைக் குறித்த பயம் அல்ல. தமிழாக்கத்திற்கு தயக்கம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது )
அலகிலா விளையாட்டு உடையான் அவனடி சரணாவதைத் தவிர இறைவன் போக்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.
சாதுவிற்கு அவன் எளியவன் அல்லன். ஆனால் வேடனின் பார்வையில் அவன் அரியனும் அல்லன்.
ஆகையால்தான் ” அவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இராமனை நான் பார்த்ததும் இல்லை”என்று அவன் மகிமையை உணர்த்த இயலாதவராய் அடக்கத்தோடு உரைக்கிறார் கபீர்.
யாருக்கு எது நன்மை செய்யும் அதை எப்போது தரவேண்டும் என்னும் இறைவன் சித்தத்தை யாராலும் அறிய முடியாது என்பதை திருமூலரும் கூறுகிறார்.
அகன்றார் வழிமுதல் ஆதி பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்
சிவன்தாள் பலப்பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே
( அகன்றார் = முனிவர்கள்; நயன்தான் வரும் வழி= நன்மைகள் வருகின்ற விதம்)
இப்போது ’காலம் கனியும் போது உன்னில் என்னை காண்பாய்’ என்று சொன்னக் கதைக்கு வருவோம்.
எங்கோ மோனத்தில் ஆழ்ந்திருந்த பத்மபாதரின் மனக்கண் முன்னே காபாலிகன் சங்கரரை பலி கொடுப்பதற்கு நெருங்கி வரும் காட்சி விரிந்தது. அவர் உபாசித்த நரசிம்ம மந்திரம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. தன் குருவை காப்பாற்ற வேண்டி பெரும் கர்ஜனையுடன் ஆகாயத்திலே எழும்பி புயல் போல் காபாலிகனின் குகையுள் புகுந்தார்.
முன்னொரு நாளில் இரண்ய கசிபுவை எப்படி கையால் தூக்கி அவன் குடலை நரசிம்மம் உருவியதோ அதே கதியை காபாலிகனுக்குக் கொடுத்தார்.
மற்றவர்கள் ஓடிவந்து சமாதியிலிருந்த சங்கரரை எழுப்பினர். இரத்தத்தில் தோய்ந்த சீடனின் உக்கிர வடிவில் நரசிம்மனை கண்ட சங்கரர் உடனே பிரஹ்லாதனைப் போல உக்கிரத்தை தணிக்க நரசிம்மத் தோத்திரம் இயற்றினார்.
சங்கரரை சிவனின் அவதாரமாகவே சொல்வதுண்டு.
சிவனிடமிருந்து வரம் பெறுவதற்காகவே காபாலிகன் சங்கரரை அணுகி அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே பலியிடுவதற்கு முற்பட்டான். அவருடைய சங்கல்பமில்லாமல் பத்மபாதருக்கு அந்த உத்வேகம் வந்திருக்காது. எல்லாம் அறிந்த சங்கரர் அவனுக்கு அப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏன் ?
அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்.
Strange are the ways of God !
Saturday, July 18, 2009
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம்
கல்லூரிகள் திறக்கும் நேரம் இது. பெரும்பாலான புது மாணவர்களுக்கு உற்சாகத்தை விட கவலை அதிகம். அதுவும் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியவர்கள் கவலையெல்லாம் சந்திக்கப் போகும் ராகிங் பற்றியதே என்றால் மிகையாகாது. குருக்ஷேத்ராவில் பொறியியல் படிப்பிற்காக சேர்ந்த மாணவொருவன் ஒரே வாரத்தில் கல்லூரியை விட்டே ஓடி வந்து விட்டான். மீண்டும் அங்கு போவதற்கு மறுத்து விட்டான். பல நாட்கள் அவன் பட்ட துன்பமும் தாய் தந்தையருக்கு ஏற்பட்ட துன்பமும் சொல்லி முடியாது.
ஒருவனைச் சுற்றி பலபேர் கூடி பாட்டுப் பாடச் சொல்வது ஆடச் சொல்வது எல்லாம் ராகிங்-ல் சர்வசாதாரணம். அதில் தரக்குறைவான நடத்தைகளும் பேச்சுகளும் புது மாணவனை புண்படுத்தும் வகையிலேயே இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் திரைப்படம் போலே அடித்து வீழ்த்தி தப்பிக்க முடியாது போகின்றதே :(
நம் ஒவ்வொருவரை சுற்றியும் தினமும் ஐந்து பேர். தூங்கும் நேரம் தவிர எந்நேரமும் நம்மை ஆட்டிவைக்கிறார்கள் அவர்கள் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது புது மாணவனைப் போலவே எப்போதடா விடுதலை என்று ஏங்கிப் போகிறது மனது. கபீர் இந்நிலையைப் பற்றி சொல்வதைக் காண்போம்.
कबीर बैरी सबल है, एक जीव रिपु पांच ।
अपने-अपने स्वाद को, बहुत नचावै नाच ॥
வைரியின் பலமதிகம் கபீரா, ஒன்றுக் கெதி்ராய் அஞ்சுமே
தத்தம் போக்கில்ஆட்டுமே, அரங்கில் பல்வகைக் கூத்துமே
(வைரி=எதிரி ; ஒன்று= ஒரு சீவன்; அஞ்சுமே= ஐந்து புலன்களுமே; அரங்கு என்பது உலகத்தை குறிக்கவந்தது)
ஐம்புலன்கள் என்ற எதிரிகள் தத்தம் விருப்பத்திற்கேற்ப மனிதனை ஆட்டிப் படைக்கின்ற நிலையை இந்த ஈரடியில் சித்தரித்திருக்கிறார் கபீர்தாஸ்.
புத்திக்கு நல்லன எவை என்பது தெரிந்தும் அவற்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் புலன்வழியே அல்லாதனவற்றில் விருப்பு கொண்டு தினங்கள் கழியும் போது குற்ற உணர்ச்சி பலமாக பிடித்தாட்டுகிறது. அதனாலேயே பல நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகிவிடுகிறது. கண்ணதாசன் போலொரு கவிஞனுக்கு பழி உணர்ச்சியும் அதிகமாகி படைத்தவனை தண்டிக்கவும் சொல்கிறது.
............
”அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டுப் பார்த்திருப்பேன்.
படுவான், துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
.......”
கடவுளே ஆனாலும் புலனின்பங்களின் இழுப்பிலிருந்து தப்புவது எளிதல்ல என்னும் கற்பனை சராசரி மனிதனுக்கு ஆறுதல் தந்தாலும் பிரச்சனைக்கு விடையாவதில்லை. அதற்கு ஞானிகளின் வழியையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது
ஞானிகளும் புலன்களின் சக்தியை குறைத்து மதிப்பிடவில்லை. அவைகளின் பலத்தை யானைகளின் பலத்திற்கு ஒப்பிடுகின்றனர். மாணிக்க வாசக பெருமான் சொல்வது
ஆனை வெம்போரில் குறுந்தூறு எனப்புல
னால் அலைப்பு உண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினை
யேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமு
தத்தையும் ஒத்
தூனையும் என்பினையும் உருக்கா நின்ற
ஒண்மையனே
யானை நடந்தாலே அடியில் புற்களும் புதர்களும் நசுங்கும். அவைகளிடையே போர் ஏற்பட்டால் சிறிய புதரின் கதி எப்படியிருக்கும்? அப்படி ஒரு புதர் சிக்குண்டு அவதிப் படுவது போலே புலன்களுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் என்னை விட்டு விடுவாயோ என்று கலங்குகிறார் மணிவாசகர்.
யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடும். அப்பொழுது ஏற்படும் அபாயத்தைக் காட்டிலும் மதம் பிடித்த -கூட்டத்தை விட்டு ஒதுங்கிய -ஒற்றை யானை மிகவும் அபாயகரமானது என்பர். அதனாலோ என்னவோ கபீர் ஒற்றை யானையாக புலன்கள் வசப்பட்ட மனதை இன்னுமொரு ஈரடியில் சித்தரிக்கிறார்.
कबीर मनहि गयंद है, आंकुस दे दे राखु ।
विष की बेली परिहरो , अमृत का फल चाखु ॥
கரியதன் பலமுண்டு மனதிற்கு, கைகொள் கபீரா ஒரு தோத்திரம்
கரியதை ஒழிக்க வழியுண்டு, கைகொள் அமிழ்தமாம் தோத்திரம்
[கரியதன் பலம் =யானையின் பலம்; தோத்திரம் = 1)அங்குசம் :2) வழுத்துதல் ,போற்றுதல்; கரி்யதை =நஞ்சுடைய மனதை]
தோத்திரம் என்பதற்கு அங்குசம் என்று இன்னொரு பொருளும் உண்டு. வழிக்கு கொண்டு வரத் தேவைப்படுவது யானைக்கும் ஒரு தோத்திரம் மனதுக்கும் ஒரு தோத்திரம் !
அங்குசத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு யானைக்கு சுதந்திர மனப்பான்மை போய் அடிமை மனப்பான்மை வந்து விடுகிறது. நம்முடைய மனமும் இறைவன் நாமத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்படும் பொழுது சரணாகதி அடைந்து அமைதி படுகிறது. அதை “அங்குஸ் தே தே ராகு” என்கிறார் கபீர். அவர் மட்டுமல்ல திருமந்திரமும் அதையே உபதேசிக்கிறது.
அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகல் ஆமே. (977)
உடல் என்ற காட்டுக்குள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. அஞ்சு எழுத்தாகிய ’நமசிவாய’ வை அங்குசம் ஆக்கி ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்க வல்லவர்களுக்கு அந்த ஐந்திற்கும் ஆதியாகி நிற்கும் ஆதிமுதல்வன் வீடு சேரலாம்.
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாள்தோறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே ( )
[நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் ; அஞ்சற்று விட்டது = சங்கிலி அறுபட்டொழிந்த]
அணையா விளக்காய் எல்லா உள்ளங்களிலும் நிறைந்து ஒளிவிடும் செம்பிரானை உணர்ந்து நாள்தோறும் உறங்கச் செல்லும் வரை வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித்தால் ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த யானை போன்று கட்டுக்கடங்காமல் போய்விடும்.
துஞ்சுமளவும் தொழுமின் என்பதை இறக்கும் வரையிலும் என்ற பொருளிலும் கொள்ளலாம். அப்போது வாழ்நாள் முழுதும் இடைவிடாமல் சிந்தித்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
(picture courtesy : Indian Holidy dot com)
சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அமைதியான யானை அடங்கிய மனதுக்கு அழகான உதாரணம். தன்னைச் சுற்றி எவ்வளவு தாரை தம்பட்டைகள், அடித்து கொண்டாட்டங்கள் நடத்தினாலும் அமைதி குலையாது மணிக்கணக்காக கோவில் உற்சவங்களில் பங்கு கொள்ளும் பக்குவத்தை காண்கையில் பெரும் ஆச்சரியம் ஏற்படும். பலமுறை ஞானிகளின் மனமும் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. தங்களைச் சுற்றி எது நடந்தாலும் அதில் அவர்கள் சம்பந்தப்படாதவர்களாகவே இருப்பார்கள்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இளைஞர் பகவான் ரமணரை அண்ணாமலையார் கோவில் யானையுடன் சேர்த்து எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை தபால் மூலம் அனுப்பி வைத்தார். அதன் பின் பக்கத்தில் “சரீரத்தை அறியாத பெரிய ஆத்மாவும் ஆத்மாவை அறியாத பெரிய சரீரமும் ஒரே இடத்தில்” என்பதாக குறிப்பும் எழுதியிருந்தார்.
அதற்கு என்ன அர்த்தம் என்று நாகம்மாள் கேட்டதற்கு பகவான் சொன்ன பதில்:
“எவ்வளவு ஆகாரம் கொடுத்தாலும் போதாது என்று பிளிறிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ அதை ஆத்மாவை அறியாத பெரிய சரீரமென்று குறிப்பிட்டிருக்கிறார். நான் எப்போதும் ஆடி அசைந்து மெதுவாக நடந்து எப்படி எப்படியோ நிற்கிறேன் இல்லையா! அதனாலோ என்னவோ நான் சரீரத்தை அறியாத ஆத்மாவாம். அதுதான் அவர் அபிப்பிராயமாக இருக்கலாம்”.
பூரண ஞானிக்கு தேகபாவனை இருப்பதில்லை என்பதை உயர்த்தி இளைஞர் குறிப்பு எழுதிய போதும் அதை வெகு நயமாக வேடிக்கையாக திசை திருப்பியது ரமணரின் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.
இன்னொரு முறை குஞ்சு சுவாமிகள் பகவானின் தேக நடுக்கத்தையும் கோலூன்றும் அவசியமும் நடுவயதிலேயே வந்து விட்டது குறிப்பிட்டு காரணம் வினவிய போது, ”பெரிய யானையை சின்ன குடிசைக்குள் கட்டி வைத்தால் குடிசையின் கதி என்னவாகும்? இதுவும் அவ்வளவுதான் !” என்று பதில் கூறினாராம்.
மனித உடல் என்னும் சிறு கூட்டிலே அடைப்பட்டிருக்கும் நிலையை விஸ்வத்தை தன்னுள் உணர்ந்த மகான் எவ்வளவு எளிமையாக விளக்கி விட்டார் !!
ஆன்மீகத்திலிருந்து யானையை பிரிக்கமுடியாது. ஆனைமுகத்தான் முதற்கடவுள். ஆன்மீக இலக்கியத்திலும் யானைக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு.
இரண்டாவது ஈரடிக்கு மாற்று:
குஞ்சரம் போலாச்சு மனசு, கபீரா அங்குசம் வீசு
நஞ்ச துவும்போ யாச்சு, நாமா மிர்தம் வந்தாச்சு
ஒருவனைச் சுற்றி பலபேர் கூடி பாட்டுப் பாடச் சொல்வது ஆடச் சொல்வது எல்லாம் ராகிங்-ல் சர்வசாதாரணம். அதில் தரக்குறைவான நடத்தைகளும் பேச்சுகளும் புது மாணவனை புண்படுத்தும் வகையிலேயே இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் திரைப்படம் போலே அடித்து வீழ்த்தி தப்பிக்க முடியாது போகின்றதே :(
நம் ஒவ்வொருவரை சுற்றியும் தினமும் ஐந்து பேர். தூங்கும் நேரம் தவிர எந்நேரமும் நம்மை ஆட்டிவைக்கிறார்கள் அவர்கள் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது புது மாணவனைப் போலவே எப்போதடா விடுதலை என்று ஏங்கிப் போகிறது மனது. கபீர் இந்நிலையைப் பற்றி சொல்வதைக் காண்போம்.
कबीर बैरी सबल है, एक जीव रिपु पांच ।
अपने-अपने स्वाद को, बहुत नचावै नाच ॥
வைரியின் பலமதிகம் கபீரா, ஒன்றுக் கெதி்ராய் அஞ்சுமே
தத்தம் போக்கில்ஆட்டுமே, அரங்கில் பல்வகைக் கூத்துமே
(வைரி=எதிரி ; ஒன்று= ஒரு சீவன்; அஞ்சுமே= ஐந்து புலன்களுமே; அரங்கு என்பது உலகத்தை குறிக்கவந்தது)
ஐம்புலன்கள் என்ற எதிரிகள் தத்தம் விருப்பத்திற்கேற்ப மனிதனை ஆட்டிப் படைக்கின்ற நிலையை இந்த ஈரடியில் சித்தரித்திருக்கிறார் கபீர்தாஸ்.
புத்திக்கு நல்லன எவை என்பது தெரிந்தும் அவற்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் புலன்வழியே அல்லாதனவற்றில் விருப்பு கொண்டு தினங்கள் கழியும் போது குற்ற உணர்ச்சி பலமாக பிடித்தாட்டுகிறது. அதனாலேயே பல நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகிவிடுகிறது. கண்ணதாசன் போலொரு கவிஞனுக்கு பழி உணர்ச்சியும் அதிகமாகி படைத்தவனை தண்டிக்கவும் சொல்கிறது.
............
”அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டுப் பார்த்திருப்பேன்.
படுவான், துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
.......”
கடவுளே ஆனாலும் புலனின்பங்களின் இழுப்பிலிருந்து தப்புவது எளிதல்ல என்னும் கற்பனை சராசரி மனிதனுக்கு ஆறுதல் தந்தாலும் பிரச்சனைக்கு விடையாவதில்லை. அதற்கு ஞானிகளின் வழியையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது
ஞானிகளும் புலன்களின் சக்தியை குறைத்து மதிப்பிடவில்லை. அவைகளின் பலத்தை யானைகளின் பலத்திற்கு ஒப்பிடுகின்றனர். மாணிக்க வாசக பெருமான் சொல்வது
ஆனை வெம்போரில் குறுந்தூறு எனப்புல
னால் அலைப்பு உண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினை
யேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமு
தத்தையும் ஒத்
தூனையும் என்பினையும் உருக்கா நின்ற
ஒண்மையனே
யானை நடந்தாலே அடியில் புற்களும் புதர்களும் நசுங்கும். அவைகளிடையே போர் ஏற்பட்டால் சிறிய புதரின் கதி எப்படியிருக்கும்? அப்படி ஒரு புதர் சிக்குண்டு அவதிப் படுவது போலே புலன்களுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் என்னை விட்டு விடுவாயோ என்று கலங்குகிறார் மணிவாசகர்.
யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடும். அப்பொழுது ஏற்படும் அபாயத்தைக் காட்டிலும் மதம் பிடித்த -கூட்டத்தை விட்டு ஒதுங்கிய -ஒற்றை யானை மிகவும் அபாயகரமானது என்பர். அதனாலோ என்னவோ கபீர் ஒற்றை யானையாக புலன்கள் வசப்பட்ட மனதை இன்னுமொரு ஈரடியில் சித்தரிக்கிறார்.
कबीर मनहि गयंद है, आंकुस दे दे राखु ।
विष की बेली परिहरो , अमृत का फल चाखु ॥
கரியதன் பலமுண்டு மனதிற்கு, கைகொள் கபீரா ஒரு தோத்திரம்
கரியதை ஒழிக்க வழியுண்டு, கைகொள் அமிழ்தமாம் தோத்திரம்
[கரியதன் பலம் =யானையின் பலம்; தோத்திரம் = 1)அங்குசம் :2) வழுத்துதல் ,போற்றுதல்; கரி்யதை =நஞ்சுடைய மனதை]
தோத்திரம் என்பதற்கு அங்குசம் என்று இன்னொரு பொருளும் உண்டு. வழிக்கு கொண்டு வரத் தேவைப்படுவது யானைக்கும் ஒரு தோத்திரம் மனதுக்கும் ஒரு தோத்திரம் !
அங்குசத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு யானைக்கு சுதந்திர மனப்பான்மை போய் அடிமை மனப்பான்மை வந்து விடுகிறது. நம்முடைய மனமும் இறைவன் நாமத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்படும் பொழுது சரணாகதி அடைந்து அமைதி படுகிறது. அதை “அங்குஸ் தே தே ராகு” என்கிறார் கபீர். அவர் மட்டுமல்ல திருமந்திரமும் அதையே உபதேசிக்கிறது.
அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகல் ஆமே. (977)
உடல் என்ற காட்டுக்குள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. அஞ்சு எழுத்தாகிய ’நமசிவாய’ வை அங்குசம் ஆக்கி ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்க வல்லவர்களுக்கு அந்த ஐந்திற்கும் ஆதியாகி நிற்கும் ஆதிமுதல்வன் வீடு சேரலாம்.
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாள்தோறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே ( )
[நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் ; அஞ்சற்று விட்டது = சங்கிலி அறுபட்டொழிந்த]
அணையா விளக்காய் எல்லா உள்ளங்களிலும் நிறைந்து ஒளிவிடும் செம்பிரானை உணர்ந்து நாள்தோறும் உறங்கச் செல்லும் வரை வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித்தால் ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த யானை போன்று கட்டுக்கடங்காமல் போய்விடும்.
துஞ்சுமளவும் தொழுமின் என்பதை இறக்கும் வரையிலும் என்ற பொருளிலும் கொள்ளலாம். அப்போது வாழ்நாள் முழுதும் இடைவிடாமல் சிந்தித்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அமைதியான யானை அடங்கிய மனதுக்கு அழகான உதாரணம். தன்னைச் சுற்றி எவ்வளவு தாரை தம்பட்டைகள், அடித்து கொண்டாட்டங்கள் நடத்தினாலும் அமைதி குலையாது மணிக்கணக்காக கோவில் உற்சவங்களில் பங்கு கொள்ளும் பக்குவத்தை காண்கையில் பெரும் ஆச்சரியம் ஏற்படும். பலமுறை ஞானிகளின் மனமும் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. தங்களைச் சுற்றி எது நடந்தாலும் அதில் அவர்கள் சம்பந்தப்படாதவர்களாகவே இருப்பார்கள்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இளைஞர் பகவான் ரமணரை அண்ணாமலையார் கோவில் யானையுடன் சேர்த்து எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை தபால் மூலம் அனுப்பி வைத்தார். அதன் பின் பக்கத்தில் “சரீரத்தை அறியாத பெரிய ஆத்மாவும் ஆத்மாவை அறியாத பெரிய சரீரமும் ஒரே இடத்தில்” என்பதாக குறிப்பும் எழுதியிருந்தார்.
அதற்கு என்ன அர்த்தம் என்று நாகம்மாள் கேட்டதற்கு பகவான் சொன்ன பதில்:
“எவ்வளவு ஆகாரம் கொடுத்தாலும் போதாது என்று பிளிறிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ அதை ஆத்மாவை அறியாத பெரிய சரீரமென்று குறிப்பிட்டிருக்கிறார். நான் எப்போதும் ஆடி அசைந்து மெதுவாக நடந்து எப்படி எப்படியோ நிற்கிறேன் இல்லையா! அதனாலோ என்னவோ நான் சரீரத்தை அறியாத ஆத்மாவாம். அதுதான் அவர் அபிப்பிராயமாக இருக்கலாம்”.
பூரண ஞானிக்கு தேகபாவனை இருப்பதில்லை என்பதை உயர்த்தி இளைஞர் குறிப்பு எழுதிய போதும் அதை வெகு நயமாக வேடிக்கையாக திசை திருப்பியது ரமணரின் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.
இன்னொரு முறை குஞ்சு சுவாமிகள் பகவானின் தேக நடுக்கத்தையும் கோலூன்றும் அவசியமும் நடுவயதிலேயே வந்து விட்டது குறிப்பிட்டு காரணம் வினவிய போது, ”பெரிய யானையை சின்ன குடிசைக்குள் கட்டி வைத்தால் குடிசையின் கதி என்னவாகும்? இதுவும் அவ்வளவுதான் !” என்று பதில் கூறினாராம்.
மனித உடல் என்னும் சிறு கூட்டிலே அடைப்பட்டிருக்கும் நிலையை விஸ்வத்தை தன்னுள் உணர்ந்த மகான் எவ்வளவு எளிமையாக விளக்கி விட்டார் !!
ஆன்மீகத்திலிருந்து யானையை பிரிக்கமுடியாது. ஆனைமுகத்தான் முதற்கடவுள். ஆன்மீக இலக்கியத்திலும் யானைக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு.
இரண்டாவது ஈரடிக்கு மாற்று:
குஞ்சரம் போலாச்சு மனசு, கபீரா அங்குசம் வீசு
நஞ்ச துவும்போ யாச்சு, நாமா மிர்தம் வந்தாச்சு
Thursday, July 17, 2008
எழுதித் தீருமோ எம் குரு பெருமையும்
கல்லூரியில் மகனையோ மகளையோ சேர்க்கும் முன் பல மத்திய தர குடும்பங்களில் பல மாதங்களுக்கு பெரிய வாத பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கும். பல்விதமான துறைகள், ஒவ்வொரு துறையிலும் பல உட்பிரிவுகள். பல தரப்பட்ட கல்லூரிகள். இப்பெரிய உலகில் அக்குழந்தைகள் அடியெடுத்து வைப்பதற்கு தைரியம் கொடுக்கும் வகையில் பேசுவோரே இல்லை. பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி மனதைக் குழப்பியும் பயமுறுத்தியும் விடுவர்.
கடைசியில் ஒரு பெரியவர் ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார். “இதோ பாரு! நீ எந்த ஃபீல்டல போனாலும் பெரிய ஆளா வரலாம். உனக்கு வேண்டியது கஷ்டப்பட்டு படிக்கிற குணமும், கடவுள் மேல நம்பிக்கையுந்தான். அம்மா அப்பாவுக்கு பணக்கஷ்டம் மனக் கஷ்டம் இல்லாத மாதிரி எந்த சப்ஜெக்ட்டை எந்த காலேஜ்-ல வேணுமானாலும் எடுத்து படி. அவன் வழி காட்டுவான்
ஆன்மீகத்திற்கு வேண்டியதும் இந்த மனப்பக்குவமே, "அவன் வழி காட்டுவான்"
எல்லாத் துறைகளைப் போலவே ஆன்மீகத்திலும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரவரும் கடந்து வந்த பாதையை வைத்து தத்தம் அனுபவங்களைக் கொண்டு கடவுளைப் பற்றி விவரிக்கின்றனர். எல்லோர் சொல்வதும் ஏதோ ஒரு விதத்தில் சரியே. ஆனால் அது எல்லாமே குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து வர்ணித்தது போலவே ஆகும். இந்த நடைமுறை நிலையை கபீரும் ஏற்றுக் கொள்கிறார்.
गुरु गुरु में भेद है, गुरु गुरु में भाव ।
सोइ गुरु नित बन्दिये, शब्द बतावे दाव ॥
குரு குரு மே பேத ஹை, குரு குரு மே பாவ் |
ஸோயி,குரு நித் பந்தியே, ஷப்த் பதாவே தாவ் ||
குரு குருவிலும் பேதம் உண்டு, குரு குருவிலும் பாவனை வேறு
குரு அவனடி தினம் பணிந்திடு, நாதத்தில் கூட்டிடும் நாதன் பேறு
(நாதன் பேறு = இறைவன் என்ற செல்வம் )
[ இரண்டாவது அடியை உரைநடையில் “நாதத்தில் நாதன் பேறு கூட்டிடும் குரு, அவனடி தினம் பணிந்திடு” எனக் கொள்க.]
'ஷப்த் பதாவே தாவ்' என்று கபீர் சொல்வது ஔவையின் “சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி'' என்ற வரிகளை நினைவூட்டுகிறது.
சப்தம் அல்லது நாதம் சிருஷ்டியில் முதலில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. ஆன்மீகத்தின் கடைசி கட்டத்தில் சாதகன் உணரும் நிலையும் அதுவே எனப்படுகிறது. சிவமே எல்லாவற்றிலும் நாதமாய் விளங்குகிறது என்கிறது திருமந்திரம்.
சத்தமும் சத்தமனமும் மனக்கருத்து
ஒத்தறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறிகின்ற இடம் அறிவார்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே (1973)
நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக்கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும், யாரும், அறியார். அதை உள்ளபடி உணர்ந்தாரானால் சிவ பெருமான் இருக்குமிடம் அதுவே என்பதை அறிவர்.
அதை உணர்ந்தே பட்டினத்தாரின் சீடராகிய பத்திரகிரியாரும்
வேதாந்த வேதமெல்லாம் விட்டு ஏறியே கடந்து
நாதாந்த மூலம் நடு இருப்பது எக்காலம் ? -
என்று ஏங்குகிறார்.
தமக்கென்று வாய்த்த குருவின் உரையில் நம்பிக்கை வைத்து அவர் சொல்லியபடி பயிற்சிகளை செய்து கொண்டு போனால் தானே வழி பிறக்கும். குரு உபதேசித்த மந்திரம் கையில் கொடுக்கப்பட்ட விளக்கு போல. அதன் துணையுடன் பாதையை பிடித்துக் கொண்டு போனால் முன்னேறிச் செல்ல முடியும். அதைவிட்டு சுற்றிலும் இருக்கும் இருளைக் கண்டு பயந்து இருந்த இடத்திலே அழுது கொண்டிருப்பவனுக்கு முன்னேற்றம் ஏது? கபீர் அதனால் தான் நாமசெபத்தின் பயனை மேலும் வலியுறுத்துகிறார்.
नाम भजोमन बसि करो, यही बात है तंत ।
काहे को पढि पचि मरो, कोटिन ज्ञान गिरंथ ॥
நாம் பஜோமன் பஸி கரோ, யஹி பாத் ஹை தந்த் |
காஹே கோ படீ பசீ மரோ, கோடின் ஞான் கிரந்த் ||
செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவைநூறு படிப்பதும் வீணே
மாற்று
மனமே செபித்து வசிகொள், இதுவே நாதன் அருளின் இரகசியம்
தினமே செப்பிடும் சாத்திரம் நூறு, இன்னும் அதுவோ அவசியம்
ஆராய்ச்சியால் அறியப்படுபவன் அல்ல கடவுள். ஆராய்ச்சி செய்து நூற்றுக் கணக்கான புத்தகங்கள் எழுதலாம், படிக்கப்படலாம். ஆனால் அவையெல்லாம், வள்ளலாரின் மொழியில் “சாத்திரக் குப்பை” தாம்.
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம் ?
என்று பத்திரகிரியார் குறிப்பிடும் (மெய்ஞான புலம்பல்: 155 ) சூத்திரமே குருவழி வரும் மந்திர உபதேசம். அதை முறையாக செபித்தால் அது இறைவனிடம் இட்டுச் செல்லும். அதை உறுதி செய்வது போல் இருக்கிறது திருமந்திரத்தின் இன்னொரு பாடல்.
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது;
நாத முடிவிலே நஞ்சுஉண்ட கண்டனே
இருட்டு நேரத்தில் தன் படகை அடைய வேண்டிய படகுகாரன் படகைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலியை பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் முன்னேறிச் சென்று படகை அடைவது போல, ஒவ்வொரு முறை நாமத்தை உச்சரிக்கும் போதும் சங்கிலியின் ஒரு இணைப்பின் அளவு இறைவனை நெருங்குகிறோம் என்பாரம் அன்னை சாரதா தேவி.
இன்று வியாச பூர்ணிமை. குரு மேன்மையை நினைவு கூற சிறப்பான தினம். கபீர் தமது குரு மீது வைத்துள்ள அன்பையும் பெருமையும் ஒருங்கே அவரது கீழ்கண்ட ஈரடியில் காணலாம்.
सब धरती कागद करूं , लिखनी सब बनराय ।
सात समुद्र का मसि करूं, गुरु गुण लिखा न जाय ॥
ஸப் தர்தீ காகத் கரூன், லிகனீ ஸப் பன்ராய் |
ஸாத் ஸமுத்ர் கா மஸி கரூன், குரு குண் லிகா ந ஜாய் ||
அடவி மரங்கள் கோலாகும், இத்தரை யெலாமாகும் பத்திரம்
கடலேழும் மசியாகும், எழுதித் தீருமோ எம்குரு பெருமையும்
(அடவி= காடு ; கோல்= எழுது கோல்; இத்தரை = நிலம்; பத்திரம்= காகிதம்.; மசி =எழுதும் மை)
ஞானியர் அருளில் ஞாலம் ஒளிரும்.
கடைசியில் ஒரு பெரியவர் ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார். “இதோ பாரு! நீ எந்த ஃபீல்டல போனாலும் பெரிய ஆளா வரலாம். உனக்கு வேண்டியது கஷ்டப்பட்டு படிக்கிற குணமும், கடவுள் மேல நம்பிக்கையுந்தான். அம்மா அப்பாவுக்கு பணக்கஷ்டம் மனக் கஷ்டம் இல்லாத மாதிரி எந்த சப்ஜெக்ட்டை எந்த காலேஜ்-ல வேணுமானாலும் எடுத்து படி. அவன் வழி காட்டுவான்
ஆன்மீகத்திற்கு வேண்டியதும் இந்த மனப்பக்குவமே, "அவன் வழி காட்டுவான்"
எல்லாத் துறைகளைப் போலவே ஆன்மீகத்திலும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரவரும் கடந்து வந்த பாதையை வைத்து தத்தம் அனுபவங்களைக் கொண்டு கடவுளைப் பற்றி விவரிக்கின்றனர். எல்லோர் சொல்வதும் ஏதோ ஒரு விதத்தில் சரியே. ஆனால் அது எல்லாமே குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து வர்ணித்தது போலவே ஆகும். இந்த நடைமுறை நிலையை கபீரும் ஏற்றுக் கொள்கிறார்.
गुरु गुरु में भेद है, गुरु गुरु में भाव ।
सोइ गुरु नित बन्दिये, शब्द बतावे दाव ॥
குரு குரு மே பேத ஹை, குரு குரு மே பாவ் |
ஸோயி,குரு நித் பந்தியே, ஷப்த் பதாவே தாவ் ||
குரு குருவிலும் பேதம் உண்டு, குரு குருவிலும் பாவனை வேறு
குரு அவனடி தினம் பணிந்திடு, நாதத்தில் கூட்டிடும் நாதன் பேறு
(நாதன் பேறு = இறைவன் என்ற செல்வம் )
[ இரண்டாவது அடியை உரைநடையில் “நாதத்தில் நாதன் பேறு கூட்டிடும் குரு, அவனடி தினம் பணிந்திடு” எனக் கொள்க.]
'ஷப்த் பதாவே தாவ்' என்று கபீர் சொல்வது ஔவையின் “சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி'' என்ற வரிகளை நினைவூட்டுகிறது.
சப்தம் அல்லது நாதம் சிருஷ்டியில் முதலில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. ஆன்மீகத்தின் கடைசி கட்டத்தில் சாதகன் உணரும் நிலையும் அதுவே எனப்படுகிறது. சிவமே எல்லாவற்றிலும் நாதமாய் விளங்குகிறது என்கிறது திருமந்திரம்.
சத்தமும் சத்தமனமும் மனக்கருத்து
ஒத்தறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறிகின்ற இடம் அறிவார்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே (1973)
நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக்கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும், யாரும், அறியார். அதை உள்ளபடி உணர்ந்தாரானால் சிவ பெருமான் இருக்குமிடம் அதுவே என்பதை அறிவர்.
அதை உணர்ந்தே பட்டினத்தாரின் சீடராகிய பத்திரகிரியாரும்
வேதாந்த வேதமெல்லாம் விட்டு ஏறியே கடந்து
நாதாந்த மூலம் நடு இருப்பது எக்காலம் ? -
என்று ஏங்குகிறார்.
தமக்கென்று வாய்த்த குருவின் உரையில் நம்பிக்கை வைத்து அவர் சொல்லியபடி பயிற்சிகளை செய்து கொண்டு போனால் தானே வழி பிறக்கும். குரு உபதேசித்த மந்திரம் கையில் கொடுக்கப்பட்ட விளக்கு போல. அதன் துணையுடன் பாதையை பிடித்துக் கொண்டு போனால் முன்னேறிச் செல்ல முடியும். அதைவிட்டு சுற்றிலும் இருக்கும் இருளைக் கண்டு பயந்து இருந்த இடத்திலே அழுது கொண்டிருப்பவனுக்கு முன்னேற்றம் ஏது? கபீர் அதனால் தான் நாமசெபத்தின் பயனை மேலும் வலியுறுத்துகிறார்.
नाम भजोमन बसि करो, यही बात है तंत ।
काहे को पढि पचि मरो, कोटिन ज्ञान गिरंथ ॥
நாம் பஜோமன் பஸி கரோ, யஹி பாத் ஹை தந்த் |
காஹே கோ படீ பசீ மரோ, கோடின் ஞான் கிரந்த் ||
செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவைநூறு படிப்பதும் வீணே
மாற்று
மனமே செபித்து வசிகொள், இதுவே நாதன் அருளின் இரகசியம்
தினமே செப்பிடும் சாத்திரம் நூறு, இன்னும் அதுவோ அவசியம்
ஆராய்ச்சியால் அறியப்படுபவன் அல்ல கடவுள். ஆராய்ச்சி செய்து நூற்றுக் கணக்கான புத்தகங்கள் எழுதலாம், படிக்கப்படலாம். ஆனால் அவையெல்லாம், வள்ளலாரின் மொழியில் “சாத்திரக் குப்பை” தாம்.
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம் ?
என்று பத்திரகிரியார் குறிப்பிடும் (மெய்ஞான புலம்பல்: 155 ) சூத்திரமே குருவழி வரும் மந்திர உபதேசம். அதை முறையாக செபித்தால் அது இறைவனிடம் இட்டுச் செல்லும். அதை உறுதி செய்வது போல் இருக்கிறது திருமந்திரத்தின் இன்னொரு பாடல்.
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது;
நாத முடிவிலே நஞ்சுஉண்ட கண்டனே
இருட்டு நேரத்தில் தன் படகை அடைய வேண்டிய படகுகாரன் படகைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலியை பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் முன்னேறிச் சென்று படகை அடைவது போல, ஒவ்வொரு முறை நாமத்தை உச்சரிக்கும் போதும் சங்கிலியின் ஒரு இணைப்பின் அளவு இறைவனை நெருங்குகிறோம் என்பாரம் அன்னை சாரதா தேவி.
இன்று வியாச பூர்ணிமை. குரு மேன்மையை நினைவு கூற சிறப்பான தினம். கபீர் தமது குரு மீது வைத்துள்ள அன்பையும் பெருமையும் ஒருங்கே அவரது கீழ்கண்ட ஈரடியில் காணலாம்.
सब धरती कागद करूं , लिखनी सब बनराय ।
सात समुद्र का मसि करूं, गुरु गुण लिखा न जाय ॥
ஸப் தர்தீ காகத் கரூன், லிகனீ ஸப் பன்ராய் |
ஸாத் ஸமுத்ர் கா மஸி கரூன், குரு குண் லிகா ந ஜாய் ||
அடவி மரங்கள் கோலாகும், இத்தரை யெலாமாகும் பத்திரம்
கடலேழும் மசியாகும், எழுதித் தீருமோ எம்குரு பெருமையும்
(அடவி= காடு ; கோல்= எழுது கோல்; இத்தரை = நிலம்; பத்திரம்= காகிதம்.; மசி =எழுதும் மை)
ஞானியர் அருளில் ஞாலம் ஒளிரும்.
Sunday, April 13, 2008
பெருங்காய டப்பா-பெருகிவரும் வாசனை
மதுர்பாபு என்று அன்புடன் அழைக்கப்பட்ட மதுராநாதர் இராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவர். கிருஹஸ்தர்.அவரிடம் இராமகிருஷ்ணருக்கு அளவற்ற அன்பு இருந்தது. இருந்த போதிலும் நரேந்தரையும் மற்ற பிரம்மச்சாரி சிஷ்யர்களையும் மதுர்பாபு போன்ற கிருஹஸ்தர்களுடன் அளவுக்கு அதிகமாக உறவு பாராட்ட வேண்டாம் என்று அவர் எச்சரித்து வைத்திருந்தார்.
இதைக் கேள்விப்பட்ட மதுராநாதருக்கு பெரும் வருத்தம் உண்டாயிற்று. தன் மதிப்பிற்குரிய குருவிடமே அதற்கான காரணத்தை கேட்டார். “இதோ பார்! உனது
இல்லத்தில் பெருங்காய டப்பா வைத்திருக்கிறாயல்லவா. அதில் உள்ள பெருங்காயத்தை காலி செய்துவிட்டாலும் வெகு நாட்களுக்கு அதன் வாசனை போகாது. அதில் பின்னர் வேறு எந்த பொருளை வைத்தாலும் அதற்கும் அதன் வாசனை ஒட்டிக்கொண்டு விடும். உன் மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது எனினும் உனக்குள் இருக்கும் உலகத் தொடர்பான வாசனைகள் உன்னையறியாமல் பேச்சிலும் செயலிலும் வெளிப்படும் வாய்ப்புண்டு. அதன் தாக்கம் பிறரிடமும் ஏற்படக்கூடும். ஆகையால் ஆன்மீகத்தில் நீ பின்பற்ற வேண்டிய வழிமுறைகளே வேறானவை. நரேன் போன்றவர்களின் முறையே வேறானவை என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்” என்று விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மதுராநாதரும் சமாதானம் அடைந்தார்.
மருத்துவத்துறையில் ரணச்சிகிச்சை செய்யும் அறையிலோ, உணவு பதனப்படுத்தும் தொழிலிலோ வெளிக் காற்றிலிருந்து மாசு உட்புகாவண்ணம் அறைக்குள்ளே சற்றே உயர் அழுத்த சுத்திகரிகப்பட்ட காற்றை (sterile air) செலுத்தி அதிக அழுத்தத்தில் (positive pressure) வைத்திருப்பர். இதனால் சுத்திகரிக்கப்பட்ட காற்று வெளியே தப்பிச் செல்லுமே அன்றி மாசடைந்த காற்று உட்புக முடியாது. மேற்கொண்டிருக்கும் செயலுக்கு ஏற்ப 'பல மட்ட தரக்கட்டுப்பாடுகள்' சுத்திகரிக்கப் பட்ட காற்றுக்கும் உண்டு. அந்த தரத்தை நிறுவுவதற்கு பல லட்சங்களை நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் செலவழிக்கின்றன.
தன்னுடைய சிஷ்யர்கள் விஷயத்தில் ராமகிருஷ்ணர் மேற்கொண்டதும் அத்தகைய ஒரு தரக் கட்டுபாட்டு செயல் தான் என்பதை புரிந்து கொண்டால் அதில் தவறேதும் காணமுடியாது.
நம் 'பெரும் காயத்துள்' நாமே ஏற்படுத்திக்கொண்டுள்ள வாசனைகளின்(வினைப்பதிவுகள்) பலத்தைப் பற்றி எவ்வளவு எளிமையான விளக்கம்! அது ஜென்ம ஜென்மங்களாகத் தொடர்வது. ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களையும் பழக்கங்களையும் களையச் செய்ய வேண்டிய செயல்கள் தான் ஆன்மீக சாதனையின் பெரும் அங்கம்.
அதனாலேயே பூஜை புனஸ்காரங்களை எந்த மகான்களும் நிராகரிக்கவில்லை.மனம் முழுமையாக அதில் ஈடுபட்டு இருக்கும் அளவும் பலவித விரும்பத்தகாத விஷயங்களிலிருந்து விலகியிருக்க வாய்ப்பு கூடுகிறது. இதை ஒருவகையில் மேலே கண்ட positive pressure எனலாம்.
ஆனால் விரதங்கள் பூஜைகளினாலேயே ஒருவன் மனம் சுத்தி அடைவதில்லை. அகங்காரம் என்னும் மாயை உடலளவிலாலான குற்றங்களைத் தாண்டி மன அளவில் ஆன்மீக உயர்வை தடுக்கும் பல தவறுகளை செய்து கொண்டே இருக்கிறது. மனம் விவேகத்தின் பலமிழந்து புத்தியை மறைத்து அஞ்ஞான இருளில் உழல்கிறது.
மனோ-வாக்-காயம் இவைகளிடையே ஒற்றுமை இல்லாது செய்யப்படும் நம் பூஜைகள் அர்த்தமற்றவை ஆகின்றன.
கையொன்று செய்ய விழிஒன்று
நாடக் கருத்து ஒன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாஒன்று
பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவி ஒன்று
கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்
வாய் வினை தீர்த்தவனே (திரு ஏகம்ப மாலை)
என்பதாக பட்டினத்தார் வெகுவான ஜனங்கள் செய்யும் பூஜையின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.
இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் கபீர் விளக்குகிறார்.
न्हाये धोये क्या हुआ, जो मन का मैल न जाय ।
मीन सदा जल में रहै,धोये बास न जाय ॥
ந்ஹாயே தோயே க்யா ஹுவா, ஜோ மன் கா மைல் ந ஜாய் |
மீன் ஸதா ஜல் மே ரஹை, தோயே பாஸ் ந ஜாய் ||
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்கலையே இவர்தம் உள் அழுக்கும்
தீராது நீரதனில் திளைத்தென்ன நீங்கலையே மீனதனின் துர்கந்தம்
(மடி உடுப்பு= ஆசார உடுப்பு)
மாற்று:
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்காவே இவர்தம் உள்ளழுக்கும்
நீரதனில் முக்காலும் திளைத்தென்ன, நீங்காதே மீனதனின் துர்கந்தம்
மீனுக்கு தன் துர்கந்தத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அது எப்போதும் போல் நீரில் தீராது நீந்திக் கொண்டே இருக்கிறது. மீனிடமிருந்து வரும் வாடையை துர்கந்தம் என்று வகைப்படுத்தியிருப்பவர்கள் மனிதர்கள்தான். அது போல் சாதாரணமான வாழ்க்கை நடத்தி வரும் நம்மைப் போன்றவர்கள் ஜன்மாந்திர வாசனைகளால் வெளிப்படுத்தும் உலகியல் ஆசாபாசங்கள் ஞானிகளை பொறுத்தவரை துர்கந்தமாகவே இருக்கிறது. ஆகவே தான் நமக்கு அவை பெரிதாக தோன்றாவிடினும் இராமகிருஷ்ணர் போன்ற ஞானிகள் தம்மை அண்டி வருபவரை மிக சுலபமாக தரம் பிரித்து விடுகிறார்கள்.
நம்முடைய வெளி வேஷங்களால் அவர்களை மெச்ச வைக்க முடியாது.
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே (தி.ம.1655)
என்கிறது திருமந்திரம். மனதளவில் ஆழ்ந்த பக்தியில்லாமல் உலகோர் மெச்சுவதற்காக ஆடம்பரமான பூஜைகளை செய்வதும்,விருந்துகள் படைப்பதும் உண்மையான பக்தியின் லட்சணமல்ல. அளவுக்கு மிஞ்சும் போது பக்தியை தூண்டுவதற்கு பதிலாக வெறுப்பையே தூண்டும். உட்பொருள் அறியாது செய்யப்படும் எல்லா செயல்களுக்கும் இது பொருந்தும்.
'ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்' எனப்படும் நிலை எண்ணத்தூய்மை இல்லாமல் முடியாது. மனதை சுத்திகரிப்பது என்பது மிகக் கடினமான பயிற்சி.
துணி வெளுக்க மண்ணுண்டு
தோல் வெளுக்க சாம்பலுண்டு
மனம் வெளுக்க என்ன உண்டு
எங்கள் முத்து மாரி எங்கள் முத்துமாரி
என்று பாரதி பாடுவதும் அதே காரணத்தினால் தான்.
மனம் வெளுப்பதற்கு கபீரும் பிறஞானிகளும் சொல்லும் ஒரே வழி நாமஸ்மரணை ஒன்றுதான்.
“மூச்சு மூச்சிலும் செபி நாமம், முயல்வதற்கில்லை வேறெதுவும்” என்று அவர் சொல்லியதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
மீண்டும் அந்த கருத்தை, நீரை விட்டு வெளியே வந்துவிட்ட மீனின் துடிப்பிற்கு ஒப்பிட்டு அது போல் நாமசெபம் முடியாமல் போனால் மனம் நிலைகொள்ளாது தவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
सुमरण से मन लाइए, जैसे पानी बिन मीन ।
प्राण तजे बिन बिछडे ,सन्त कबीर कह दीन ॥
சுமரன் ஸே மன் லாயியே, ஜைஸே பானீ பின் மீன் |
ப்ராண் தஜே பின் பிச்டே, ஸ்ன்த் கபீர் கஹ் தீன் ||
செபிமின் மந்திரம் மனமுய்ய, நீர் விட்டு அகலிய மீன் போலே
தவித்து உயிர் விடும் நீரின்றி, தெளிமின் தீனன் கபீர் போலே
(உய்ய = உயிர்வாழ்தல்,தப்பிப் பிழைத்தல்; தீனன்= ஏழை)
மாற்று:
மந்திரம் வேண்டும் மனமுய்ய, மீனுய்ய வேண்டும் நீரும்
நீரின்றி நிலைக்குமோ உயிரும், உரைப்பனே ஏழை கபீரும்.
மனம் செய்யும் அவலங்களிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் நாமஸ்மரணைதான் கைகொள்ள வேண்டிய சுலபமான வழி. அதுவே மன மாசுகளை தூரவிரட்டும் positive pressure.
வாசகர்களுக்கும் சகபதிவாளர்கள் அனைவருக்கும் சர்வதாரி வருட புத்தாண்டு வாழ்த்துகள்
இதைக் கேள்விப்பட்ட மதுராநாதருக்கு பெரும் வருத்தம் உண்டாயிற்று. தன் மதிப்பிற்குரிய குருவிடமே அதற்கான காரணத்தை கேட்டார். “இதோ பார்! உனது
இல்லத்தில் பெருங்காய டப்பா வைத்திருக்கிறாயல்லவா. அதில் உள்ள பெருங்காயத்தை காலி செய்துவிட்டாலும் வெகு நாட்களுக்கு அதன் வாசனை போகாது. அதில் பின்னர் வேறு எந்த பொருளை வைத்தாலும் அதற்கும் அதன் வாசனை ஒட்டிக்கொண்டு விடும். உன் மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது எனினும் உனக்குள் இருக்கும் உலகத் தொடர்பான வாசனைகள் உன்னையறியாமல் பேச்சிலும் செயலிலும் வெளிப்படும் வாய்ப்புண்டு. அதன் தாக்கம் பிறரிடமும் ஏற்படக்கூடும். ஆகையால் ஆன்மீகத்தில் நீ பின்பற்ற வேண்டிய வழிமுறைகளே வேறானவை. நரேன் போன்றவர்களின் முறையே வேறானவை என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்” என்று விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மதுராநாதரும் சமாதானம் அடைந்தார்.
மருத்துவத்துறையில் ரணச்சிகிச்சை செய்யும் அறையிலோ, உணவு பதனப்படுத்தும் தொழிலிலோ வெளிக் காற்றிலிருந்து மாசு உட்புகாவண்ணம் அறைக்குள்ளே சற்றே உயர் அழுத்த சுத்திகரிகப்பட்ட காற்றை (sterile air) செலுத்தி அதிக அழுத்தத்தில் (positive pressure) வைத்திருப்பர். இதனால் சுத்திகரிக்கப்பட்ட காற்று வெளியே தப்பிச் செல்லுமே அன்றி மாசடைந்த காற்று உட்புக முடியாது. மேற்கொண்டிருக்கும் செயலுக்கு ஏற்ப 'பல மட்ட தரக்கட்டுப்பாடுகள்' சுத்திகரிக்கப் பட்ட காற்றுக்கும் உண்டு. அந்த தரத்தை நிறுவுவதற்கு பல லட்சங்களை நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் செலவழிக்கின்றன.
தன்னுடைய சிஷ்யர்கள் விஷயத்தில் ராமகிருஷ்ணர் மேற்கொண்டதும் அத்தகைய ஒரு தரக் கட்டுபாட்டு செயல் தான் என்பதை புரிந்து கொண்டால் அதில் தவறேதும் காணமுடியாது.
நம் 'பெரும் காயத்துள்' நாமே ஏற்படுத்திக்கொண்டுள்ள வாசனைகளின்(வினைப்பதிவுகள்) பலத்தைப் பற்றி எவ்வளவு எளிமையான விளக்கம்! அது ஜென்ம ஜென்மங்களாகத் தொடர்வது. ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களையும் பழக்கங்களையும் களையச் செய்ய வேண்டிய செயல்கள் தான் ஆன்மீக சாதனையின் பெரும் அங்கம்.
அதனாலேயே பூஜை புனஸ்காரங்களை எந்த மகான்களும் நிராகரிக்கவில்லை.மனம் முழுமையாக அதில் ஈடுபட்டு இருக்கும் அளவும் பலவித விரும்பத்தகாத விஷயங்களிலிருந்து விலகியிருக்க வாய்ப்பு கூடுகிறது. இதை ஒருவகையில் மேலே கண்ட positive pressure எனலாம்.
ஆனால் விரதங்கள் பூஜைகளினாலேயே ஒருவன் மனம் சுத்தி அடைவதில்லை. அகங்காரம் என்னும் மாயை உடலளவிலாலான குற்றங்களைத் தாண்டி மன அளவில் ஆன்மீக உயர்வை தடுக்கும் பல தவறுகளை செய்து கொண்டே இருக்கிறது. மனம் விவேகத்தின் பலமிழந்து புத்தியை மறைத்து அஞ்ஞான இருளில் உழல்கிறது.
மனோ-வாக்-காயம் இவைகளிடையே ஒற்றுமை இல்லாது செய்யப்படும் நம் பூஜைகள் அர்த்தமற்றவை ஆகின்றன.
கையொன்று செய்ய விழிஒன்று
நாடக் கருத்து ஒன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாஒன்று
பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவி ஒன்று
கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்
வாய் வினை தீர்த்தவனே (திரு ஏகம்ப மாலை)
என்பதாக பட்டினத்தார் வெகுவான ஜனங்கள் செய்யும் பூஜையின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.
இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் கபீர் விளக்குகிறார்.
न्हाये धोये क्या हुआ, जो मन का मैल न जाय ।
मीन सदा जल में रहै,धोये बास न जाय ॥
ந்ஹாயே தோயே க்யா ஹுவா, ஜோ மன் கா மைல் ந ஜாய் |
மீன் ஸதா ஜல் மே ரஹை, தோயே பாஸ் ந ஜாய் ||
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்கலையே இவர்தம் உள் அழுக்கும்
தீராது நீரதனில் திளைத்தென்ன நீங்கலையே மீனதனின் துர்கந்தம்
(மடி உடுப்பு= ஆசார உடுப்பு)
மாற்று:
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்காவே இவர்தம் உள்ளழுக்கும்
நீரதனில் முக்காலும் திளைத்தென்ன, நீங்காதே மீனதனின் துர்கந்தம்
மீனுக்கு தன் துர்கந்தத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அது எப்போதும் போல் நீரில் தீராது நீந்திக் கொண்டே இருக்கிறது. மீனிடமிருந்து வரும் வாடையை துர்கந்தம் என்று வகைப்படுத்தியிருப்பவர்கள் மனிதர்கள்தான். அது போல் சாதாரணமான வாழ்க்கை நடத்தி வரும் நம்மைப் போன்றவர்கள் ஜன்மாந்திர வாசனைகளால் வெளிப்படுத்தும் உலகியல் ஆசாபாசங்கள் ஞானிகளை பொறுத்தவரை துர்கந்தமாகவே இருக்கிறது. ஆகவே தான் நமக்கு அவை பெரிதாக தோன்றாவிடினும் இராமகிருஷ்ணர் போன்ற ஞானிகள் தம்மை அண்டி வருபவரை மிக சுலபமாக தரம் பிரித்து விடுகிறார்கள்.
நம்முடைய வெளி வேஷங்களால் அவர்களை மெச்ச வைக்க முடியாது.
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே (தி.ம.1655)
என்கிறது திருமந்திரம். மனதளவில் ஆழ்ந்த பக்தியில்லாமல் உலகோர் மெச்சுவதற்காக ஆடம்பரமான பூஜைகளை செய்வதும்,விருந்துகள் படைப்பதும் உண்மையான பக்தியின் லட்சணமல்ல. அளவுக்கு மிஞ்சும் போது பக்தியை தூண்டுவதற்கு பதிலாக வெறுப்பையே தூண்டும். உட்பொருள் அறியாது செய்யப்படும் எல்லா செயல்களுக்கும் இது பொருந்தும்.
'ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்' எனப்படும் நிலை எண்ணத்தூய்மை இல்லாமல் முடியாது. மனதை சுத்திகரிப்பது என்பது மிகக் கடினமான பயிற்சி.
துணி வெளுக்க மண்ணுண்டு
தோல் வெளுக்க சாம்பலுண்டு
மனம் வெளுக்க என்ன உண்டு
எங்கள் முத்து மாரி எங்கள் முத்துமாரி
என்று பாரதி பாடுவதும் அதே காரணத்தினால் தான்.
மனம் வெளுப்பதற்கு கபீரும் பிறஞானிகளும் சொல்லும் ஒரே வழி நாமஸ்மரணை ஒன்றுதான்.
“மூச்சு மூச்சிலும் செபி நாமம், முயல்வதற்கில்லை வேறெதுவும்” என்று அவர் சொல்லியதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
மீண்டும் அந்த கருத்தை, நீரை விட்டு வெளியே வந்துவிட்ட மீனின் துடிப்பிற்கு ஒப்பிட்டு அது போல் நாமசெபம் முடியாமல் போனால் மனம் நிலைகொள்ளாது தவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
सुमरण से मन लाइए, जैसे पानी बिन मीन ।
प्राण तजे बिन बिछडे ,सन्त कबीर कह दीन ॥
சுமரன் ஸே மன் லாயியே, ஜைஸே பானீ பின் மீன் |
ப்ராண் தஜே பின் பிச்டே, ஸ்ன்த் கபீர் கஹ் தீன் ||
செபிமின் மந்திரம் மனமுய்ய, நீர் விட்டு அகலிய மீன் போலே
தவித்து உயிர் விடும் நீரின்றி, தெளிமின் தீனன் கபீர் போலே
(உய்ய = உயிர்வாழ்தல்,தப்பிப் பிழைத்தல்; தீனன்= ஏழை)
மாற்று:
மந்திரம் வேண்டும் மனமுய்ய, மீனுய்ய வேண்டும் நீரும்
நீரின்றி நிலைக்குமோ உயிரும், உரைப்பனே ஏழை கபீரும்.
மனம் செய்யும் அவலங்களிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் நாமஸ்மரணைதான் கைகொள்ள வேண்டிய சுலபமான வழி. அதுவே மன மாசுகளை தூரவிரட்டும் positive pressure.
வாசகர்களுக்கும் சகபதிவாளர்கள் அனைவருக்கும் சர்வதாரி வருட புத்தாண்டு வாழ்த்துகள்
Subscribe to:
Posts (Atom)